Tag: கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியனை நன்கொடை
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியனை நன்கொடை
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியனை நன்கொடை ,இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ‘இலங்கையை மீண்டும்
கட்டியெழுப்பும்’ நிதிக்கு ரூ. 300 மில்லியனை நன்கொடையாக வழங்குகிறது
தித்வா சூறாவளி
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இலங்கை
கிரிக்கெட் நிறுவனம் (SLC) அரசாங்கத்தின் ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு ரூ. 300 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தேசத்தால் மிகவும் மதிக்கப்படும் ஒரு விளையாட்டின் நிர்வாகக் குழுவாக வாரியத்தின் பொறுப்பை இந்த பங்களிப்பு பிரதிபலிக்கிறது
என்று கூறிய SLC தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொது
சேவைகளை மீட்டெடுப்பதிலும் இந்த நிதி அரசாங்கத்திற்கு உதவும் என்று SLC தெரிவித்துள்ளது.
தேவைப்படும் போதெல்லாம் நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வாரியம் மேலும் உறுதிப்படுத்தியது, இலங்கை
கிரிக்கெட் தேசிய மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்க தயாராக உள்ளது என்பதை வலியுறுத்தியது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.
மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.இதன்போது பாராளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கல்லூரி மைதானத்தில்
கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு
“ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”
இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
Featured
கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன
கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன
இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க,
நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்
அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

















