Category: குற்ற செய்திகள்
குற்ற செய்திகள், கொலை குற்ற செய்திகள் ,
மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு
மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு
வருகிற 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த
ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 17-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த்
வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார்.
அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு
பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித உயிர் குடிக்கும் வீதி – வீடியோ
மனித உயிர் குடிக்கும் வீதி – வீடியோ
மிகவும் ஆபாத்தான மலை வழி சாலை ஒன்றில் பயணிக்கும் வாகனங்கள் ,இந்த சாலையில்
பயணித்தவர்களில் சிலர் மிக கோரமாக பலியான கதைகளும் உண்டு ,
இந்த சாலையில் அவர்களின் ஆவிகள் நடமாடுவதான ஐதீகமும் ,அதனால் இந்த சாலைகள் உயிர்குடிக்கின்ற
விடயங்கள் நடைபெறுவதகவும், அதனால் பல மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதை
தவிர்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் இந்த சாலை தொடர்பான கருத்துக்கள் முன் வைக்க பட்டு வருகிறது
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டன் கிங்ஸ்பரி நகர் பகுதியில் அவசர அழைப்பை பெற்று விரைந்து வந்த இரண்டு
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தேவேந்திரன் பாலகுமார் என்ற 58 வயதுடைய நபர் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளார்
இதில் இரண்டு காவல்துறை ஊழியர்களும் பாதிக்க பட்டனர் .கீழே வீழ்ந்து கிடந்த பாலகுமார்
திடிரென சுதாகரித்து போலீசார் கால்களில் தாக்கியுள்ளார் ,பின்னர் அவர்களது முகத்தில் துப்பியுள்ளார்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
அதிக போதையில் இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில்
முன்னிலை படுத்த பட்ட நிலையில், இவர் புரிந்த குற்றத்திற்கு ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
North West Command Unit were called to Princes Avenue, NW9 following reports of a man collapsed at the rear of a property.
The officers attended and found Balakumar lying on the ground, apparently intoxicated. The officers informed him he had to get up but he became abusive and kicked one of them in the leg.
A second officer approached with a view to detaining him for the assault but Balakumar spat in the officer’s face.
He was arrested and taken into custody but denied the offences. However, he was subsequently charged and convicted of the two assaults.
லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு
லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு
லண்டன் மிச்சம் பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை பின்தொடர்ந்த கறுப்பினத்தவர் ஒருவர் அவளது வாயை பொத்தி கடத்தி சென்று கற்பழித்துள்ளார்
சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார் ,பின்னர் தனக்கு உரிய இடத்தில சிறுமியை வைத்து பாடசாலை
கோட்டை களற்று படி கூறி தனது பாலியல் வல்லுறவை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் ,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இதேவேளை மிச்சம் Edenvale வீதியில் வைத்து இருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல்
இடம்பெற்றுள்ளது ,இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,கடந்த சில வாரத்தில் மட்டும் 186 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
லண்டனில் தற்போது இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
மோதி சிதறிய அம்புலன்ஸ் – திகில் காணொளி
மோதி சிதறிய அம்புலன்ஸ் – திகில் காணொளி
அவசர காவு வண்டி ஒன்று நோயாளாரை காவிய படி வேகமாக செல்கிறது ,திடீரென டிராக்
ஒன்றுடன் மோதி சிதற பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
ஒருவரை காப்பாற்ற சென்ற அவசர காவு வண்டிக்கு நடந்துள்ள இந்த துயரம் நெஞ்சை பதற
வைக்கிறது அல்லவா ..?
An ambulance on the opposite side was rushing to answer a call on the Yuzhnoberezhnoye highway, but the foreign car did not give way. The driver of the Audi was killed and the three doctors in the ambulance were taken to the hospital.
பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்
பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்
தெற்கு சீனாவின் Xinfeng பகுதியில் உள்ள சிறார் பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த 16 அப்பாவி சிறுவர்கள் மீது திடிரென கத்தியால் வெட்டினான் .
இதில பதினாறு சிறுவர்கள் கடுமையான வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி தாக்குதலை தடுத்த ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளான்
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பதினெட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்
போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த கத்தி வெட்டு தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறுவர்களை வெட்டிய கொடூரன்


விமானத்தில் போதையில் ரகளை புரிந்தவருக்கு -(US$31,750) தண்டம்
விமானத்தில் போதையில் ரகளை புரிந்தவருக்கு -(US$31,750) தண்டம்
அவுஸ்ரேலியாவில் ஜெட் புளு விமானத்தில் பயணித்த நபர் ஒருவ அதில் மது அருந்தி விட்டு ரகளையில்
பட்டுள்ளார் ,சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்ற சாட்டிலும் ,அநாகரிகமாக செயல்பட்ட காரணமாக (US$31,750) டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது
இது மிக பெரும் தண்டம் என தெரிவிக்க படுகிறது ,குடிப்பான் ஏன் இப்படி தண்டம் செலுத்துவான் ஏன் .
இதுக்கு தானே மகனே ஆசைப்பட்டாய் ,அனுபவி ராசா அனுபவி .
காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை
காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை
ஷான்யா
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட
நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை
செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின்
அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது
ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை
இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார்.
அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகம
து உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு
, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா
கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.
காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி
காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி
தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.
பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய `மயக்கமருந்து பெண்’ வெளிப்படுத்தும் பதறவைக்கும் உண்மைகள்
மனித சமூகத்தில் மோசமான மனிதர்களும் உண்டு. அதனால்தான் நல்ல மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கவேண்டும்.
தவறான மனிதர்களுடன் இணையும்போது அந்த பெண்களும் தவறான வழிக்கு சென்று தீராத பழி பாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி
கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.
பெண்ணின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சந்தியா (பெயர்மாற்றம்), நெஞ்சை பதறவைக்கும் தனது உண்மைக்கதையை சொல்கிறார்:
‘‘சிறுவயதில் இருந்தே நான் ரத்தத்தை பார்த்து வளர்ந்தவள். அப்பா ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்பவர். ஆடுகளையும், சில நேரங்களில் மாடுகளையும் வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு
சென்று, கொன்று, அறுப்பார். அவைகள் உயிரை விடும் நேரத்தில் எழும் அலறல் சத்தமும், பீறிட்டு வழியும் ரத்தமும் காலப்போக்கில் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்றாடக் காட்சிகளாகிவிட்டது.
வெட்டிப்போட்ட ஆடுகளையும், மாடுகளையும் சுத்தப்படுத்தி கறியாக்க ஆண்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அந்த வேலையை பார்ப்பேன். எனக்கு பத்து வயதாக இருந்தபோது
ஒரு நாள் எனது அம்மாவுக்கும்- அப்பாவுக்கும் சண்டை வந்தது. அப்பா, அம்மாவை குத்திக்கொன்றுவிட்டார். அதன் பின்பு அப்பா எங்கே போனார் என்றே குழந்தைகளான எங்களுக்கு தெரியாது.
அதன் பின்பு நாங்கள் அனாதை இல்லத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் ஓரிடத்திலும், நான் இன்னொரு இடத்திலும் வளர்ந்தேன்.
நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், தூரத்து சொந்தமான உறவினர் ஒருவர் வந்து என்னை அவரோடு அழைத்துச்சென்றார். கொஞ்ச காலம் கடந்ததும் என்னைவிட மிக அதிக வயது கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். நான் அவருக்கு மூன்றாவது மனைவி.
அவரோடு வாழ்ந்து நான் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். அவருக்கு என் மேல் கொஞ்சமும் அன்பு கிடையாது. அதனால் நான் அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு என்னுடன் சினேகம் காட்டிய ஒருவனோடு சென்றுவிட்டேன்.
நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு திருடன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவன் என்னை நேசித்ததால், அவனை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
அவன் எனக்கும் திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி கொடுத்தான். நிறைய தங்க நகைகள் அணிந்து செல்லும் பெண்களின் வீடுகளை கண்காணித்து என்னிடம் சொல்வான். அவர்கள் தனியாக இருப்பார்கள். அந்த பெண்களுக்கு உறவினர்களும் இருக்கமாட்டார்கள்.
நான் அவர்களிடம் அறிமுகமாகி நட்பு பாராட்ட முயற்சிப்பேன். முதலில் சில நாட்கள் அவர்களை பார்த்து சிரிப்பேன். தொடக்க நாட்களில் சிரிக்காவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் என் முயற்சிக்கு வெற்றிகிடைத்துவிடும். அவர்கள் என்னை பார்த்து சிரித்துவிட்டால் எனக்கு வெற்றிதான். எப்படியாவது அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவேன்.
சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் நான் அவர்களை நம்பவைத்து எனது ஆள் சொல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றுவிடுவேன். மீதமுள்ள வேலையை அவன்
செய்துவிடுவான். கொலையும் நடக்கும். பெரும்பாலும் நகையை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பிவிடுவான். பின்பு அந்த ஊரில் இருந்து இடம்மாறி வேறு ஊருக்கு போய்விடுவோம்.
நான் கர்ப்பிணியானதும் அடிக்கடி இடம்மாறிச்செல்ல என்னால் முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் அவன் அந்த பகுதியில் உள்ள சில பெண்களின் விவரங்களை சேகரித்து என்னிடம் தந்தான். நிறைந்த வயிறுடன் நான் சென்றபோது என் ஏமாற்று வேலைகள் எளிதானது. கனமான வயிற்றுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கையில் நான் சொல்வதை மற்றவர்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.
எனக்கு எதிராக மூன்று வழக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றில் தண்டிக்கப்பட்டுதான் நான் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள். அவனும் சிறையில்தான் உள்ளான். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.
எனக்கு இன்னும் வயது ஐம்பது ஆகவில்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக என்னை என் காதலன் வேஷம் போடச்சொன்னான். நெற்றியில் எப்போதும் சந்தனமும், குங்குமமும் இடம்பெற்றிருக்க
வேண்டும் என்பான். அதனால் தினமும் காலையில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உருவானது. விலை உயர்ந்த ஆபரணங்கள், புடவைகள் வாங்கித்தந்து எப்போதும் மற்றவர்களை கவரும்
விதத்தில் அழகோடு காட்சியளிக்க வேண்டும் என்றான். நானும் நேர்த்தியாக உடை அணிந்து எப்போதும் அழகாகவே வலம் வருவேன்.
நான் நயவஞ்சகத்தோடு பலரை ஏமாற்றியிருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை நம்பவைத்து கழுத்தறுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஒருமுறை
சாலையில் தடுமாறிவிழுந்துவிட்டேன். கைமூட்டில் அடிபட்டுவிட்டது. அப்போது பலரும் உதவிக்கு வந்தாலும் ஒரே ஒரு பெண் என்னை தாங்கிப்பிடித்தார். நான் அவருக்கு நிறைந்த கண்ணோடு
நன்றி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து நான் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த பெண்மணி என்னை தேடிவந்து, `எப்படி இருக்கிறாய்.. குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே?’ என்று கேட்டு நலம் விசாரித்தார்.
ஸ்கேன் செய்து பார்த்தேன். குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. எனக்குதான் முதுகுவலிக்கிறது. பலரும் உதவியது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் நீங்கள்தான் எனது நன்றிக்குரியவர்' என்றேன்.
என்னை பற்றி நிறைய சோகக் கதைகளையும் கூறி அவரது மனதில் இடம்பிடித்தேன். அவரது நம்பிக்கையை பெற பல காரியங்களை செய்தேன். கோவிலில் அவரது பெயருக்கு ஒரு வழிபாடும் நடத்தினேன்.எனது மூத்த சகோதரி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அவரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்’ என்றும் பொய் சொன்னேன். அவரும் ரொம்ப உருகிப்போய்விட்டார்.
அடுத்து என் காதலன் சொல்லிக்கொடுத்தபடி அந்த பெண்மணியை நயவஞ்சகமாக ஏமாற்ற திட்டம் தீட்டினேன். `அக்கா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நாளை நான் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியதிருக்கிறது. என் கணவர் வெளியூரில்
இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் யாராவது ஒருவர் என்னோடு வந்தால் நல்லது. உங்களால் வர முடியுமா? வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை..’ என்றேன். அந்த பெண்மணி உடனே சம்மதித்தார்.
மறுநாள் என் காதலன் டிரைவராகி, காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பெண்மணி நிற்பதாக சொன்ன இடத்திற்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டோம். மருத்துவமனையை நோக்கி செல்வதாக சொன்னேன். நான் அவரை யோசிக்கவிடாமல் தொடர்ந்து அவரிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர், மருத்துவமனை எங்கே இருக்கிறது? அந்த இடத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்.
தூரத்தில், ஆட்கள் இல்லாத ஒர்க்ஷாப் ஒன்றின் உள்ளே கொண்டு போய் காதலன் காரை நிறுத்தினான். நான் எனது ஹேன்ட்பேக்கில் இருந்து மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்தேன். எனது வாயையும், மூக்கையும் பாதுகாப்பாய் துணியால் கட்டிக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராக அடித்தேன். வழக்கமாக நான் கையாளும் உத்தி இதுதான். முதலில் அந்த பெண்மணி என்னை தாக்க முயற்சித்தாலும் சில நிமிடங்களிலே நினைவிழந்தார். பின்பு அந்த ஒர்க்ஷாப்பின் ஷட்டரை என் காதலன் இழுத்து மூடினான்.
நினைவற்று கிடந்த அந்த பெண்மணியை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றினோம். அவரது ஹேன்ட்பேக்கில் இருந்து டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டோம். இன்னொரு பவுச்சில் இருந்து அதன் பின்நம்பரையும் எடுத்தோம். அதற்குள் என் காதலன், அந்த பெண்மணியை கொன்றுவிட்டான். பின்பு அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, அந்த ஷெட்டிலேயே போட்டோம். காரை வெளியே எடுத்தோம்.
`ரொம்ப நாட்களாக இந்த ஒர்க் ஷாப் மூடிக்கிடக்கிறது. நேற்று இரவுதான் நான் வந்து இதன் பூட்டை உடைத்து திறந்தேன்’ என்று கூறி, ஷட்டரை இழுத்து மூடினான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் டெபிட் கார்டை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்தோம்.
அந்த பெண்மணி விதவை. தனியாக வசித்து வந்தார். திருமணமான அவரது மகன் அரசு வேலை பார்க்கிறார். அவர் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார். அவர் தினமும் இருமுறை அம்மாவுக்கு போன் செய்யும் வழக்கத்தை கொண்டவராக இருந்திருக்கிறார். வழக்கம்போல் காலையில் அவர் தனது அம்மாவுக்கு போன் செய்தபோது அவர், `நான் கோவிலில் வைத்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட நிறை மாத கர்ப்பிணியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மதியம் திரும்பிவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
இரவு வரை தாயாருக்கு அவர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதாலும், வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர் போலீசில் புகார்செய்துவிட்டார். நான் பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
மகனின் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் போய் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் என்னை பற்றிய முழு விபரத்தையும் தெரிவித்துவிட்டார்கள். நான் பிரசவித்த இரண்டாவது நாளில் போலீசார் என்னை மருத்துவமனையிலேயே கைதுசெய்தார்கள். எனது குழந்தை இறந்து பிறந்தது. அதுவும் நல்லதுக்குதான். இல்லாவிட்டால் என்னோடு அதுவும் ஜெயில் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கும்.
அந்த பெண்மணியின் உடலை நான்தான் காட்டிக்கொடுத்தேன். என் காதலனையும் காட்டிக்கொடுத்தேன். அவன் செய்த இதர கொலைகளை பற்றி எனக்கு தெரியாது. அந்த உடல்களை என்ன செய்தான் என்பதும் தெரியாது. தண்டனை காலம் முடிந்து நான் வெளியே செல்லவேண்டும். எனக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்கிறாள், சந்தியா.
ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் பெண்களுக்கு பேராபத்து இருக்கிறது. அதனால் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி ஒருபோதும் அவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது. அறிமுகமற்றவர்களுடன் நெருங்கவும் கூடாது.
மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா லொஸ் அஞ்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் தாய் ஒருவர் தனது மூன்று
பிள்ளைகளை மிக கோரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த தினம் காலை ஒன்பது முப்பது மணியளவில் இந்த படுகொலையை வெறியாட்டத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
,கைது செய்ய பட்ட தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் நீதி விசாரணைக்கும் அவர் உட்படுத்த பட்டுளளார் ,
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
இலங்கை தலைநகர் கொலும்பை அண்மித்த கல்கிஸை காலி வீதியில் வீடொன்றுக்கு அருகில் இருபத்தி
இரண்டு வயது வாலிபன் ஒருவர் கழுத்து வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இது படுகொலை
என தெரிவிக்க படுகிறது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கோட்டா ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் இவ்வாறான மர்ம கொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே கவனிக்க தக்கது
ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை
அமெரிக்கா suburban Dallas பகுதியில் ஒரே வீட்டுக்குள் ஆறு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்
,18 வயது மதிக்க தக்க சகோதரர் , தாய்,தந்தை,பாட்டி,இவர்களை கொலை செய்து பின்னர் இருவரும் தற்கொலை புரிந்துள்ளனர்
குறித்த நபர்கள் சடலம் குறித்த வீட்டுக்குள் ஒருவாரமாக அழுகிய நிலையில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இந்த அதிர்ச்சிகர படுகொலைக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,கொரனோ
காலத்தில் மன அழுத்தம் காரணாமாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்
19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கலேவெல பகுதியில் 19 வயது இளம் பெ ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்
யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்
யாழ்ப்பாணத்தில் போலீசார் ஒருவருக்கும் வாலிபன் ஒருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது
இதன் பொழுது காவல்துரை சிப்பாயின் கை விரலைகடித்து குத்தறியுள்ளான்
பலத்த காய் காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்
போனெட் இல்லாது கார் ஓடி சென்ற நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
போனெட் இல்லாது கார் ஓடி சென்ற நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
பிரிட்டனில் Great Yarmouth, Norfolk பகுதியில் சாரதி ஒருவர் தனது சிறிய ரக கார் ஒன்றினை போனெட்
இன்றி ஒட்டி சென்றுள்ளார் ,இதனை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலை அடுத்து .அவரை துரத்திய போலீசார் மடக்கி பிடித்தனர்
சாலையோர ,மக்கள் பாதுகாப்பை கருதி இவ்விதம் வண்டிகள் செலுத்திட தடைகள் விதிக்க
பட்டுள்ளது ,அவ்விதமான விதிகளை மீறி இவர் இவ்விதம் செலுத்தியுள்ளது குறிப்பிட தக்கது,குசும்புக்கார சாரதி தான் போங்க
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஈரான் அமெரிக்கா கடலில் போர்

- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் கிழக்கு சிட்டி பகுதியில் அதிவேக சாலை அருகே பிள்ளைகள் முன்பாக தாயை
கட்டிவைத்து கற்பழித்த இருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நீதிமன்ற விசாரணைகளில் இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
இவர்கள் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டு கொலை செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
இலங்கையில் 73 வயது பாட்டியுடன் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் காமுகனால் கற்பழிக்க பட்டுளளார்
சம்பவ தினம் அன்று பாட்டியை கட்டி போட்டு விட்டு சிறுமியை தனது இச்சை தீரும் வரை கற்பழித்ததுள்ளான் ,
தனது வேட்டை முடிந்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார்
மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை தேடி கண்டு பிடிக்கும் பணியில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .குறித்த செயலை புரிந்தவர் திருமணமானவர் என்பது குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்
கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்
இலங்கை கிளிநொச்சி ,வட்டக்கச்சி பகுதியில் கிண்று ஒன்றுக்குள் மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் வீசி எறிந்து ,தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்
இரண்டு,ஐந்து,எட்டுவயதுடைய மூன்று குழந்தைகளை குளற்றில் தள்ளி மூழ்கடித்த பின்ன தாயார் தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்
இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .
சிசு ஒன்றினது சடலம் மட்டும் இதுவரை மீட்க பட்டுள்ளது
ஏனைய மூவரது சடலங்களையு தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,
சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
சூட்கேசில் பெண்ணின் சடலம் – கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
கொழும்பு டாம் வீதியில் முப்பது வயது மதிக்க தக்க பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டு சூட்கேசில் அடைத்து வைக்க பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,
குறித்த சூட்கேசில் பெண்ணை கொலை செய்து அடைத்து எடுத்து சென்ற நபர் தற்போது தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பெண்ணை கொன்று கொடூரமாக சூட்கேசில் அடைத்து வீசிய கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் தீவிர விசாரணையில் சிறப்பு போலீஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர் .
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம் மிரட்டும் கொலைகள்
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்
குறித்த இளம் பெண் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை .
இலங்கை தலைநகரில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்க பட்ட மேற்படி சம்பவ உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .
சிறுவர் கடத்தல்
இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,
பொலிசார் சுற்றிவளைப்பு
விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்
சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்
மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்






