பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
Posted in இலங்கை செய்திகள்

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி ,திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் தாடாகம் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவர் தனது வகுப்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து தற்செயலாக நீச்சல் தாடாகத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்க அவர் தண்ணீரில் இறங்கிய போது மீண்டும் மேலே வர முடியவில்லை அதனால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.