சமித்ரி ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டார்
Posted in இலங்கை செய்திகள்

சமித்ரி ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டார்

சமித்ரி ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டார்

சமித்ரி ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டார் ,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது .

முன்னாள் அமைச்சர் கெஹெலிய

செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை

பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் பிணை வழங்கினார்.

இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1) இன் கீழ் குற்றமான பணமோசடிக்கு

உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்

மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்

விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்திருந்த மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்தார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடியும் வரை தன்னை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்து இந்த ரிட் மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்து சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கையை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது.

பிணை வழங்குவதற்கு விசேட சமர்ப்பணங்கள் எதுவும் முன்வைக்கப்படாதமையே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், குறித்த கொள்வனவு நடவடிக்கையில் கணிப்பீட்டு குழு உறுப்பினராக இருந்த வைத்தியர் துசித சுதர்ஷனின் பிணை கோரிக்கையை பரிசீலிப்பதை ஒத்திவைத்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Featured

Loading...
நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்

கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Featured

Loading...
நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆயராகியுள்ளார்

முன்னாள் சுகாதார அமைச்சராக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல்ல அவ்வேளை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது குற்றபாலனாய்வு திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆயராகியதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

கெஹலியவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் டிசம்பர் 12ஆம் திகதி ஆஜராகுமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது நாவலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெஹலியவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

நாவலப்பிட்டி குருந்துவத்தை பிரதேசத்தில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகிய இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில்

மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மகிந்ததானந்த அளுத்கமகே உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

இதையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அப்துல் காதர், பீட்டர் காத்தகெதர, நந்தன சிசிர குமார, துவான் நிஸாம் மிஸ்கின் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் அப்துல்காதர் மற்றும் துவான் நிஸாம் மிஸ்கின் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக தமது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்துக்கு கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

கெஹலியவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

இது தொடர்பான வழக்கு 2000 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டபோது குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு இந்த வழக்கு மேல் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

அந்த வழக்கு தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் சாட்சிகளாக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் வைத்தியர் கே.ஆர். சசேந்திரன் மற்றும் அரச இரசாயன பரீட்சகர் மென்டிஸ் உள்ளிட்ட 55 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

மருந்துப்பொருட்களை வாங்குவதற்கான நிதி கிடைக்கவில்லையெனில் தான் பதவி விலகுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உரிய நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ளார்.

“நான் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே நாங்கள் திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம், அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.”

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

போதுமான நிதி கிடைத்துவிட்டதால் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. நிதி கிடைக்காவிட்டால் பதவியில் நீடித்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று தான் பாராளுமன்றத்தில் கூறினேன். அதை சில ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரித்தபோது, சுமார் 100 மருந்துகள் தற்போது கையிருப்பிலில்லை; எவ்வாறாயினும், தேவையான நிதியை விடுவிப்பதன் மூலம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No posts found.