Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
கடந்த காலங்களில் நான் அனுப்பிய செய்திகளுக்கு “பைஷல் இஸ்மாயில்” என்ற பெயரை பாவித்து வந்தேன். தற்போது இந்தப் பெயரை மாற்றி “அபு அலா
” என்று இனிவரும் காலங்களில் பாவிக்கவுள்ளேன். எனவே, நான் அனுப்புகின்ற செய்திகளுக்கு இந்தப் பெயரை பதிவிடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை; தவிசாளர் முபாறக் தெரிவிப்பு!
அபு அலா –
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
தேசிய வாசிப்பு வாரத்தையொட்டி குச்சவெளி வடலிக்குளம் பிரதேசத்தில் புதிய நூலகத்தை குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் பிரதம
அதிதியாக கலந்துகொண்டு திறத்து வைத்து பொதுமக்களிடம் கையளித்து வைத்தார்.
குச்சவெளி பிரதேச சபை செயலாளர் மா.மாலினி அசோக்குமார் தலைமையில் (31) இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில், உதவித் தவிசாளர்,
உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அங்கு தவிசாளர் ஏ.முபாறக் உரையாற்றுகையில்,
நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. அதனை முழுமையாக நாம் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எம்மிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது ஒரு மனிதனை பரிபூரணமாக்குகிறது.
மின்னணு ஊடகத்தின் ஆதிக்கம் இன்று அதிகரித்துள்ளதால் அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறைவடையச் செய்துள்ளது.
அதனால் எம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றது.
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக உள்ளனர். ஏனென்றால், வீட்டில் புத்தகங்களை படிக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே மாறிவிடுகின்றனா். இதிலிருந்து நாம் மீண்டுகொள்வதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை எம்மிடத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
இந்நிகழ்வின்போது, நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் தவிசாளர்
உள்ளிட்ட அதிதிகளினால் நட்டிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்
அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்
கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்தார்.
படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்திகம் (30) மரணமடைந்தார்.
புத்தளம் முள்ளிப்புரம் மீன்பிடி கிராமத்தில் வசிக்கும் மொஹமட் சிஹாம் (வயது 48) என்பவரே மரணமடைந்துள்ளார்.
அமைச்சரின் வாகனம் மோதி காயமடைந்தவர் மரணம்
மொஹமட் சிஹாம் செலுத்திவந்த சிறிய ரக வாகனத்தை இராஜாங்க அமைச்சரின் வாகனம் புத்தளம் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,
15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சன்ன ஜயசுமண,
கோட்டாபய ராஜபக்ஷ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.
கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை
“முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்,”
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷ
செவிமடுத்ததாகவும், அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றார்.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
கண்டி மாத்தறைக்கு இடையில் பயணித்த ரயில். தடம் புரண்டதில் போக்குவரத்து தடை பட்டுள்ளது .
பாதிக்க பட்ட ரயிலை மீட்டு ,மீள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .
இந்த ரயில் விபத்தினால் அந்த வழிப்போக்குவரது தடை பட்டுள்ளது .
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகத்தில் இலங்கை பெண்ணை பாராட்டி கவுரவித்த பொலிஸ்
தமிழகம் சத்தியமங்கலம் பகுதியில் ,இலங்கை பெண் ஒருவர் செய்த செயலினால் பொலிஸாரினால் அவரை பாராட்டி கவுரவிக்க பட்டுளார் .
வீதியில் தவறவிட பட்ட பண்பொதி ஒன்றுக்குள் 40 ஆயிரம் ரூபா பணம் கிடைக்க பெற்றுள்ளது .
அந்த பணத்தை சத்தியமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள்ளார் , குறித்த அகதி முகாமில் வசித்து வரும் 55 வயது பெண் .
இவரது செயலை பாராட்டி கவுரவித்துள்ளனர் ,சத்தியமங்கலம் காவல்துறையினர் .
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
இரட்டைக் குடியுரிமை விவகாரம் இலங்கையில் எம்பிகளுக்கு ஆப்பு
இரட்டைக் குடியுரிமை விவகாரம் இலங்கையில் எம்பிகளுக்கு ஆப்பு
இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை
இரட்டைக் குடியுரிமை விவகாரம் இலங்கையில் எம்பிகளுக்கு ஆப்பு
இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பாணின் விலை திடீரென குறைப்பு
பாணின் விலை திடீரென குறைப்பு
இலங்கையில் பாணின் விலை திடீரென குறைக்கக் படுவதாக வெதுப்பாக சங்கம் தெரிவித்துள்ளது .
சந்தையில் போதியளவு கோதுமை மாவு கையிருப்பில் உள்ளதால் ,இந்த மாவின் விலை குறைக்க பட்டுள்ளதாக இலங்கை வெதுப்பாக சங்கம் அறிவித்துள்ளது .
இந்த பொருள்களின் விலை குறைப்பால் ,மக்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
எனினும் இதுவரை இந்த விலை குறைப்பு நீடிக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .
இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .
தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
யாழில் சிவில் உடையில் சீனா இராணுவம் கொதிக்கும் இந்தியா
யாழில் சீனா இராணுவத்தினர் சாதாரண மக்கள் போல ,சிவில் உடையில் உலாவி திரிவதாக இந்தியா தெரிவித்துள்ளது .
சீனா இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து ,அதன் ஊடாக இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை வழங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக மீட்கும் ,மண் மீட்பு போராட்டம் ஆரம்பிக்க பட்ட பொழுது ,அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியது .
அதன் பின்னர் தற்பொழுது சீனா இராணுவம் ஆக்கிரமித்து ,அங்குள்ள மக்கள் காணிகளை வாங்கி குவித்து வருகிறது .
இலங்கை யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சீனா இராணுவத்தை விலக்கி கொள்ள முடியா நிலையில், இந்தியா சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது.
சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
சுமந்திரனுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்குள் ,உள்கட்சி மோதல்கள் வெடித்துள்ளன .
கூட்டமைப்பின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காது ,தன்னிச்சையாக செயல் பட்டு வரும் சுமந்திரன் நடவடிக்கை காரணமாக ,தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையும் நிலையில் காணப்படுகிறது .
சுமந்திரன் கூட்டமைப்பிற்குள் வருகை தந்த நாள் முதல், இதுவரையான கால பகுதியில் ,தமிழர்களுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கு எதிராகவே செயலாற்றி வருகிறார் .
மகிந்தா குடும்பத்துடன் ஒட்டி உறவாடி ,தமிழ் தேசிய இனப்பிரச்சனையை குழி தோண்டி புதைத்து வருகிறார் .
சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
பலமுறை சுமந்திரனுக்கு எதிராக ,கூட்டமைப்பிற்குள் மோதல்கள் வெடித்துள்ள பொழுதும் பின்னர் அவை தணிக்க பட்டன .
ஆனால் தற்போது சுமந்திரன் தனிப்பட்ட முடிவுகளை ,கட்சியின் நிலைப்பாடாக அறிவித்து வருவதால், ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
இவர் சட்டத்தரணி என்கின்ற வகையில் ,கூட்டமைப்பு உறுப்பினர்களை சட்டத்தை பயன் படுத்தி மிரட்டி வருகிறார் .
அதனால் தற்போது பிரபல சட்டத்தரணியாக விளங்கி வரும் தவராசா . அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார் .
இந்த தவராசா என்பனவர், வித்தியா கொலை வழக்கில் சிக்கி, அரசியல் எதிர் காலத்தை தொலைத்தவர் என்பது குறிப்பிட தக்கது .
தென் கொரியா கூட்ட நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் மரணம்
தென் கொரியா கூட்ட நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் மரணம்
தென் கொரியாவில் நேற்று இடம்பெற்ற கலவீன் நிகழ்வில் ஏற்பட்ட ,அதிக மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் ,இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது .
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
மக்கள் நெரிசலில் சிக்கி ,நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் ,.இவ்வாறு ஆற்றுக்குள் குதித்த பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் .
கம்பாக பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,பாலம் ஒன்றில் இருந்து ஆற்றுக்குள் குதித்து , இளம் பெண் தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த இளம் பெண்ணின்தற்கொலைக்கு ,உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணித்த சம்பவம், முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது .
உடையார் கட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ,மீனை கொள்வனவு செய்திட ,முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்த பொழுது ,திடீரென மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .
மாரடைப்பு காரணமாக இவர் இவ்விதம், வீழ்ந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .
இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
யாழ்பாணம் அச்சுவேலி பகுதியில் 15 வயது சிறுமி மீது காதல் வாய்ப்பட்ட ,பிரான்சில் இருந்து வந்த மாப்பிள்ளை ,அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார் .
இது குறித்த பெற்றவர்கள் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து ,மாப்பிளை காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
சிறுமியை சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .
சிறுமிக்கும் சம்பந்தம் உள்ள பொழுதும் ,திருமண வயதை எட்டாத நிலையில் .இந்த அவல நிலைக்கு சென்றுள்ளனர் .
பிரான்சில் இருந்து இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு 20 வயதாகிறது .இலங்கை போற போக்க பாரு சின்ன பிள்ளை .
இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
இலங்கையை சேர்ந்த 12 பேர் சர்வதேச பொலிஸ் தேடுதல் சிவப்பு பட்டியலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
இவர்களை கண்ட இடத்தில கைது செய்திடும் நகர்வில் பிரகடனம் செய்ய பட்டுள்ளது.
இந்த 12 பெரும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் .
அவ்வாறானவர்களே சர்வதேச பொலிஸ் தேடுதல் ,வலை வீச்சுக்குள் உள்ளாக்க பட்டுள்ளனர் என்கிறது இலங்கை .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
யாழ்ப்பாணம் ஆணைக்கோடடை பகுதியில் தனது வீட்டுக்குள் வருகை தந்த அயலவர் கோழிகளுக்கு, உணவில் விஷம் வித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவரது இந்த செயலினால் , அயலவர்கள் பெரும் முறுகளில் ஈடுபட்டனர் .
இனறைய நிலையில் கோழிகளின் விலை, 35 ஆயிரத்திற்கு மேல் என தெரிவிக்க படுகிறது .
இந்த கோழிக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் காட்டு தீயாக பரவி வருகிறது .
இலங்கையில் புதிய தோல் நோய் பரவல்
இலங்கையில் புதிய தோல் நோய் பரவல்
இலங்கையில் இளையான் கடிக்கு உள்ளாகி 24 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தோல் நோய்க்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த நோய் பரப்பும் இலையான்களில் இருந்து, புதியவகை தோல் நோய் ஒன்று பரவி வருவதாக ,சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இதனால் மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளனர் .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

ஊக்க மருந்து பாலுறவு பாவனை அதிகம் பேர் மரணம்
ஊக்க மருந்து பாலுறவு பாவனை அதிகம் பேர் மரணம்
இலங்கையில் ஊக்க மருந்து பாலுறவு பாவனைக்கு உள்ளான அதிகம் பேர் ,பலியாகியுள்ளனர் என்கிறது கொழும்பு மருத்துவ பீடம் .
மக்கள் பயன் பாட்டில் அதிகரித்து செல்லும் பாலுறவு மீதான நீண்ட மோகம் .
அதனை அனுபவிக்க ,பயன் படுத்த படும் இவ்விதமான மாத்திரைகளினால் ,இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருது
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருது
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருதுகள் கிடைக்கப்பெற்றது.
வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் வந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
இதில் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரச நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வட கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களில் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறனில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கான விருதுகள் கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டு நேற்றயதினம் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருதுகள் கிடைக்கப்பெற்றது.
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலைக்கு
விசேட திறமைச் சான்றிதழுடன் விருதும், மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு திறமைச் சான்றிதழும் கிடைக்கப்பெற்றன.
இவ்விருதுகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர்
வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய
அத்தியட்சகர் (திருமதி) ஜே.பாஸ்க்கரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பைஷல் இஸ்மாயில் –












































