மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

Spread the love

மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்

விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply