இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள் ,சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3
கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் கூறுகையில், அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம்
உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.
அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, கரையொதுங்கும்
பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்
துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்
துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் ,தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி
இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி
இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி ,இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார்.
ஈரானிய ஊடகங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.
மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை ‘எதிரி முடக்கும் தாக்குதல்கள்’ என பெயரிட்டுள்ளது.
IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டது.
தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேவையான எந்த நேரமும் ஈரானை தாக்குவது தமது திட்டமென வலியுறுத்தியுள்ளார்.
இது முதல் தாக்குதல் மட்டுமே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் அதன் மூலம் தமது மக்களைப் பாதுகாப்பது இந்தத் தாக்குதலின் நோக்கம் என நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரான் தற்போது தனது வான்வெளி எல்லையை மூடியுள்ளது.
இந்நிலையில், “டஜன் கணக்கான இலக்குகள்” தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி
அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி
அகமதாபாத் விமான விபத்து 290பேர்பலி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் AI171 விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில விநாடிகளில், மேகானி நகர் (Meghani Nagar) பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர், மேலும் தரையில் இருந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 40 வயதான விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்ற பிரித்தானிய-இந்தியர், 11A இருக்கையில் அமர்ந்திருந்தவர், அவசர வெளியேறும் வழியருகே இருந்ததால் உயிர் தப்பினார்.
விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் ஒரு உரத்த சத்தம் கேட்டு, பின்னர் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பியவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது போயிங் 787 ட்ரீம்லைனரின் முதல் விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.
ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (12) மாலை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி
ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி
ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி ,இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இன்று (13) காலை, இஸ்ரேல் தனது “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் இந்த தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், இந்த தாக்குதல் முதல் கட்டமாகும் மற்றும் தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
இருப்பினும், மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள்
முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று
எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு
யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (13) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும்,
தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும்,
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்
முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது
சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது
வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக்
கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
எதிர்வருங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்
நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை (11) கைச்சாத்திட்டனர்.
இதுபற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்,
கடந்த பொதுத்தேர்தலின்போது தாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிடவேண்டும்
என அவர்கள் நிபந்தனைகளை விதித்ததாகவும் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், அந்நிபந்தனைகளுக்கு உடன்படிமுடியாது என்பதால் தாம் தனித்து செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு உள்ளுராட்சிமன்றங்களில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக்கட்சியுடன் இணைவது தமக்கு அதிக சந்தோஷத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,
சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
‘வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஜுன் 14 ஆம் திகதி அப்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது’ என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி,
அந்நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாற்றை விக்னேஸ்வரன் மறந்துவிட்டதாகத் தெரிவித்த சித்தார்த்தன், எதிர்வருங்காலத்தில் தமிழரசுக்கட்சியினால்
விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது ,இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும்
இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார்.
தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது.
இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம்.
பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன.
கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல்
எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக
இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே பிரிட்டன் பிரஜையான விஷ்வாஸ் குமார் ரமேஷ், “நான் எப்படி உயிரோட இருக்கிறேன் எனக்கே தெரியவில்லை” என
விமானம் தரையிறங்கிய சில வினாடிகள் பின்னர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கூறினார் என அவரது சகோதரர் ஸ்கை நியூஸிற்கு தெரிவித்துள்ளார்.
விஷ்வாஸ் குமார் ரமேஷ், வியாழக்கிழமை பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட உடனேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான
ஏர் இந்தியா விமானம் 171-இல் உயிர்தப்பிய ஒரே பயணியாகக் கருதப்படுகிறார்.
விபத்துக்குப் பிறகு விஷ்வாஸுடன் பேச முடிந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அதே விமானத்தில் இருந்திருக்கக் கூடிய அவரது சகோதரருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
லெஸ்டரில் இருந்து பேசும் அவரது சகோதரர் நயன், ஸ்கை நியூஸின் ஷமான் ஃப்ரீமன்-பவலிடம் கூறியதாவது:
விமானம் எயார்வேயில் இருந்தபோது அவர்களது தந்தை விஷ்வாஸுடன் பேசிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
“அப்பா அவரை அழைத்தார்,” என்று 27 வயதான நயன் கூறினார்.
“விஷ்வாஸ், ‘மீண்டும் சீக்கிரமே புறப்பட போகிறோம்’ என்றார்.”
இரு நிமிடங்களுக்குப் பிறகு, விபத்து நிகழ்ந்ததும், விமானம் விழுந்து விட்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ அழைப்பு மூலம் அவர்களது தந்தைக்கு தெரிவித்தார்.
“விமானம் விழுந்தது… எனக்கு என் தம்பி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. வேறு பயணிகள் எவரையும் பார்க்க முடியவில்லை. நான் எப்படி உயிரோட இருக்கிறேன்,
எப்படி விமானத்திலிருந்து வெளியே வந்தேன் எனக்கே தெரியவில்லை” என அவர் கூறியதாக நயன் தெரிவித்தார்.
அகமதாபாத் காவல்துறை அதிகாரி விதி சவுதரி கூறியதாவது, விஷ்வாஸ் 11A என்ற இருக்கையில் இருந்தார்.
அது அவசர வெளிச்செலுத்தும் கதவின் அருகில் இருந்தது. அவர் அந்த கதவின் வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளதாகவும் கூறினார்.
“தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய சத்தம் கேட்டது,” என விஷ்வாஸ் Hindustan Times செய்திதழுக்கு தெரிவித்தார்.
“அது அனைத்தும் நொடிகளில் நடந்தது. என் மார்பிலும், கண்களிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன,” என்றும் கூறினார்.
“நான் எழுந்தபோது, என் சுற்றிலும் சடலங்கள் இருந்தன. நான் பயந்து விட்டேன். எழுந்து ஓடினேன். விமானத்தின் துண்டுகள் எனக்கு எல்லாம் சுற்றிலும் இருந்தன. யாரோ என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.”
Sky News இந்தியா செய்தியாளர் நெவிலே லசரஸ், மருத்துவமனையில் விஷ்வாஸை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஷ்வாஸ், “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நிலையில் இந்திய விமானம் வெடித்துச் சிதறியதில் மூன்று பிரித்தானியர்கள் பலி ஆகியுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகீல் நனபாவா, அவரது மனைவி ஹன்னா, மற்றும் அவர்களது நான்கு வயது மகள் ஸாரா ஆகியோர் விமானத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று
Gloucester Muslim Community அவர்கள் Facebook-இல் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 1.38 மணிக்கு அகமதாபாதிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது. இதில் மொத்தம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 169 பயணிகள், பிரித்தானியாவைச் சேர்ந்த 53 பயணிகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும், 1 கனடா பயணி ஆகியோர் இருந்ததாக ஏர்லைன் தெரிவித்துள்ளது.
Flightradar எனும் விமான தடதள விளக்கதளத்தின் படி, விமானம் புறப்பட்ட பிறகு ஒரு நிமிடத்துக்குள் அதன் சிக்னல் காணாமல் போனது.
அதன் பின்னர் விமானம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில் விழுந்துவிட்டது.
இது தொடர்பில், லண்டன் கேட்விக் விமான நிலையம் கூறியதாவது,
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு பிரிட்டன் நேரப்படி தரையிறங்க வேண்டியது.
பிரிட்டன் வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணிபுரிந்து உண்மைகளை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது” என்று தெரிவித்தது.
முதலில், அகமதாபாத் காவல் ஆணையர் ஒருவர் உயிரிழந்தவர்களில் யாரும் உயிர்தப்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறைந்தது 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து, Boeing 787 Dreamliner என்ற விமான வகையில் இதுவரை நிகழ்ந்த முதல் விபத்து என Aviation Safety Network தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான வகையானது, இரண்டு என்ஜின் கொண்ட விசாலமான பயணிகள் விமானமாகும். 14 வருடங்களாக இந்த Dreamliner மாடல் ஐந்து மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Twitter) தளத்தில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்:
“அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத துக்கமான நிகழ்வாகும். இந்த சோகமான தருணத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கின்றனர்.”
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு விலைகள் அதிகரிக்கக் கூடுமோ என அச்சம் எழுந்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை எனவும்
விலைகளை அதிகரிக்க வேண்டாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாண் விலை அதிகரிப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதாரச் சம்பவமாகும்.
இது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரச் செலவுகள், மற்றும் மக்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடியது.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், பாண் விலை உயர்வுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
பேக்கரி உற்பத்திக்கான விலைகள் அதிகரிக்கப்படுமாயின்,
சாதாரண குடும்பங்களுக்கு பாண் போன்ற அடிப்படை உணவுப் பொருள்களை வாங்கவே கடினமாகும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மூன்று நேர உணவையும் தவிர்க்கும் நிலை உருவாகும்.
சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களில் நாள் ஒன்றுக்கு கிடைக்கும் வருமானம் உணவுக்கே போதாத அளவில் இருக்கும்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும்.
இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்
முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி
ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி
ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி ,ஈராக் முதல் தொகுதி பிரெஞ்சு கராகல் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களைப் பெறுகிறது.
நாட்டின் ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை
ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் பிரெஞ்சு கராகல் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதியைப் பெற்றது.
இந்த போர் ஹெலிகாப்டர்கள் தந்திரோபாய போக்குவரத்து, ஆதரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈராக் இராணுவத்தின் திறன்களை மேம்படுத்தும் என்று ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ஈராக் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை செப்டம்பர் 2024 இல் ஏர்பஸ் நிறுவனத்துடன் 12 கராகல் H225M மல்டி-ரோல் போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
ஏப்ரல் 30 அன்று, ஈராக் பாதுகாப்பு அமைச்சர் தாபெட் அல்-அப்பாசி, தெற்கு பிரான்சில் உள்ள மாரிக்னேனில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் முதல் இரண்டு ஹெலிகாப்டர்களைச் சரிபார்த்தார்.
புதிய ஹெலிகாப்டர்கள் பழைய மில் மி-17 களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும், மேலும் தீயணைப்பு ஆதரவு, தாக்குதல், தந்திரோபாய துருப்பு போக்குவரத்து, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி ,இந்திய விமான விபத்து சமீபத்தியது: 242 பேருடன் லண்டன் விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ‘பலர் கொல்லப்பட்டனர்’
வியாழக்கிழமை 240க்கும் மேற்பட்டவர்களுடன் லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தியாவில் விபத்துக்குள்ளானது.
மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் குடியிருப்பு பகுதியில் சரிந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து பெரிய அளவிலான கரும்புகை மேகங்கள் வெளியேறுவதையும், போயிங் 787 விமானத்தின் உடலின் ஒரு பகுதி ஒரு கட்டிடத்தில் இருப்பதையும், மற்ற படங்கள் இடிபாடுகள் மற்றும் சுற்றியுள்ள கட்டிடங்களை அணைக்க அவசர சேவைகள் பணியாற்றுவதையும் காட்டுகின்றன.
விபத்து நடந்த இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குறைந்தது 30 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர், மீட்புப் பணியாளர்கள் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன்கள், ஏழு போர்த்துகீசிய குடிமக்கள் மற்றும் ஒரு கனடியர் அடங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தங்களுக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருவதாக இந்திய மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்கள் இருவரும் தெரிவித்தனர்.
“இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனவேதனை அளிக்கிறது” என்று நரேந்திர மோடி X இல் கூறினார். சர் கெய்ர் ஸ்டார்மர், காட்சிகள் “பேரழிவு” என்று கூறினார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

பத்து கப்பல்கள் தீயில் கருகின
கப்பல்கள் தீயில் கருகின
பத்து கப்பல்கள் தீயில் கருகின ,தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பத்து கப்பல்கள் தீயில் கருகின.
தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் அமைந்துள்ள பார்சியன் கவுண்டியின் புஸ்டானோ கிராமத்தில் உள்ள ஜாவத் அல்-ஏமே
கப்பல்துறையில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து பத்து வணிகக் கப்பல்களை சூழ்ந்ததால், ஒரு பெரிய அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹார்மோஸ்கானில் உள்ள நெருக்கடி மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ரதாத் ஹசன்-சாதே, சம்பவத்தை உறுதிப்படுத்தினார், உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் தீ விபத்து தொடங்கியதாகக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஃபார்ஸ் மற்றும் புஷேர் உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலிருந்து தீயணைப்பு மற்றும் அவசரகால குழுக்கள் அனுப்பப்பட்டன. லாமெர்ட் மற்றும் அசலுயேவிலிருந்து தீயணைப்பு
வாகனங்கள், புஷேர் மற்றும் ஷாஹித் ராஜீ துறைமுகத்திலிருந்து தீயணைப்பு படகுகள், பாஸ்தாக், பந்தர் லெங்கேவிலிருந்து மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் பார்சியன் படைகள் தீயைக் கட்டுப்படுத்த அணிதிரட்டப்பட்டன.
தீயை கட்டுப்படுத்தவும், அது பரவாமல் தடுக்கவும் மாகாணத்தின் அனைத்து தளவாடத் திறன்களும் திரட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்
அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்
அப்பா என்னை பெத்தவரே புதியபாடல் ,அப்பா என்னை பெத்தவரே |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா
|4வது பாடலாசிரியர் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்
-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
காரை சேனாதி நான்காவது பாடல் இன்று வெளியீடு ,வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட அப்பா என்னை பெத்தவரே பாடல் .
காரை சேனாதியின் புதிய பாடல் ,வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

நாட்டில் எலிக் காய்ச்சல்
நாட்டில் எலிக் காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக
சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் ஒருபக்கம் பரவுவதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுவரும் இந்நிலையில், தற்போது எலிக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட
மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,
“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்






































