கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

Spread the love

கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

தேர்வு எழுதச் சென்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.

கேரளாவில் கொடூரம்: கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார்.

இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி

வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார்.

இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,

இதேபோன்ற சம்பவத்தால் சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply