Author: நலன் விரும்பி
விறகு சேகரிக்கச்சென்ற வாலிபனை காணவில்லை
விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொது மக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஐ.நாவில்-தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம்
தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு
தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான
வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது.
தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.
இன்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு
நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே
தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக
நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.
அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.
எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு
முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில் மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில்
வெற்றிலையூர் (புலத்கோபிட்டிய) எதுராபொல தோட்டம் 2 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்தினி அம்மன் தேவஸ்தான
வளாகத்தில் நேற்று (10) சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (11) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்


இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
Virtual Statement I 46th Session I UN Human Rights Council I Ministry of International Affairs TGTE
Virtual Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) by Minister Manicka Vasagar ( International Affairs – Transnational Government…
youtu.be
உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்,
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நாவுக்கு தற்போது ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐ.நா மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா அங்கத்துவ
நாடுகளுக்கு அனைத்துலக தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் காணொளி வாயிலாக முன்வைத்திருந்தார்.
அவர் தனதுரையில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில்
தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டு பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.
உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு, சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.
உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் தேவை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதின் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும், கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கும்,
முன்னேறுவதற்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
On behalf of The Transnational Government of Tamil Eelam (TGTE), and the victims of the Mulliavaikkal War, appeal to the Council, that after 12 years, we are still waiting for justice and accountability.
As you all are aware, the war has resulted in more than 70 000 dead including women, and children, 89 000 widows, about 40 000 disabled, 60 000 IDPs, and 146 000 are still unaccounted for, either dead or missing.
The continued non-compliance, by the Government of Sri Lanka on the UN HRC resolutions, and delaying the establishment of transitional justice mechanisms, including a special court to prosecute alleged war crimes, is an attempt to avoid delivering on the truth and justice, for the thousands of victims of the country’s civil war.
It has become very clear, and repeated and reiterated by the GoSL, that a home-grown mechanism to implement any resolution will never ever be possible, to build any trust for an environment for reconciliation, justice, or accountability.
Your current draft is only to continue to victimise and suppress the victims with more pain and sufferings, and to reward a rogue state and the perpetrators to buy more time.
The relevancy of the Council for the victims of war, around the world, has now come into question, who are continued to be subjected to structural Genocide, War Crimes and Crimes Against Humanity.
Here, it’s an opportunity for the Council to show leadership, to correct past mistakes and to move forward, by referring Sri Lanka to the ICC.
Thank You.
காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி
காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி
ஹபரண – பொலன்னறுவ வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபரண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தை செலுத்தி வந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம்
தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
கொஹுவல, ஆசிரி மாவத்தையில் எரியுண்ட காரில் இருந்து 33 வயதான வர்த்தகரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
களுபோவில, ஹாதியா மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு
தடம்புரண்ட ரயில் – போக்குவரத்து பாதிப்பு
கண்டி – நாவலப்பிட்டிக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
142 ஆம் இலக்க பயணிகள் ரயில் நாவலப்பிட்டி ஜயசுந்த ஓவிட்ட பகுதியில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக
நாவலப்பிட்ட ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கவிருத்த குறித்த ரயில் எஞ்சின் பகுதி திருப்ப முற்பட்ட போதே இன்று (11) மதியம் 12.30 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது.
நாவலப்பிட்டி ரயில்வே ஊழியகர் திருத்தப்பணியின் ஈடுபட்டு வருவதுடன் பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் வழமை போல சேவை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது. பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில்
நேற்றைய தினம் , 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ் கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்த 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141
கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது
வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது
செட்டிகுளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கேத்கம பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட கல் குவாரி ஒன்றில் குறித்த வெடி
பொருட்களுக்கான அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் வைத்திருந்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெடி மருந்து 3 கிலோ, வோட்டர் ஜெல் 49, சாதாரண டெட்னேட்டர் 11, அமேனியம் நைட்ரேட் 149 கிலோ உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்;பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும்,
வரவு செலவு திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் அம்பிகா உணாவிரதம் – கண்டுகொள்ளதா அரசு -கதறும் தமிழர்கள்
லண்டனில் ஈழ விடுதலை போருக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த குடும்பத்தில் இருந்து உதயமானவரும் ,தொன்று தொட்டு புலிகளின் ஆதரவாளராகவும் ,பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த
ஆதரவாளர்கள் ஒருவராக விளங்கும் அம்பிகா அவர்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
இவரால் முன் வைக்க பட்ட கோரிக்கைகள் நிராகரிக்க பட்ட நிலையில், பிரிட்டன் அரசு பயணிக்கிறது ,
இவரது உயிரை காப்பற்ற வேண்டும் என தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஊடகங்கள் தம்மை கண்டு கொள்வதில்லை என்ற வாதங்களும் முன் வைக்க படுகிறது ,

ஆனால் ஊடகங்களுக்கு இவர்களினாலே எவ்வித செய்திகளும் வழங்க படுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது
அவர்களது மின் அஞ்சல்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க படுவதில்லை என்ற வாதம் வலுப்பெறுகிறது ,
பரப்புரை அல்லது கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயல்பவர்கள் ஊடக தொடர்புகள் சீரற்ற சம நிலையில் இல்லாது உள்ளமை குறிப்பிட தக்கது
கடலுக்குள் பாய்ந்த வண்டி – காப்பாற்றிய இராணுவம்
கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு பயணித்த மஹீந்திரா ஜீப் ரக வாகனம் ஒன்று நாயாறு களப்புக்குள் குடைச்சாய்தமையால் தண்ணீருக்குள் மூழ்கவிருந்த மூவருடைய உயிர்கள் படையினரால் காப்பாற்றப்பட்டன.
இவ்விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் சேவையாற்றிக் கொண்டிருந்த படையினர் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கவிருந்த
மூவரையும் காப்பாற்றியதுடன், அவர்களுடைய வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.
அதனையடுத்து இவ்வாறு விபத்தில் சிக்கியவர்கள் இராணுவ வாகனமொன்றில் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து களப்பிற்குள் இருந்து வாகனத்தை கரைச்சேர்த்தனர்.
மீட்கப்பட்ட சிவிலியன்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு அவர்களுடைய வாகனம் படையினரால் மீட்கப்பட்டது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா
பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணைகள் ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன..
மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு
மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு
அண்மையில், ரயிலில மோதுண்டு உயிரிழந்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகம் இணைந்து இன்று (9) பல்வேறு பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், கொரோனா பரவல் உள்ள
இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்
கடலில் மிதந்த சடலம்
கடலில் மிதந்த சடலம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர், இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது இவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன்,
இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்
பாராளுமன்றத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதம்
பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5.30 வரையில் குறித்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன், சிங்கள, தமிழ்
மற்றும் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிகள் மற்றும் விதவை பெண்களுக்கு 1000 உலர் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு (06) யாழ்ப்பாணம் – சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் படி யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த
பெரேராவினால் ஹேமாஸ் நுகர்வோர் பிரைவேட் லிமிடெட், நெஸ்லே லங்கா பிரைவேட் லிமிடெட், மாலிபன் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட், ´மனுசாத் தெரன சமூக உதவித் திட்டம் மற்றும் கொழும்பு
தரனா அறக்கட்டளை. ஆகியவற்றிடம் விடுத்த வேண்டுக்கோளுக்கு அமைய சிவில் – இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு ஆகும்.
யாழ் பாதுகாப்புப் படை தலைமைதயக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா தலைமையிலான விநியோக விழா, விநியோகம் நடைபெறுவதற்கு மத தலைவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டது..
ஒவ்வொரு நிவாரணப் பொதியிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, தேயி தேயிலை , கோதுமை மாவு, டின் மீன், மசாலா, தானியங்கள் மற்றும் அதிக சத்துணவுகள் உள்ளடக்கியிருந்ததுடன்
அதே சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு கொசு வலைகள், பாம்பர்கள், பால் பாட்டில்கள், சுகாதார பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட குழந்தைகளின் தேவைகளும் வழங்கப்பட்டன.
ஒரு சுருக்கமான உரையை நிகழ்த்திய யாழ்ப்பாணத் தளபதி, நன்கொடையளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பொது மக்களை பாதுகாக்க படையினர் எந்நேரமும் தயாராக இருப்பதாகக்
கூறினார். நிகழ்ச்சியின் முடிவில், யாழ்ப்பாண மகளிர் முன்னணித் தலைவி திருமதி டி தயானி, இந்த தொண்டு நிகழ்ச்சிக்கு படையினரின் பங்களிப்பைப் பாராட்டியதோடு தளபதி
அவர்களுக்கு இராணுவத் தளபதியின் ஆசீர்வாதங்களுடன் இந்த வகையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
அனைத்து மதங்களின் மதத் தலைவர்கள், 51 வது படைப்பிரிவின் தளபதி வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, யாழ்
பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், நெஸ்லே, மாலிபன் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
கொழும்பு, டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக DNA அறிக்கை வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த DNA அறிக்கை குருவிட்ட, தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் தலை இல்லாத காரணத்தினால் இவ்வாறு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருந்தது.
குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் DNA மாதிரிகளின் ஊடாக குறித்த சடலம் 30 வயதுடைய தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தப்பி சென்ற மைத்திரி
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை சுற்றிக்கொண்டனர்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
“குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன்வைக்கப்பட்டாலும் அதனை நான், கவனத்தில் எடுக்கமாட்டேன்” என்றார்.
கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்களே?
பதில்: “யாருக்குத்தான் குற்றச்சாட்டுகள் இல்லை, நான், அதனை கணக்கில் எடுக்கமாட்டேன், எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் கணக்கெடுக்கமாட்டேன்” என்றார்.
கேள்வி: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் உங்களுக்கு எதிராக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவே?
அக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது, கையை அசைத்தவாறு அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்







