Tag: வீட்டுக்குள்
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ் ,வீதியை விட்டு விலகிய தனியார் பஸ்ஸொன்று அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம்,
பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில் படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் விபத்துக்குள்ளான போது, வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால்,
குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் விபத்துக்குள்ளான வேளையில் பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும், தினமும் பயணிக்கும் இந்த பேருந்தில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக
ஊழியர்கள் என பலரும் பயணித்ததாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை (10) குறைந்த எண்ணிக்கையான பயணிகளே பயணித்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
யாழில் -சரவணபவன் – எம்பிவீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சரவண பாவன் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் திடீரென அங்கு புகுந்த திருடர்கள் பாழடைந்த கம்பிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றி திருடி சென்றுள்ளனர் .
எனினும் வீட்டை காவல் காத்த நபர் அவர்களை தூரத்தி சென்ற நிலையில் அவ்வேளை அங்கு எம்பியும் வீடு வந்துள்ளார் .
உடனே சுதாகரித்து கொண்ட இவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
ஆட்டாவில் திருட்டில் ஈடுபட மூன்று யாழ் திருடர்களும் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளனர்
எம்பி வீட்டுக்குள் திருடர்கள் ..?, திருடர் வீட்டுக்குள்ளேயே …?இந்த படம் இப்போது நல்லாய் ஓடுகிறது .







