Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்

மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்


பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள் குற்ற செய்திகள்

    சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

    சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

    இலங்கையில் முஸ்லீம் குடும்ப பெண் ஒருவர் கோரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குப்பைகள் கொட்டும் பகுதியில் சாக்கு மூடையில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்.

    இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் Fathima Mumtaz என்கின்ற ம் 44 வயதுடைய பெண்ணாகும் .

    சாக்கில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் கணவர் இவர் தனது மனைவி என பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

    கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்


    குறித்த பெண்ணின் கோர கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

    சூட்கேசில் பெண்ணின் சடலம் கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்

    சாக்கு மூட்டையில் பெண் சடலமாக குப்பை மேட்டில் இருந்து மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    இந்த பெண் ஏன் இவ்வாறு கோரமாக கொலை செய்யப்பட்டார் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவிலை .

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

    பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி

    பணத்திற்காக கணவனை கொன்று குப்பையில் எறிந்த மனைவி

    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஓய்வு பெற்ற கணவர் ஒருவரை அவரது மனைவி கொன்று குப்பையில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இவரது ஓய்வூதிய பணம் என்பனவற்றை பெற்றுக்கொள்ளவதற்காக மனைவி இந்த கொலையினை புரிந்துள்ளார்

    பணம் வழங்கும் நிறுவனத்திற்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்ட்தால் விசாரணையை நடத்தினர் ,அப்பொழுது
    கணவன் இறந்ததற்கான ,சடங்குகள் எதனையும் இவர் புரிந்திருக்கவில்லை

    அதில் சநதேகம் அடைந்த அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கணவரை கொன்றது மனைவி

    தான் என்பது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இவருக்கு சாகும்வரையிலான சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      மனைவியை கத்தியால் குத்திய கணவன்

      மனைவியை கத்தியால் குத்திய கணவன்

      குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

      வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

      இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

      கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

      சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,

      தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை


        முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி

        கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

        இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

        இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன்

        கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை

        இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

        அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

        இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.

        இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          மனைவியை உயிரோடு எரித்த கணவன்

          மனைவியை உயிரோடு எரித்த கணவன் – வவுனியாவில் நடந்த பயங்கரம்

          வவுனியா பூவரம் குளத்தில் 43 வயதுடைய மனைவியை கணவன் அடித்துள்ளார் ,அவ்வேளை அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்


          அதன் பின்னர் தீ வைத்து எரித்துளளார்
          பலத்த தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

          தப்பி ஓடிய கணவன் கைது செய்ய பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

          இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள் குற்ற செய்திகள்

            கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

            கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

            தேர்வு எழுதச் சென்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.

            கேரளாவில் கொடூரம்: கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

            கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார்.

            இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி

            வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

            திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார்.

            இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,

            இதேபோன்ற சம்பவத்தால் சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              பிரிட்டன் கென்ட்டில் 15 வயது பெண் கற்பழிப்பு பாடசாலைக்கு சீல்

              பிரிட்டன் கென்ட்டில் 15 வயது பெண் கற்பழிப்பு பாடசாலைக்கு சீல்

              பிரிட்டன் கென்ட் பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமி ஒருவர் field near Edward Road, Queenborough.

              பகுதியில் வைத்து கற்பழிக்க பட்டுள்ளாராம் , மேற்படி சம்பவத்தை அடுத்து இவர் அருகில் உள்ள சிறார் பாடசாலை ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது

              இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

                டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

                லண்டன் Kent Road வீதியில் டிராக் ஒன்றை திருடிய திருடன் அதனை போதையில் செலுத்தி சென்றுள்ளார் ,சந்தேகம் அடைந்த பொலிசார் குறித்த வாகனத்தை துரத்தி சென்ற பொழுது

                மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
                தற்போது அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                ஆண்டு தோறும் பிரிட்டனில் ஒரு லட்சம் கார்கள் திருட படுவதான திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in குற்ற செய்திகள்

                  குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்.

                  குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்.

                  பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது அவருக்கு எப்போதும் கோபம் உண்டு

                  குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்- பரபரப்பு தகவல்கள்
                  கைது செய்யப்பட்ட துளசி


                  மழலை மொழி மாறாத பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாய் துளசியிடம் சத்தியமங்கலம் போலீசார், குழந்தையிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

                  அப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது:-

                  துளசிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் கோகுல்(வயது 4) சுகபிரசவமாக பிறந்தார். இரண்டாவது குழந்தை பிரதீப்(2). இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

                  பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். மேலும், அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது துளசிக்கு எப்போதும் கோபம் உண்டு.

                  இந்த நிலையில் தான், துளசியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசியபோது, எதிரே பிரேம்குமார் என்பவர் பேசி உள்ளார்.

                  அவர் தான் சென்னையை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசி, நட்பு பாராட்டி வந்தனர். இதுவே நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

                  துளசியின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் வீட்டுக்கு திரும்புவார். இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி அவர்கள் செல்போன் மூலம் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

                  துளசி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட காட்சி.
                  அப்போது வீடியோ கால் மூலமாகவும் அவர்கள் பேசி வந்தனர். இதில் துளசியை பார்த்து, அழகாக

                  இருப்பதாகவும் கூறி பிரேம்குமார் பேசி வந்துள்ளார். மேலும் அவரது மூத்த மகன் கோகுலை பார்த்து அவன் உன்னை போன்று அழகாக உள்ளான். ஆனால், பிரதீப் அழகாக இல்லை, அசிங்கமாக உள்ளான்.

                  2-வது குழந்தை தான் உனது அழகை குறைத்து விட்டது என்று கூறியுள்ளார். பிரேம்குமார் இனிக்க இனிக்க பேசியதில், துளசி தன்னையே மறந்து விட்டார். இதனால் அவரது பேச்சில் மயங்கிய துளசிக்கு தனது குழந்தை பிரதீப் மீதான பாசம் போய்விட்டது.

                  மேலும், தனக்கும் அந்த குழந்தையை பிடிக்கவில்லை என்று கூறிய பிரேம்குமார், அந்த குழந்தையை அடிப்பது போன்று வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

                  கள்ளக்காதலனின் பேச்சில் மயங்கிய துளசி, தான் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி குழந்தையை அடித்து துன்புறுத்தி, அதை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் பிரேம்குமாருக்கு அனுப்பிவைத்தார். அதை இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.

                  குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து கணவர் வந்து கேட்கும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகவும், குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டான் என்றும் ஏதேனும் ஒரு

                  சாக்குபோக்கை கூறி தப்பி வந்துள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய வடிவழகனும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சையும் அளித்து வந்துள்ளார்.

                  மேலும், உனது கணவரிடம் சண்டையிட்டு வந்துவிடு, நான் உன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் பிரேம்குமார் ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

                  சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமார் தூண்டுதலின் பேரில்தான் துளசி தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. எனவே குழந்தையின் மீது

                  வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருந்த கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளர். இதையடுத்து தனிப்படை போலீசார் பிரேம்குமாரை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர்

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை

                  சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை


                  ஆந்திர மாநில குண்டூர் மாவட்டம் சத்தனப்பள்ளி நாகார்ஜூனா நகரை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது30). இவருக்கும் இவரது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதிக்கும் (43) சொத்து தகராறு இருந்து வந்தது.

                  இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு அவ்வப்போது சென்று தகராறில் ஈடுபட்டு வந்தார்.

                  இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சொத்து பிரச்னை பற்றி பேசலாம் என்று கூறி வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு சென்ற சீனிவாசராவ் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

                  ஒரு கட்டத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த சீனிவாசராவ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து வெங்கடசுகுணா பத்மாவதி, அவரது மகள் லட்சுமி(23) ஆகியோரை குத்தி கொலை செய்தார்.

                  சீனிவாசராவிடம் இருந்து தப்புவதற்காக அவர்கள் 2 பேரும் போராடினர். ஆனாலும் பலனில்லாமல் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

                  பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சீனிவாசராவ் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

                  இந்த கொலை சம்பவம் தொடர்பாக அங்கு வசிக்கும் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்


                    மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்

                    அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் தனது முன்னால் மனைவியை அவரது கணவர் மூன்று முறை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றுள்ளார்


                    மேற்படி சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                    கணவனின் இந்த திட்டமிட்ட பட படுகொலைக்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

                      திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

                      திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

                      சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால்

                      வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

                      இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா

                      பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

                      எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

                      இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

                      இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                      இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

                        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                        வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்

                        வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்

                        அவுஸ்ரேலியா Nowra பகுதியில் 37 வயது நபர் ஒருவர் 51 வயது பெண்மணி ஒருவரை அடித்து

                        கொன்றுள்ளார் ,உயிரிழந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மரண பரிசோதைக்கு

                        உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது குற்றவாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                        இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                          Posted in குற்ற செய்திகள்

                          ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்

                          ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்

                          மராட்டியத்தில் பரோலில் வெளியே விட்டாலும், 26 கைதிகள் ஜெயிலை விட்டு வெளியே செல்ல மறுத்து உள்ளனா்.

                          மராட்டியத்தில் உள்ள ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலை குறைக்க அரசு முடிவு செய்து, தகுதி

                          உள்ள கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது. இந்தநிலையில் அரசு விட்டாலும், நாங்கள் ஜெயிலை விட்டு நகர மாட்டோம் என சில கைதிகள் அடம்பிடித்தது தெரியவந்து உள்ளது.

                          மாநிலம் முழுவதும் சுமார் 26 கைதிகள் பரோலில் செல்ல வாய்ப்பு இருந்தும், ஜெயிலிலேயே இருப்பது தெரியவந்து உள்ளது.

                          கொரோனா வைரஸ்

                          இதில் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த கைதி ஒருவர், வெளியே போனால் குடும்பத்திற்கு பாரமாக இருந்துவிடுவோம் என நினைத்து வீடு திரும்ப மறுத்துவருவதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

                          மேலும் அவர் கூறுகையில், “பரோலில் வீட்டுக்கு போக சொன்னால், ஒடிசாவை சேர்ந்த கைதி ஜெயிலில் வேலை பார்த்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என கூறுகிறார்’’ என்றார்.

                          இதேபோல ஒருசில கைதிகள் வெளியே சென்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோம் என பயந்தும், தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என சிலரும் பரோலில் செல்லாமல் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

                          மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் கைதிகளுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் வழங்குகிறோம். கைதிகளுக்கு என தனியாக கொரோனா சிகிச்சை மையம்

                          வைத்து உள்ளோம். எனவே தொற்று காலத்தில் ஜெயிலில் இருப்பது பாதுகாப்பானது என கைதிகள் நினைக்கின்றனர்’’ என்றார்.

                            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                            தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                            தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                            இலங்கை தம்புள்ள பகுதியில் ஒன்றரை வயது சிசு ஒன்று வீட்டின் முன் பகுதியில் நீர் நிரப்பி வைக்க பட்ட பானைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது

                            மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இது விபத்தா ,கொலையா என்ற நிலையில் விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

                              வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

                              இலங்கை பத்தரமுல்லையில் வீடொன்றுக்குள் புகுந்து சுமார் 30.6 மில்லியன் ரூபாய்களை

                              கொள்ளையடித்து சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                              கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு

                                யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு

                                யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு அருகில் ஆண் ஒருவர் எரிக்க பட்டு உருக்குலைந்த

                                நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
                                இவர் அடித்து கொலை செய்ய பட்ட பின்னர் தீயில்; எரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                இந்த படுகொலைகாண் காரணம் தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                                மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                  கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                                  கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                                  இலங்கை பமுனுவ பகுதியில் கம்பி ஒன்றால் மனைவியை தாக்கி கனவை படுகொலைசெய்துள்ளார்


                                  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி மேற்படி கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது

                                  சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் கொலை குற்ற

                                  சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                    அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                    அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                    இலங்கை பொத்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்து முப்பத்தி ஐந்து வயது மதிக்க

                                    தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உடலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                    இவர் அடித்து கொலை செய்ய பட்டு வயல் வெளியில் வீச பட்டு இருக்கலாம் என்ற சநதேகம் வலுத்துள்ளது


                                    மேற்படி கொலையுடன் தொடர்பு பட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                                    தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,கோட்டா ஆட்சியில் இலங்கையில்

                                    தொடர்ந்து இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது