பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ

தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்களாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.

உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை

தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்

அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டையடுத்து KFC இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் தரிந்து, தாங்கள் உட்கொள்ளும் KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

“இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்,” என்று PHI அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என PHI அதிகாரிகள் தெரிவித்தன

வீடியோ

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்
Posted in இலங்கை செய்திகள்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்,

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .

இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .

இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .

யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் வான் கதவுகள் திறப்பு .

பருவகால மலை காரணமாக குங்கள் நிரம்பி வழிவதால் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன .

இந்த வெள்ளம் காரணமாக பல்லாயிரம் மக்கள் அகதிகளாக பாடசலைகள் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவிகளை வழங்கி வருகிறது .

வீடியோ

விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் பசில் ராஜபக்ஸ்சா

நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் பசில் ராஜபக்ஸ்சா

இலங்கை நாட்டை விட்டு பசில் ராஜபக்ஸ்சா ஓட்டம் பிடித்தார் .

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி நானே என கொக்கரித்து பசில் நாட்டை விட்டு ஓடியுள்ளது ஏன் .

டுபாய் ஊடக அமெரிக்கா பறந்துள்ளார் .

கமிஷன் டீல் மன்னராக பெயர் பற்ற பசில் ,இலங்கை ஜனாதிபதியாக மாறினால் ,இலங்கையை நல்ல விலைக்கு விற்று விடுவார் .

அதற்கு இலங்கை பெரும்பாண்மை இனம் இடம் கொடுக்குமா …?

பொறுத்திருந்து பார்க்கலாம் .

அடிவாங்கி நொந்தவர்கள் தமிழர்கள் .இனி அதே போல அடியை வாங்க நோக வேண்டிய நிலைக்குசிங்கள மக்கள் செல்ல போகின்றனர் போல நகர்வுகள் காண்ப்பிக்கின்றன .

வீடியோ

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .

இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

எல்லாம் அரசியல் நாடகமாக இருக்குமோ என தமிழர்கள் பேசி கொள்கின்றனர் .

வீடியோ

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்
Posted in இலங்கை செய்திகள்

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

அப்போது, ​​பேருந்தின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, ​​நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோமாகம நகரை அண்மித்த போது குறித்த பயணியின் காது பகுதி காணவில்லை என குறித்த இளைஞருக்கு மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

அப்போது, ​​குறித்த பயணி, மெகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தி, காதின் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை அறிந்து, மெகொட பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

அதேநேரம் பஸ்ஸில் மறைந்திருந்த நடத்துனர் மெகொட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காயமடைந்த பயணியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, அவிசாவளையில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

வீடியோ

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு

தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

இவ்விடயம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ்

மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடியோ

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது
Posted in இலங்கை செய்திகள்

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துவாக்கத்தில் உள்ள இந்த இரண்டு கிராமங்களில் தலித் மக்களை தாழ்வாக நடத்தும் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. தேநீர் கடைகளில் தலித் மக்களுக்கு மட்டும் பேப்பர்

கப்புகளைப் பயன்படுத்துவது, ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களுக்கு காலணிகள் அணிய தலித் மக்களுக்கு தடை விதிப்பது போன்ற தீண்டாமைக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் ​பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஒடுக்குமுறைகள் பல ஆண்டுகளாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் மீறுபவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறும்

எனவும் மக்கள் தெரிவிப்பதாக சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வீடியோ

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் மோதல் நாடகம்

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதி சாடிய சஜித் .

எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு

மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காமல் தற்போது ஜனாதிபதி கனவில் இருப்பதாக மாநாட்டின் போது நாட்டையே வங்குரோத்தாக்கிய

தலைவர் குறிப்பிட்டாலும்,நாட்டை வங்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்புடன் இணைந்து

கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலேயே இந்த பொறுப்பை ஏற்க தாம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும்,தான் தலைமையிலான

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் ஆணையுடனேயே நாட்டைப் பொறுப்பேற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்

பியகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி,ஏனைய கட்சிகளைப் போல் ஊடகங்களில் வந்து கோப்புகளை காட்டி பொய்ப் படம் காட்டாது என்றும், நாட்டை

வங்குரோத்தடையச் செய்தவர்களை நடைமுறையில் சட்டத்தின் முன் எப்போதோ நிரூபித்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

நாட்டின் வங்குரோத்து நிலையால் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம்

வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்

என்றும்,இந்நிலையை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு

வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படும் அதிகாரம் அளிக்கப்படும் என்றும்,

நாட்டில் சிறுவயது முதலே கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம்,மூச்சுத் திட்டங்களை எதிர்க்கட்சி செயல்படுத்தியபோது அரசாங்கம் சேறுபூசும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும்,ஐக்கிய மக்கள்

சக்திக்கு பெறப்பட்ட ஒவ்வொரு நிதியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடியோ

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மழையுடனான காலநிலையை அவதானித்து 11 மாவட்டங்களில் உள்ள 48 பிரதேச செயலக பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அவற்றில், பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, கம்பனை மற்றும்

பஸ்பகே கோரளை, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய மற்றும் பஸ்கொட மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, இம்புல்பே, கலவான மற்றும் பலாங்கொட ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ

போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா
Posted in இலங்கை செய்திகள்

போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா

போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை நேற்று (17) அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக நேற்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த

போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா

இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது.

இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கில்மிசா வெற்றி|கில்மிசா முதலிடமாக அறிவிப்பு|Kilmisha wins Zee Tamils|Kilmisa Little Champs Season3
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசா வெற்றி|கில்மிசா முதலிடமாக அறிவிப்பு|Kilmisha wins Zee Tamils|Kilmisa Little Champs Season3

கில்மிசா வெற்றி|கில்மிசா முதலிடமாக அறிவிப்பு|Kilmisha wins Zee Tamils|Kilmisa Little Champs Season3

கில்மிசா வெற்றி|ஜீ தொலை காட்சியில் சாரிகமபா கில்மிசா முதலிடமாக அறிவிப்பு ,தமிழர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

கில்மிசா வெற்றி|ஜீ தொலை காட்சியில் சாரிகமபா கில்மிசா முதலிடமாக அறிவிப்பு ,தமிழர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
|kilmisha songs|kilmisha saregamapa|zee tamil |Youtube Tamil News

Kilmisha this week songs unnai thaane
kilmisha interview,kilmisa songs ,kilmisa this week songs,kilmisha weekned new songs,
zee tamil saregamapa season 3 today full episode,
கில்மிசா zee tamil,கில்மிஷா பாடல்கள்,kilmisha saregamapa,kilmisha ,

கில்மிசா வெற்றி யூட்டுபர்கள் ஏற்படுத்திய அழுத்தம் மகிழ்ச்சியில் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கில்மிசா வெற்றி யூட்டுபர்கள் ஏற்படுத்திய அழுத்தம் மகிழ்ச்சியில் தமிழர்கள்

கில்மிசா வெற்றி யூட்டுபர்கள் ஏற்படுத்திய அழுத்தம் மகிழ்ச்சியில் தமிழர்கள்

கில்மிசா வெற்றி அணைத்து இலங்கைதமிழர்களும் மகிழ்ச்சியில் உறைவு ,ஈழ தமிழ் யூட்டுபர் நண்பர்களுக்குமிக்க நன்றிகள் .

நம்ம சிறுமிகள் பாடுகின்றார்கள் அசானி கில்மிசாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் படி லண்டனில் இந்திய தமிழர்களிடம் நேரடியாக நான் வினவிய போது அவர்கள் 11 பேரும் மறுத்து விட்டனர் .

இவர்களுக்கு வாழ்த்து சொன்னால் தாங்கள் தமிழகம் செல்ல முடியாதாம் ,இது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

இவர்கள் பணிபுரிந்த ஈழ தமிழர் கடை முதலாளிகளுக்கும் அவ்வேளை அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

ஆனால் இன்று கில்மிசாவுக்கு நமது மக்கள் தரப்பில் எழுந்த அழுத்தம் காரணமாக தட்டி கழிக்க முடியாது முதலிடம் வழங்கி கவுரவித்துள்ளது அதற்கு வாழ்த்துக்கள் .

வென்று நிமிர்க மகளே .

ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசித்து வந்த ஏழு பிள்ளைகளின் தாயான பெருமாள் ராகம்மா (82) என்பவரின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துள்ளது.

ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வென்சர் தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுஓயாவிற்கு அருகில் உள்ள, தனது வீட்டில் வசித்து வந்தவரைகடந்த 10 ஆம் முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் நோர்வூட் மரண விசாரணை அதிகாரி நடராஜா ரவிக்குமார் முன்னிலையில் பொலிஸாரால்

மீட்கப்பட்டது. பிரேத பரிசோத​னைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனையடுத்து அவரை வீட்டார்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீடியோ