Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்
கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்
பிரான்சில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நேற்று மரணமாகியுள்ளார்
மூன்று பிள்ளைகளின் தயார் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
தனிமை படுத்தலுக்கு தன்னை உட்படுத்தி கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பொழுதே அங்கு மரணமாகியுள்ளார்
இவர் யாழ்ப்பாணம் சிறுபிட்டியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவரது பிள்ளைகளும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருந்த பொழுதும் அவர்கள் தெய்வாதீனமாக அந்த நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டனர்
இதுவரை பிரான்சில் பத்து தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,இதில் விடுதலை
புலிகளின் முக்கியஸ்தர் மனைவியும் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோவால் தனிமை படுத்த பட்ட 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கொரனோவால் தனிமை படுத்த பட்ட 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்த்தில் கைது செய்ய பட்டு தனிமை
படுத்த பட்ட சுமார் அறுபத்தி ஏழுபேர் இன்று அவர் தம் குடும்பத்துடன் மீள இணைவதற்கு விடுவிக்க பட்டுள்ளனர் .
தியத்தலாவ இராணுவ முகாமில் தடுத்து வைக்க பட்டவர்களே இவ்விதம்
விடுதலை செய்ய பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்
சிங்கப்பூர்,டோகாவில் தவித்த இலங்கையர்கள் நாடு வந்தனர்
சிங்கப்பூர் மற்றும் டோகாவின் விமான நிலையங்களில் தவித்து கொண்டிருந்த
14 இலங்கையர்கள் இவர்களுடன் மேலும் முப்பது பேர் கடந்த இரவு கட்டு நாயகக் விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்
இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமை படுத்த பட்டு கொரனோ
சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை பயன் படுத்தி மாடுகளை இறைச்சிக்காக
கொண்டு சென்ற நபர்கள் காவல் துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது என்ற அனுமதி பத்திரத்தை
பயன் படுத்தி பசு மாடுகளை வெட்ட சென்ற வேளையை இந்த கைது இடம் பெற்றுள்ளது

ஊரடங்கு கண்டி ,யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்து அமுலில்
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா,
களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 16 காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு
சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 04.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.
இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 செவ்வாய் காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி
முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்
மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்
கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்
கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற
பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும்
தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை
வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக
வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி
பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள
பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு
உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மே 11 பாடசாலைகள் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும்
முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக
அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும்
இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி
இன்று பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோவால் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் பலியாகியுள்ளனர் .
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 14 நாட்களுக்கு மேற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களும் இதில் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களாவர்கள் .
இதுவரை பிரிட்டனில் பத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,ஐரோப்பா தழுவிய நிலையில் தமிழர்கள்
தொடராக பலியாகிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது
இதில் இருவர் தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
அரசு தொடர்ந்தும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றது
இன்று மட்டும் சுமார் 917 பேர் பலியாகியுள்ளதும் ,ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளமையும் குறிப்பிட தக்கது
மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை
மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை
இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் நகர்வில் தீவிரம் காட்டி வருகின்றார் ,
அவ்வகையில் விசய உற்பத்தியாளர்களிடம் அவர்கள் விளைவிக்கும்
மரக்கறி மற்றும் விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்வனவு செய்கிறது .
அதன் பின்னர் அவர்களே அதனை விற்பனை செய்கின்றனர் ,கட்டு பாட்டு விலையுடன்
விவசாயிகள் நஷ்டம் ஏற்படாது பாதுகாக்கும் முன் மாதிரி நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது

இராணுவம் மருத்துவர்களை கௌரவிக்க ஒளியேற்ற படும் தாமரை கோபுரம்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை,
பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில்
இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படுவதாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க தனது ட்விற்றர் குறிப்பிட்டுள்ளார.
இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும்
என சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தெற்காசியாவின் மிக பெரும் கோபுரம் இது என்பது குறிப்பிட தக்கது

இலங்கையில் 198பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு
இலங்கையில் 198 பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி 197 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று புதிதாக ஏழுபேர் அடையாளம் காண பட்டுள்ளனர் .
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் இருந்து ஏழுபேர் பலியாகியுள்ளனர்
அது தவிர யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 302 பேருக்கு சோதனைகள்
இடம்பெற்றுள்ளன எனினும் எவரும் பாதிக்க படவில்லை என மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயால் பாதிக்க பட்ட 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை
வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை
சிங்கையில் வீடுகளை விட்டு வெளியில் பயணிப்பவர்கள் ,வீதியில் செல்பவர்கள்
அனைவரும் முக கவசம் அணியும் படி இலங்கை காவல்துறையினர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வேகமாக இந்த நோயானது பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுவதால்
இந்த முன் எச்சரிக்கையை அவர்கள் தொடராக விடுத்தது வருகின்றனர் ,
அவ்வாறு அணியாது செல்பவர்கள் கைது செய்ய பட்டு 21 நாட்கள் தனிமை படுத்தல் முகாம்களில் அடைக்க படுவார் என தெரிவிக்க பட்டுள்ளது

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை
வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார்
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தினால் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத்
தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காகவும், குறித்த இலங்கையர்களுக்கு
உதவுவதற்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவும், வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி,
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன் அபிவிருத்தி,
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின்
செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை இன்று (2020 ஏப்ரல் 10) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் பெருமளவில் பணியாற்றும்
சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அமைச்சர்
குணவர்தன, இந்த இலங்கையர்களின் நலன்கள் குறித்து இரண்டு அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, வளைகுடாப் பிராந்தியத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகள் குறித்து
சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் விஷேடமாக கவனம் செலுத்தினார். கொரோனா வைரஸ்
பரவுவதைத் தடுப்பதற்காக இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை
மோசமாகப் பாதித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இந்தத்
தாக்கங்களுக்கான தீர்வுகளை ஆராயுமாறு சிரேஷ்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
நடைமுறைத் தீர்வுகளை ஆராய்ந்து, இந்த சவால் மிகுந்த நேரத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள்,
அண்மையில் தொழிலை இழந்தவர்கள் மற்றும் பணம் அனுப்புவது தொடர்பான பிரச்சினைகள் ஆகியன இந்தக் கூட்டத்தின் போது
கலந்துரையாடப்பட்டன. உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு
உதவுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம் சாத்தியமான
அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும்
தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபயகுணவர்தன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் புலம்
பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை குறித்த தமது கருத்துக்களையும், உட்பார்வைகளையும் பகிர்ந்து
கொண்டதோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக இரு அமைச்சுக்களும் நெருக்கமாக
செயற்படும் என்பதனை வலியுறுத்தினர்.வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள
குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள்
மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன.
அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில்
ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள்இ ‘வாட்ஸ் ஆப்இ பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்’ போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால்
அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர்.
ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக
வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர்.
மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின்
ஈ- – மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்தி, வங்கி கணக்குகளை விபரங்களைப் பெற்று, அதில் உள்ள பணத்தை இவர்கள் திருடுகின்றனர்.
ஒவ்வொருவரின் ஈ- – மெயில் முகவரிக்கும் கூகுள் தேடலிலும், கொரோனா பெயரில், சில சைபர் வைரஸ்களை அனுப்பி
கணினிகளையும் முடக்குகின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: ‘கொரோனா மற்றும் கோவிட்- – 19’ என்ற
பெயரில் வரும் one line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.
இணையதளம்
இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை
யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமானஇ டபிள்யூ.ஹெச்.ஓ., என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும். எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள்
கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, – ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ-
மெயிலுக்கு அனுப்புவதில்லை. நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு
கேட்பதில்லை. எனவே, Online பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய
முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு
நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்
எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த
அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக
இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை
தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன்
இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய
அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது
சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்
சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்
கொரனோ நோயினால் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,
இவ்வேளை சீனாவில் இருந்து முன்னர் கொள்வனவு செய்ய பட்ட கருவிகளில் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து தற்போது மீள 20,064 கொரனோ சோதனை கருவிகளை
அன்பளிப்பாக சிறப்பு விமானம் ஒன்றில் சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்த்துள்ளது
இவ்வாறு இந்த கருவிகள் வந்தடைந்த நிலையில் வேகமாக சோதனைகள் ஆரம்பிக்க படும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது
ஆண்டவரே நீர் தன் இம்முறையும் போலி இல்லாது காப்பற்ற வேண்டும் ,
அவ்வாறு போலியாக இருந்தாலும் இலங்கை சீனா மீது குற்றம் சுமத்த முடியாத நிலையில் ,இலங்கையின் வாயை கட்டி விட்டது .
சீனாவின் வியாபாரம் சிறப்பு .

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி
இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி
நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190
ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று
பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்
அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக
சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த
நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்
செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்
இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத
மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது
மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்
வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது







