Tag: மரணதண்டனை
மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரணதண்டனை
மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரணதண்டனை
மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனை
மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக
குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது ‘வசந்தன்’ தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது.
பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிறப்பு அனுமதியை குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் யசந்த கோடகொட
நீதிபதிகள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட
இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார்.
ஜனவரி 1, 2008 அன்று கோட்டஹேனாவில் உள்ள பொன்னம்பலவனேஸ்வரர் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார். மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,
அப்போது அவர்தான் தன்னைச் சுட்ட நபர் என்று அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் அவரை குற்றத்துடன் தொடர்புபடுத்தியதாகவும் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று அவர் ஒப்புக்கொண்டார், மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
மனுதாரர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .
கள்ள காதல் கொலை
கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .
நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .
வீதி சோதனையில் சிக்கிய கைதி
இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.
இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.
ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த முகைதீன் என்ற வைத்தியர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
இதன்போது, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.
வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















