பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு விலைகள் அதிகரிக்கக் கூடுமோ என அச்சம் எழுந்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை எனவும்

விலைகளை அதிகரிக்க வேண்டாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாண் விலை அதிகரிப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதாரச் சம்பவமாகும்.

இது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரச் செலவுகள், மற்றும் மக்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடியது.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், பாண் விலை உயர்வுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.

பேக்கரி உற்பத்திக்கான விலைகள் அதிகரிக்கப்படுமாயின்,

சாதாரண குடும்பங்களுக்கு பாண் போன்ற அடிப்படை உணவுப் பொருள்களை வாங்கவே கடினமாகும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மூன்று நேர உணவையும் தவிர்க்கும் நிலை உருவாகும்.

சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களில் நாள் ஒன்றுக்கு கிடைக்கும் வருமானம் உணவுக்கே போதாத அளவில் இருக்கும்.

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக் பாண் மற்றும் பன்களின் விற்பனை சுமார் 50% ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

மாஜரின் மற்றும் வெண்ணெய் விலை ரூ.1000 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோகிராமின் விலை முறையே 3,000 ஆகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

“இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் எங்களுக்கு வரவில்லை, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை தலா 60 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இது பேக்கரி தொழிலுக்கு கடுமையான அடியாகும்” என்று சங்கத் தலைவர் கூறினார்.

எனவே எதிர்வரும் சிங்கள, இந்து புத்தாண்டுக்கு முன்னர் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொருட்களின் விலைகளை குறைத்து சலுகைகளை வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

மின்கட்டண உயர்த்தப்படுவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து பேக்கரி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை திருத்துவது குறித்து பரிசீலிக்க உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் தமது உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

உணவகம் பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

கலந்துரையாடலுக்கு பிறகு, விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும் என்பதுடன், இது இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின் கட்டணத் திருத்தமாகும்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

பேக்கரி பொருட்களின்விலைகள் திடீர் அதிகரிப்பு

பேக்கரி பொருட்களின் விலைகள் திடீர் அதிகரிப்பு

இலங்கையில் கொரனோ நோயினால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் பேக்கரி

பொருட்களின் விலை திடீரென அதிகரிக்க பட்டுள்ளது ,பாண் தவிர்ந்த அனைத்து பொருள்களும் விலை உயர்த்த பட்டுள்ளன