மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

Spread the love

மலையகதில் கடும் மழை , நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மண் சரிவு

மலையகப் பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருவதாக எமது ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண் சரிவு , பாறைகள் புரலும் அனர்த்த நிலை காணப்படுவதினால் அப்பிரதேசத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பொது

மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில்

அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில்

சரிந்துள்ள மண்இ மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

மலையகதில் கடும் மழை
மலையகதில் கடும் மழை

      Leave a Reply