Posted in இலங்கை செய்திகள்

புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?

புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?

இலங்கையில் சிங்கள பவுத்த இனவாதிகள் நடத்திய அடக்குமுறை காரணமாக புலிகள் ஆயுத வழிக்கு செல்ல நேரிட்டது ,அதனை வடிவமைத்து வழங்கியது சிங்கள அரசுகளே .

அதன் தோற்றத்தின் பின்னால் எழுந்து விரிந்த ஆயுத போராட்டத்தின் பயனாக ,உருவாக்க பெற்றதே தமிழ் தேசிய கூட்டமைப்பு .

அந்த கூட்டமைப்பை புலிகள் ஆயுதம் வைத்திருக்கும் பொழுதே அதே புலிகளினாலே ,சிங்கள அரசுகளுக்கு வால்பிடித்து சகோதர

படுகொலைகளை நடத்திய தமிழ் குழுக்கள் ஒன்று இணைக்க பட்டு உருவாக்க பட்டது .

புலிகளினால் அவர்கள் மன்னிக்க பட்டு ,ஒன்று பட்டு செயல் ஆற்ற அழைக்க பட்டனர்


அவ்விதம் உருவான கூட்டமைப்பு தலைவராக சம்பந்தன் நியமிக்க பட்டார் .

அவ்வேளை சுமந்திரன் சிங்கள பால்குடித்து திரிந்தார் .அப்போது புலிகள் தொடர்பாக இந்த சிங்கள பால்குடி சுமந்திரன் எதுவும் பேசவிலை

இப்பொழுது தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப் போவதாகவும் ,அதனை இவர் வென்றிட போவதுமாக குறிப்பிடுகின்றார் .

இதே சில மாதங்களுக்கு முன்னர் புலிகளினால் ஆயுதம் மூலம் பெறமுடியாத தீர்வை நாம் எப்படி பெற முடியும் என இதே சூத்து மாத்து சுமந்திரன் தெரிவித்தார் .

அப்படி என்றால் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயலுடனேயே சுமந்திரன் சம்பந்தர் அலைகின்றனர்

அரசு வழங்கிய முப்பது கோடிரூபா ஆடம்பர மாளிகையில் சுகம் அனுபவிக்கும் சம்பந்தர் ,அவருக்கு செல்ல பிள்ளையாக அவரை

சிங்களத்திடம் உதவிகள் பெற்று கொடுக்கும் சுமந்திரன் உள்ள போது
என்ன செய்திட முடியும் …?

இப்பொழுது மானமுள்ள தமிழர்கள் இந்த கூட்டமைப்பை ஒருமுறை தோற்கடியுங்கள் அதன் பின்னரே இவர்கள் செயல்பாடுகள் தெரிய வரும்

சுமந்திரன் ,சம்பந்தன் போட்டியிடும் பகுதிகளில் அவர்களை முற்றாக தோற்கடிக்க வேண்டு அப்பொழுதே தமிழர்கள் தமது

செயல் இலக்கு நோக்கி நகர முடியும், தவறின் இந்த சுமந்திரன் ,சம்பந்தர் தமிழர்களை முட்டாளாக்கி நகர்வதை எவராலும் தடுத்திட முடியாது

இவ்வேளை ஒன்று பட்டு தமிழர்கள் எழுந்து செயல் பட வேண்டும் ,சுமந்திரன் ,சம்பந்தர் ஆகியோரை தோற்கடிப்பதன் ஊடாகவே


எமது இறைமையை காப்பாற்றி கொள்ள முடியும் ..தமிழர்களே நீங்கள் தயாரா ..? தோற்கடிப்போம் இந்த கயவர்களை .

      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்

      கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்

      இலங்கை கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் ஊந்துருளியில் வீடு திரும்பி

      கொண்டிருந்த நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 38 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்

      கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தொடர் படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இருபதாவது படு கொலை இதுவாக பதிய பெற்றுள்ளது
      குறிப்பிட தக்கது

      எவ்வாறு இந்த கொலைகள் இடம்பெறுகின்றன …? இதன் பின்புலத்தில் உள்ளது யார் ..?

      கொலையாளிகள் எவ்வாறு தப்புகின்றனர் ,..?இந்தகேள்விகளுக்கும் எவரிடத்திலும் பதில் இல்லை

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

          இலங்கை தமிழர் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து செல்கிறது ,


          தம்மை ஒரு விடுதலைக்காக போராடும் நபர்கள் போல காட்டி கொள்ளும் இந்த காவாலி ரவுடிகள் பணம் பறித்தல் ,மற்றும் கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்

          இவ்வாறு தமது பங்கு பிறிப்பதில் ஏற் பட்ட தகராறு கரணமாக, தமது அணியினர் செய்த கடத்தல் ,

          மற்றும் கொலைகள் என்பன தொடர்பான விடயங்களை எதிர் அணிக்கு காட்டி கொடுத்து விடுவதால் இந்த குழுவுக்குள் உள்ளக மோதல் சண்டை இடம்பெற்றுள்ளன

          நெல்லியடியில் இடம்பெற்ற படுகொலையும் இவ்விதமே இடம்பெற்றுள்ளது .பொலிசாரின் ஆதரவுடன் குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டார் ,

          சிலர் வெட்டியும் ,வீதி விபத்தில் கொலை செய்ய பட்ட நிலையிலும் கொலைகள் இடம்பெற்றுள்ளன

          சிலர் கொன்று பின்னர் மரங்களில் தூக்கில் தொங்க விட பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன
          ,இந்த கஞ்சா ரவுடி வாள் வெட்டு குழுக்கள் மோதல்கள் ,

          அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது ,.சிங்கள போலீசாரும் இவர்களுடன் இனைந்து செயல் படுவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது

          இந்த குழுக்களை அழித்திட புலிகள் தான் வரவேண்டும் என மக்கள் மூணு முணுப்பது அங்காங்கே தொடர்கிறது .

          வாள்வெட்டு குழுக்களுக்குள்
          வாள்வெட்டு குழுக்களுக்குள்
              Posted in இலங்கை செய்திகள்

              சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !

              சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !

              எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்

              செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ

              அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப்புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் அவர்கள் எச்சிரித்துள்ளார்;.

              இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கருத்துப்பதிவில்,
              சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

              அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இயங்கியவன்

              என்ற வகையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையிலும் எதிர்வினையாற்றுவது அவசியம் என உணர்கிறேன்.

              திரு சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்

              செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருகின்றதொரு பின்னணியிலேயே இவர் வழங்கிய செவ்வியினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக

              உள்ளோம். மேலும் இச் செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் உட்பட பல்வேறு குளறுபடியான தகவல்கள்

              உள்ளதனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது வரலாற்றினைத் திருத்தியெழுதும் ( Revisionism) ஓர் ஆபத்து மிக்க முயற்சியாகவே எமக்குத் தென்படுகிறது.

              இச் செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை சுமந்திரன் நிராகரித்திருக்கிறார். தமிழ் மக்களின் தேசிய அரசியலைப் பிரிதிநிதித்துவப் படுத்துவதாகச்

              சொல்லும் எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப்;புலிகள் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டமானது

              சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கிய எதிர்வினை

              என்பதனைப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் செயற்படுவதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். இங்கு தனிப்பட்ட கருத்து என்பதற்கு இடமேதுமில்லை. இதனை ஏற்றுக்

              கொள்ள முடியாவிடின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே சிறந்தது.

              மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரித்ததை அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல

              என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறியுள்ளதுடன் சுமந்திரனின் கூற்றுப்பற்றிக் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர். கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக

              உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அவ் உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது ‘கட்சிக்கும்

              அதற்கும் தொடர்பில்லை’ என மட்டும் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் இவ்வாறான சறுக்கல்களை

              ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், இவற்றுக்கும் அப்பாற்பட்ட அரசியல் நாகரீகம் ஒன்றினை எம்மிடையே

              வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதனையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்.

              நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சுமந்திரன் இப் பேட்டியில்

              தெரிவித்துள்ளார். 2017 ஆண்டில் தாயகத் தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதனை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை

              அடித்தளமாகக் கொண்டு தாயகத்தில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் அழைப்பொன்றினை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம்.

              அவ் அழைப்பு சுமந்திரன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்து இரண்டொரு நாட்களில் மீளத் தொடர்பு கொள்வதாகக் கூறி நாடுகடந்த தமிழீழ

              அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடர்பான ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர்களது கருத்துக்கள்

              உள்வாங்கப்பட்டு செய்தி ஒன்று அனுப்பவுள்ளதாக ஒருங்கிணைப்பாளருக்கு அறிவித்திருந்தார்கள். அப்படியே செய்தி கிடைக்கப்பெற்று அதனை அமர்வின்போது அவையில் நாம்

              வாசித்திருந்தோம். மேற்கூறிய அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால்

              அனுப்பியிருந்தார்களே தவிர அவ் அழைப்பு சுமந்திரனுக்கு மட்டும் தனித்து அனுப்பப்பட்ட அழைப்பல்ல என்பதையும் இவ் விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

              இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளாததிற்கான காரணம் சர்வதேச சட்டங்களுக்கோ அன்றி தார்மீகக் கோட்பாடுகளுக்கோ அது முரணானது என்பதால்

              அல்ல. மாறாக இன்றைய உலக ஒழுங்கில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் பூகோள ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும், சர்வதேச சட்டங்களை

              உரியவகையில் கையாளுதல் மூலமாகவும், உலகத் தமிழ் மக்கள் பலத்தின் ஊடாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

              இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தினை நிராகரிப்போர் எவரதும் அரசியல்

              குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள

              விரும்புகிறேன் என வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சுமந்திரனே நஞ்சு குடித்து செத்து போ – வறுத்தெடுத்த தமிழ் பெண் -video

                  சுமந்திரனே நஞ்சு குடித்து செத்து போ – வறுத்தெடுத்த தமிழ் பெண் -video

                  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ,அரசியல் தர்க்த்தை செருப்பால் அடித்த தமிழ் பெண் ,

                  எனக்கு நீ சிங்களம் கற்பிக்காதே,வெட்கம் கெட்ட சுமந்திரன் ,சிங்கள அடி கழுவி பிழைக்கும் சம்பந்தர்,சுமந்திரனுக்கு செருப்படி

                  Posted in இலங்கை செய்திகள்

                  மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

                  மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

                  மலையகப் பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருவதாக எமது ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                  மண் சரிவு , பாறைகள் புரலும் அனர்த்த நிலை காணப்படுவதினால் அப்பிரதேசத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பொது

                  மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

                  இதேவேளை அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில்

                  அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

                  இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில்

                  சரிந்துள்ள மண்இ மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

                  மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

                  மலையகதில் கடும் மழை
                  மலையகதில் கடும் மழை
                      Posted in இலங்கை செய்திகள்

                      மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                      மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                      மட்டக்களப்பட்டு காத்தான் குடி பகுதியில்
                      இருபத்தி

                      ஒன்பது வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                      இரு குலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                      இவரது கைபேசிக்கு அழைத்த நபர்களை இவரை வீட்டின் பின்புறம் வருமாறு

                      அழைத்துள்ளனர் ,அங்கு சென்ற இவர் தலையில் வெட்ட பட்ட நிலையில் அவ்விடத்திலேயே பலியானார்

                      இவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற உறவினவர்கள் அவரது இறந்த உடலை மீட்டனர் ,


                      தமிழர் பகுதியில் இவ்வாறு 17 கொலைகள் இடம்பெற்றுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

                      வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

                      அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

                      பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

                      இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

                      மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

                      மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

                      வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

                      உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

                      வெலிக்கந்தையில் 21 வீடுகளை
                      வெலிக்கந்தையில் 21 வீடுகளை
                          Posted in இலங்கை செய்திகள்

                          புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

                          புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

                          சிங்கள கடற்படையினர் ஒன்பது பேர் தற் பொழுது புதிதாக கொரனோ

                          நோயினால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்

                          கடந்த தினம் அடையாளம் காணப் பட்ட பத்து பேரில் ஒன்பது கடற்படை

                          சிப்பாய்கள் என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்

                          இதுவரை இராணுவ தகவலின் பிரகாரம் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க

                          பட்டுள்ளனர் ,ஆனால் இழப்பு இதைவிட மூன்று மடங்கு அதிகம் என நம்ப படுகிறது

                          கடற்படையினர்
                          கடற்படையினர்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்

                          ஜப்பானில் தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானத்தில் இலங்கை வந்தனர்

                          யப்பன் நாட்டில் தவித்து கொண்டிருந்த 235 இலங்கையர்கள் ,இலங்கை

                          அரசுக்கு சொந்தமான எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

                          இவ்வாறு வருகை தந்தவர்கள் 14 நாள் தனிமை படுத்தலுக்கு பின்னரே

                          அவர் தம் குடும்பத்துடன் இணைத்து வைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுளள்து

                          Posted in இலங்கை செய்திகள்

                          பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

                          பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

                          மறு அறிவித்தல் வரை நாட்டை சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்

                          நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                          தற்போது கடற் பிரதேசத்தில் இருப்போர் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

                          தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.

                          அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி

                          திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக்

                          கொள்ளப்படுகிறீர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


                          நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

                          காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான

                          கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                          காற்று :
                          நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.


                          காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும்

                          ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது

                          மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                          கடல் நிலை:
                          நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை

                          ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் திணைக்களம் அறிவித்துள்ளது.

                          இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன்

                          அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மாற்றிட – கோட்டா உத்தரவு

                          பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மாற்றிட – கோட்டா உத்தரவு

                          பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை

                          தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

                          பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது

                          சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள்

                          அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

                          பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் மாலை ஜனாதிபதி

                          அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

                          பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போது

                          அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பல்கலைக்கழக

                          மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது ஒன்லைன் அதாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி

                          அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ‘ இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு

                          செல்கின்றது. பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி

                          பல்வகைப்படுத்தப்பட வேண்டும். தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா,

                          ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்’ என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு குறைந்த செலவில் புதிய கணினிப் பாகங்களை ஒன்றிணைக்கும் இயலுமை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

                          பல்கலைக்கழக பொறியியல் பீடம் உள்ளிட்ட இதுபோன்ற பாட அறிவுடன் கூடியவர்களுக்கு இதற்கு உதவ முடியும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் அனைத்து

                          மாணவர்களுக்கும் கணினியொன்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். உயர் தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் தகைமை பெறும்

                          அனைவருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய முன்னர் வீடுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வியை வழங்க

                          திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                          பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்

                          தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இம்முறை மாணவர் அனுமதி 7500 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

                          ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக ஆகியோர் உட்பட

                          பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

                          பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

                          இலங்கை கெக்கிராவை பகுதியில் கால்வாய் அருகில் உள்ள பற்றை ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

                          இலங்கையில் கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 17 படு கொலைகள் இடம்பெற்றுள்ளன


                          நாள் தோறும் இவ்விதம் மனித சடலங்கள் வீதிகள் ,கால்வாய்கள் ,பற்றைக்குள் இருந்து மீட்க பட்ட வண்ணமே உள்ளது

                          இலங்கையை உலுப்பும் இந்த படுகொலைகளின் பின்னால் சிவப்பு சால்வைகள் கரங்கள் இறுக படிந்துள்ளது .


                          மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி தமக்குள்ள அடிபணிய வைக்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                          மீண்டும் சொல்கிறோம் ஜே ஆர் காலத்தில் ஜேவிபியினரை கொன்று ஆறுகளில் ,பற்றைகள்,வீதி விபத்து என்ற போர்வையில் இடம்பெற்றது ,

                          அதேபோல இப்பொழுது இந்த கொலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
                          பாரளுமன்ற தேர்தலின் பின்னர் இவை மிக வேகமாக இடம்பெறும் என்பதை அடித்து கூறலாம்

                          Posted in இலங்கை செய்திகள்

                          சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

                          சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

                          இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திர விடுதலை

                          புலிகளுக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார் , அதன் ,தொடர்ச்சியாக தொடர்ந்து கோட்டபாயாவை வெல்ல வைக்கும்

                          முகமாகக பின் கதவு வழியாக உதவிகளை பெற்ற சுமந்திரன் ஆடுகளத்தை திறந்தார்

                          கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட சஜித்தை இவ்வாறு புலிகள்

                          வெறியை கிளப்பி சிங்கள மக்கள் ஆதரவினை பெற்றார்களோ அதே போன்று இம்முறையும் அதே பாணியில் ,தந்திர விளையாட்டை சுமந்திரன் ஊடாக ஆரம்பிக்க பட்டது

                          அவ்விதம் அதே சுமந்திரன் ,இவ்வாறு கருத்துக்களை கூறிய பொழுதெல்லாம் அதனை சரி என்றே கட்சி தலைவர் கிழட்டு சம்பந்தர் தெரிவித்து

                          வந்தார் ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுதும் அதனையே தெரிவித்துள்ளார்

                          எனவே தமிழ் மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் ,சம்பந்தன் சுமந்திரை தோற்கடிக்க வேண்டும் ,


                          சுமந்திரன் தொடர்பான கருத்தை கண்டித்து பேசிய சிறிதரன் நான்காம் மாடியில் சிக்க வைத்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

                          விரிவாக சொல்ல போனால் அவர் மிரட்ட பட்டு அவரது வாய்க்கு பூட்டு போட பட்டுள்ளது .


                          கோட்டாவின் காதில் சுமந்திரன் ஓத்திட அதே விளையாட்டு இடம்பெறுகிறது .

                          இவற்றோடு இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளையும் தொடர்பு படுத்தின தற்போது தமிழர் தேசத்தை மைய படுத்தி நகரும் பல்வேறு பட்ட விடயங்கள் வெளியில் தெரிய வரும்

                          சுமந்திரனை கண்டித்த
                          சுமந்திரனை கண்டித்த
                          Posted in இலங்கை செய்திகள்

                          தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

                          தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

                          இலங்கையில் கொரனோ நோயின் காரணமாக இராணுவத்தினரால்

                          கைது செய்யப்பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 180 பேர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர்

                          பிரிந்த தம் குடும்பத்தினருடன் மீள் இணைந்திட .
                          இராணுவ

                          விமான படை தளத்தில் தடுத்து வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

                          தடுத்து வைக்க பட்ட
                          தடுத்து வைக்க பட்ட
                          Posted in இலங்கை செய்திகள்

                          வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

                          வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

                          வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி

                          மூலமான சேவைகளை முன்னெடுப்பதில் இலங்கை அஞ்சல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

                          கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சேவைகளை மீண்டும் மேற்கொள்ளுவது தொடர்பாக தபால் மா

                          அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                          வெளிநாட்டு தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் வழி மூலம்.

                          கொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள்

                          நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.

                          தற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.

                          வெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு

                          இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில

                          நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

                          இலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு

                          (இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.

                          இதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின்

                          ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும்

                          கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம்

                          திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                          இதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ்

                          தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை

                          தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.
                          அதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும் , திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம்

                          இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

                          இதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                          இதற்கமைவாக பிரிட்டன் ,அமெரிக்கா , அவுஸ்திரேலியா ஜப்பான்

                          ,பிரான்ஸ், சிங்கப்பூர் ,இந்தியா ,மாலைத்தீவு, தென் ஆபிரிக்கர், கிரேக்கம், கனடா, ஹெங்கொங், டுபாய், போன்ற தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்காக மாத்திரம் கடல் வழி தபால்

                          சேவையின் மூலம் பொதிகள் மற்றும் கடிதங்களை அனுப்புவதற்காக நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்கள் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


                          ஹொங்கொங், டுபாய், மாலைத்தீவு போன்ற தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்காக கடிதம் மற்றும் பொதிகள் ஏற்றுக் கொள்ளும் பணி 2020ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன்

                          ஐக்கிய இராச்சியத்தின், அவுஸ்திரேலியா, ஜப்பான் , பிரான்ஸ் சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா மற்றும் கிரேக்கம் ஆகிய

                          தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் பணி மே மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும்.

                          அமெரிக்கா , மற்றும் கனடாவிற்காக பொறுப்பேற்கப்படும் இறுதி தினம் 2020 மே மாதம் 27ஆம் திகதியாவதுடன் இந்தியாவிற்காக

                          கடிதம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி 2020; மே மாதம் 28ஆம் திகதி ஆகும்.

                          கடல் வழிமூலம் வழமையான நிலைமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கான தபால் சேவையில் ;

                          வழமையான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஆகின்றன. உலகம் முழுதும் இடம்பெறும் அனர்த்த நிலைக்கு மத்தியில் இந்த கால வரையறை தொடர்ந்தும் நீடிப்பதற்கு

                          பெரும்பாலும் இடம்மிருப்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது..

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

                          யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

                          யாழ்ப்பாணம் வல்லைவெளி பகுதியில் இராணுவத்தினர் மீது கற்களை

                          எறிந்து விட்டு தப்பிக்க முயன்ற வாலிபர்கள் மீது இராணுவத்தினர்

                          துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்

                          இதில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                          இதில் இராணுவம் மேற்கொண்ட படுகொலை ,என் கவுண்டர் முயற்சியை

                          இவ்வாறு திரிவுபடுத்தி கூறுவதாக தெரிவிக்க படுகிறது

                          யாழில் மக்கள் மீது
                          யாழில் மக்கள் மீது
                          Posted in இலங்கை செய்திகள்

                          வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

                          வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

                          இலங்கை வன்னி பகுதியில் புனர்வாழ்வு பெற்று வசித்து வந்த மூன்று

                          அங்கவீன முற்ற போராளிகள் சிங்கள படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்

                          இவர்கள் புலிகளின் ஆயுதங்கள் ,மற்றும்ச சீருடைகள் வைத்திருந்தனர் என்ற குற்ற சாட்டில் வெள்ளை வானில் கடத்தி செல்ல பட்டுள்ளனர்

                          ஊரடங்கு வேளை வீடிற்கு சிவில் உடையில் வருகை தந்த சிங்கள இராணுவத்தினர்

                          இவர்களை கடத்தி சென்றுள்ளதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

                          உறவுகள் வெளியில் நடமாட முடியாத நிலையில் வீட்டுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளனர்

                          வெளியில் தெரியவராத நிலையில் கடத்தல்கள் ,மற்றும் கைதுகள் பரவலாக இடம்பெற்று வருகிறது


                          முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை முன் வைத்து போலி குற்ற சாட்டுக்களில் முன்னாள் போராளிக பழிவாங்க படுவதாக தெரிவிக்க படுகிறது

                          வெள்ளை வானில்
                          வெள்ளை வானில்
                          Posted in இலங்கை செய்திகள்

                          வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

                          வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்

                          இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழ் மக்களை மிக கோரமாக அழித்து

                          ஒழித்த சிங்கள இனவழிப்பு நாளினை ,முள்ளி வாய்க்கால் பகுதியில் நினைவு கூறுவது வழமை

                          கொடிய கொரனோ நோயின் காரணமாக மக்கள் வெளியில் நடமாட

                          ஊரடங்கு தடை விதிக்க பட்டுள்ளதால் ,இம்முறை அதனை நினைவு கூறிட தமிழர்கள் முயற்சிக்கவில்லை

                          ஆனால் இவ்வாறான போக்கினை காண்பித்து விட்டு மக்கள் முள்ளிவாய்க்கால்

                          பகுதியில் ஒன்று கூடுவார்கள் என்ற நிலையில் ,சிங்கள இராணுவம் ,மற்றும்

                          புலனாய்வு துறையினை முள்ளிவாய்க்கால் முதல் கிளிநொச்சி வரை சிறப்பு காவல் பணியில் ஈடு பட்டுள்ளனர்

                          தமிழர்கள் அத்துமீறி வெளியில் சென்றனர் என்ற போர்வையில் கைது

                          செய்திட சிங்களம் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன

                          வன்னி பகுதி எங்கும்
                          வன்னி பகுதி எங்கும்
                          Posted in இலங்கை செய்திகள்

                          சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

                          சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ

                          தமிழீழ தேசிய தலைவரை அவமதித்து பேசிய சுமந்திரனுக்கு எதிராக உலக தமிழர்கள் கொதித்துள்ளனர் .
                          அவரது பொம்மைக்கு செருப்பால் அடித்து ,தீயிட்டு கொளுத்தினர்

                          இவ்வாறு கொந்தளித்துள்ள மக்கள் முன்பாக இப்பொழுது சுமந்திரன் சிக்கினால்

                          சம்பல் தான் ,கூட்டமைப்பின் பலத்தை உடைத்து நாசம் செய்திட சுமந்திரன்

                          மூட்டி வைத்த தீ பற்றி எரிகிறது ,கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்து செல்வதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

                          சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் .சுமந்திரன்

                          ,சாந்தி , போன்றவர்களை முதலில் மக்களே வீட்டுக்கு அனுப்புங்கள் .இவர்கள் தான் மக்களின் வெறுப்பிற்குரியவ்ரகள்

                          சுமந்திரனுக்கு செருப்பால்
                          சுமந்திரனுக்கு செருப்பால்
                          https://www.youtube.com/watch?v=a-5f6b3BH3s