Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்
அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்
அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்
அமெரிக்காவின் முக்கிய மாநகரங்களை இலக்கு வைத்து தாக்கி வரும் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை ஆறு பேர் மரணமாகியுள்ளனர்
வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட காருக்குள் சிக்கியே இதில் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு
கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு
மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும்.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?- கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு
கவுதமி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி.
கமல்ஹாசனுடன் தேவர் மகன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் கமல்ஹாசனின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனுடனான நட்பை முறித்து கொண்ட கவுதமி, சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் நடிகை கவுதமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தேன்.
திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்தில் அந்த கட்சிகளில்தான் சேரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும்.
ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது.
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் பிரியுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி பிரிந்தால் அது அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 31-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
காரில் பயணித்த பெண்ணுடன் செக்ஸ் லீலை – Uber driver கைது
அவுரேலியா சிட்னி பகுதியில் அதிகாலை மூன்று மணியளவில் பயணித்த பதினாறு வயது பெண்
ஒருவரின் உடலில் தொட்டு செக்ஸ் லீலை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் 31 வயதுடைய ஊபர் சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
ஊபர் சாரதிகள் வண்டிகளில் கமரா பொருத்த பட்டுள்ளது ,அவ்விதம் பெண் சுமத்த பட்ட குற்ற
சாட்டு உண்மை எனின் ,காரில் உள்ள கமரா ஆன் பண்ணி இருப்பின் மேற்படி விடயங்கள் பதிவாகி இருக்கும் என நம்ப படுகிறது
தற்போது மேற்படி விடயம்தொடர்பில் நீதி விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்
லண்டனில் – கத்தி முனையில் நபரை மிரட்டி பணம் பறித்த திருடன்
பிரிட்டன் Anniesland பகுதியில் மதியம் போல் வீதியால் சென்று கொண்டிருந்த வயதான நபரை
கத்தி முனையில் மிரட்டிய திருடன் ,கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயன்றுள்ளான்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் ,
சில மணி நேரங்கள் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
நித்திரையில் கணவனை வெட்டி கொன்ற மனைவி
தன்னுடைய கணவனை அவருடைய வீட்டுக்குள் வைத்தே படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாயும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் லுணுவில கொஸ்வத்தையில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அந்தப் பெண், தன்னுடைய கணவனை படுகொலைச்
செய்துள்ளார்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
44 வயதான நபரே, 38 வயதான பெண்ணினால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படுகொலைக்கு படுக்கை விரிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தவேளை அவ்விருவரின் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனது உயிருக்கு ஆபத்து – சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
“அவருடைய வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். அதுவும் சந்தேகத்துக்கு
இடமானது. அவ்வாறான சம்பவத்துடன் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையானது முரண்பாடாகும்” என்றார்.
லசந்த விக்கிரமதுங்கவுக்கு இடம்பெற்றதைப் போல, அவருக்கும் (சந்திரிகா) இடமளிக்கமுடியாது.
அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில், பாராளுமன்றத்திலும் அண்மையில் குமார் வெல்கம எம்.பிய உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி
பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக மக்கள் நடமாடும் சுதந்திரம் தடுக்க பட்டது ,தற்பொழுது
திங்கள் முதல் அவை தளர்த்த பட்டு அயல் வீட்டாருடன் ஆறுபேர் கூடும் அனுமதி தற்போது வழங்க படுகிறது ,
இதுவே வைகாசி மாதம் முப்பது பேர் கூடும் அனுமதி வழங்க படுகிறது ,மேலும் திங்கள் முதல் அணைத்து கடைகளு திறக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனை அடுத்து வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என நம்பலாம்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
உடைந்து வீழ்ந்த உலங்கு வானூர்தி – ஐவர் மரணம்
உடைந்து வீழ்ந்த உலங்கு வானூர்தி – ஐவர் மரணம்
Alaskan glacier பகுதியில், பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று திடீரென
உடைந்து வீழ்ந்து சிதறியது ,இந்த விபத்தில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர்
ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வண்ணம் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்துக்கு இடம்பெற்று இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 6 பேர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 6 பேர் மரணம்
அமெரிக்காவின் மெஸ்சிக்கோ எல்லை பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தரை இறங்கு பொழுது திடீரென
வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்தவர்களில் ஆறுபேர் சம்பவ இடத்தில
பலியாகினர் ,மேலும் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
இந்த விமான விபத்திற்கான உடனடி காணம் தெரியவரவில்லை
கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்
கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்
யாழ்ப்பாணத்தில் அமைக்க ப்பட்ட கிட்டு பூங்கா ஆளும் கோட்டா அடிமைகளினால் தீ வைத்து எரிக்க பட்டுள்ளது
இதன் முன்னரங்கம் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது ,நல்லூர் கோவிலை
இடித்து மலலசல கூடம் கட்டுவேன் என சிங்கள அடிமைகள் கூக்குரலிட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு பல வன்முறைகள் தொடர்ந்து வெடிக்கும் என்பதை அடித்து கூறலாம்
தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா
தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!!
கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.
இத்தீர்மனத்தின் மூலம் தமிழீழ மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், சிறீலங்கா அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பலர் தமிழ் பேசும் உலகில் விளித்துக்கொள்ளும் அவலத்தையும் நாம் பார்க்கின்றோம். இந்நிலையில் தமிழீழ மக்களின் மீது இடம்பெற்றுக்கொண்டிருக்கும்
தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்காகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுகொண்டிருக்கும் தமிழர் இயக்கம் இவ்வூடக அறிக்கையினூடாக ஓர் கோட்பாடுசார் தெளிவூட்டலை மக்கள் முன் நிறுவுகின்றோம்.
இத் தீர்மானத்தின் இன்றைய தன்மையை ஆராய்வதற்கு முன் இதன் முந்தைய தீர்மானங்களின் அடிப்படையை நாம் சரியாக உள்வாங்குதல் அத்தியாவசியமானதாகும். முந்தைய தீர்மானங்களான 19/2 – 22 March 2012, 22/1 – 21 March 2013, 25/1 – 27 March 2014, 30/1 – 1 October 2015, 34/1 – 23 March 2017, 40/1 – 21 March 2019 தீர்மானங்களில் தமிழ் என்ற சொற்பிரயோகம்
பாவிக்கப்படவில்லை. மாறாக இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் என்றே குறிப்பிடப்பட்டன. தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழின அழிப்பை பார்க்கத் தவறிய இத் தீர்மானங்கள்
தமிழீழ மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எதிர் நோக்கும் திட்டமிட்ட தமிழினவழிப்பை மூடி மறைத்துள்ளது. இதனூடாக இனவழிப்புக் குற்றவாளியான சிறீலங்காவை தப்பிக்க வழிவகுத்ததுடன் தொடர்ச்சியான தமிழினவழிப்பை தொடர சிறிலங்காவிற்கு பச்சைக் கொடி
காட்டியுள்ளது எனக் கொள்ளலாம். 2012 அம் ஆண்டு வெளிவந்த 19/2 தீர்மானத்தில் பயங்கரவாதத்தை அழித்த சிறீலங்கா அரசிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம் என்று
புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இதனூடாக இத் தீர்மானம் தமிழர்களின் இறையாண்மைக்கானதும், இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கானதுமான சுதந்திர விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து மடைமாற்றி உள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக கூறும் இத் தொடர் தீர்மானங்கள், அக்குற்றங்கள் யார்மீது பிரயோகிக்கப்பட்டது
என்று குறிப்பிடவில்லை. அவ்வழியில் தமிழர்கள் தான் பாதிப்புக்குள்ளானர்கள் என்று சுட்டிக்காட்டத் தவறியுள்ள இப் புதியதீர்மானம் கூட தமிழ்த்தே சிய இனத்தை வலுக்கட்டாயமாக சிறீலங்கர்களாகவே அடையாளப்படுத்த முனைகிறது.
இனவழிப்பு அரசாங்கமான சிறீலங்காவின் இறையாண்மை மீதும், ஒருமைப்பாட்டின் மீதும் முழத்திற்கு முழம் கரிசனை கொண்டு வெளிவந்துள்ள இத்தீர்மானம், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இறையாண்மையின் கீழ் ஓர் தேசிய இனமான தமிழீழ மக்களின்
இறையாண்மை மறுக்கப்பட்டு திட்டமிட்ட தமிழினவழிப்பு மேற்கொள்ளப்படுவதை கரிசனையில் எடுத்துக்கொள்ளவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ முன்வரவில்லை.
இவ்வாறாக தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முற்றாக மறுத்துள்ள இத் தீர்மானங்களின் முக்கிய பகுதி ஒன்றை தமிழீழ மக்கள் மிகவும் ஆழமாக உற்று அவதானிக்க
வேண்டும். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இப்பந்தி 2012 தொடக்கம் 2021 வரை வெளிவந்த அனைத்து தீர்மானங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Stresses the importance of a comprehensive accountability process for all violations and abuses of human rights committed in Sri Lanka by all parties, including those abuses by the Liberation Tigers of Tamil Eelam, as highlighted in the comprehensive report of the Office of the High Commissioner on Sri Lanka.
தமிழாக்கம்: 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் விரிவான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த மீறல்கள் உட்பட, இலங்கையில் அனைத்துத் தரப்பினராலும்
புரியப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான முழுமையான பொறிமுறையின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது.
இப்பந்தி 23.03.2021 வெளிவந்த தீர்மானத்தின் Operative Paragraph 4 ல் அமைந்துள்ளது. இதில் தமிழீழ நிழல் அரசின் இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய தரப்புகள்
மேற்கொண்ட குற்றங்களை விசாரித்து விரிவான பொறுப்புக்கூறல் ஒன்றை வழங்கவேண்டும் என பரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்கா அரசு குற்றவாளியாக சுட்டிக்காட்டப்படவில்லை. அவ்வாறாயின் சிறீலங்கா அரசை விசாரிக்கப்போவது யார்?
தமிழீழ நிழல் அரசை விசாரிக்க சிறீலங்காவிடம் பரிந்துரைக்கும் சர்வதேசம் இலங்கை அரசை விசாரிக்கவும், நீதியை நிலை நாட்டவும் இனவழிப்பு யுத்தம் மூலம் நிர்மூலமாக்கிய தமிழீழ
இராசதாணியை மீளமைத்து தமிழீழ நீதிமன்றத்தின் முன் சிறிலங்கா அரசை விசாரிக்கும் படி கோருவதே சரியான செயற்பாடாகவிருக்கும்.
வெளிவந்திருக்கும் இப்புதிய தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொறுப்புக்கூறலுக்கான பரிந்துரைகளையும் இலங்கை அரசின் கூட்டிணைவுடன் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே ஐ.நா மனிதவுரிமைகள் சபை செயற்படுத்த முனைகிறது. இதனூடாக குற்றவாளியான இலங்கை அரசிடமே தான் செய்த குற்றத்தை விசாரணை செய்யும்படியும்,
பொறுப்புக்கூறும்படியும் ஐ.நா மனிதவுரிமைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றமிழைத்தவரை நீதி வழங்க அழைப்பது அடிப்படை சட்டக் கோட்பாடுகளை மீறும் செயலாகும். குறிப்பாக “தமிழினவழிப்பை அங்கீகரியுங்கள், ஓர் அனைத்துலக சுயாதீன
விசாரணையை நடத்துங்கள், அதன் வழியில் அனைத்துலக நீதிமன்றிலோ அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிலோ பாரப்படுத்துங்கள்” போன்ற இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழீழ
மக்களின் கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல், அவர்களின் வகிபாகம் இல்லாமல் வெளிவந்திருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானமானது ஐநா மனிதவுரிமைகள் சபையின் சரத்துக்களை மீறும் செயலாகும்.
இத்தீர்மானத்தின் ஊடான பன்னாடுகளின் அழுத்தம் என்பது சிறீலங்கா ஈட்டிய வெற்றியே. ஏனெனில் இனவழிப்பு குற்றங்களில் இருந்து 22 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு
தப்பித்துக்கொண்டுள்ளது. இதையே தாம் சாதித்த வெற்றியாக எம்மினத்தில் சிலர் கூறியும் வலம் வருகின்றனர்.
இதனால் இத்தீர்மானத்தினை தமிழர் இயக்கம் வரவேற்கவில்லை என்பதனை உலகத் தமிழர்களின் ஆதரவுடன் அறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இத்தீர்மானத்தை வரவேற்று தமிழினவழிப்பை மூடி மறைப்பதற்கும் தமிழர்களின் இறையாண்மைக்கான சுதந்திர
விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியாக நிராகரிப்தற்கும் துணைபோக வேண்டாம் என்று தமிழ் அமைப்புக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இத்தீர்மானத்தை வரவேற்பது இனவழிப்பின் 10வது படிநிலையான மறுதலிப்பிற்கு சமமாகும்.
சிறீலங்கா அரசின் இனவழிப்பை வெளிக்கொணரவும், அதற்கான அனைத்துலக நீதியை நிலை நாட்டவும் எதிர்வரும் 18 மாத கலாத்திற்கான சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றையும் தமிழர் இயக்கம்
நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்கான உங்கள் தார்மீக ஆதரவுகளையும் உதவிகளையும் இச்சந்தர்ப்பத்தில் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.
வெல்வது உறுதி தமிழர் இயக்கம்
ஐநா தீர்மானத்தால் அச்சம் இல்லை – கோட்டா திமிர் பேச்சு
நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம்
அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன.
அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.
அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி
எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில்
பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்
யாழில் ஒருவர் வெட்டி கொலை-மிரட்டும் படு கொலைகள்
புத்தூர், வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் துரைராசா சந்திரகோபல் (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த பழைய பகையை காரணமாக சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று
ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் 143 பேருக்கு கொரனோ-பரப்பிய இராணுவம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே 143 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
ஜப்பான் நாட்டில் மீளவும் இன்று அதிகாலை வேளை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த அதிர்வின் தாக்குதல் 5.8 பதிவாகியுள்ளது
இதனால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டது
தொடந்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்
தொடராக இந்த அதிர்வு அதே சமநிலையில் பதிவாகி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – 321 கப்பல் காத்திருப்பு
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – 321 கப்பல் காத்திருப்பு
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள இராட்சத கப்பலில் தற்போது 321 கப்பல்கள் அவ் வழியாக செல்ல முடியாது காத்துள்ளன
இந்த கடல் பாதையை தவிர்த்து சொல்வதாயின் பல நூறு கடல்மைல்களை சுற்றி செல்ல நேரிடும் அதனால் போக்குவரத்துக்கள் தாமத படும் என்பதாக உள்ளது
இதனால் ஏற்பட்ட இந்த விபரித விளைவால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி தோன்ற போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது
காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி
ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்
இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்
மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்
முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் கடந்த தினம் ஊந்துருளியில் வருகை தந்த ரவுடி கும்பல் வீடு புகுந்து இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது
இதே வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் மீது இம்மாத முற்பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது
ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்
ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்
இலங்கையில் ஆளும் கோட்டாபய அரசு ஓசை படமால் பலரை வாகன விபத்துக்கள் மூலம் படு கொலை செய்து வருகிறது
அவ்விதம் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் என்ற ஊடக போராளி ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்தார்
அப்பொழுது யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலய அருகாமையில் வைத்து மோதியது .
இதன் பொழுது தலையில் பலத்த காயமடைந்த நிலையில் தற்போது அவர் மரணமாகியுள்ளார்
நீரேரிகளில் சடலங்கள் தொடராக மிதந்து வரும் நிலையில் இப்பொழுது இவ்வாறான படு கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது






