சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,
இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை









