Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை,

புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் Tooting Doner Centre,Croydon Doner Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.

Aston Hall Hotel Aston, Sheffield பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை,

மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது

. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.

இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி

எமது மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தில் துவண்டு போகும்
நாளல்ல மாறாக எமது மக்கள் அடைந்த துயரத்தையும் உயிர்ப்பாய் உள்வாங்கி


ஒருதேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுகந்திரமும்
இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை அமைப்பதே ஒரே வழி என உறுதிகொள்ளும் நாளாகும்.

எதிரி இராணுவத்தால் மேற்கொள்ள பட்ட தமிழர் மீதான இன அழிப்பில் பங்கெடுத்த உலக நாடுகள் இளநக்கிக்கு ஆதரவாக செயலாற்றிய வண்ணம் உள்ளன .

இதுவரை மாண்டு போன உயிர்களின் ஆத்துமா சாந்தியடைய எவ்வித தண்டனையும் எதிரி அரசுக்கு ஐநாவால் வழங்கப்படவில்லை .

பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
    Posted in இலங்கை செய்திகள்

    முள்ளிவாய்க்கால் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்

    முள்ளிவாய்க்கள் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்

    இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை படுகோரமாக குண்டு வீசி உக்கிரன் பெண் விமானிகள் கொன்று குவித்தனர் ,புலிகள் நிலைகள் என கூறியவாறு குண்டுகளை வீசி வெறியாட்டம் நடத்தின

    அந்த வெறியாட்டம் நடத்திய அதே உக்கிரேன் மக்கள் இன்று ,அதே முள்ளி வாய்க்கால் நாளில் அழிந்த வண்ணம் உள்ளது

    வீடுகள் தரைமட்டம் ஆகியும் ,கால்கள் ,கைகள் இன்றி பலநூறு மக்கள் மற்றும் இராணுவம் காயங்களுடன் அலறும் காட்சிகளும்


    உணவு ,நீர் இன்றி அவதியுறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

    தமிழர்கள் எவ்விதம் நீர் இன்றி உப்பு கடற்கரையில் இறந்தார்களோ அதே நிலையில் உக்கிரேன் மக்கள் ,மற்றும் அதன் இராணுவம் முற்றுகையில் சிக்கி சீரழிகிறது

    தமிழர் கண்ணீர் சாபம் போரில் பங்கெடுத்த அத்தனை நாடுகளையும் அலற வைத்துள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்

      கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்

      விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.

      ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
      பெட்டியை எடுக்கும் பயணி

      வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண்

      ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.

      அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக

      இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

      யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின்
      கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்

        கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்

        கீதா, தொரசானி, ஒலவின நில்தானா போன்ற தொலைக் காட்சித் தொடர்களில் நடிகை சேத்தனா ராஜ் நடித்துள்ளார்.

        கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்- மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு
        சேத்தனா ராஜ், வரதராஜ்

        கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

        இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

        பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

        ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

        இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார்.

        அறுவை சிகிச்சையின் போது தமது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார்.

        போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததால், என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

        22 வயதான நடிகை சேத்தனாராஜ் கீதா, தொரசானி, ஒலவின நில்தானா உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
        மேலும் ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது

          வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது

          கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

          கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

          கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

          எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

          இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

          அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

          இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும்
          கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்

            காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்

            இலங்கைக்கு காஸ் ஏற்றிய அப்டி இரு கப்பல்கள் வந்தடைந்துள்ளன


            இவற்றுக்கு எலுமில்லியன் டொலர் செலுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            இந்த கப்பல்கள் வருகையால்நடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்

              ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்

              பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.

              ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.

              இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி

              சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.

              எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.

              பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.


              அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு

                சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு

                பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளது.

                எனினும், வாக்களித்து இன்றைய நாளை செலவழிக்காமல் ஒருமித்த கருத்துடன் பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஆளும்

                , எதிர்க்கட்சி கட்சிகளைச் சேர்ந்த பலரும், ஒருமித்த கருத்துக்கு இணக்கம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

                இந்நிலையில், அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

                , இன்னும் நேரமிருக்கிறது. ஒருவரின் பெயரை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கேட்டார். எனினும், எந்த தரப்பினரும் அதற்கு இணங்கவில்லை.

                அதனையடுத்தே பிரதி சபாநாயகர் தெரிவுக்காக, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

                பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுவதால்,
                ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

                  ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

                  பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

                  நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

                  அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி,
                  பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

                    நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

                    ஒரு தனி மனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பதற்காக நான் இந்த சவாலை பொறுப்பேற்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

                    நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு இன்று மாலை விசேட உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

                    நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.

                    என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக

                    அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம்,

                    அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த

                    சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது

                    கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன்.
                    அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                      ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                      மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான யுசஅநn ளுயசமளைளயைn ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

                      ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

                      இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன்

                      அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு

                      வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.

                      (1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய

                      தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.

                      பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,


                      மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை
                      New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM


                      நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

                        இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய

                        நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                        இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .

                        தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.

                        விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது

                          இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது

                          இரு கப்பல்கள் காஸ் ஏற்றியபடி இலங்கை வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்

                          இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தற்காலிகமாக நிவர்த்தி செய்யப்படும்

                          என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

                            எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

                            இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து

                            அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது

                            தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்

                            Posted in இலங்கை செய்திகள்

                            மக்கள் போராடடத்தை குழப்பும் இந்தியா

                            அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

                            அத்துடன், மே 18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

                            வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராயாவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                            தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியாவில் சிங்கள தேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை நாம் நினைவுகூருகின்றோம்.

                            “முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.

                            “இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்துகொள்கின்றோம்.

                            “அத்துடன், இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பை எந்தத் தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்.

                            “இதேவேளை, புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

                            “மக்கள் துக்கத்தை அனுபவித்துவரும்இந்தச் சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது.
                            இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்” என்றார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

                            மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

                            மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற


                            சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன

                            இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

                              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

                              இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழுந்து

                              போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை வடக்கு ,கிழக்கு தமிழர்கள் அமைதியாக உள்ளனர்

                              தனது நெருக்கடியை தனித்து மக்களை திசை திருப்பவும் ,இன மோதல்களை உருவாக்கவும் புலிகளின் பெயரால் குண்டு தாக்குதல்களை நடத்திட கோட்டா சதி திட்டம் தீட்டியுள்ளார் ,

                              இவ்வாறான தாக்குதல் ஊடாக சிங்கள மக்களை பயமுறுத்தவும் ,அடிபணிய

                              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

                              வைக்கவும் ,அவர்கள் தன்னெழுச்சியை தடுக்கவும் தொடர் ஆயுத போராட்டம் கோட்டாவுக்கு தேவை படுகிறது

                              இரத்தம் குடித்து ஏப்பம் விடும் கோட்டாவுக்கு இது புதிதல்ல ,ஆனால் இம்முறை சிங்கள

                              பகுதியில் தொடராக குண்டுகள் வெடிப்பதன் மூலம் ,உயிர்ப் பலிகள் இடம்பெறுவதன் ஊடாகவே அவர்களின் எழுச்சியை தடுக்க முடியும்

                              அதற்காக தூசி தட்ட படும் புலிகள் அமைப்பு ,இல்லாத புலிகளுக்கு உயிரூட்ட முனைகிறது சிங்கள அரசியல் இனவாதம்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

                                கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

                                கொழும்பு பகுதி எங்கும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கு மேற்பட்ட

                                போலீசார் வரவழைக்க பட்டு வீதி ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                                ஆளும் அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க படும் போராட்டங்கள் காரணமாக வன்முறைகள் வெடிக்கலாம் என்பதாலும் ,


                                அந்த மக்களை அடக்கி ஒடுக்கவும் இந்த போலீசார் இவ்விதம் அழைக்க பட்டுள்ளனர்.

                                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

                                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

                                  முள்ளிவாய்க்கால் இறுதி போரின் பின்னர் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பெரும்

                                  வெள்ள பெருக்கு ஏற்பட்டு சிங்கள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம் உள்ளன

                                  தமிழர் கண்ணீர் சாபங்கள் விளைவாக இயற்கையே இனவாத சிங்கள மக்களை இவ்விதம் தண்டித்து வருகிறது

                                  அதே இனப் படு கொலையை புரிந்த மகிந்த குடும்பம் பதவி இழந்தது நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலைக்கு முள்ளிவாய்க்கால் மாதம் தள்ளி விட்டுள்ளது

                                  காலி மற்றும் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளனர்

                                  மேலும் பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்

                                    தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்

                                    இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருங்கடி காரணமாக இலங்கையில் உள்ள

                                    தனியார் வங்கிகளில் வைப்பில் வைக்க பட்ட பணத்தினை மீள பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

                                    தற்போது குறித்த தொகைக்கு மேல் மீள பெற முடியாத வரையறை விடுக்க பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

                                    இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்றால் தனியார் வங்கிகள் அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.