Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆலயத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்
ஆலயத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சம் நடைபெற்று வருகின்றது.
இந்த உற்சலத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் சாமி தூக்கினர்.
சுவாமி வீதிஉலா வரும் போது அவர்கள் சுவாமியை தூக்கியுள்ளனர். வெளிநாட்டவர்கள் இவ்வாறு சுவாமி தூக்கும் நிகழ்வை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது
இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு
இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும்.
பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல், சமூக நீதிக்காக குரல் கொடுத்தல், அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான – சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீர் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுதல், நீர்துறையில் மறுசீரமைப்பு என தான் அமைச்சு பதவி ஏற்றதில் இருந்து புரட்சிகரமான மாற்றங்களுக்காக இவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். அதற்கான வேலைத்திட்டங்களுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.
பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
YGL சமூகம் என்பது உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பில் உறுதிபாட்டை பகிர்ந்துகொள்ளும் 1000 இற்கு மேற்பட்ட இளம் தலைவர்களைக்கொண்ட ஒரு தனித்துவமான சமூகமாகும். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவ பண்பு மற்றும் அயராத முயற்சி என்பவற்றுக்கு கிடைத்த அங்கீகாரமே இத்தெரிவாகும்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு உலகளவில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த அங்கீகாரம் பெருமையளிக்கின்றது. அவருக்கு அமைச்சு சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுப்பதற்கும், இளைஞர் வலுவூட்டலை ஊக்குவிப்பதற்கும், உலக அரங்கில் இலங்கையின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கும் அமைச்சருக்கு பக்கம் பலமாக இருப்போம்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.
அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.
அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது
ஆமி காரனை அனுப்பவா உண்ட அம்மாவுக்கு தமிழ் பொண்ணு பேச்சு வீடியோ பாருங்கோ ..
ஆமி காரனை அனுப்பவா உண்ட அம்மாவுக்கு தமிழ் பொண்ணு பேச்சு வீடியோ பாருங்கோ ..|
தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ் பெண்களை மிக கேவலமாக பேசிய தமிழ் பொண்ணு .
கேடு கெட்ட வார்த்தைகள் ,தமிழர்களை ஆத்திரமூட்ட வைத்த சைக்கோ பெண்ணின் பேச்சு .
யூதனை கொன்ற ஜெர்மன் இன்று இஸ்ரேலுடன் ஒன்றாகியுள்ளது .நாளை தமிழர்களும் சிங்கள மக்களும் இதுபோல இணைந்து அண்ணன் தம்பியாக வாழ்வார்கள் அது மாறும் , அரசியல் எப்பொழுதும் மாறக்கூடியது ,
இது போன்ற முட்டாள்கள் ..தூ
தனது கணவன் கையை மார்பை கடித்ததாக இந்த பொண்ணு தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பெற்ற தாயை விபச்சாரி என்றால் யாரையும் தான கோபம் வராது சொல்லுங்க மக்களே
கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை
மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட
செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்
இந்நிலையில் அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை. எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு
தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணத்தினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை
இந்நிலையில் பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது அத்தோடு குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது
மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பத நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் நேற்று தவணையிடப்பட்டிருந்தது.
கந்த வழக்கின்போது அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகு
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய்
செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, நேற்று (04) அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலிலுடன்
மோதுண்டனர். இதனால் இளம் குடும்பத் தலைவரும் சில மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தினையடுத்து, பிரதேச மக்களினால் புகையிரத கடவையில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிக தீர்வொன்றினை உடனடியாக
அமுல்ப்படுத்தியதுடன், நிரந்தர தீர்வாக ஓசை எழுப்பும் வகையிலான ஒளி சமிஞ்சை விளங்கு மற்றும் பாதுகாப்பு படலை ஆகிவற்றை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க தரப்புக்களின் ஊடாக முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பினை
செயற்பாடுகளை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீது IMF க்கு பலமான எதிர்பார்ப்பு
இலங்கை மீது IMF க்கு பலமான எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்தது.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்கள்
யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை பொலிஸாரால் தெரிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.
மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சந்தேகநபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து நாடு முழுவதும் போதைப்பொருள்களை மிக நுணுக்கமாக விநியோகம் செய்து வருகின்றமையும் இந்த விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று (05) காலை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி, சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இவ்வாறு சமகி ஜன சந்தனவில் இணைந்துள்ளனர்
வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்
வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை உணவு பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு ஒன்றித்து உறவுகளை பேணுவதால் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வறுமை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமை, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர். நன்றாக இருந்த மக்களின் வாழ்வு சுருங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம் சொல்லும் ஸ்திரத்தன்மை புதிய இயல்பு நிலையாக்கத்தால் நடந்துள்ளது. புதிய இயல்பு நிலையில் மக்களின் பிரச்சினைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் 2 இலட்சம் நுண்ரக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைத்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி ஸ்திரத்தன்மைக்கு செல்ல முடியும். மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ள புதிய இயல்பு நிலையால் நாட்டுக்கோ அல்லது 220 இலட்சம் மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதால், வறுமையை ஒழிப்பதற்கான தேசியத் திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு கல்விக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 139 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நேற்று (03) நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்கவும், மத நல்லிணக்கத்தை உருவாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் கல்வியானது பயன்படும். எந்த தீவிரவாதத்துக்கும் இடமளிக்கக்கூடாது.
ஒரு நாடாக, ஒரு தாயின் பிள்ளைகளாக நடுநிலை போக்கில் சமத்துவம் என்ற கொள்கையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும். எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் சமம்.
உயர்சாதி செல்வந்த குடிமக்கள் அல்லது தாழ்ந்த சாதாரண குடிமக்கள் என்று 2 வகையான குடிமக்கள் இங்கு இல்லை. அரசியலமைப்பின் முன் நாம் அனைவரும் சமம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதை பாதுகாக்கவும், அதன் உரிமைக்காக குரல் கொடுக்கவும் முன்நின்றவர்கள், பாராளுமன்றத்தில் இருந்து நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்த பிற்பாடு, நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
பாராளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பாவையாக கருத்திற் கொள்ளப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம், நீதித்துறை என 3 பகுதிகள் உள்ளதால், எந்த ஒரு நிறுவனமும் மற்றொரு நிறுவனத்தை குறைமதிப்பிற்குட்படுத்ததாது, தடைகள் மற்றும் சமன்பாடுகள் மூலம் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
யுத்தத்தால் முல்லைத்தீவு பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. போருக்குப் பின்னர் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியாலும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.
தேர்தல் காலத்தில்தான் வடக்கு கிழக்கை நினைவு கூர்கின்றனர். இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
ஈழ பெண்களை கேவலமாக கதைத்த பெண்ணுக்கு பிரான்சில் தர்ம அடி
தமிழ் ஈழத்தையம் அதன் தாய் மார்கள் ,பெண்களை இழிவாக பேசினார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவருக்கு தர்ம அடி வழங்க பட்டுள்ளது .
பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முக நூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது .
ஈழ மக்களையும் ,அந்த பெண்களையும் இழிவாக கதைக்காதீர்கள் என தெரிவித்து அந்த பெண்ணிடம் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
ஆனால் அதனை மீறி அவர் டிக் டோக்கில் அருவருப்பாக பேசியதாக தெரிவித்தே, கோபமடைந்த மக்கள் குழு இவர் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போரில் பல உறவுகளை பறிகொடுத்து, அந்த மன விரக்தியில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை சீண்டியவர்களுக்கே இவ்வாறு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரியவருகிறது .
டிக் டோக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பல விடயங்கள் பகிர பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்று பார்த்தால் இரண்டு தரப்புகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (04) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தரப்பு கூறுகின்றது கச்சத்தீவு தங்களுக்கு சொந்தம் என்று அதேபோல் இந்தியா தரப்பில் கூறப்படுகின்றது தங்களுக்கு சொந்தம் என்று எது எவ்வாறு இருந்தாலும் இந்தியாவில் இப்போது தேர்தல் ஒன்று நடைபெறுகின்றது தேர்தல் காலங்களில் இவ்வாறான கோஷங்கள் தான் வந்துக்கொண்டு இருக்கிறது.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்தியா அரசும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கையிலும் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று தொழில் செய்யலாம் என்று இருக்கிறது என தெரிவித்தார்.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில்,
அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.
ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையில், எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது
நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். 05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தான் தமது நேரத்தை செலவிடுகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது.
அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.
இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது.
எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது.
உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.
இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.
எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம்.
அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும்
. இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது. அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்
மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.
தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மாதங்களில் 75000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்
மூன்று மாதங்களில் 75000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் போக்கு அதிகரித்துள்ளது.
இலங்கையில் 2,374 பேர் தென்கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, பெலியத்த, கண்டி, மாத்தறை, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

முருகன்ரொபர்ட் பயஸ்ஜெயக்குமார் மூவரும் வீடு திரும்பினர்
முருகன்ரொபர்ட் பயஸ்ஜெயக்குமார் மூவரும் வீடு திரும்பினர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மூவரும், 33 வருடங்களுக்குப் பின்னர், புதன்கிழமை (03) நாட்டுக்கு திரும்பினர்.
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரே இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், புதன்கிழமை (03) மாலை 5.55 மணியளவில் வீடு திரும்பினர்
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.
இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், கொலையை செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






























