நாட்டில் எலிக் காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக
சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் ஒருபக்கம் பரவுவதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுவரும் இந்நிலையில், தற்போது எலிக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி








