Posted in இலங்கை செய்திகள்

கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

கண்ணிவெடி வெடித்து முகமாலையில் ஒருவர் காயம்

இலங்கை பளை முகாமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் கண்ணிவெடியைச் செயல் இழக்க செய்யும் பொழுது அது வெடித்து

சிதறியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.


இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து 13 வருடங்களை கழிந்துள்ள நிலையில் சிங்கள இராணுவத்தினரால் புதைக்க பட்ட கண்ணிவெடிகள்

மிதிவெடிகள் என்பன தொடர்ந்து வெடித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

    எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

    இலங்கை ,கொழும்பு ; நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து

    டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

    எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23)

    இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும்

    முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும்
    நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      உக்கிரேன், Donetsk ;உக்கிரேன் நாட்டின் Donetsk பகுதி மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளது .

      மேலும் பல மக்கள் படு காயமடைந்த நிலையில் மீட்க பட்டு வருகின்றனர் .

      உக்கிரேன் மீது ரஷ்யா இராணுவம் தொடுத்து வரும் தொடர் ஏவுகணை தாக்குதலினால் உக்கிரேனின் பல பகுதியில் தரை மட்டமாகியுள்ளன.


      கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் உக்கிரேன் டொன்ஸ்டெக் பகுதி மீது இருபதுக்கு மேற்பட்ட தடவைகள் ரஷ்யா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      இடை விடாது ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர குண்டு தாக்குதலில் சிக்கி அந்த பகுதி சுடு காடாக காட்சியளிக்கிறது.

      மேலும் உக்கிரன் டொன்ஸ்டெக் பகுதியில் பல குண்டுகள் வெடிக்காத நிலையில் உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்டு வருகிறது .

      ரஷ்யா உக்கிரன் மீது 120 நாட்கள் கழிந்த நிலையிலும் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்

        அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்

        அமெரிக்கா ,Texas ; அமெரிக்கா கிழக்கு Texas அதி வேகசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.

        அமெரிக்கா டெக்ஸாஸ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

        பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள்ளது .

        இந்த வீதி விபத்தினால் குறித்த வீதி போக்குவரத்து பலமணி நேரம் தடை பட்டது .

        இந்த அமெரிக்கா வீதி விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

          Posted in உலக செய்திகள்

          ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்

          ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்

          ஈரான் Estahban பகுதியில் இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 55 பேர் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் .

          தொடர்ந்து இந்த வெள்ள நீரில் எட்டு பேர் அடித்து செல்ல பட்ட நிலையில் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

          இந்த ஈரான் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .=

          வெள்ளத்தால் பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

          ஈரானில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

          https://www.youtube.com/watch?v=AcmgxNljz6E
            Posted in இலங்கை செய்திகள்

            லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

            லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

            பிரிட்டன் லண்டனில் பாராளுமன்றம் முன்பாக இன்று மதியம் ஒருமணியளவில் கறுப்பு யூலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

            சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய 1983 ஆம் ஆண்டு இனபடுகொலை நிகழ்ந்து இன்றுடன் 39 ஆண்டாகிறது .

            அன்றில் இருந்து இன்றுவரை தனி சிங்கள மொழி மற்றும் ஆட்சி என முழங்கும் சிங்கள இனவாத பவுத்த வெறியர்களினால் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளபட்ட இனப் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.

            லண்டன் பாரளுமன்றம்  முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ
            லண்டன் பாராளுமன்றம் முன்பாக கறுப்பு யூலை போராட்டம் வீடியோ

            இறுதி போரில் ஒரு லட்சத்திற்குஅதிகமான தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டுள்ள சிங்கள அரசுகளுக்கு இதுவரை ஐக்கிய நாடுகளினால் தண்டனை எதுவும் வழங்கப்படா நிலையில் லண்டன் போராட்டம் இடம்பெறுகிறது ..

            இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பித்து திரிகின்றனர் .ஆனால் அப்பாவிகளை கொன்று அதனை வேடிக்கை பார்க்கும் நாடுகளாக பிரிட்டன் உள்ளிட்டவை இருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையை தருவித்துள்ளது.

            இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்த பட்ட கறுப்பு யூலை இனப் படு கொலைக்கு என்று தீவரு வழங்க படும் ..?

            கேள்வியோடே வலிகளை தாங்கிய வண்ணம் பயணிக்கிறது தமிழர் தேசம்.
            லண்டன் பாரளுமன்றம் முன்பாக இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவு பகிர்வும் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் என்றாலும் தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா ..?

            ( இதில் அழுத்தி லண்டன் போராட்டம் யாவும் ஒரே இணைப்பில் பார்க்கலாம் )

              Posted in இலங்கை செய்திகள்

              லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

              லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

              பிரிட்டன் ,லண்டன் ; இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாதம் வலிந்து நடத்திய கருப்பு ஜூலை 39 வது ஆண்டு இனப்படுகொலையை நினைவு கூர்ந்து லண்டனில் மிக பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

              சிங்கள பவுத்த இனவாத அரசினால் அப்பாவி தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் இடம் பெறுகிறது .

              பிரிட்டன் சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினால் நடத்த பட்டது .

              23/07/2022 இன்று மதியம் 1 மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினர்.

              லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்

              இதன் போது லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற்றது .

              லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்


              லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
              சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

              இதே லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என இலங்கை இராணுவ தளபதி ஒருவர் சைகை மூலம் தெரிவித்து லண்டனை விட்டு தப்பி ஓடியமையும் சட்ட போராட்டம் இடம்பெற்றமையும் இங்கே குறிப்பிட தக்கது .

              (லண்டன் போராட்டம் யாவும் –லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக என்பதில் அழுத்துவதன் ஊடாக பார்க்கலாம் )

              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் இலங்கை தூதரகம்  முன்பாக கறுப்பு ஜூலை  கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
              லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

                பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

                ,

                பிரிட்டன் ஐயர்லாந்த் ; பிரிட்டன் Ormeau Rd, Belfast. பகுதியில் காலை 11.30 மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது .

                இந்த கார் விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயங்களுடன் தப்பித்தார் .
                இங்கு இடம்பெற்ற கார் விபத்தினால் அந்த வழி போக்குவரத்து சில மணி நேரங்கள் தடை பட்டன.

                கார் விபத்து சம்பவித்த பகுதிக்கு விரைந்து காவல்துறையின் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டு படுத்தி கார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

                மேலும் விபத்தில் சிக்கிய கார் அங்கிருந்து மீட்க பட்டது .விபத்து சம்பவத்திற்கு விரைந்த வந்த அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் கார் சாரதிக்கு சிச்சை வழங்கி காப்பாற்றினர்.

                தொடர்ந்து கார் விபத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                பிரிட்டனில் இவ்வாறு பல கார் கவிழ்ந்த நிலையில் விபத்தில் சிக்கி வரும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன .

                  Posted in உலக செய்திகள்

                  இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்

                  இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்

                  இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .

                  இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் சிதறடிக்க பட்டது .


                  ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த பகுதியில் நிலை கொண்டிருந்த சிரியா இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர் என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .

                  எனினும் சிரியா இராணுவம் கூறுவதை விட சிரியா இராணுவத்தினருக்கு இழப்புக்கள் அதிகம் என நம்ப படுகிறது.

                  சிரியா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல் நடத்தி வருகிறது .

                  இவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரல்
                  இராணுவம் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என்பது குறிப்பிட தக்கது.

                  எனினும் இதுவரை இந்த சிரியா இராணுவ முகாமில் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை .

                    Posted in உலக செய்திகள்

                    துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

                    துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

                    ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்

                    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

                    துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

                    இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

                    துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .

                    துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு


                    அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .

                    ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்

                    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

                    துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

                    இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

                      Posted in உலக செய்திகள்

                      துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                      துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                      துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                      இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

                      குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

                      வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.

                      குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.

                      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
                      வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமாருக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி நியமனம்

                        கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமாருக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி நியமனம்

                        இலங்கை ,கொழும்பு ; திருமதி ரதினி பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் (DPF) உறுப்பினராக கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

                        இவர் தனது நியமனம் தொடர்பான உறுதியுரையை கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பியிடம் வழங்கி, நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

                        தொழில்ரீதியாக தமிழ் மொழி, இந்து சமயம், சிங்கள-ஆங்கில இணைப்பு மொழி பாட ஆசிரியரும் ஆங்கில பட்டய (diploma) தகைமையாளருமான, ரதினி

                        பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் வரிசையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் நியமனம் பெற்றுள்ளார்.

                        கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பத்து உறுப்பினர்கள் பணியாற்றுகின்றார்கள்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

                          இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

                          இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் இன்று முதல் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிக்க பட்டுள்ளது .இந்த திடீ ரயில் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

                          இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் அதிகரிக்க பட்டுள்ள ரயில்வே விலை கட்டணங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

                          நாள் தோறும் இலங்கையில் விலைவாசி அதிகரித்து செல்கிறது .ஆனால் மக்களோ தமது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

                          மக்கள் வாழ்வியலை மீட்டு இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நடைமுறை திட்டம் ஏதும் இலங்கை ஆளும் அரசுகளிடம் காணப்படவில்லை என்கிறது மக்கள் மன்றம் .

                          தமது அரசியல் அதிகார போதையில் மிதக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்வியலை மேம்படுத்த ஏதும் செய்திடாது விலை உயர்வை அதிகரித்து செல்கிறது என்கிறது மக்கள் கருத்தாக உள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

                            அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

                            இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

                            இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற முதல் நாள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                            இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அவர் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார் .

                            மேலும்அமெரிக்காவின் முக்கிய கண்டிப்பான தகவலையும் ரணிலிடம் வழங்கி சென்றுள்ளார் .

                            அமெரிக்கா தூதுவரின் விரைவான சந்திப்பு இலங்கைக்கு முக்கிய விடயத்தை அமெரிக்கா வலியுறுத்தி சென்றுள்ளதை காணமுடிகிறது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

                              இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

                              இலங்கை ; இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                              மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை அடக்குவது கைது செய்தல் வன்முறை பிரயோகித்தல் நிறுத்த பட வேண்டும் என தெரிவித்துள்ளது .

                              மேலும் GSP பிளஸ் சலுகை பெற்றுக்கொள்ளும் விதிகளுக்கு இலங்கை உடன்பட்டு செயல் படவேண்டும் என தனது கடும்போக்கை தெரிவித்துள்ளது .

                              இந்த ஐரோப்பிய யூனியன் விதிகளை மறந்து செயல்பட்டால் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க படமாட்டாது என்பது இங்கே குறிப்பிட தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

                                இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

                                இலங்கையில் மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

                                இலங்கையில் குறைவடைந்து காணப்பட்ட கொரனோ நோயானது மீளவும் அதிகரித்து வருகிறது.

                                இலங்கையில் மீள பரவும் இந்த கொரனோ நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்ட படுகிறது.

                                இதே போல பிரேசில் நாட்டில் மிக வேகமாக இந்த நோயானது பரவி வருகின்றது .

                                இந்த கொரனோ தாக்குதலில் 300 க்கு மேற்பட்டவர்கள் சமீப நாட்களில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு

                                  இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு

                                  இந்தியா, டில்லி ; இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக இந்தியா கருத்துரைத்துள்ளது .

                                  இலங்கை இந்தியாவுக்கு இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.


                                  இந்தியா முந்திக்கொண்டு இந்த விடயத்தை அறிவித்துள்ள முக்கிய விடயமாக பார்க்க படுகிறது.

                                  இலங்கையில் புதிய ஜனாதிபதியை நியமிப்பதில் இந்தியா அமெரிக்கா கடும் போட்டிகளைமேற்கொண்டது .இதில் அமெரிக்காவே வெற்றி பெற்றுள்ளது எனப்படுகிறது.

                                  அவ்வாறான வேளையில் இந்தியா இவ்விதம் இலங்கை தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

                                    இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

                                    தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 18ஆந் திகதி அட்டெரிட்ஜ்வில்லில் உள்ள லெரடோங் ஹொஸ்பிஸில்

                                    தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் தலைமையில் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது.

                                    உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன பல இராஜதந்திரிகளுடன் இணைந்து 18 நோய்வாய்ப்பட்ட நோயாளர் விடுதியின் ஊழியர்களுக்கு

                                    தன்னார்வ சேவைகளை வழங்குவதில் நேரத்தை செலவிட்டார். மேலும், இலங்கையின் சார்பாக சிலோன் தேயிலை மற்றும் நோயாளிகளுக்கான கழிப்பறைப் பொருட்களையும் வழங்கினார்.

                                    ஐ.நா. பொதுச் சபையால் (ஐ.நா. தீர்மானம் யுஃசுநுளுஃ64ஃ13) 2009 இல் நிறுவப்பட்ட நெல்சன் மண்டேலா சர்வதேச தினம், மோதலைத் தீர்த்தல், இன உறவுகள், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பாலின

                                    சமத்துவம், குழந்தைகள் மற்றும் ஏனைய பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள், வறுமைக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக நீதியை

                                    மேம்படுத்துதல் ஆகியவற்றில் மனிதகுலத்தின் சேவைக்கான முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக

                                    நிறுவப்பட்டது. இது ஆண்டுதோறும் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 அன்று கொண்டாடப்படுகின்றது.

                                    இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

                                    கடந்த ஆண்டுகளைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவளிக்க அல்லது அவர்களின் உள்ளூர் சமூகத்தில் சேவை செய்ய குறைந்தபட்சம் 67 நிமிடங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும்

                                    வகையில், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் திணைக்களம் (இலங்கையில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு சமமானது) 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தின நிகழ்வுகளை

                                    வழிநடாத்தியதுடன், குறித்த 67 நிமிடங்கள் மனித உரிமைகள் மற்றும் நிறவெறி ஒழிப்புக்காக முன்னாள் ஜனாதிபதி போராடிய ஆண்டுகளின் எண்ணிக்கையை அடையாளப்படுத்துகின்றது.

                                    நெல்சன் மண்டேலாவின் மேற்கோளான, ‘உங்களிடம் இருப்பதைக் கொண்டு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்,


                                    நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்’ என்பது 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தின் கருப்பொருளாகும்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                                      டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                                      மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது.

                                      இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.

                                      இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக

                                      மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் 2022 ஜூலை 16ஆந் திகதி ஒருங்கிணைத்தது.

                                      இந்த கையளிப்பு விழாவில், நன்கொடையை ஏற்பாடு செய்த டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பின்வரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்: டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சி.எஸ்.

                                      பிரமேஷ், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பீடியாட்ரிக் என்கொலஜி பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் வைத்தியர் கிரிஷ் சின்னசாமி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் உதவி மருத்துவக்

                                      டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                                      கண்காணிப்பாளர் வைத்தியர் வினித் சமந்த், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் புற்றுநோயியல் உதவிப் பேராசிரியர் வைத்தியர்

                                      வெங்கட ராம மோகன் கொல்லமுடி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பொது முகாமையாளர் (சி.எஸ்.ஆர்.) சுனிதா ராவ் மற்றும் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் மருந்தாளர் வோனோத் நாயர்.

                                      இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி மற்றும் துணைத் தூதுவர் (வணிகம்) சந்துன் சமீர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கு

                                      தேவைப்படும் இந்த நேரத்தில் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் வழங்கிய விலைமதிப்பற்ற நன்கொடையைப் பாராட்டிய துணைத் தூதுவர், டாட்டா ஞாபகார்த்த நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள புற்றுநோய்

                                      சிகிச்சை நிறுவனங்களுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கு மேலும் ஒத்துழைப்பைக் கோரினார்.

                                      உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புற்றுநோய் மையங்களில் ஒன்றான டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை, 75 ஆண்டுகளுக்கும் மேலான

                                      விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பு, உயர்தரப் பயிற்சி மற்றும் புதுமையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய புற்றுநோய்

                                      கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான விரிவான தேசிய புற்றுநோய் மையமாகும்.

                                      டாட்டா ஞாபகார்த்த நிலையம் அடிப்படை, மொழிபெயர்ப்பு, தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டாட்டா ஞாபகார்த்த நிலையத்தில் உள்ள

                                      ஆராய்ச்சியில் புற்றுநோய் உயிரியலைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பெரிய சமூக அடிப்படையிலான

                                      ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் கூட்டு ஆய்வுகள், நியோட்ஜுவண்ட் மற்றும் துணை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சை தலையீடுகள், அறுவை

                                      சிகிச்சை சோதனைகள், மறுபயன்பாட்டு மருந்துகள் மற்றும் நோயாளி பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான தரமான ஆராய்ச்சி ஆகியவை

                                      அடங்கும். மேலும், பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை டாட்டா ஞாபகார்த்த நிலையத்திற்கு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியான இது, இந்தியாவில் புற்றுநோயியல் பயிற்சிக்காக மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது.

                                      இலங்கையின் துணைத் தூதரகம்,
                                      மும்பை

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                                        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                                        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்

                                        அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

                                        அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு

                                        முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.

                                        புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு

                                        அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

                                        அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,

                                        பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான

                                        தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது

                                        எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.

                                        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                                        போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.

                                        அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.

                                        ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.

                                        எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.

                                        தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,

                                        ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.

                                        முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.

                                        ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.

                                        இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த

                                        “ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.

                                        ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து

                                        அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

                                        இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்

                                        கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!

                                        சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்