குளத்தில் மூழ்கிய மாணவன்
இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .
அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .
திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .
குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.
அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .
அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .
காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை











