Posted in மருத்துவம்

அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

பெண்களுக்கு அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது .இதனை ஏற்படுத்தும் காரணி என்ன ..?


பெண்ணின் கருவுருவத்தை சுற்றி காணப்படும் கருப்பையில் ஏற்படும் அது இரத்த குருதியாக வெளியேறும் காரண தொழில் பாடு எங்கு உருவாகிறது .

மாதவிடாய் என்பது கருப்பையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக இரத்த கசிவு ஏற்படும் இதன் பொழுது வலிகள் ஏற்படும்.

இந்த வலிகளை கட்டு படுத்த அல்லது இது ஏற்பட முக்கிய காரணம் என்ன ..?மாதவிடாய் இல்லாத காலத்திலும் வலிகள் ஏற்படும் அது எவ்வாறு ஏற்படுகிறது.

கண்டிப்பாக பெண்கள் இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

மலத்துடனும் இந்த இரத்த கசிவு ஏற்படும் ,ஆகவே பெண்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Error: View 6f7d65ec2l may not exist
Posted in Uncategorized

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு, பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும்

பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள்

மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான்.

பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் அசவுகரியமாகவும், உடல்நலமின்றியும் காணப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்ட ஸ்பெயின் நாட்டு

அரசு அந்நாட்டு பெண்களை மகிழ்விக்கவும், அவர்களது நலனில் அக்கறை கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த விடுமுறை அறிவிப்பினால் அந்நாட்டில் உள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி

அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் அமைப்பு, கல்வியாளர்களுக்கு மூன்று நாள்


‘மாதவிடாய் விடுமுறை (பீரியட் லீவ்)’ கோரி பிரச்சாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    Posted in மருத்துவம்

    ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்

    யோகா ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

    ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிகள்
    ஒழுங்கற்ற மாதவிடாய்


    அக்குபிரசர் – உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

    மாதுளை – இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

    யோகா – இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

    அன்னாசி பழம் – மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    இஞ்சி டீ – இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

    கற்றாழை – இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

    பெருஞ்சீரகம் – ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

    லவங்கப்பட்டை – இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

    வெந்தயம் – இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

    பேரீச்சை – இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

    விளக்கெண்ணெய் – இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

    பின்பற்ற வேண்டியவை

    • தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
    • தினமும் உடற்பயிற்சி செயவதை வழக்கமாக்குங்கள்
    • காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்
    • வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்
    • அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.
    • உடலை ஆரோக்கியத்துடன்மாதவிடாய் இனைந்து பயணிக்க வேண்டும் அதுவே பெண்களின் உடல் நிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் வேதனைகளும் அதனால் எழும் மன அழுத்தம் என்பது சொல்லென்ன துயர்களுக்கு ஒப்பானது .

      Posted in மருத்துவம்

      மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

      மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

      மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

      • ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.
      • உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
      • மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
      • மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
      • மாதவிடாய் நாட்களில் வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.
      • மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க
      • மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்’. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.
      • அடிக்கடி நாப்கினை மாதவிடாய் நாட்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்.
      • வெகுநேரம் மாதவிடாய் நாட்களில் நாப்கின் மாற்றாமல் இருப்பது,
      • பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
        Posted in மருத்துவம்

        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

        ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

        அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

        அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

        மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக

        மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

        மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.

        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

        உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும்

        காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து

        மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.

        மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள்

        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

        போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை.

        உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது

        உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்…

        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம் போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி

          கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி

          அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

          வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          “பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக

          பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார்.

          “பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு

          விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகும்” என்றார்

          “உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள்,பாடசாலை மாணவிகள், ஏழ்மையானவர்களுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்கப்படுகிறது. நிவாரண விலையில்

          வழங்கப்படுகின்றது. சௌபாக்கிய அரசாங்கம், செல்வந்தர்களிடம் வரியை நீக்கிவிட்டு, அன்றாட தேவையான பொருட்களுக்கு வரியை அறவிடுகின்றது” என்றார்.

          நல்லாட்சி அரசாங்கத்தில், அணையடை ஆடைக்கான (Sanitary towels)வரியை 40 சதவீதம் குறைத்தது. அதற்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது எனத் தெரிவித்த அவர், இந்த

          அரசாங்கம் அணையடை ஆடைக்கு 15 சதவீதமான வரியை அதிகரித்துள்ளது. மாதவிடாய் வரியின் மூலமாக பெண்கள் மட்டும் பாதிக்கப்படமாட்டார் என்றார்.

          ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சிலர் இருக்கின்றனர். “அணையடை ஆடையை வாங்கமுடியாத காரணத்தால் பாடசாலைக்குச் செல்லமுடியாத மாணவிகள் பலர் இருக்கின்றனர்.

          ஏழ்மையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் 50 சதவீதமான மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அகையால், அந்த வரியை நீக்குமாறு, ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்தார்.

          Posted in மருத்துவம்

          மாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க

          மாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க

          இந்த பயிற்சியில் இடுப்பை அகட்டி உட்காருவதால் பெண்களின் இடுப்புக்கு நல்ல வலுகிடைக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி, வயிற்று வலியிலிருந்து விடுபடலாம்.

          பெண்களின் மாதவிடாய் வலியை குணமாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி
          கெட்டில்பெல்ஸ் பயிற்சி


          சாதாரணமாக நாம் விளையாடும் பந்தைப் போலவே கைப்பிடியுடன் இருக்கும் Kettlebell பயிற்சியில் பிடிமானம்

          கிடைப்பதால் உடற்பயிற்சி செய்வது சௌகரியமாக இருக்கும். மேலும் கார்டியோ பயிற்சிகள், வலிமைப் பயிற்சிகள் மற்றும்

          நெகிழ்வுப் பயிற்சிகள் செய்வதற்கு கெட்டில்பெல்ஸ் மிகச்சிறந்தவை.

          பொதுவாக, பெண்கள் 8 முதல் 16 கிலோ வரையிலும், ஆண்கள் 16 முதல் 32 கிலோ வரையிலும் எடையுள்ள கெட்டில்பெல்களை தூக்கி

          செய்யலாம். இருந்தாலும் இந்த எடை அளவுகள் அவரவரின் தனிப்பட்ட உடல் தகுதிக்கேற்றவாறு மாறுபடும். ஆரம்பகட்ட

          பயிற்சியில் இருப்பவர்கள் பயிற்சியாளரின் உதவியோடு மெதுவாக ஆரம்பிக்க வேண்டும்.

          Single Arm Kettlebell swing

          ஒரு கையால் செய்யும் பயிற்சி இது. இப்போது கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டியவாறு, முதுகை நிமிர்த்தி

          நேராக நிற்க வேண்டும். இடுப்பை பின்புறமாக கொண்டு சென்று ஒரு கையால் கெட்டில்பெல்லை தூக்கி இரண்டு கால்களுக்கும்

          நடுவில் பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இப்போது கெட்டில்பெல்லை முன்பக்கமாக எடுத்துவந்து கையை உயர்த்தி

          தலைக்குமேல் எடுத்துச் செல்லவும். இப்பயிற்சியை 12 முதல் 15 முறை செய்யலாம்.

          பலன்கள்

          இரண்டு கைகளாலும் செய்யும் ஸ்விங் பயிற்சியின் அனைத்து நன்மைகளும் இந்த ஒரு கையால் செய்யும் பயிற்சியிலும்

          கிடைக்கிறது. கூடுதலாக கையை தலைக்குமேல் உயர்த்தி செய்வதால் கைளின் பந்துகிண்ண மூட்டு உறுதிபெறுகிறது.

          Kettlebell Goblet Squat

          முதலில் நேராக முதுகை நிமிர்த்தி, கால்களை அகட்டி நின்று கொண்டு இருகைகளாலும் கெட்டில்பெல்லை மார்புக்கு அருகே

          பிடித்து நிற்கவும். முழங்கை எலும்பு உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கி, கால்கள் இரண்டும்

          பக்கவாட்டில் அகட்டியவாறு தரையில் ஸ்குவாட் நிலையில் உட்கார வேண்டும். இடுப்பை கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

          கெட்டில்பெல்லை மார்புக்கு அருகில் பிடித்தவாறு வைக்கவும். இப்போது மெதுவாக எழுந்து பழைய நிலையில் நிற்க வேண்டும். இதே போல 15 முதல் 20 வரை திரும்ப செய்ய வேண்டும்.

          பலன்கள்

          கால் எலும்பு தசைகள் நல்ல வலுவடைகின்றன. முட்டியை மடக்கி உட்கார்ந்து எழுவதால் முழங்கால் முட்டிகளுக்கு அசையுந்தன்மை

          அதிகரிக்கிறது. இதனால் முழங்கால் மூட்டுவலி, இடுப்பு வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது. இடுப்பை அகட்டி உட்காருவதால்

          பெண்களின் இடுப்புக்கு நல்ல வலுகிடைக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி, வயிற்றுவலியிலிருந்து விடுபடலாம். இடுப்பு பக்கவாட்டு தசைகள் விரிவடைகின்றன..

              Posted in மருத்துவம்

              முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

              பெண்களுக்கு -முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

              பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும்.

              முறையற்றமாதவிடாய் தோன்றுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

              முறையற்றமாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

              பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28

              நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத்

              தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன்

              முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

              பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.

              ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது

              சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று

              இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

              முறையற்றமாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.

              காரணம் 1: மன அழுத்தம்

              10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில

              குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால்,

              சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு

              ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை

              சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.

              முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

              காரணம் 2 : பிரசவத்திற்கு பின்

              சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை.

              நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

              காரணம் 3: தைராய்டு பிரச்சனை

              தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.

              காரணம் 4: மெனோபாஸ்

              நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும்.

              அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.

              காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்

              ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும்.

              காரணம் 6: செயலற்று இருப்பது

              உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக்

              கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது.

              Posted in மருத்துவம்

              மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்

              பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் தொடங்கும்

              பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.

              அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள்.

              புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள்.

              இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

              கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய்ஏற்படாது என்பது தான்.

              அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும்,

              பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய்ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது.

              ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.

              மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்

              தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே

              ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள்.

              நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.

              1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய்விரைவில் ஏற்படும்.

              2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.

              சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள்.

              இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.

              குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது.

              இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும்.

              நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..