முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.


உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…


இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..


முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..


அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..


காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..


(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..


புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கல்லூரி மைதானத்தில்

கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு

“ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

பெண்கள் இருவர் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் ,போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீடடை சோதனை செய்த பொழுது இரு பெண்கள் சடலம் காணப்பட்டுள்ளது .

வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட பெண்கள் இருவரை கிராமசேவாகார் அடையாளம் காட்டினார் .

இறந்த இரு பெண்களும் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

இறந்த இருபெண்களதும் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

இந்த பெண்கள் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் சாமீப காலங்களாக இவ்வாறு வீடுகளுக்க்குள் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இவை திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவங்களாக இருக்கலாம் என் மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .

பூட்டிய வீட்டுக்குள் இறந்த இரு பெண்கள் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது

ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று காணாமல் போயிருந்த மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இன்று காலை மாத்தறை உயன்வத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

மாத்தறை, உயன்வத்தையில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர்கள் பணிபுரியும் கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் காணப்பட்ட இருவரும் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வீடியோ

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டு பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பால் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான பல்துறை தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு

செயலமர்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம, இலங்கையில் கர்ப்ப காலத்தில் அதிகளவாக பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர் என தெரிவித்தார்.

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இந்த நிகழ்ச்சியானது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி

பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி திருமதி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இந்தத் திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) பாலின ஆலோசகர் திருமதி ஸ்ரீயானி பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆலோசகர் கலாநிதி லக்ஷ்மன் சேனாநாயக்க ஆகியோர் பாலியல் மற்றும்

பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை விரிவாகக் கூறினர்.

செயலமர்வில் பங்குபற்றிய தரப்பினர் இந்த தேசிய செயற்திட்டத்திற்கு தமது புதிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

video

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

அமெரிக்கா Memphis பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் நான்கு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

ஆயுதம் தரித்த நபர் நடத்திய திடீர் சுட்டு தக்குதலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .


குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

நாள் தோறும் அமெரிக்காவில் 360 சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதிகரித்து செல்லும் துப்பாக்கி பாவனையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

மக்கள் இந்த துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ,போராட்டங்கள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்னர் இலங்கையர்கள் என்று கூறப்படும் 2 பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

50 வயதான ஜே.ஏ. ஷமிலா துஷாரி மற்றும் 44 வயதான கே.ஏ. ஸ்ரீயானி மஞ்சுளா குலதுங்க எனப்படும் பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

இந்நிலையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த 2 பெண்களையும் ஜோர்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

               இவர்கள் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

          முதல் விமானம் 09/27 அன்று காலை 01.10 மணிக்கு, அதில் மூன்று பெண்களும்  ஆணொருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

             மேலும், மேலும் ஒரு பெண் துபாயிலிருந்து 09/27 அன்று காலை 05.25 மணிக்கு வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

            இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவாகும்.

             06 கிலோ கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது, ​​சுங்க அதிகாரிகளால் அவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

           கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த குழுவினரை தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (26) தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.

குறித்த பேரூந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேரூந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேரூந்தை நிறுத்தி பேரூந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) உள்ளிட்ட குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன் போது சட்டவிரோத ஆள் கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக

தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக

கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோசா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களை இன்று (16) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

நல்லூர் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய

விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள

விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

அந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை

வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர்
ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

    Posted in மருத்துவம்

    அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

    அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

    பெண்களுக்கு அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது .இதனை ஏற்படுத்தும் காரணி என்ன ..?


    பெண்ணின் கருவுருவத்தை சுற்றி காணப்படும் கருப்பையில் ஏற்படும் அது இரத்த குருதியாக வெளியேறும் காரண தொழில் பாடு எங்கு உருவாகிறது .

    மாதவிடாய் என்பது கருப்பையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக இரத்த கசிவு ஏற்படும் இதன் பொழுது வலிகள் ஏற்படும்.

    இந்த வலிகளை கட்டு படுத்த அல்லது இது ஏற்பட முக்கிய காரணம் என்ன ..?மாதவிடாய் இல்லாத காலத்திலும் வலிகள் ஏற்படும் அது எவ்வாறு ஏற்படுகிறது.

    கண்டிப்பாக பெண்கள் இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

    மலத்துடனும் இந்த இரத்த கசிவு ஏற்படும் ,ஆகவே பெண்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    Error: View 6f7d65ec2l may not exist
    Posted in மருத்துவம்

    விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

    விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

    பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.

    முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன்

    மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

    ப்ராக்கோலி

    கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது.

    கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    மாதுளை

    மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

    வாழைப்பழம்

    சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும்

    விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

    பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

    அன்னாசிப்பழம்

    அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக,

    உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    முட்டை

    முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும்

    வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

    மஞ்சள்

    சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும்.

    இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை
    ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்

      இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்

      பாலியல் தொழிலாளர்களை பொலிஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க

      வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

      இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது.

      இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கூறும்போது, “நாடு முழுவதும் 9

      லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். பாலியல் வழக்கில் கைதாகும் பெண்கள், அவர்களது

      விருப்பத்துக்கு மாறாக காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.

      மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கூறும்போது, “பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காகவே காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர்” என்று வாதிட்டார்.

      இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

      விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. எனினும் பாலியல் விடுதிகள் நடத்துவது சட்டவிரோதம். பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொழிலாளர்களை

      பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ பொலிஸார் துன்புறுத்தக்கூடாது.

      கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்களை கைது செய்யக்கூடாது. அபராதம் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அதன்பேரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காப்பகங்களில்

      தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

      விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால்,
      அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      பாலியல் தொழிலாளர்களின் அடையாளம்,


      பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
      வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

        உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

        உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

        பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

        உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

        உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்

        வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

        தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு

        தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.

        அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

        பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

        முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,


        ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          கஞ்சா விற்ற பெண்கள் கைது

          கஞ்சா விற்ற பெண்கள் கைது

          இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட

          இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

          கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்

          மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து

          சென்றமை குறிப்பிட தக்கது

            Posted in மருத்துவம்

            கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

            கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

            கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

            கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

            ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

            பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது

            இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.

            கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

            ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில்

            மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

            கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

            கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப

            காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

            பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.

            பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.

            ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால்
            எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

              Posted in Uncategorized

              நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு

              நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு


              வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்

              போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.


              ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.


              வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


              இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை

              சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.


              இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்

              அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
              வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி

              (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.


              சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்

              சடலம் கற்பாறை
              ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.