இஸ்ரேல் துறைமுகம் மீது மீளவும் தாக்குதல் எரிந்த எண்ணெய் வயல்கள்
6 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது
6 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது
சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருளை கிராண்ட்பாஸ் பகுதிக்கு கொண்டு செல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அங்கு சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 750,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ‘கெசல்வத்த தினுக’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கும் அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேக நபர் போதைப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனையாளர்களிடம் கொடுத்து பணப் பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (11) மாளிகாகந்த 2ஆம் இலக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
மதவாச்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே தனது மகனின் விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
அநுராதபுரம், மதவாச்சி துலாவெளி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் கடந்த 7ஆம் திகதி தனது நண்பருடன் லொறியில் மதவாச்சி நகருக்குச் சென்றுள்ளார்.
இதன்போது லொறியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் லொறியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக தனது மகனின் விரைகளில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸாரிடம் வினவிய போது, இரண்டு இளைஞர்கள் பயணித்த லொறியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், பின்னர் வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இளைஞனின் இடது விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
அதிநவீன ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுத கப்பல் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
அதிநவீன ஆயுதங்களுடன் சிக்கிய ஆயுத கப்பல்,
தாக்குதல் நடத்தி கொண்டிருந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் ,
வெடித்து பறக்கும் இசுரேல் பாலஸ்தீன ரஷ்ய உக்ரைன் போர்
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை
ஈரான் எண்ணெய் வயல்கள் தாக்குவோம் இஸ்ரேல் ,இஸ்ரேலுக்கு துருக்கி பொருளாதார தடை .
பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் யூத தாக்குதலுக்கு எதிராக துருக்கி பொருளாதார தடையை விதித்துள்ளது
இஸ்ரேலை விரைவில்தாக்குவோம் ஈரான் அதிரடி அறிவிப்பு பதட்டத்தில் இஸ்ரேல்
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நிவாரணம்
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நிவாரணம்
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ‘போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்’ நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வில் அடையாள அம்சமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதியால் மின்சார சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தனைமையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துருகிரியவில் பெட்ரோல் குண்டு வீச்சு
அத்துருகிரியவில் பெட்ரோல் குண்டு வீச்சு
அத்துருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று (09) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் மூவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலக செயற்பாட்டாளர், குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும், பணத்தை தர மறுத்ததன் காரணமாக அவரை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் இருப்பதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர வர்த்தகர் மேலும் பல ஆடைத் தொழிற்சாலைகளை வைத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வெளியீட்டு விற்பனை நிலையம் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
கையிருப்பு மற்றும் சில உள் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மறுநாள் (16) வழக்கம்போல் கருமபீடம் திறக்கப்படும்.
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்
இஸ்ரேலுக்கு தண்ணி காட்டும் ஹமாஸ் மூத்த தளபதி சின்வர்
அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் 100% பேர் இன்னும் குணமடையவில்லை என தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் நெடுஞ்சாலைகளில் இடம்பெறுவதாகவும் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் கடல்படை முகமை போட்டு தாக்கிய ஹிஸ்புல்லா
வெற்ற பெற தனித்திரு
வெற்ற பெற தனித்திரு
நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?
அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்
ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்
எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று
அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது
முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

ஈரான் இஸ்ரேலை நேரடியா தாக்க திட்டம் அலறும் இஸ்ரேல்
பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தோடு கலந்துரையாடி சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவுள்ளன.
இந்த பணிகளில் 5,580 பொலிஸார், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால
தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் பயணித்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) காலை 6.45 மணியளவில் நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளனர்.
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் பிற சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை உதவிகளை வழங்குவதை நோக்கமாகக்
கொண்ட ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக படைகள் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காணி உரிமைக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் அமைச்சர் அறிவித்தார்.
கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நமது நாட்டுக்காக இவ்வளவு உதவி செய்தவர்களின் நலனுக்காக நாம் முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது” என்று அமைச்சர் கூறினார்.































