Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை
காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை கோரியிருந்தார்.
அந்த கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதிகளான ராஜா, புகழேந்தி அமர்வு விசாரணைக்கு உட்படுத்தியது.
இதன்போது அவருக்கு இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அதாவது 15 நாட்களுக் சாதாரண பிணை வழங்கி நீதிபதிகள் உத்தவிட்டனர்.
இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அவர் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
இதனை அடிப்படையாக கொண்டே அவருக்கு மீண்டும் 15 நாட்கள் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் அவருக்கு பிணை வழங்குவதில்
ஆட்சேபனை இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு
இதே குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் அண்மையில் ஒரு மாத பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது ராஜீவ் காந்தி கொலை வழக்கு
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் முனை வீதியில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வர்த்தக
நிலையம் ஒன்றின் அனுமதியற்ற பகுதிகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் க. சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
17-11-2015 ஆம் ஆண்டு குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள
பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு அமைய கடந்த 18-02-2019 ஆம் ஆண்டு குறித்த கட்டிட பகுதிகளை அகற்றுவதற்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கியது.
இருந்த போதிலும் அந்த கட்டிட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக
மேற்கொண்டிருந்தார். எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால்
குறித்த கட்டிடத்தின் பகுதிகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த வாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு
அதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் கட்டிடங்கள் இடிப்பு
மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் க. சித்திரவேல் தெரிவித்தார்.கட்டிடங்கள் இடிப்பு

குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – திருமதி சாள்ஸ்
இலங்கையில் -குறட்டை விடும் வடக்கு ஆளுநர் –
இலங்கையில் முதலாவது வடக்கு பெண் ஆளுநராக திருமதி சாள்ஸ் தெரிவு செய்யப்பட்டார் .
கோட்டாவின் பொம்மை என முன்னரே நாம் தெரிவித்து இருந்தோம் ,அதற்கு இசைந்தால் போல பதவியை ஏற்ற
அவர் அதிரடி நகர்வுகளை மேற்கொள்வார் என உலக தமிழ் சமுதாயம் எதிர்பார்த்திருந்ததது .
ஆனால் அவரோகுறட்டை விடுகிறார் .சாவகச்சேரி ,கொடிகாமம் மருத்துவ மனைகளில் வைத்தியர்கள் ,தாதிமார்கள் பெரும் அடாவடியில் ஈடுபாடுவதுடன்
நோயாளர்கள் மீது எரிந்து வீழ்ந்து அவர்களை திட்டுவதாக பாதிக்க பட்டவர்கள் கவலையோடும் கண்ணீரோடும் தெரிவித்தனர் .
சுகாதர அமைச்சராக விளங்கியதாக தெரிவித்த அம்மையார் ,தற்போது குறித்த மருத்துவமனைகள் மீது
மக்கள் வைத்துள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பாக .
நேரடியாக சென்று ஆராய மறுத்து விட்டார் .
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவின் வலது கையாக செயல் படும் கொடிகாம பொறுப்பு மருத்துவர் பெரும் இன்னல்களை புரிகிறார் ,
இதனை தட்டி கேட்கவும் உரிய நடவடிகை மேற்கொண்டு மக்கள் பணியினை செய்வதை தவிர்த்து அமைதி காப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தான் வாழ்ந்த கிராமத்துக்கும் ,அந்த மாவட்டத்திற்கும் சிறந்த பணியினை துணிந்து ஆற்றுவேன் என முழக்கமிட்ட
அம்மையார் காணமல் போய் விட்டாரா என மக்கள் நகைக்கின்றனர் .குறட்டை விடும் வடக்கு ஆளுநர்
வெள்ளத்தால் பாதிக்க பட்ட வன்னி மக்கள் புலம்பல்
வெள்ளத்தால் பாதிக்க பட்ட வன்னி மக்கள் புலம்பல்
இலங்கை – வன்னி கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள இரணைமடு குளம் வான் கதவுகள் திறந்து விட பட்ட நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது .
இதன் பொழுது அங்கு ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிவாரணங்கள் ,மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கு
அரசிடம் இருந்து உரிய உதவிகள் வந்து சேரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
ஆனால் அரசோ பல மில்லியன் ரூபாய்களை வெள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது .
அப்படியானால் ஒதுக்க பட்ட நிதி எங்கே என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர் .

பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
இலங்கை -பசறை பகுதியில் அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில்
அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட பண்ணி ரெண்டு பேர் பலியாகினர் ,மேலும் முப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த விபத்தில் சிக்கிய பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

136 வெளிநாட்டவர் கைது
செல்லுபடியான விசா இன்றி இங்கு தங்கியிருந்த 136 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய 5 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 6.00 மணி
வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரஜை 82 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 12 பேரும், மாலைதீவைச் சேர்ந்த 10 பேரும், நைஜீரியா நாட்டவர் 8
பேரும், பங்களாதேஷ் நாட்டவர் 6 பேரும், சீனாவைச் சேர்ந்த 4 பேரும், கனடாவை சேர்ந்த 4 பேரும் அடங்கலாக மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த தினங்களில் 13 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பொலிஸார் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
இலங்கையில் கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – வீழ்ந்தது ஆப்பு
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பபதவியேற்றுள்ள இலங்கை ஹிட்லர் கோட்டபாய
ராஜபக்சயா நாள் தோறும் புதிய அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார் . .
இலங்கை லஞ்சம் ,ஊழல் அற்ற நாடாக மலரவேண்டும் என்ற கோட் பாட்டை அவர் முன்வைத்துள்ளார் .
அதற்கு அமைவாக இன்றில் இருந்து இலங்கையில் ஆட்டோக்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க படுகிறது ,
மேலும் சாரதி அனுமதி பத்திரங்கள் பெறுபவர்கள் மருத்துவ சான்றிதழ் கண்ணபிக்க படவேண்டும்
தொடர்ந்து ஜனாதிபதியாக போட்டியிடும் நபர் ஒருவித வாக்குகள் பெற்றால் அவர் ஒரு கோடி அபராதம் செலுத்த வேண்டும் ,
மேலும் பகிடி வதைகள் இடம்பெற்றால் எட்டு வரும் கல்வி பயிலத்தடை ,வீதி போக்குவரத்து காவல்துறையினரை புதிதாக நியமிக்க பட்ட இரகசிய காவல்துறையினர் கண் காணிப்பார்கள்
இவர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்ற சாட்டு உள்ளது .எனவே இவர்களுக்கு லஞ்சம் வழங்கும் நபர்களாக இந்த இரகசிய போலீசாரே செயல் .படலாம்
, அவ்வாறு லஞ்ச பெற்றால் போலீசாரை இரு நாட்களில் பணி நீக்கம் செய்ய படுவார் இதே போலவே
கோட்டா ஆட்டத்தை ஆரம்பிதர் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
பாட சாலைகளிலும் ஆசிரியர்கள் லஞ்சம் பெற்றால் அவர்களுக்கும் இதே நிலை
என மக்களை ஒழுங்கு படுத்தும் ,வெள்ளையர்கள் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் போல கோட்டபாய கொண்டு வந்துள்ளார் .
இது நாம் தமிழர் சீமானை காப்பி அடித்து கோட்டா வெளியிடுவதாக தெரிகிறது ,எனினும் இது வரவேற்க பட கூடிய ஒன்றாக உள்ளது .
லஞ்சத்தில் ஊதி பெருத்த சிங்களவர்கள் கோட்டபாய போடும் இந்த அதிரடி உத்தரவுகளிற்கு அடிபணிந்து செல்வார்களா …?
அல்லது இவரது ஆட்சியை கலைக்க முறைப்படுவார்களா ….?
லிபியாவின் கடாபி போல இலங்கையை மேலும் இருபது ஆண்டுகள் ஆண்டுவிட மகிந்த தரப்பு முனைவதை இந்த செயல் பாடுகள் எடுத்து காட்டுகின்றன .
எனினும் இந்த சர்வாதிகார போக்கு நாப்பது ஆண்டுகள் நோக்கி பயணிக்கும் எனின் உலக சண்டியர் அமெரிக்கா
தென் ஆசியாவிற்குள் ஊடுருவும் நாளை எதிர்பார்த்து கொண்டுள்ளது .
இந்த வேளையில் தமிழர்கள் பிரச்னை மீளவும் ஊந்தி தள்ள பட்டு இலங்கை ஒரு சுடுகாடாக மாற்றம் பெறும் நிலை உருவாகலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது .
நகர்ந்து செல்லும் காலங்கள் பல எதிர்மறை மாற்றங்களை இலங்கை,மற்றும் இலங்கை பிராந்தியத்தை சுற்றி வளைக்க போகிறது .
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் ஊன்றிய நிலையில் அமெரிக்கா சீனா ,போர் இலங்கையில் இருந்து வெடிக்கும் சூழல் உள்ளது .
இதற்கு தமிழர்கள் தள்ள பட போகின்றனர் ,ஆம் அமெரிக்கா இலங்கைக்குள் காலடி வைத்தால் அவனை அகற்ற முடியாது என்பதற்கு ஈராக் ஒரு எடுத்து காட்டாக உள்ளது .
தமிழர் பிரச்சனைக்கு தீர்வை கண்டு ஆளும் இலங்கை அரசு செல்ல வேண்டும் தவறின் அமெரிக்கா சார்பு மேற்குலக
நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதும் ,சீனா இந்தியாவுக்கும் எதிராக அவர்கள் களம் திரும்புவதும் தடுத்துவிட முடியாது
இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இதனை சிந்திப்பார்களா …? ஈராக்,ஈரான் எதிரி நாடுகள் இன்று இவ்வாறு ஒன்றிணைந்தன .? இதற்கு காரணம் என்ன ..?
பவுத்த மத வெறியை தகர்த்தி முரண்பாடுகளை தீர்த்து வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் ஆபத்தை தனித்து ,
இணைந்த இலங்கைக்குள் இரு இனங்களும் நின்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் .
இல்லாது விடின் மீளவும் இலங்கையில் முஸ்லீம்கள் பெயரால் பெரும் அழிவுகள் நடத்த படும் .பயங்கரவாதம் என்ற
போர்வையில் மீளவும் இலங்கையில் போர்க்களம் ஆகும் .இதனை எதிர்வரும் காலங்கள் வரலாறாக பதிய பெற போகின்றன .
அதற்குரிய ஆடுகளம் இப்பொழுது மலர்கிறது ,உஷாராகுமா …? இந்தியா ,இலங்கை ..?
பிராந்திய நலனை பாதுகாக்குமா ..? video
- வன்னி மைந்தன் –
கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு photo
தமிழகத்தில் -கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு*
……………………………………………..
கன்னட கொடி தமிழ்நாட்டில் அவமதிக்கப்பட்டதாக
கன்னட இனவெறி அமைப்புகள் கருநாடகாவில் சமூக ஊடகங்களிலும்
தொலைக்காட்சிகளிலும் செய்தியை பரப்பி
கர்நாடகாவில் இருக்கும் தமிழ்நாடு சுமையுந்து ஓட்டுனர்களை அவமதித்து அதை காணொலியாகவும் பரப்பினர்.
அதை தொடர்ந்து இன்று பேரணியாக தமிழ்நாடு எல்லை ஒசூரில் நுழைய திட்டமிட்டு வந்தனர்.
வருபவர்களை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி,
தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் திரளாக எல்லைக்கு சென்றனர்.
தமிழ்நாடு எல்லையில் தமிழக காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டனர்.
கருநாடகாவில் பேரணியாக வந்த கன்னட இனவெறியினர்
கன்னட காவல்துறையால் கைது செய்யப்படாமல் ,
கருநாடக எல்லையில் சாலையில் சாமியானா
அமைக்கப்பட்டு விருந்தினரை போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்யாமல் நாங்கள் திரும்பி செல்ல மாட்டோம் என தோழர்கள் முழக்கமிட்டனர்.
சிறிது நேரத்தில் கன்னட காவல்துறை கன்னட வெறி அமைப்பினரை கைது செய்து எல்லையில் இருந்து அப்புறப்படுத்தியது.
எல்லை போராட்டத்தில்
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ரீகன் தமிழ்மாறன்,
துணைத் தலைவர் தோழர் உதிரமாடன்,
தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர்
தோழர் செம்பரிதி,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் நடவரசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் அமைதியை குலைக்கும் வண்ணம் இது போன்ற செயல்கள், கன்னட வெறிஅமைப்புகளால்
கன்னட காவல்துறை ஒத்துழைப்போடு நடந்து வருகிறது.
நாம்தமிழர் போராளி பிழைகள் தமிழர் தேசிய புலிக்கொடியை தானாகி பிடித்தவாறும் ,தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் படத்தை தொழில் பதிந்தவரும் ,அவரது
படம் பொறித்த சால்வையை தோளில் போட்டவாறு நாடந்து செல்லும் வீர காட்சியை பார்வையிட்ட கன்னட வெறியர்கள் அதிர்ந்து போயினர் .
ராஜனினை சீமான் கடுமையாக சாடி வரும் நிலையில் ரஜனியின் தூண்டுதலில் இந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தமிழர்களாய் நாம் ஒன்றெழுந்து
இனக்காப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவோம்




பாட சாலைக்கு கணனி கையளிப்பு..
இலங்கையில் – பாடசாலைக்கு கணனி கையளிப்பு..
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய பாட சாலைக்கு கணனிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.


அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி
அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமானதாகுமா?
ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு.
மலையக தோட்ட புறங்களில் அதிகமாக தொழிலாளர்களாக இருப்பவர்கள் பெண்களே இந்த பெண்களுக்கே பிரச்சினைகள் அதிகம்.
இந் நிலையில் இந்த மலையக பெண்கள் சார்பில் அரசியலில் குரல் கொடுக்க மலையகத்தில் இருந்து ஒரு இளம் சட்டதரணி சிங்கப்பெண் அனுஷா சந்திரசேகரன்
அரசியலில் வருவது வரவேற்க்;கதக்க ஒன்றாகும். தற்போது இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந் நிலையில் இவர் அரசியலில் வருவதாக கூறியதை தூக்கி பிடித்துக் கொண்டு சில ஊடகங்களும் சமூக வளைதளங்களும் சமூக அமைப்புகளும் கருத்துகளை
முன்னுக்கு பின் முரணாக முன் வைத்து வருகின்றன. இதற்கு ஒரு சரியான விளக்கத்தை கொடுக்கும் வகையில்.
அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி
இவரின் அரசியல் பிரவேசம் குறித்து பலரிடம் வினவிய போது அவர்கள் வழங்கிய கருத்துக்களின் படி.
மலையக மக்கள் முன்னணி என்பது மலையகத்தில் இருந்த புரட்சியாளர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அவரின் மறைவிற்கு
பின்னர் இந்த கட்சியை அரசியல் ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்ல அவரது மனைவி உட்பட கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுத்த செயற்பாடுகள்
பின்னடைவை நோக்கியே சென்றது. இவ்வாறான நிலையிலேயே காலநிதி வே.இராதாகிருஸ்ணன் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடாத்த
தொடங்கினார். இதன் பயனாக பதுளையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவாவதற்கும் மத்திய மாகாண சபையில் ஆர்.ராஜாராம் தெரிவாவதற்கும்
உள்ளுராட்சி சபைகளில் 31 உறுப்பினர்கள் தெரிவாவதற்கும் காலநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் தொடர்ந்து விஷேட
பிரதேசங்களுக்கான அமைச்சராக செயற்;படுவதற்கும் காரணமாக இருந்துள்ளது. திருமதி பெ. சந்திரசேகரன் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த கட்சியின் அபிவிருத்தியில் பல மூத்த உறுப்பினர்களும் அங்கத்தினரும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். இந்த கட்சி மலையகத்தில் காணப்படும்
கட்சிகளில் இருந்து சற்று வேறுப்பட்டது. இதன் யாப்பு சட்டத்திட்டங்கள் திடகார்த்தமானது. அமரர் சந்திரசேகரன் இதனை முறையாக வடிவமைத்துள்ளார். இவரின் நோக்கு
யாருக்கும் சட்டம் பொதுவானது என்பதாகும்.
தொழிலாளர்களுக்கு என்று மலையக தொழிலாளர் முன்னணி செயற்படுகின்றது இதில் அங்கத்தினர் தோட்ட கமிட்டி வாழிபர் கமிட்டி மாதர் கமிட்டி தொடர்ந்து மத்திய
கமிட்டி உயர் கவுன்சில் ஆகியன செயற்படுகின்றது அரசியல் செயற்பாடுகளில் மலையக மக்கள் முன்னணியில் ஆரம்பமாக உறுப்பினர்கள் மத்திய குழு
அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி
உயர் கவுன்சில் ஆகியன செயற்படுகின்றன. இந்த உயர் கவுனிசிலில் படித்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களில் அனுஷா சந்திரசேகரனும் ஒருவர்.
இவ்வாறான நிலையில் அமரர் பெ. சந்திரசேகரின் மகளான அனுஷா சந்திரசேகரன் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்.
இவரை கட்சியில் இணைப்பதற்கு காரணமாக இருந்தது இவர் அமரர் பெ. சந்திரசேகரின் மகள் என்ற ஒரே காரணம் மட்டும் தான்.
இணைந்த உடன் கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு உதவி பொது செயலாளர் பதவியும் வழங்கி சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன.; உயர் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கின்றார்.
கட்சி காரியாலயத்தில் தனியான இட ஒதுக்கீடும் அமைச்சரின் அமைச்சின் உத்தியோகஸ்தர் பதவியும் வழங்கப்பட்டு வாகனமும் வழங்கப்பட்டது.
கட்சி செயற்பாடுகளில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கபட்டன. நிகழ்வுகளில் இவருக்குரிய இடமும் வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே பூகம்பம் வெடிக்கின்றது. இதற்கு காரணம் இன்னமும் சரியாக வெளிவரவில்லை.
அனுஷா கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை
முன்னெடுப்பதில்லை அங்கத்தினரை கூட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.
கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை. தனியாக செயற்பட தொடங்கிவிட்டார். முகபுத்தகங்களில் தனியான அறிக்கை ஊடகங்களுக்கு தனியான ஊடக அறிக்கைகள் கள
விஜயங்கள் தனியாக.; தான் பாராளுமன்றத்தில் போட்டி போடுகின்றேன் என்றும் கட்சியின் உயர் கவுனிசிலில் கேட்கவும் இல்லை.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று அறிக்கை விட்டு உள்ளார்.
இது கட்சியைமட்டுமல்லாது ஆதரவாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கட்சிக்கு வெளியில் உள்ளவர்களுக்கு இந்த விடயங்கள் தெரியாது. எந்த ஒரு விடயமானாலும் முதலில் கட்சியுடன் பேச வேண்டும் கட்சியின் முடிவுக்கு செவிசாய்க்க
வேண்டும் அப்பா உருவாக்கிய கட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் அவை ஒன்றும் நடைபெறவில்லை. தற்போது மலையக மக்கள் முன்னணி வருகின்ற பாராளுமன்ற
தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் களம் இறங்க உள்ளது.
இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கனவே பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் போட்டியிட உள்ளார்கள்.
இவ்வாறான நிலையிலேயே விகிதசார படி ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவரை வருகின்ற மாகாண சபை தேர்தலில் தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிட கட்சி முடிவுகளை மேற்க் கொண்டும் இருக்கின்றது.
இந் நிலையில் என்ன செய்வது. இதனாலயே மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் அன்மையில் ஊடகங்கள்
கேட்ட கேள்விக்கு யாருவேனுமானாலும் கட்சியில் இருக்கலாம் போகலாம் என்று கூறினார்.
உண்மையிலேயே அனுஷா சந்திரசேகரன் அரசியலில் வருவது நல்லது தான். ஆனால் அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
அனுஷா சந்திரசேகரன் பாரளுமன்ற தேர்தலில் போட்டி
இப்ப தான் கட்சிக்கு வந்தார். அதற்கு மலையகத்தில் நல்ல வரவேற்பும் இருந்தது. கட்சியில் இருந்து திறமையாக செயற்பட்டு மூத்தவர்களுக்கு இடம் கொடுத்து காலம்
செல்லும் போது தானவே அந்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்த கட்சியில் இருக்கும் நிலையில்
தன்னுடைய அப்பாவின் கட்சி இருக்கும் போது ஏன் அவர் பிரிதொரு கட்சியில் போட்டியிட வேண்டும். பொருத்து இருந்தால் பூமியை ஆளலாம். முதலில் மாகாண சபை பின்
பாராளுமன்றம் அதன் பின்னர் அமைச்சுக்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும் நிலையில் பொருத்தமற்ற சிலரின் கருத்துக்களை கேட்டு செயற்பட்டு தன்னைதானே வீனாக்கி
கொள்ள கூடாது. கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு இதுவரை காலம் வரும் போது நியமிக்க கட்சி அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்துள்ளது. இதற்கு சற்று பொருத்து இருக்க வேண்டும். தற்போது இலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழ் நிலையில் தனியாக ஒருவர் தேர்தலில் நின்று வெற்றி
பெருவது இலகுவான காரியம் அல்ல அதிலும் போட்டிமிகு மலையகத்தில் வருகின்ற தேர்தல் மிகவும் விருவிருப்பாகவும் பணக்கட்டுகள் வீசி விளையாடும்
தேர்தலாகவும் இருக்கும் இதற்கு எல்லாம் முகம் கொடுத்து அனுஷா சந்திரசேகரன் வெற்றி பெறுவேரானால் சாதனை தான் என்று கூறினர்.
சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
யாழில் -சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சரவண பாவன் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் திடீரென அங்கு புகுந்த திருடர்கள் பாழடைந்த கம்பிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றி திருடி சென்றுள்ளனர் .
எனினும் வீட்டை காவல் காத்த நபர் அவர்களை தூரத்தி சென்ற நிலையில் அவ்வேளை அங்கு எம்பியும் வீடு வந்துள்ளார் .
உடனே சுதாகரித்து கொண்ட இவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
ஆட்டாவில் திருட்டில் ஈடுபட மூன்று யாழ் திருடர்களும் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளனர்
எம்பி வீட்டுக்குள் திருடர்கள் ..?, திருடர் வீட்டுக்குள்ளேயே …?இந்த படம் இப்போது நல்லாய் ஓடுகிறது .
புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .
மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

தமிழர் பலத்தை குறைக்க முயற்சி
இலங்கையில் -தமிழர் பலத்தை- மக்களின் அரசியல் பலத்தை குறைக்க முயற்சி
அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் மூலம் சிறுபான்மையின மக்களின் அரசியல் பலத்தை
குறைப்பதற்கு முயற்சிப்பது ஜனநாயக படுகொலைக்கு ஒப்பானது என்று பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
இந்நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையின மக்களின் ஜனநாயக உரிமையை
பாதுகாப்பதன் மூலமே நாட்டின் நிரந்தர சமாதானத்திற்கும், நிலையான அபிவிருத்திக்கும் வழிவகுக்குமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவினால்
தமிழர் பலத்தை குறைக்க முயற்சி
கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது தனிநபர் சட்டதிருத்த யோசனைக்கு தனது
கண்டனத்தை தெரிவித்து இன்று வெளியிட்ட தனது ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு சுதந்திரமடைந்த காலம்தொட்டே பெரும்பான்மை சமூகம் தமது அதிகாரத்தையும் பலத்தையும்
சிறுபான்மையின மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவே பிரயோகித்து வருகின்றது. இப்படியான தொடர்ச்சியான அடக்குமுறைகள், ஜனநாயக விதிமீறல் உச்சத்தை தொட்ட
நிலையில்தான் இந்த நாடு நீண்ட யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதன் மூலம் நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்குள்
சிக்கித்தவித்து விலைமதிக்க முடியாத பல இலட்சக்கணக்கான உயிர்களையும் இழக்க வேண்டியேற்பட்டன.
இன்று யுத்தம் நிறைவுற்றுள்ளது. ஆனால் இந்த யுத்தம் ஏன் ஆரம்பிக்கப்பட்டன என்பது தொடர்பாக இன்னும் பெரும்பான்மை சமூகம் விளங்கிக் கொள்ளவில்லை.
அதற்கு மாறாக யுத்த வெற்றியே சிறுபான்மை சமூகங்களுக்கான தீர்வு என ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் என்னிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியான ஒரு என்னக் கருவில் உண்டானதுதான் சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பது தொடர்பான சட்டத்திருத்த யோசனையாகும்.
தமிழர் பலத்தை குறைக்க முயற்சி
1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் யோசனைக்கமைய அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரமதாஸா அவர்களினால் 12.5 வாக்கு வீதமாக இருந்த அரசியலமைப்பை மாற்றி 5
வீதமாக குறைக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களும் சிறிய கட்சிகளும் இலகுவாக பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு
தமது சமூகம் சார்ந்த பாதுகாப்பு, அபிவிருத்தி என்பன தொடர்பாக ஆட்சியாளர்களோடு பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையில்தான் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பலத்தை இல்லாமலாக்கப்படுவதற்கான பேரினவாதிகளின் நீண்டநாள் கனவை மெய்ப்பிப்பதற்கான
நடவடிக்கையாகவே இந்த அரசியலமைப்பு திட்ட யோசனையை பார்க்க முடிகின்றது.
இந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படால் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதோடு எமது குரல்வளையும் நசுக்கப்படும்
மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையில் தேர்தல் முறைமை தொடர்பாக கருத்துக்களை
முன்வைத்திருந்தார். அவர் எப்படியான நிலைப்பாட்டில் இக்கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டும். ஏனென்றால் சிறுபான்மை
சமூகங்கள் ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளை பெற்றுக் கொள்வதற்கு தற்போது காணப்படும் விகிதாசார முறைமையே காரணமாகவுள்ளது.
விகிதாசார தேர்தல் முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும்.
இதற்காக சிறுபான்மை கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர் பலத்தை எனவே சிறுபான்மை சமூகங்களிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள திருத்த யோசனைக்கு எதிராக சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைவதோடு இராஜதந்திர
ரீதியில் அணுகி அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
யாழில் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள்
யாழில் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கி -சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு மணி அளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல்
வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
இலங்கை – கடற்கரை பகுதியில் சுமார் மக்காத நான்கு லட்ஷம் பிளாஸ்டிக் ரக வகையிலான குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன .
நாட்டின் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் குப்பைகளை கடலில் கொட்டியதன் விளைவாக இவை கரை ஒதுங்கியுள்ளன
சுத்தமான நாடக இலங்கையை வைத்திருக்க வேண்டும் என ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பல்வேறு பட்ட அதிரடி
உத்தரவுகள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இந்த சம்பவங்களை கட்டு படுத்த இயலவில்லை

இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
இலங்கையில் =-இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
துண்டாடப்படும் பயணிகளின் பஸ் நிலையம்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன நகரத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையமானது பல நூறு வருடங்களாக மக்களின் போக்குவரத்துக்காக பாவிக்கபட்டு வருகின்றது.
இந்த பஸ் நிலையத்தை வீதி போக்கவரத்து அதிகாரபை நிர்வகித்து வந்த போதும் தற்போது பஸ் நிலையம் உடைந்த நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப செயற்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் நுவரெலியா வெளிமடை கதிர்காமம் பண்டாரவலை பதுளை போன்ற நகரங்களுக்கு
செல்லும் அனைத்து பிரதான பஸ்களும் மேலும் அருகில் உள்ள சிரிய நகரங்களுக்கும் பல கிராமங்களுக்கும் செல்லும் பஸ்களும் நிருத்தப்படுகின்றன.
இந்த நகரத்திற்கும் அருகில் உள்ள பதிய நகரமான கொத்மலை நகரத்திற்கும் நாளாந்தம் பிரதேச மக்கள்
தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் இடிந்து விழும்
வங்கியும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ்
நிலையத்திலேயே காத்து நிக்கின்றனர். மழை காலங்களில் நிற்க கூட முடியாது. இந் நிலையில் இதனை திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

கம்பளை பஸ் நிலையம் திருத்தப்படுகிறது
இலங்கை -கம்பளை பஸ் நிலையம்
திருத்தப்படுகிறது
அன்மையில் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை தேசிய போக்குவரத்து சபையின் பஸ்
பாதிப்படைந்து இருப்பது குறித்து செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டது
தற்போது இந்த பஸ் நிலையத்தினை ஜனாதிபதியின் புதிய செயற்திட்டமான நாட்டின் சூழலை சுத்தமாக
வைத்திருப்போம் செயற்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் சித்திரங்களை வரைந்து வருகின்றனர். இந்த செயற்திட்டம் பாராட்டுக்கு உரியது.
குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் இருந்து கண்டி¸ கொழுப்பு¸ பாணதுறை¸ பதுளை¸ நாவலப்பிட்டிய¸
புஸ்ஸல்லாவ¸ பூண்டுலோயா¸ போன்ற பிரதான நகரங்களுக்கும் புப்புரஸ்ஸ¸ குருந்துவத்த¸ வட்டதெனிய¸ துனுக்கேஉல்ல¸ கலஹா¸ தொலுவ போன்ற சிரிய
நகரங்களுக்கும் மேலும் பல கிராமங்களுக்கும் பஸ் சேவை இடம் பெற்று வருகின்றது.
கம்பளை நகரத்திற்கு நாளாந்தம் மேற்படி பிரதேச மக்கள் தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம்
கணக்கில் வந்து செல்கின்றனர்.இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ நீதிமன்ற கட்டிடம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற
அனைத்து அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் தனியார் வங்கிகளும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின்;
தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ் நிலையத்திலேயே காத்து
நிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது

சுமந்திரன் -கூட்டமைப்பின் தலைவராகிறார்
கூட்டமைப்பின் தலைவராகிறார் – சுமந்திரன் –
இலங்கையில் தமிழர்களின் நலன் காக்கும் அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்பொழுது தமிழர் தாய்
மொழியைஅவர் தம் அரசியலை பேசியபடி சிங்கள வர்க்கத்திற்கு அடிகழுவி பிழைக்கும் நிலைக்கு மாறியுள்ளது .
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி சட்ட தரணியாகி பதவி ஏற்றார்சுமந்திரன் ,அவர்கள் ஆட்சியில் நூறு நாள் திட்டத்தில் தீர்வு மேற்கொள்ள படும் என அறிவிக்க பட்டது .
ஆனால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வையும் இந்த கூட்டமைப்பு கூலிகளை பெற்று தரவில்லை
இவர்கள் இந்த போக்கின் காரணமாக கூட்டமைப்பிற் குள்ளே உள்வீட்டு சண்டை உக்கிரம் பெற்றது .
தற்போது அது மீளவும் முழுமை பெற்று உக்கிரம் பெற்றுள்ளது .
மாவை சம்பந்தருக்கு அடுத்த நிலை தலைவராக வருவார் என்ற நிலை இருந்தது ,ஆனால் அது தவிடு பொடியாக
நேற்று முளைத்த சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உருவாக்கம் பெறுகிறார் .
இத்துடன் கூட்டணி கூட்டமைப்பு உடைந்து சிதறும் நிலையில் உள்ளது .
மகிந்தவின் ஆட்டம் இதன் ஊடாக முழுமை பெறுகிறது ,அதற்கு நாரதர் சுமந்திரன்புதைகுழியாக மாற்றம் பெற்றுள்ளார்
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் காணாமல் போனவர் சடலமாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையை அடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளதுடன்
சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவதினமான நேற்று கல்லடி சுனாமி நினைவு துாபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
இலங்கை -எல்பிட்டிய பகுதியில் கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்கிட சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மீது
அந்த கடையின் உரிமையாளர் மகன் கோரமாக தாக்கியுள்ளார் .
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய நபரை கைது செய்துள்ளனர்







