Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது
போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது
இலங்கை` வீதிகள் நாள்தோறும் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,போலீசார் தீவிர சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இந்த சோதனை நடவடிக்கையின் பொழுது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1834 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் முக்கிய நுழைவு சாலைகளில் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது
Police raid – drunk 1834 arrested
கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு
கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு
ஆளும் கோட்டா சகோதரர்கள் ஆட்சியில் நடத்த பட்ட மிக பெரும் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி உலக சமுதாயம்
போராடி வருகிறது ,12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்க படாது உள்ளது ,உலக சமதத்துவதை பாதித்துள்ளது
இதனை அடுத்து பிரிட்டன் தலைமையில் ஏற் படுத்த பட்ட போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் ஐநாவில் பாரப்படுத்த பட்டுள்ளது
எதிர்வரும் காலங்களில் இலங்கை மிக நெருக்கடிகளை சந்திக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தமிழர்களை கொன்று ,புலிகளை அழித்து விட்டோம் என மார் தட்டும் இலங்கைக்கு இந்த தீர்ப்பு பெரும் இடியாக மாறும் என அந்த வட்டாரங்கள் இடித்து கூறுகின்றன

கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள் photo
கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்
அவுஸ்ரேலியா Fraser கடற்கரை பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை
வழிமறித்த நாய்கள் அவனை கடித்து குதறியது ,பலத்த காயங்களுக்கு உள்ளான அவனை
உலங்குவானூர்தியில் வந்த மருத்துவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்
பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்
பிரிட்டன் westbound carriageway, வேக சாலையில் பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் 17
வயது வாலிபன் ஒருவர் காவல் துறையினரால் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
5 முதல் 7 ஆம் இலக்க சந்தியில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது
இந்த விபத்தை கண்ணுற்றவர்கள் யாரவது இருந்தால் தமக்கு தெரிவிக்கும் படி மக்கள் உதவியைபோலீசார் நாடியுள்ளனர்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்
உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்
உக்கிரேனுக்கும் ,ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் முற்றியுள்ள நிலையில் இரண்டு மிதக்கும் போர்
கப்பல்களை ரசிய கருங்கடல் நோக்கி அனுப்பியுள்ளது .அது தவிர பலநூறு இராணுவத்தையும் எல்லையில் குவித்துள்ளது
எவ்வேளையும் உக்கிரேனுக்குள் ரசியா நுழைய கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது ,எவ்வேளையும்
எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்
துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “என் நண்பன் விவேக் மாரடைப்பால்
இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.
வடிவேலு
பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாய் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ
நல்ல விஷயம் பண்ணுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். நானும் அவனுக்கு ரசிகன் தான். என்னால் அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என்
நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கண்ணீர்மல்க பேசியிருக்கிறார் வடிவே
ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்
ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்
துனிசியா நாட்டின் கடல் பரப்பின் ஊடாக இத்தாலிக்குள் நுழையும் முகமாக கப்பல் ஒன்றின்
மூலம் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் கப்பல் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 41 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல்வழியூடாக பலநூறு மக்கள் நாள் தோறும் முயன்று வருகின்றன
இவ்விதம் கடல் வழியூடாக பயணம் மேற்கொண்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

விவேக்கை கொன்றது அரசு தான் – மன்சூர் அலிகான் – வீடியோ
விவேக்கை கொன்றது அரசு தான் – மன்சூர் அலிகான் – வீடியோ
நடிகர் வேவக்கை கொன்றது ஆளும் அரசு தான் என மன்சூர் அலிகான் குற்றம் சுமத்தியுள்ளார்
,விவேக்கை பார்க்க சென்றபொழுது தண்னி பார்க்க விடவில்லை என தெரிவிக்க படுகிறது
முழுமையான காணொளி இது
விவேக்கின் உடல் இன்று தகனம் live
விவேக்கின் உடல் இன்று தகனம்
சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்படுகிறது.
மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (59) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில்
எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், சின்ன கலைவாணர் விவேக் உடல் இன்று சனிக்கிழமை மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு
இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு
இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால்
பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள்
இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அப்பகுதியில் நிலத்தை அகழ்ந்து தேடுதல் மேற்கொள்ளவும் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்
வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்
இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
இவ்விதம் ஏற்படுகின்ற
விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து
செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது
இலங்கை யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில்
ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இந்தியாவில்
ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டவர்களுடன் இவர்கள் நேரடி உரையாடலில் இருந்தமையால் இந்த கைது இடம்பெற்றுள்ளது
இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு
இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இணையத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை பரப்பி பொய்யான
குற்ற சாட்டுக்களை முன் வைக்கும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்
,அவ்விதமான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் .ஆளும் அரசு அமைச்சரவை ஒப்புதலுடன் புதிய சட்ட திருத்தும் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது
அடக்கி ஆளும் அடக்குமுறை ஆட்சியின் நீட்சியின் ஒரு பகுதியாக இது பார்க்க படுகிறது
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்
முல்லைதீவு நீராவிப்[பிட்டி பகுதியில் நபர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த கத்தி குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில்
அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
முரசுமோட்டையில் -ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு விலைபோன அரச அதிகாரிகள் – VIDEO
ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்
. முரசுமோட்டை பகுதியில் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியின் உத்தரவுக்கு அமைவாக 6 ஏக்கர் செய்கை நிலம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையை ஆராய இன்று ஊடகவியலாளர்கள் சிலர் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றனர். விவசாயிகள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியிடம் வினவியபோது தெளிவான விடயங்களை வழங்க மறுத்தார்.
ஊடகவியலாளர்களாக அல்லாது பொதுமகனாக விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும், விளக்கத்தை தெளிவாக வழங்குமாறும் அவரிடம் வினவினர். ஆனாலும், தனது அரச வேலைக்கு
இடையூறாக காணப்படுவதாகவும், தனக்கு விளக்கமாக விடயங்களை வழங்க முடியாது எனவும் பெரும்பாக உத்தியோகத்தரான சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிதத் விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடடு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டி உள்ளதா என அங்கிருந்த உத்தியுாகத்தர்களிடம் வினவியபோது அவ்வாறான எதுவும் இல்லை என தெரிவித்ததுடன், குறித்த பெரும்பாக உத்தியோகத்தரிடம்
வினவினர். குறித்த புத்தகம் அங்கேதும் இருக்கும் எடுத்து அவர்களிடம் கொடுங்கள் என அசாட்டாக பதிலளித்துள்ளார். இதன்போது புதிதாக எவ்விடயமும் குறிப்பிடப்படாத குறிப்பு புதிய புத்தகம் ஒன்று உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டதுடன், அப்புத்தகத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
கிளிநொச்சியில் சிறுபோக செய்கை இடம்பெற்று வரும் நிலையில் காலபோகம் மேற்கொண்டவர்களே சிறுபோகம் செய்ய வேண்டும் என பெரும்பாக உத்தியோகத்தரின்
தன்னிச்சையான முடிவு விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உண்மைநிலையை அறிய சென்ற போதே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக உண்மைநிலையை கண்டறிய முடிந்தது. இரண்டு போகங்கள் செய்யக்கூடிய காணியில்
காலபோக செய்கை இவ்வருட ஆரம்ப பகுதியில் நிறைவடைந்தது. தற்போது சிறுபோக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் காலபோகம் செய்தவர்களே சிறுபோக செய்கையும் மேற்கொள்ள வேண்டும் என கமநல சேவைகள் திணைக்களம் கட்டுப்பாடு ஒன்றை தாமே முன்வைத்துள்ளது.
ஆனாலும் குறித்த வரையறையானது மாவட்ட விவசாய திட்டமிடல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார்.
காலபோக செய்கை மேற்கொள்வதற்காக பல காணி உரிமையாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு குத்தகைக்கு வழங்கியும், உறவினர் நண்பர்களிற்கு வழங்கியும் உள்ளனர்.
இதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக செய்கையை காணி உரிமையாளர்கள் மேற்கொள்ளவோ அல்லது வேறு நபர்களிற்கு குத்தகைக்க வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணி குறித்த பெரும்பாக உத்தியோகத்தரினால்
காலபோகம் செய்த நபருக்கு அழித்து விதைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காணி உரிமையாளர் 119 ஊடாக பொலிசாருக்கு அவசர அழைப்பு விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது குறிதத் காணியை அழித்து விதைப்பதற்கு பெரும்பாக
உத்தியோகத்தர் சுந்தரமூர்தியே அறிவுறுத்தியதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட விவசாயி குறிப்பிடுகின்றார்.
குத்தகைக்கு வழங்கப்பட்ட நபருடனான ஒப்பந்தமானது சட்டத்தரணி ஊடக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எனவும், காணி உரிமையாளரான தாம் சிறுபோக செய்கை
மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது பெரும்பாக உத்தியோகத்தர் கடமையை செய்வதற்கு இழுத்தடிப்பு மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.
கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு ஆடு அடிச்சு, சாராயத்துடன் விருந்து வைத்த சம்பவம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.
காலபோக செய்கை மேற்கொண்டவர்கள்தான் சிறுபோக செய்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாக உத்தியுாகத்தர்
குறிப்பிட்ட புாதிலும், குறித்த கூட்டறிக்கையின் குறிப்பினை காண்பிக்குமாறு கேட்டபோது அக்குறுிப்பு தமக்கு கிடைக்கவில்லை என்று சாட்டுப்போக்கினையே அவர் கூறினார்.
குறித்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு மாவட்ட செயலகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை நேரடியாக சந்தித்து வினவியபோது, அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பெரும்பாக உத்தியோகத்தர் தொடர்பில் விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அறிந்து, விவசாயிகளிற்கு நேர்மையாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை மேற்கொள்ளத்தவறியமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்களின் கருத்தை கேட்க தவறியமை, முறைப்பாட்டு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் காண்பிக்க தவறியமை, எடுக்கப்படாத தீர்மானம் ஒன்றை
நடைமுறைப்படுத்த முற்றப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளிநொச்சி கமநலசேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியுாகத்தர் சுந்தரமூர்த்தி மீது விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிருபர் – சங்கிலியன்
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்
வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது
இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க
கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை
வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித
உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது
இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்
இலங்கை மாத்தறை பகுதியில் நீரோடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் மனித தலை ஒன்று மிதந்து வந்துள்ளது ,
இதனை கண்ணுற்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மேற்படி நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் இவ்விதம் மனித சடலங்கள் மிதந்து வருகிறது ,இது கொலையா
,அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்
இலங்கை வேலி ஓயா பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற நால்வர் நீரில் மூழ்கினர்
,இதில் இருவர் காப்பாற்ற பட்டனர் ,ஆனால் தந்தை ,மகன் நீரில் டித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்கள் சடலங்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது ,இதுவரை சடலங்கள் கண்டு பிடிக்க படவில்லை
தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்
கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த
நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த
நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
ராதா
இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ்
குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.
நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


















