Tag: tna
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.
ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.
இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18.06) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.
இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்சர்சைக்குரியவரும் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் கை
பொம்மையாகவும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராக செயல் பட்டு வரும் சின்ன கதிர்காமரான
சுமந்திரன் கனடாவிற்கு பயணம் செய்திருந்தார்
இவரது இந்த பயணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் பெரும் போராட்டம் ஒன்றை
நடத்தியதுடன் ,கூட்டி குடுங்கடா சுமந்திரனுக்கு என்ற வார்த்தைகளை ,ஆண் பெண்கள் கோசமாக
முழங்கியதுடன் ,மேலும் கெட்ட வார்த்தைகள் ஊடக அவரை திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிங்கள பால் குடித்து வளர்ந்தவர் தான் என சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ
சுமந்திரனுக்கு செருப்பால் அடித்து எரித்த மக்கள் – கொந்தளிப்பில் தமிழர் – வீடியோ
தமிழீழ தேசிய தலைவரை அவமதித்து பேசிய சுமந்திரனுக்கு எதிராக உலக தமிழர்கள் கொதித்துள்ளனர் .
அவரது பொம்மைக்கு செருப்பால் அடித்து ,தீயிட்டு கொளுத்தினர்
இவ்வாறு கொந்தளித்துள்ள மக்கள் முன்பாக இப்பொழுது சுமந்திரன் சிக்கினால்
சம்பல் தான் ,கூட்டமைப்பின் பலத்தை உடைத்து நாசம் செய்திட சுமந்திரன்
மூட்டி வைத்த தீ பற்றி எரிகிறது ,கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்து செல்வதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் .சுமந்திரன்
,சாந்தி , போன்றவர்களை முதலில் மக்களே வீட்டுக்கு அனுப்புங்கள் .இவர்கள் தான் மக்களின் வெறுப்பிற்குரியவ்ரகள்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் – இறுதி போரின் பொழுது இடம்பெற்றது ஒரு இன படுகொலையையே என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி சிவா மோகன்
அவர்கள் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தற்பொழுது இடம்பெற்று
கொண்டிருக்கும் கலை மாலை நிகழ்வில் சிறப்பு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுதே இந்த
விடயத்தை தெளிந்த பார்வையுடனும் ,உள்ளார்ந்த மன குமுறலுடனும் பகிர்ந்து கொண்டார் .
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இந்த நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் இவர் ஆற்றிய ,இந்த உரைக்கு பலத்த கரகோஷமும் ,வர வேற்பும் கிடைத்தது
புதுக்குடியிருப்பு மக்களோடு மக்களாக நின்று இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது ,பல இராணுவ
அச்சறுத்தல்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுடன் நின்று தனது சமுக பணியை ஆற்றி வருகின்றார் .
இவரை நேரில் பல மக்கள் சந்தித்து,மகிழ்வுற்று , தமது எண்ண கருத்துக்களை பரிமாறி கொண்டதை காண முடிந்தது .
இலங்கையில் இடப்பெற்றது ஒரு இனப்படுகொலையே என
சிறிதரன் எம்பியும் இவரை போன்றே தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .
சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்
சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.
1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது.
அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை
அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது.
எம்.ஏ.சுமந்திரன் அவர்கள தனது கூற்றை உண்மையாக நம்பினால், சிறிலங்காவின் அரசமைப்பில் உள்ள ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கச் சொல்லிவிட்டு, தமிழர்களின்
இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக பொது வாக்கெடுப்புக்கை நோக்கி உழைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற வரும்
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் தமிழீழத்தான்.
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல்
இருப்பதற்கான காரணங்களாக, 2009க்கு முன்னர் இருந்த பலம் தற்பேர் இல்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.
சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான
பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் -கூட்டமைப்பின் தலைவராகிறார்
கூட்டமைப்பின் தலைவராகிறார் – சுமந்திரன் –
இலங்கையில் தமிழர்களின் நலன் காக்கும் அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்பொழுது தமிழர் தாய்
மொழியைஅவர் தம் அரசியலை பேசியபடி சிங்கள வர்க்கத்திற்கு அடிகழுவி பிழைக்கும் நிலைக்கு மாறியுள்ளது .
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி சட்ட தரணியாகி பதவி ஏற்றார்சுமந்திரன் ,அவர்கள் ஆட்சியில் நூறு நாள் திட்டத்தில் தீர்வு மேற்கொள்ள படும் என அறிவிக்க பட்டது .
ஆனால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வையும் இந்த கூட்டமைப்பு கூலிகளை பெற்று தரவில்லை
இவர்கள் இந்த போக்கின் காரணமாக கூட்டமைப்பிற் குள்ளே உள்வீட்டு சண்டை உக்கிரம் பெற்றது .
தற்போது அது மீளவும் முழுமை பெற்று உக்கிரம் பெற்றுள்ளது .
மாவை சம்பந்தருக்கு அடுத்த நிலை தலைவராக வருவார் என்ற நிலை இருந்தது ,ஆனால் அது தவிடு பொடியாக
நேற்று முளைத்த சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உருவாக்கம் பெறுகிறார் .
இத்துடன் கூட்டணி கூட்டமைப்பு உடைந்து சிதறும் நிலையில் உள்ளது .
மகிந்தவின் ஆட்டம் இதன் ஊடாக முழுமை பெறுகிறது ,அதற்கு நாரதர் சுமந்திரன்புதைகுழியாக மாற்றம் பெற்றுள்ளார்









