Tag: துப்பாக்கிதாரி
பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரைக் கொன்று 9 பேர் காயமடைந்த துப்பாக்கிதாரியைத் தேடும் காவல்துறையினர்
பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரைக் கொன்று 9 பேர் காயமடைந்த துப்பாக்கிதாரியைத் தேடும் காவல்துறையினர்
பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரைக் கொன்று 9 பேர் காயமடைந்த துப்பாக்கிதாரியைத் தேடும் காவல்துறையினர்.
சனிக்கிழமை இரவு பிராவிடன்ஸில்
சனிக்கிழமை இரவு பிராவிடன்ஸில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவி லீக் பள்ளியில் இரண்டு மாணவர்கள்
கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, ரோட் தீவில் உள்ள காவல்துறையினர் ஒரு சந்தேக நபரைத் தேடி வருவதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்பதாவது நபர் தோட்டாக்களால் காயமடைந்ததாக மேயர் கூறினார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகும் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகள் தடுக்கப்பட்டு அவசரகால வாகனங்களால்
நிரம்பியிருந்தன, மேலும் போலீசார் தங்கள் தேடலைத் தொடர்ந்ததால், சட்ட அமலாக்க அதிகாரிகள் நகரைச் சுற்றி பாதுகாப்பை அதிகரித்தனர்.
“பொறுப்பான நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்,” என்று மேயர் பிரட் ஸ்மைலி இரவு 9:30 மணிக்கு (0230 GMT) செய்தியாளர் சந்திப்பில்
செய்தியாளர்களிடம் கூறினார். சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை என்று துணை காவல்துறைத் தலைவர் திமோதி ஓ’ஹாரா கூறினார்.
கருப்பு உடை அணிந்த ஒரு ஆணைத் தேடுவதாக
கருப்பு உடை அணிந்த ஒரு ஆணைத் தேடுவதாகவும், சந்தேக நபரின் வீடியோவை வெளியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர், அவர் முகமூடி
அணிந்திருக்கலாம் என்று ஓ’ஹாரா கூறினார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து அதிகாரிகள் ஷெல் உறைகளை மீட்டெடுத்ததாகவும், ஆனால் விவரங்களை வெளியிட போலீசார் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
பிரவுனின் பாருஸ் & ஹோலி பொறியியல் கட்டிடத்தில், தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மாணவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கிறிஸ்துமஸுக்கு இன்னும் ஒன்றரை வாரங்கள் உள்ளன. இன்று இரண்டு பேர் இறந்தனர், மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் உள்ளனர்,” என்று ஸ்மைலி
மாலையில் முன்னதாக கூறினார். “எனவே தயவுசெய்து அந்த குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.”
ரோட் தீவின் மாநிலத் தலைநகரான பிராவிடன்ஸில் உள்ள கல்லூரி மலையில் பிரவுன் இருக்கிறார்.
விரிவுரை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் தங்குமிடங்கள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளன.
“இது ஒருபோதும் நடக்காது என்று ஒருவர் நம்பும் நாள், அது நடந்துள்ளது,” என்று பிரவுனின் தலைவர் கிறிஸ்டினா பாக்சன் செய்தியாளர்களிடம்
கூறினார், பாதிக்கப்பட்டவர்களில் அனைவரும் அல்லது கிட்டத்தட்ட அனைவரும் மாணவர்கள் என்பதை உறுதிப்படுத்தினார்.
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்

- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்

- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை போர்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

மூன்று கொலை தேடப்படும் துப்பாக்கிதாரி
மூன்று கொலை தேடப்படும் துப்பாக்கிதாரி
மூன்று கொலை தேடப்படும் துப்பாக்கிதாரி ,அனுராதபுரத்தில் மூன்று கொலைகளுக்குத் தேடப்படும் துப்பாக்கிதாரி கைது.
தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலை
தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குத் தேடப்படும் துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள்
அனுராதபுரத்தில் ரூ.2.5 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெலுகொல்லேவ, ஹொரொவ்பத்தானை, நெலுகொல்லேவவைச் சேர்ந்த 44 வயதுடைய இராணுவத்தில் இருந்து
தப்பியோடியவர், மதவாச்சியைச் சேர்ந்த 40 வயதுடையவர் மற்றும் அனுராதபுரம், பெரியங்குளத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர்.
தேடும் துப்பாக்கிதாரி
மூன்று கொலைகளுக்குத் தேடும் துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் உள்ள யாழ்ப்பாணச் சந்தியில் கைது செய்யப்பட்டார், மேலும் துபாயில்
மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கீழ் செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடம் இருந்து 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது ,வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம்
9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில்
தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர தனது அலுவலகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி, மோட்டார்
சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவியவர்,
பொரளை சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இரண்டு நபர்கள் உட்பட 6 பேர் தற்போது பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி அகுலுகஹவைச் சேர்ந்த
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலை
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தி கொடுத்த வலானையில் உள்ள ஒரு வாகன திருத்தும் இடத்தின் உரிமையாளரும், அந்த மோட்டார்
சைக்கிளை கொலையாளியிடம் ஒப்படைத்த இளைஞனும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட சிலர் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 சந்தேக
நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உதவி ஒத்தாசைகளை வழங்கியமைக்காக மாத்தறை மற்றும் காலியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது, அந்த 3 சந்தேக நபர்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு வெலிகம பொலிஸ் தலைமையகம் நீதிமன்றத்திடம் கோரியது.
அந்த கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க, அந்த மூன்று சந்தேக நபர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி, அந்த மூன்று சந்தேக நபர்களும் மீண்டும் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் குறிப்பிட்டார்.
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை ,தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து
விசேட அதிரடிப் படை
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை 4:30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்
குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள
குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான
பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..
இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்
மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்
மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் வாகனங்களை பறிமுதல் செய்யும் நபரொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



















