Author: நலன் விரும்பி
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு
செய்திருந்த வலைப்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று காலை
கொழும்பு – 07 இல் உள்ள டொறின்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி !
ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி !
TGTE I UN Human Rights l Ministry of Human Rights Mass Atrocities and Prevention of Genocide – TGTE
Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) on Interactive dialogue with the Special Rapporteur on torture and other cruel, inhuman …
youtu.be
சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை
பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில்
திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரது Nils Melzer ( torture and other cruel, inhuman or degrading treatment or punishment தொடர்பிலான அமர்வின் போது, ACCP அனுசரணையுடன் நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் மனித உரிமைகளும், தொகையான கொடுரங்கள், இனஅழிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் காணொளிப்பதிவின் ஊடாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சித்திரவதைகளைப் பயன்படுத்துவது இன்றும் நடைமுறையில் உள்ளதோடு, 2016ம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் 80 வீதமான தமிழர்கள் கைதான பின்னர் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகள்
இழைக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்கள் என 2017ம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னிச்சையான கைதுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல், காவலில் வைக்கப்பட்டோரை பாலியல் வல்லுறவுக்க
உட்படுத்தல்,விசாரணையின்றி சித்திரவதை மற்றும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைத்தல் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் தமிழர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது என்று தனது 2017ம் ஆண்டு The Freedom House அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சித்திரவதை என்பது சிறீலங்காவில் இரத்தத்தில் ஊறி உள்ளது. சிறீலங்காவில் சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே இருந்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கைகளில் பலமுறை கூறியுள்ளது. இதனால் சித்திரவதைக்கு பொறுப்புக்கூறல் சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும். சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, சிறீலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம்.
சிறிலங்காவிலும் மற்றும் பல நாடுகளிலும் சித்திரவதை அரசுகளினால் தான் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. ஆகவே, தங்கள் ஆயுதப்படைகளால் செய்யப்பட்ட
சித்திரவதைகளுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஆகவே உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன்
ஊடாக, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் தொடுத்து தமக்கான பரிகாரநீதியினை பெறுவதற்கு வழிகோல ஜனநாயக நாடுகளை வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக.றிஸ்கா நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட
இளைஞர் அமைப்பாளராக
றிஸ்கான் முகம்மட் நியமனம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய மக்கள் சக்தியின்
அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக
கே.ஆர்.றிஸ்கான் முகம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் திங்கட்கிழமை (08) கட்சி தலைமையகத்தில்
வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்
வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய
இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த
திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.
அத்துடன், இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில்
இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது
காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது
இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட
திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 1,158 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் நீதிமாறினால் தேட பட்டு வந்த பலரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெண்களை கேவல படுத்தினால் சட்ட நடவடிக்கை மிரட்டும் – இராணுவ மந்திரி
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என,
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெண்களுக்கு
விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வீரப் பெண்கள் செய்த மகத்தான சேவையை அங்கீகரிப்பதற்காக
நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
போர்வீரர்களின் தாய் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் போரின் போது அனுபவித்த கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும்
பார்க்கும்போது, அவர்கள் முழு தேசத்தின் மதிப்புக்கு உரியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரவதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – தமிழர்கள் போராட்டம்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு
வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின
உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், சர்வதேச மகளிர் தினத்தை
துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைதீவில் புனித இராயப்பர் ஆலயத்துக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, நகரை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
புயலில் சிக்கி உடைந்து வீழ்ந்த வீடுகள் – மக்கள் அவதி
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டகலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மின சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15 இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அல்லுண்டு சென்றுள்ளன.
இதனால் இந்த குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.
இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு
பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.
இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன.
மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி இன்று காலை வந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன்
பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள
அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
வாலிபனை தாக்கிய இராணுவம் – தொடரும் இராணுவ வன்முறைகள்
இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். .
பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
பாட்டி ஒருவரை பேரன் ஒருவன் துடி துடிக்க எரித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடிப்பதற்கு பணம் கேட்ட பொழுது அதனை தந்திடாத பாட்டிக்கு இவ்விதம் தீவைத்து எரித்துள்ளான்
அந்த பேரன் ,தற்போது பட்டியம்மா தீயில் பொசுங்கி இறந்துள்ளார் .
குடிகார பேரன் கைது செய்ய பட்டு நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளான் .
குடி ஒரு ,குடியை கெடுக்கும் ,என்பதற்கு இது ஒன்று சான்று
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்நகரின் மைய பகுதியில் உள்ள வீட்டுக்குள் நள்ளிரவு ,வாள்கள்,கத்தியுடன் புகுந்த ரவுடி கும்பல் ,அந்த வீட்டின்
யன்னல்கள் ,மற்றும் கதவுகளை கொத்தி எறிந்துள்ளன ,அதன் பின்னர் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மக்களை அச்சுறுத்தும் முகமாக தெரு ரவுடிகள்
இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்
முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அதன் ஆயுத பலம் அழிக்க பட்டு 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இப்பொழுதும் புலிகள்
ஆயுதங்கள் வெடிக்காத நிலையில் மீட்க பட்டு வருவதாக சிங்கள இராணுவம் பரப்புரை செய்து வருகிறது
அவர்களே ஆயுதங்களை வைத்து விட்டு ,அவர்களே எடுத்து விட்டு அது புலிகள்
ஆயுதங்கள், மீளவும் புலிகள் எழுச்சி கொள்ள துடிக்கிறார்கள் என்ற போர்வையில் பரப்புரை செய்து மகிழ்கிறது
இதெல்லாம் அரசியலில் சகாயமப்பா
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
இலங்கை கொழும்பு பகுதியில் வைத்து ஒன்பது வெளி நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இவர்களை அனைவரும் சட்டவிராத செயல் பாட்டில் ஈடுபட்ட குற்ற சாட்டில் இந்த கைது இடம் பெற்றுள்ளது
இவ்வாறு கைதானவர்களில் மூன்று நையீரியா நாட்டை சேர்ந்த
கறுப்பினத்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களுடன் நான்கு மாலைதீவு,இரண்டு இந்தியர்கள் கைது
செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் ,அனைவர் மீதும் நீதி விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது
சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு
சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு
இலங்கை தலவாக்கலை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள்
கொரனோ நோயாளர்கள் அடையாளம்காண பட்ட நிலையில் ,தற்போது அந்த மதுபான நிலையம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இந்த திடீர் அடித்து பூட்டுதல் நிகழ்வால் குடிமகன்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா
மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ‘தெயட்ட எலிய’ மின்சார திட்டத்தை
முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கிரிபாவ வேரகல கிராமத்தில் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.
‘தெயட்ட எலிய’ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, மின்சார சபையின் தலைவர் விஜித
ஹேரத் மற்றும் சமுர்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
தடுப்பூசி போட்டார் ஷவேந்திர சில்வா
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான
ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று காலை 6 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்
இங்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதியு அவருடைய கனிவான
நடைமுறைகள் மற்றும் இத்திட்டத்திற்கான அவருடை ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கொவிட் – 19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் முப்படை பணியாளர்களுக்கு ஏற்றுவதற்காக பிரத்தியேகமாக மற்றுமொரு
தொகை தடுப்பூசி தொகையை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துடன், இந்த விவகாரத்தில் அவர்
அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புளைகளுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி
ஐநாவில் தப்பிய இலங்கை – தமிழர்களுக்கு பெரும் இடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான மிக காட்டமான அறிக்கை முன்வைக்க பட்டது ,
ஆனால் தற்போது வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் ,குற்றங்கள் செய்தவர்கள் நாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை அவர்கள்
சொத்துக்கள் மூடப்படுவதற்கான விதிக்க பட்ட தடைகள் அதில் இருந்து அகற்ற பட்டுள்ளன ,மேலும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள்
தொடர்பிலான சர்வதேச விசாரணை என்ற நிலையும் அதில் இருந்து நீக்க பட்டுள்ளது
குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் நீக்க பட்டு ,அவை மொட்டை கடதாசியாக அறிக்கை வெளியாகியுள்ளது ,தமிழர் தரப்புக்கு
பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது ,இந்தியாவின் முக்கிய நகர்வின் காரணமாக இந்த விடயம் அதில் இருந்து நீக்க பட்டுள்ளதாக கருத படுகிறது
வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்
வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்
வவுனியா புளியங்களுளம் பகுதியில் போலீசா நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது துப்பாக்கியுடன் வாலிபர்
ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இல்லாத புலிகள் மீள எழுச்சி பெற துடிகின்றனர் என்ற
போர்வையில் சிங்கள அரச பயங்கரவாதம் பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்
யாழ்ப்பாணத்தில் திரை அரங்கு ஒன்றுக்கு கடந்த வாரம் சென்ற நபர்கள் சிலருக்கு கொரனோ தொற்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அந்த திரையரங்களில் சென்று படம் பார்த்த
அனைவரையும் கொரனோ சோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நாட்டில் நோயின் தாக்குதல் அதிகரித்து செல்லும் நிலையில் மக்கள்
இவ்வாறான கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகினறமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து -35 பேர் காயம்
பதுளையில் பயணிகளை காவிய படி பயனித்த தனியார் பேரூந்து
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பள்ளதாக்கில் வீழ்ந்த்து நொறுங்கியது
இதன் பொழுது அதில் பயணித்த முப்பத்தி ஐந்து பேர் படு காயங்களுக்கு
உள்ளான நிலையில அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான புலன் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வவவுனியாவில் வயலுக்குள்சிறுவன் சடலம் – கண்ணீரில் உறவுகள்
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிஸார் நேற்று (4) மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில்
குறித்தஉபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.உஎனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.
இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னமே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7 வயது சிறுவனே மரணமடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.







