Tag: பேரூந்தில்
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்
ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம் ,ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று (அக்.24) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்
பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது
மோதி உள்ளது. இதில் பேருந்தின் கீழ்ப்பக்கம் இருசக்கர வாகனம் சிக்கியதாக தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது
தொடர்ந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் அது மளமளவென பேருந்தின் மற்ற பகுதிக்கும் தீ பரவியுள்ளது.
இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாக தெரிகிறது. விபத்தை அடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது
தவித்தனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறினர்.
பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் (கிளீனர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.
பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்
பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்
பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளது.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.
தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
சிரியா வடக்கு அலப்போ பகுதியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்தக அரச
இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் , அதில்
பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,பேரூந்து தீ பற்றி எரிந்துள்ளது
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்
கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்
கொழும்பு- பதுளைக்கு இடையிலான NB-9017 என்ற இலக்க பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் NB-9017 என்ற பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹாலி-எலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தலங்கம பஸ் டிப்போவுக்குச் சொந்தமான NB-9017 என்ற பஸ்ஸில் 23ஆம் திகதி
ஹாலிஎல நகருக்குச் சென்றுள்ள குறித்த நபர், அங்கு மதுபான கடையொன்றுக்குச் சென்று, மதுபானங்களை கொள்வனவு
செய்துள்ளதுடன், ஹாலிஎலயிலிருந்து மற்றுமொறு பஸ் வண்டியில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இவர் ஹாலிஎலைக்கு பயணித்த பஸ் நேற்று முன்தினம் (23) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த போது, அது பலாங்கொட
பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டு, அதன் நடத்துனர், சாரதி, அதில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொற்றாளர் ஹாலி-எல ரொசட் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது, சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென ஹாலி- எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.









