Author: நலன் விரும்பி
காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது
காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது
இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58
வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட
போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்
இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்
இலங்கையில் போக்குவரத்து துறையை மேலும் அபைவிருத்தி செய்திடும் நோக்குஇடன் இந்தியா வழங்கும் 500 மில்லியன் கடன் திட்டத்தின் கீழ் 500 பேரூந்துகளை வாங்கிட அரசு தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த பேரூந்துகள் தமது போக்குவரதத்தை ஆரம்பிக்கவுள்ளன .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இதன் மூலம் தீர்த்துவிட முடியும் என அரசு கருதுகிறது.
மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்
மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்
அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (10) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றினார்
இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,மின் கட்டண அதிகரிப்பு குறித்து பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்
மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , “மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் தயார் என்றார்.
அதனைத்தொடர்ந்து , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு பதிலளிக்கையில்
அதுதொடர்பான விவாதம் ஒன்றை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்
கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்
நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்
தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்
முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை
ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று (10) இரண்டாவது நாளாக நடைபெற்ற போது
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் உள்ள மாற்றத்தை நாம் உணர வேண்டும். அந்த மாற்றத்திற்கு தேவையான பரிகாரங்கள் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இளம் ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். நாட்டினுள் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலையுள்ளது என்று
தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்று தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்
கோட்டாபய ராஜபக்ஷ நெருக்கடிகளை சரியாக அடையாளம் காண தவறிவிட்டார். நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களும் கோட்டாபய ராஜப க்க்ஷவிடம் இருக்கவில்லை.
2019 இல் இருந்தே அரசியல் புதியவர்கள் தெரிவாக வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பமாகியது. அதன்படியே எதிர்பார்ப்புகளுடன் வீதிகளில் சித்திரங்களை வரைந்தனர்.
அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வில்லை போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 09 ஆம் திகதி போராட்டம் இவ்வாறான நெருக்கடியுடனேயே ஆரம்பமாகியது.
போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இப்போது மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.அந்த எதிர்பார்ப்புகள்
நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரலாம். நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்
இதேவேளை, பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டுக்கு
புதிய ஆரம்பம் தேவை என்றும் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தமது கட்சி சாதகமான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 75வீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இச் சந்தர்ப்பத்தில் இந்தளவு பாரிய தொகை மின் கட்டண
அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வது. அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்
ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும்.அதற்கிணங்க விவாதம் முடியும் வரை மின்சார கட்டண அதிகரிப்பை இடை நிறுத்தவேண்டும் .
அத்துடன், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் எரையாற்றுகையில் , ஜனாதிபதியின் பதவியேற்பு உரையில் அடங்கிய எதிர்க்கட்சிகள் பல விடயங்களை
ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு நிலவுவதாகவும், அதற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு
செல்வதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அவற்றை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் உரையாற்றுகையில் இ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், நாட்டின்
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால்
குறைவடைந்து வருகின்றது எனபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த
நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே.
இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை.
விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது.
2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.
தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது
இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம்.
அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.
தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை
வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ்
பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள்
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி
மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி
இலங்கை யாழ்ப்பாண போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் மோசடி குற்ற சாட்டில் சிக்கியுள்ளார்.
இவரது கடந்த கால மோசடிகள் தொடர்பான விடயங்கள் சிக்கியுள்ள நிலையில் இவர் மீதான மோசடி புகார் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வெளி நாடுகளில் இருந்து மக்களினால் வழங்க பட்ட நித்திகள் என்பனவும் மோசடி செய்யபட்டுள்ளதாக உள்ளாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது கடந்த கால மோசடிகள் ,குற்ற செயல்கள் ,பழிவாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதால், சிறை செல்லும் நிலை சத்தியமூர்த்திக்கு ஏற்படலாம் என்பதாக தெரிவிக்கிறது அந்த வட்டாரங்கள்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள சத்திய மூர்த்தி அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்
லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்
லண்டன் கென்ட் பகுதியில் குரங்கு அம்மை நோய் மீள வேகமாக ஆத்திகரித்து வருவதாகசுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
உடலில் தொப்பளாங்கள் ஏற்படுத்தி பார்ப்பவர்களை மிரள வைக்கும் இவ்விதமான கொடிய நோயாக விளங்கும் குரங்கு அம்மை நோயாகும் .
இந்த குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கொரனோ நோயானதும் அதிகரித்து வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
வெடித்து சிதறிய வீடு மூன்று பேர் மரணம்
வெடித்து சிதறிய வீடு மூன்று பேர் மரணம்
அமெரிக்கா தெற்கு இந்தியான பகுதியில் வீடு ஒன்று வெடித்து சிதறியது
இதன் போது அந்த வீட்டுக்குள் வசித்து வந்த மூவர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் இந்த வீடு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வீடு முற்றாக வெடித்து சிதறியுள்ள காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பிலான பல்முனை விசாணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் இவ்விதமான சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்து சிதறிய இராணுவ வாகனம் 12 பேர் படுகொலை
வெடித்து சிதறிய இராணுவ வாகனம் 12 பேர் படுகொலை
northern Burkina Faso பகுதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் இராணுவ வாகனம் வெடித்து சிதறியது .
இந்த தாக்குதலின் பொழுது அதில் பயணித்த 12 இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர் .
தொடர்ந்து அரச இராணுவத்தை இலக்கு வைத்து கிளர்ச்சி படைகள் தாக்குதல் படு கொலைகளை நடத்திய வண்ணம் உள்ளமை அரச
இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரேன் போர்க்களத்தில் ஈரான் உளவு விமானங்கள் அதிர்ச்சியில் அமெரிக்கா
உக்கிரேன் போர்க்களத்தில் ஈரான் உளவு விமானங்கள் அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டின் மிக உயர்வலு கொண்ட உளவு விமானங்களை ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வருகிறது.
ஈரானுக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதிகள் ஈரானிடம் குறித்த உளவு விமானங்களை கொள்வனவு செய்தன .
ஈரான் வழங்கிய உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் இந்த உளவு விமானங்கள் வருகியை அடுத்து உக்கிரேன் போர் களத்தில் ரஷ்ய இராணுவம் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
ஜனாதிபதி மாளிகை தீ வைப்பு 205 மில்லியன் சேதம்
ஜனாதிபதி மாளிகை தீ வைப்பு 205 மில்லியன் சேதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்ததன் ஊடாக இதுவரை கணக்கிடப்பட்ட சேதம் 205 மில்லியன் ரூபாவை
தாண்டியுள்ளதாக இன்று (10) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு 191 மில்லியன் ரூபாவும், வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் 14.5 மில்லியன் ரூபா
எனவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
நான்காவது சந்தேகநபரான அருள் பிரகாஷை குரல் பரிசோதனைக்காக எதிர்வரும் 12
ஆம் திகதி அரசாங்க பரிசோதகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதவான்
திலின கமகே சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படு கொலையாளியுமாகிய கோத்தபாய இராஜபக்சவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து
போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என அறிவித்துள்ள
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, தாமதிக்காமல் ஒப்பமிட்டு நீதிக்கான போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு அனைவரையும் கோருவதாக தெரிவித்துள்ளது.
உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கிய இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய
நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு
Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமா அதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழர் தாயகத்திலும் கோத்தாவை கைது செய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கையில் இருந்து மக்களினால் துரத்த பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தங்கியுள்ள இவர் தாய்லாந்துக்கு தப்பி ஓட திட்டமிட்டுளளார்.
சிங்கப்பூர் நாட்டில் கோட்டபாயவுக்கு பாதுகாப்பு வழங்க பாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக தாய்லாந்துக்கு கோட்டபாய செல்ல திட்டமிட்டுள்ளார் .
இலங்கைக்கு மீள வந்தால் அங்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தாய்லாந்துக்கு செல்லும் நகர்வினை கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்
ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்
ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை.
இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை தயாரிக்க முடியவில்லை.
இம்மாதம் 15ஆம் திகதி மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாவது கப்பலும் வந்தடைய
உள்ளது. எனவே, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மண்ணெண்ணையை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,
மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல
பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட்
கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தால்
அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் இன்று யாழ். பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.
இதன் போது குறித்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது அங்கு நின்ற அதிகாரிகள் “அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுவதாக” தெரிவித்தனர்.
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள் தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு
சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பகுதியில் அரச
உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு விநியோகத்தை
மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு
அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர்.
இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய
அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற அடிப்படையில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் 2022 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துதுடன், மேலும் மலேசியாவில் உள்ள
சட்ட அமலாக்க முகவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மூலம் செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரைக் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
குறித்த குடியேற்றவாசிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் தங்களது சொந்த செலவில் அவர்கள் நாடுகடத்தப்படும் வரை அங்குள்ள குறிப்பிட்ட தடுப்பு தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள்.
ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் மிகக்குறைந்த சம்பளத்திற்கு மற்றும் எந்தவிதமான
தொழில் உத்தரவாதமும் இன்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, “மலேசியாவுக்கான பயண விசாக்களை
வந்தவுடன் வேலை விசாவாக மாற்ற முடியாது” என்பதை மனதில் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடும் அனைத்து வருங்கால
குடியேற்றவாசிகளையும், சட்டபூர்வமான மற்றும் உண்மையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள்
மூலம் செல்லுமாறு செயலணி இலங்கைப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தி யுள்ளது.
சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்
சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்
சவூதி நாட்டு இராணுவம் ஏமன் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பத்தொன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏமன் சவுதிக்கு இடையில் தொடர்ந்து உக்கிர போர் வெடித்த வண்ணம் உள்ளது.
ஈரான் ஆதரவு இராணுவம் சவூதி நாட்டு மற்றும் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
இந்த தாக்குதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா புளோரிடா Daytona Beach, பகுதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி மூவர் மரணமாகியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உரிய காரணம் தெரியவில்லை
,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.





















