Tag: ஓட்டம்
மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்
மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம்
மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி நபர் இந்தியாவுக்கு ஓட்டம் ,மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும்
இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பி
இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது .
குறித்த நபர் திங்கட்கிழமை (13)அன்று தப்பிச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (14) அன்று குறித்தநபர் பயணித்த படகு தமிழ்நாடு
மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை . குறித்த நபர் குடும்பத்தில்ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில்
வழக்குகள் இருப்பதாகவும்
வழக்குகள் இருப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் திருடிச் சென்றது இரண்டு தொழிலாளர்களின்படகு மற்றும் இயந்திரம். இதனால் குறித்த
இரண்டு குடும்பத்தினர் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .
வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.
அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .
ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .
இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .
மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.
இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .
கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .
ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,
இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா அர்ச்சுனா சொன்னார் இப்டி ..இதில் எது உண்மை ..தோல்வியை ஏற்று கொள்ள மறுத்து குத்துக்கரணம் அடித்தார் அருச்சுனா
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம், மொசாம்பிக் நாட்டில் கிறிஸ்துமஸ் நஸ்தார் தினத்தில் சிறை உடைத்து 1534 கைதிகள் தப்பி ஓடி உள்ளதாக அந்த நாட்டில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர் .
இவ்வாறு தப்பி ஓடியவர்கள் 100பேர் மீளவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறை உடைப்பு நடவடிக்கையில் குறைந்தது 33 பேர் பலியாகியும் 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் கீழ் இந்த சிறை உடைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிறை உடைப்பு சம்பவத்தில் பின்னணியில் ஈடுபட்டது யார் இதன் பின்னணியில் அரசியல் கலப்பு இருக்கிறதா,அரசியல் ஆதரவு இருக்கிறதா என்பது தொடர்பில் மொசாம்பிக் உளவுத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அந்த நாட்டில் பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
வீதிகளை டயர்களை போட்டு எரித்து இந்த சிறை உடைப்பு நடவடிக்கை மேற்கொண்டு அங்கிருந்து 1534 சிறை கைதிகள் தப்பி ஓடி உள்ள சம்பவம் அதில் 100 பேர் மேல ஒரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளாவிய ரீதியில் இதை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
சிறையை உடைத்து இவ்வாறு எப்படி கைதிகளால் தப்பியோட முடிந்தது என்ற கேள்விதான் உலக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது .
இது எதிரிகளின் நீண்ட திட்ட மிடப்பட்ட சதியா என்பது தான் கேள்வியாகும்.
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம் ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதவியில் இருந்து ராணுவ தளபதி சரத் போன்ற பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக செயலாற்றுகின்ற நடவடிக்கையில். ஒரு அங்கமாகவே இந்த பதவியை விலகி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆளுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு மகத்தான வரவேற்பு உள்ளதாக நம்பி ,குதிக்கும் ரணில் விக்கிரமசிங்காவும் சரத் பொன் ஜெயகாவும் இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கான வகையில் ஒன்றாகவே இந்த களத்தை பார்க்க முடிகின்றது.
புலிகளையும் அதனுடைய தமிழ் மக்களையும் இறுதி யுத்தத்தின் போது தானே கொன்று குவித்தது தான் என்கின்ற இனவாதத்தை கக்கி , மக்களுடைய வாக்குகளை சூறையாடி வந்த சரத் பொன்சேகா இப்பொழுது ஜனாதிபதியாகி விடுவேன் என்ற இறுமாப்பில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
தமிழர்கள் முன் குரல் முன்னெடுக்கின்ற பொழுது ஒற்றுமையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடுவேன் என்ற வரிசையில் இடைவிடாது பேசி வருகின்ற, சரத் பொன்சேகா தற்பொழுது இனவாதத்தைக் காக்கி தேர்தலில் வெல்வதற்காக சிங்கள மக்கள் வாக்குகளை சேகரிக்க நடவடிக்கை ஈடுபட்டு இருக்கின்றார்.
சுகபோகங்களுக்காக கட்சிகளை மாறி தமது சுயநலத்துக்காக விலை போகின்ற அரசியல் வியாபாரிகளாக ஒருவராக தற்பொழுது பொன்சேகா மாற்றம் பெற்றுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நல்லிணக்கம் நல்லாட்சி என கூவி பெறுகின்ற ஆண்டு ஆளுகின்ற கட்சிகள் யாவும் அதனை மறந்து விட்டு தமது கட்சிகளை பாதுகாத்து ,தமது குடும்ப வியாபாரங்களை உயர்த்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு செயல் அணியின் ஒன்றாகவே இந்த பொன் செய்காவினுடைய இந்த விழாக்களும் அறிவிப்பும் காணப்படுகின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்
மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்
மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம் ,மொட்டு கட்சியிலிருந்து 48 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தின் பின்வரிசை அமைச்சர்கள் மற்றும் எம்பிகள் உள்ளிட்ட 48 பேர். தற்பொழுது ரணில் விக்ரம சிங்காவுக்கு ஆதரவை அளிக்கின்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 பேர் கொழும்பில் உள்ள முக்கிய இடத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுனையின் தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைத்ததால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன்படி ஜனாதிபதி ரயில் விக்ரம் சிங்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் வாக்களிப்பல் போன்ற விடயங்கள் இதில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் போட்டி நிறைந்ததும் சவால் நிறைந்த தேர்தல் களமாக இவை படுகின்றது .
இந்த தேர்தலில் ரணில் விக்ரம் சிங்கா பாரிய வெற்றியை அடைய வேண்டிய நிலையில் அவர் தள்ளப்பட்டுள்ளார் .
அவ்வாறு வெற்றி பெறாது தோல்வி யை தழுவிக் கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் இருந்து அகற்றப்படுகின்ற ஒரு பாரிய வெற்றிடம் காணப்படும் .
அதனால் பல்வேறுப்பட்ட நடவடிக்கையை துணிந்தவர் மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ் மக்களுடைய ஆதரவை பெறவேண்டிய நிலையிலும் ரணில் விக்ரமசிங்கா தள்ளப்பட்டுள்ளார் .
ஆனால் தமிழர்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் மக்களுடைய வாத பிரதிவாதங்கள் சமூக ஊட தலங்களான பதிவுகளுடன் காண முடிகின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மக்கள் அகதிகளாக ஓட்டம்
மக்கள் அகதிகளாக ஓட்டம்
லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா போர் படை
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .
இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .
அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .
அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,
அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.
இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம் ,இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உறைவு .
இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பணி புரியும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .
இலங்கையில் வைத்தியர்கள் தப்பி ஓட காரணம் என்ன ..?
இலங்கையில் இலங்கை வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு வழங்க படும் சம்பள பணத்தில் அதிக வரி மற்றும் ,சம்பளம் போதாமை உள்ளமை காரணத்தினால் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர் .
இந்த வைத்தியர்களுக்கு உரிய சம்பளத்தை இலங்கைஆளும் அரசுகள் ,அதன் சுகாதார மைச்சு வழங்குமாக இருந்தால் ,ஏன் அவர்கள் தமது தாய் நாட்டை விட்டு ஓட போகிறார்கள் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ஆளும் அரசியல்வாதிகழ் தமது நலன்களுக்காக ,அரசியலில் குந்தி இருந்து,நாட்டையும் மக்களையும் சிந்திக்காது உள்ளதன் விளைவே ,இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்ய கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .
1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்
கோட்டபாய ட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி காரணமாக, இலங்கை பொருளாதரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது .
அதனை அடுத்து இதுவரையான கால பகுதியில் 1800 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர் , என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .
கற்றவர்கள் ,மருத்துவர்கள் ,நீதிபதிகள்,சட்டத்தரணிகளுக்கு எதிராக ,இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் அடாவடிகள்,அடக்குமுறை ,சம்பள வெட்டு காரணமாகவே ,இவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
Featured
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
“அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக
துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்”
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
“அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை.
“மேலும், 2023 ஆம் ஆண்டில், இராணுவத்தில் கிட்டத்தட்ட 27,000 பேர் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் ஓய்வு பெற்றனர், அல்லது அவர்கள் சேவையை விட்டு வெளியேறிவிட்டார்கள்
. அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள். அதாவது ஏதோ சிக்கல் உள்ளது. அதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.”
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்
- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்
இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்
காதலனுடன் ஓட்டம்
அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது
சிறுமி கண்டு பிடிப்பு
போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
காதல் புரிந்த அலங்கோலம்
அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்
குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது
பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,
இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்
இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?
- வன்னி மைந்தன் –
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது சிறைகளில் இருந்து தப்பித்து சென்ற
கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதனால் தற்போது இந்தியா கடலோர பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது
தப்பியவர்களை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்
இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்
இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டது.
இதையடுத்து அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப் பட்டது. இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று
பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டார்.
இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக விளங்கி வருபவர் பரக்கான். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி
அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம்
தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான்
மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பரக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என
பரக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து
இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









































