Tag: கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் சந்தேக நபர் கைது
கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு
கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த
பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .
தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது ,புத்தளம் – கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் மருந்தகமொன்றில் கடமைபுரிந்து வந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனை செய்த போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உறங்கும்
அறையில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது 58 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 7,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதை மாத்திரைகள்
குறித்த போதை மாத்திரைகள் கொழும்பில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மாத்திரையொன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை தற்போது போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது ,ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவை
ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவைக்கு இலங்கையர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்புவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ரஷ்ய-உக்ரைன் போர் களத்திற்கு செல்லும் நிலைக்கே இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.
அதன்படி, நேற்று நுகேகொடை ஸ்டென்லி திலகரட்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவரும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.
காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது ,மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசு
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையால் இவ்விதமான கைதுகள் தொடராக பொழுத்தகும் ,பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான வாலிபர்கள் செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது .
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது ,ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திகிய விசேட சுற்று காவல் முற்றுகை தேடுதலில் இவ்விதமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வண்னம் உள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்விதமான குற்ற சத்துக்களின் அடிப்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருவது ,இலங்கை போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது ,2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இன்று போதைவஸ்து சந்தையாக மற்றம் .
பெற்றுள்ளது ராஜபக்ச ஆட்சிகாலத்தில் போதைவஸ்து மிக அதிகமாக இலங்கையில் பாவனைக்கு உள்ளாக்க பட்டது .
அதன் நீட்சியாகவே இன்று இலங்கை எங்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற்னர் .
அரசியல்வாதிகள் போதை வஸ்து வியாபாரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?
டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .
இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .
100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .
இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .
அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .
மதுபோதை அருந்தி காணொளி
தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .
அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்
அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .
மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .
யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?
லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .
பல கோடி பணம்
அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்
பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .
மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்
ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .
இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்
பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .
அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .
குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .
சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து
அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .
அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .
இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .
மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .
ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .
பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது ,வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து,
நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (6) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள்
கைது செய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.
பொலன்னறுவை வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்,
மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
திங்கட்கிழமை (6) காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த வேலையற்ற
பட்டதாரிகள் குழு வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது ,பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி இன்று (05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்புப் பிரிவு
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.
அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.
மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.
காணி உரிமையாளர்
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் .
ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மோசடிகளை தடுக்க உத்தரவு
இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .
அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .
பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?
பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .
இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .
இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்
இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .
கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .
மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .
கள்ள காதல் கொலை
கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .
நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .
வீதி சோதனையில் சிக்கிய கைதி
இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .
காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .
இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .
195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .
அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .
திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .
அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













































