மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா ,மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடு நாடாக ஓடி

அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு நாடாக ஓடி கடனை பெற்று ,நாட்டின் கடனை அடைப்பதில் ஆளும் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது .

நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவு

இந்த நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவுகளை குறைத்தாலே நாட்டின் கடனில் பாதியை தீர்த்து விடலாம் .

இதுவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .

நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் யாவரும் லஞ்ச ஊழலல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் நாடு தொடர்ந்து பின்னோக்கி செல்வது குறிப்பிட தக்கது .

கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு

கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு

கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு ,கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல்

நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்
Posted in இலங்கை செய்திகள்

IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில் ,இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச

நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில்

நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை நேர்மறையாக இருந்தாலும், உலகளாவிய சந்தை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நாட்டின்

பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலி கோசெக் வலியுறுத்தினார்.

ஐந்தாவது மதிப்பாய்வின் போது இந்தக் காரணிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சந்தை, பொருளாதார மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கம் உட்பட நாட்டின் பொருளாதாரம் குறித்த முழுமையான

இந்த மதிப்பாய்வின் போது

மதிப்பீடு இந்த மதிப்பாய்வின் போது மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2025 ஜூலை 1 ஆம் திகதி, IMF இன் நிர்வாகக் குழு நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியது.

இதன்மூலம், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.

இதற்கிடையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பணவீக்கம் குறைவு, மேம்படுத்தப்பட்ட வருவாய் வசூல்

மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளதாக ஜூலி கோசெக் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நாடு நெருக்கடிக்குப் பிந்தைய 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு IMF கவனம் செலுத்துகிறது. 2022 இல் 8.2% ஆக

இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீதம், 2024 இல் 13.5% ஆக உயர்ந்துள்ளது. இது வலுவான நிதி செயல்திறனைப் பிரதிபலிப்பதுடன்,

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் IMF திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் வலுவாக உள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை ,தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து

விசேட அதிரடிப் படை

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று அதிகாலை 4:30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்

இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்

தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்

தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம் , தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்துவிட்டதாக ,சிங்கள கூலிகளினால் முன்னெடுக்கப்படும்,

சுவிசில் மாபெரும் போராட்டம்

இந்த விஷம பரப்புரைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுவிசில் மாபெரும் போராட்டம் என்று ஆரம்பித்துள்ளார்கள்.

இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை காண்பிக்குமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளார்கள் .

அதன் அடிப்படையில் அந்த மண்டபம் முன்பாக மக்கள் அணிதிரண்டு தமது போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் .

புதிய பாடல்

சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில்

இதனால் சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .

கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மக்களை அங்கே அணிதிரளுமாறு வேண்டுதல் விடுத்துள்ளனர் .

மக்களே ஒன்றாக அணிதிரண்டு வருக ,கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு களத்தில் குதிக்க .புரட்சி வெடிக்க .

சிங்கள கூலிகளை ஓட விரட்டுவோம். தமிழர் பலத்தை நிறுத்தி மக்கள் எழுச்சியை காட்டுவோம் .

பகை விலக படை எடு தமிழா .

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்


காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது

காதலனால் கழுத்தறுத்து கொலை

காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்

வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு ,புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில்

ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச்

சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில்

கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து

நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து

நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து ,ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டி ஒன்று

முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண் கழுத்தறுத்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் கழுத்தறுத்துக் கொலை

பெண் கழுத்தறுத்துக் கொலை

பெண் கழுத்தறுத்துக் கொலை ,நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில்

பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்து கொலை

அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.

இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு

வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு ,வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய

வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்த முடிவு

செய்துள்ளதா என்பது குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.

கேள்வி – கடந்த சில நாட்களாக அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?

“அவற்றைக் மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை.

சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்

திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.

எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.

இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.

இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ,2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள்

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட

விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின்

அவசரகாலச் சட்ட பிரகடனம்

அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.

மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர்

இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

பாடசாலை பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை பேருந்து விபத்து

பாடசாலை பேருந்து விபத்து

பாடசாலை பேருந்து விபத்து ,பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல்

ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல்

ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல் ,கியேவில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்திற்கு அருகில் ஏவுகணைத் தாக்குதல்

பாரிய வான்வழித் தாக்குதல்

தலைநகரம் கியேவ் உட்பட உக்ரைனின் பல மாகாணங்கள் ரஷ்ய இராணுவத்தால் பாரிய வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

அறிக்கையின்படி, கியேவின் மத்திய மாவட்டங்களான ஷெவ்சென்கிவ்ஸ்கி, சோலோமியன்ஸ்கி, ஹோலோசிவ்ஸ்கி, டார்னிட்ஸ்கி மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கியேவில், அஜர்பைஜான் தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களை ஏவுகணைத் தாக்குதல் தாக்கியது.

சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், உயிரிழப்புகள் மற்றும் தாக்குதல்களின் சரியான அளவு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள்

இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள்

இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள் ,காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் இஸ்ரேல் ஆட்சியை

இஸ்ரேல் காசா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

விமர்சித்துள்ளார், இஸ்ரேல் காசா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்கான அதன் உறுதிமொழிகளை இஸ்ரேல் நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து

விருப்பங்களும் மேசையில் உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் செவ்வாயன்று கூறினார்.

உதவி கோரும் பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேல்

“காசாவில் உதவி கோரும் பொதுமக்களைக் கொல்வது நியாயப்படுத்த முடியாதது” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் X இல் ஒரு பதிவில் எழுதினார், மேலும்

“உதவி ஓட்டம் குறித்த நமது புரிதலை நினைவுபடுத்தவும், IDF (இஸ்ரேலிய இராணுவம்) விநியோக புள்ளிகளில் மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்

என்பதை தெளிவுபடுத்தவும்” இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருடன் பேசியதாகவும் கூறினார்.

காசா சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று காசா பகுதியில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக

நான்கு குழந்தைகள் உட்பட பதினெட்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது

காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை

காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை

காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் 77 பாலஸ்தீனியர்களைக் கொன்றன

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆட்சி 77 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகக் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை

அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 59,106 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 77 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 376 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சக அறிக்கை

தெரிவித்துள்ளது, இதனால் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,511 ஆக உயர்ந்துள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“மீட்புப் பணியாளர்களால் அவர்களை அடைய முடியாததால் பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 52 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது, இதனால் உதவி கோரும்

கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை

போது கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,026 ஆக உயர்ந்துள்ளது, மே 27 முதல் 6,563 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மார்ச் 18 அன்று காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது, அதன் பின்னர் 8,268 பேர் கொல்லப்பட்டனர் மற்றும்

30,470 பேர் காயமடைந்தனர், இது ஜனவரியில் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முறித்தது.

கடந்த நவம்பரில், காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது.

ஏமன் படைகள் தொடர்ச்சியான தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஏமன் படைகள் தொடர்ச்சியான தாக்குதல்

ஏமன் படைகள் தொடர்ச்சியான தாக்குதல்

ஏமன் படைகள் தொடர்ச்சியான தாக்குதல் ,இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு யேமனில் விரைவான பதில்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சி ஹொடைடா துறைமுகத்தைத் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் ஏமன் படைகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தின.

பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து இராணுவ நடவடிக்கை

டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஒரு துல்லியமான இராணுவ நடவடிக்கையை யேமன் ஆயுதப்படைகள்

அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் 2 என பெயரிடப்பட்ட ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தொலைக்காட்சி அறிக்கையில், யேமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அதன் நோக்கங்களை அடைந்ததை உறுதிப்படுத்தினார்.

சாரியின் கூற்றுப்படி, இந்த தாக்குதல் “மில்லியன் கணக்கான அபகரிக்கும் சியோனிச குடியேறிகள் தங்குமிடங்களுக்குள் தப்பிச் செல்லவும், விமான நிலைய நடவடிக்கைகளை நிறுத்தவும்” காரணமாக அமைந்தது.

காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு

இந்த நடவடிக்கை காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சியால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாகவும்,

பாலஸ்தீன மக்களுடனும் அவர்களின் எதிர்ப்புடனும் ஒற்றுமையைக் காட்டுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

காசாவில் இனப்படுகொலைப் போர் முடிவடைந்து முற்றுகை நீக்கப்பட்டவுடன் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் நிறுத்தப்படும் என்றும் சாரி மீண்டும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனப் பிரச்சினையைத் தொடர்ந்து ஆதரித்ததற்கும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மீதான அந்நிய ஆதிக்கத்தை நிராகரித்ததற்கும் ஏமன் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் தலைநகர் சனாவின் தெருக்களிலும், பல நகரங்களிலும் ஏமன் மக்கள் வெள்ளமென திரண்டு, காசா மற்றும்

பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 20 மாதங்களாகத் தொடர்கிறது.

கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்
Posted in இலங்கை செய்திகள்

கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்

கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்

கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம் ,தலைவர் வீரமரணம் கிளம்பிய கூலிக்குழு நடவடிக்கைகள் சர்வதேச பரப்பில் தமிழர்கள் மத்தியில் சலசலப்பை சாட்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள கூலிகள்

உலகத் தமிழர்களின் உயிர் நாடியாகவும் ,தேசத் தந்தையாகவும், தேசியத்தின் தலைவராகவும் விளங்கிய

மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் ,வீர மரணம் அடைந்து விட்டார் என ,முன்னாள் போராளிகள் என விளைபோன சிங்கள கூலிகள் கூவி வருகின்றனர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு

கடந்த 16 வருடங்களாக தலைவர் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக பேச மறந்த கும்பல் திடீரென கிளம்பி இருக்கிறது.

இவ்விதம் கிளம்பிய இந்த கும்பல் தலைவருக்கு வரும் மாதம் விளக்கு ஏற்ற வேண்டுமென கூறி வருகிறது.

அவ்விதம் கூறி வருகிற இவர்கள் எவ்விதம் அங்கிருந்து தப்பினார்கள், தலைவர் எப்பொழுது இறந்தார், எந்த பகுதியில் இறந்தார், எந்த

சண்டைக்களத்தில் எவ்வாறு இறந்தார் என்ற கேள்விகள் எதற்கும் பதில் தர மறுத்து வருகிறது .

முகமூடிகளை அணிந்து தமது முகங்களை காண்பிக்க மறக்கிற ,இந்த சிங்கள கூலிகள் ,தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் ஒளிந்து இருந்து கூவி வருகிறது .

சர்வதேச புலம்பெயர் மக்களுடைய கவனத்தை திசை திருப்பவும் ,மனித உரிமை பேரவையில் ,இலங்கையில் இனப்படுகொலை தொடர்பாக

விடயத்தை திசை திருப்பவும், சிங்கள புலனாய்வு இறக்கி விடப்பட்ட ,முன்னாள் போராளிகள் விலை போன கூலிகளாகவே இவர்கள் காட்டி கொடுக்கிறது.

ஆகவே மக்கள் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அந்த மண்டபங்களில் கூடி இவர்களுக்கு பூக்கள் மோதகம் வடை பொங்கி படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு சாராக பிளந்து இவர்களின் வாய்களுக்கு ஊற்றி அவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படும் எனவும் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இறந்து போனதாக கூறப்படும் தலைவர் தொடர்பான புகைப்பட ஆதாரங்களோ காணொளி ஆதாரங்களோ அல்லது அவரது மரணச் சான்றிதழ் ஆதாரமாக காண்பிக்க மறுக்கும் இவர்கள்,

தற்பொழுது தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றை சொல்லை மட்டும் முகமூடிகள் போட்டு உரைப்பதை வைத்து எவ்வாறு இவர்களுக்கு கதையை ஏற்க முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற்னர் .

கனடா பெண் விமானநிலையத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

கனடா பெண் விமானநிலையத்தில் கைது

கனடா பெண் விமானநிலையத்தில் கைது

கனடா பெண் விமானநிலையத்தில் கைது ,கனடா நாட்டு பொன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .

போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில்

போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில் கனடிய வதிவிட உரிமையை கொண்ட பெண் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூதனமான முறையில் தனது பயண போதிக்குள் போத வஸ்து கடத்தி வந்த பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹரிஷ் போதவஸ்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து

இத்தகைய பல மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து இவர் அங்கிருந்து எப்படி நூதன முறையில் கடத்தி வந்தார் என்கின்ற விடயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கடத்தல் நடவடிக்கை மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் இருந்து இலங்கை வந்த கனடிய பெண் பயண பொதிக்குள் 181 மில்லியன் ரூபாய் பெறுமதியென போதை வஸ்து எப்படி சிக்கியது என்பது தொடர்பான விடயம் தான் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு

மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு

மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு ,மிளகாய் தூள் வீசி ஆட்டோ திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் செல்லும் பெண்கள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் செல்லும் பெண்கள் அவர்கள் மீது மிளகாய் பொடிகளை வீசி அதன் பின்னர் அந்த ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விதம் 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

ஆண் பெண்கள் இருவரும் இணைந்து வாடகைக்கு ஆட்டோவில் செல்வது போல செல்கின்றனர் .

ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி ஆட்டோ திருட்டு

பின்னர் அந்த ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி அதன் பின்னர் அவர்கள் நிலைதடுமாற அந்த ஆட்டோ திருடி செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேற்படி புதிய திருட்டு ஆட்டோ சாரதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் இவ்விதமான குற்றச் செயல்களை தடுப்பது எவ்வாறு என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிளகாய் பொடி வீசி தற்பொழுது 4க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது

முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது

முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரமேஷ் என்ற நபரை

டி 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காட்டு கதை என்ற இலங்கை ராணுவ புலனவித்துறை அடித்து விட்டுள்ளது.

குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன்

குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன் இவர் துப்பாக்கி பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோடிக்கப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் செய்கிறார்கள் என்கின்ற தகவலை பரப்ப ,இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது என்கின்ற முதலாவது கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆக இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரை மீளவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்.

அத்துடன் தமிழர்களை தமிழர்களை அடக்கியாள முற்படுகிற விளையாட்டின் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக இதனை எதிர்பார்க்கலாம் .

இந்த கைது நடவடிக்கையின் பின்னால் பல நடவடிக்கைகள் உள்ளது என்பதை இப்பொழுதே நாங்கள் அடித்து கூறலாம்.

இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அனுரா அரசின் ஆட்சிக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும் என்பதை, விரைவில் அந்த அரசு உணர்ந்து கொள்ளும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.