சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்


சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்

இந்தியா தமிழக தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலை காட்சியில் இடம்பெறும் சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்.

இலங்கை மலையகத்தில் இருந்த இந்திரஜித் எனும் மலையக வம்சாவளியான தமிழ் வாலிபன் இந்திரஜித் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல் போட்டியில் பாடுகிறார் .

சரிகமபாவில் பாடும் இந்திரஜித்துக்கு உலக தமிழர்கள் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர் .

சரிகமபா இந்திரஜித் யார்

பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்தவர் தான் இந்த சரிகமபா வில் பாடும் இந்திரஜித்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி அசத்தியுள்ளார் இந்திரஜித் .


தனது ஆளுமை திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் ,வியப்படைய செய்து அசத்தி இருக்கிறார் சரிகமபா இந்திரஜித்

பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா ..?

இந்த சரிகமபா பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

கண்டிப்பாக அவர் வெற்றி பெறாவிட்டாலும் ,இறுதி வரை நிகழ்ச்சியில் , ஜீ தமிழ் தொலை காட்சி பாடுவதற்கு அனுமதி வழங்கும் , அப்பொழுது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வை இலங்கை மக்கள் பார்வையிடுவார்கள் .

ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இறுதி நிகழ்வுகளில் ,சரிகமபாவில் இருந்து இந்திரஜித் தட்டி கழிக்கப்படலாம் .

அதுவரை சரிகமபா நிகழ்வில் இந்திரஜித்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வைத்திருக்கும் என்பதை இப்போதே அடித்து கூறுகிறோம் .

வீடியோ

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.

தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.

2022ல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023ல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி யை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

வானிலை இடியுடன் கூடிய மழை
Posted in இலங்கை செய்திகள்

வானிலை இடியுடன் கூடிய மழை

வானிலை இடியுடன் கூடிய மழை வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கம் அதிகளவான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம்

கிழக்கு மற்றும் தென் மாகாணங்கள், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

வானிலை இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

இதேவேளை, இன்று (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
Posted in இலங்கை செய்திகள்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி.

சந்தைப் பொருளாதாரத்தை

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்,

இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய

பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச

ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம்

இந்த வருடாந்த மாநாடு ஏப்ரல் 26/27 திகதிகளில் கொழும்பில் நடைப்பெறுவதோடு, மாநாட்டில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையை நிகழ்த்தினார்.

1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகம் 17,000 க்கும் மேற்பட்ட

உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கும் இதன் பங்களிப்பு கிடைத்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1994 முதல் கொழும்பு சர்வதேச ரோட்டரி கழகத்தின் மாவட்ட 3220 மேற்கு பிரிவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

“இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள்

என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்

என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம்.

அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

ஆனால், எங்களுக்கு வளர்ச்சியைத் தரும் ஒரு நிலையான திட்டம் குறித்து நீங்கள் சிந்தித்தால், அதைச் செய்ய முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன். சந்தை செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது

வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தை சக்திகளை எவ்வாறு கையாள்வது அல்லது சந்தை சக்திகளை எவ்வாறு இயக்குவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம்

முன்வைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குகிறது. எமக்கு இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே இருந்தன. அதனால் தான் இன்னும் வறுமையில் வாடுகிறோம்.

யுத்தத்திற்குப் பிறகு

யுத்தத்திற்குப் பிறகு, வியட்நாம் நம்மை விட மோசமான நிலையில் இருந்தது. 1991இல், வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் வந்து, வெளிநாட்டு முதலீட்டை எப்படி ஊக்குவிக்கிறோம் என்று கேட்டார்.

அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது எப்படி என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள இன்று நான் வியட்நாம் செல்ல வேண்டும். அவர்கள் மாறினர். நாங்கள் ஒரே இடத்தில் இருந்தோம்.

உங்களுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் பற்றி என்ன கூற முடியும்? இந்த ஒவ்வொரு நாடுகளையும் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.

ஆனால் அந்த நாடுகளின் நிலையை அடைய, தேவையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இப்போது நாம் அத்தகைய நிலையை அடைந்துள்ளோம்.

இனிமேலும் தேவையான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எந்த மாதிரியான பொருளாதாரம் வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, அதை ஒரு மாதிரி மூலம் மாத்திரமே செய்ய முடியும். இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்.

எங்களுக்கு பெரிய சந்தை இல்லை

இந்தியா, சீனா, அமெரிக்கா அல்லது ரஷ்யாவில் எங்களுக்கு பெரிய சந்தை இல்லை. பல நாடுகளில் உள்ள கனிய வளங்கள் நம்மிடம் இல்லை. நாம் அதிர்ஷ்டவசமாக இந்து சமுத்திரத்தில மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஒரு சிறிய தீவு.

இப்பகுதியில் பொருளாதார மையமாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட உலகில் நாம் எப்படி முன்னேறுவது? நாம் இனி கற்பனை உலகில் வாழ்கிறோமா? அல்லது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோமா என்பது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த வருடத்துடன் முடிவடையும். நாங்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் சமவாயத்துடன் கலந்துரையாடி

வருகிறோம். கடன் வழங்குநர்களுடன் அடைய வேண்டிய பெரும்பாலான விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு விடயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதுவும் விரைவில் தீர்க்கப்படும்.

ஆனால் நாம் இங்கிருந்து எங்கு செல்வது? பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் உறுதிப்படுத்திய பொருளாதாரம் இறக்குமதி

இறக்குமதி சார்ந்த பொருளாதாரம்.

சார்ந்த பொருளாதாரம். இந்த இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோமா? அப்போது நான் கடந்த காலத்தில் செய்த காரியங்கள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.

ஏனென்றால் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் இதுபோன்ற நெருக்கடியை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த முடிவை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும். அதை யாரும் தவறவிட முடியாது.

இதுதான் இன்று நாடு எடுக்க வேண்டிய முடிவு. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்வதா அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை

இல்லாதொழிப்பதா என்ற பிரச்சினை இல்லை. இரண்டாவதாக கவனிக்கப்பட வேண்டிய கேள்விகள் அவை. நான் குறிப்பிட்டது போல் மக்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.

நமது கல்வி முறை என்ன? நாம் அதை மாற்ற வேண்டுமா இல்லையா? அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நமது எதிர்காலம் என்ன? அதற்கான முடிவுகளை எடுக்க நாம் தயாரா?

ஏற்றுமதி சார்ந்த, அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை நாம் விரும்பினால், அதை எவ்வாறு அடைவது? போட்டி மிகுந்த பொருளாதாரம் வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். போட்டியை எதிர்கொள்ளாமல் போட்டித்தன்மையுடன் இருக்க முடியாது.

இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு நம்பிக்கை

இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அதை உருவாக்க முடியும். எங்களுக்கு கடினமான காலங்கள் குறுகிய காலம். ஆனால் நாம் அதை முறியடிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச ரோட்டரி கழக

பிரதிநிதிகள், மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி Action unity lanka நிறுவனத்தின்
Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை

இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு

75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்

இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம் ஆக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது .நிறுத்த பட்ட இரு நாட்டு கப்பல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடைப்படையில் ,இந்த கப்பல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

சீரற்ற காலநிலை காரணமாக தடை பட்டிருந்த ,இந்தியா இலங்கை பயணிகள் கப்பல் சேவைகள், மீளவும் ஆரம்பிக்க படவுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கப்பல் சேவையின் கட்டண விபரம்

இந்தியா இலங்கைக்கு இடையில் இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையின் அதிகரித்த கட்டணம் .

கீழ் தளத்தில், பயணிக்க ஐந்து ஆயிரம் இந்தியா ரூபாய்களும் ,மேல்தளத்தில் பயணிக்க, ஏழு ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக அறவிட படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா நாக பட்டினம் ,இலங்கை காங்கேசன் துறைக்கு இடையில் ,இந்த கப்பல் பயண சேவைகள் காணப்படுகின்றன .

இந்த கப்பல் சேவைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் சிறந்த வர்த்தக பொருளாதார பயன்பெறுகள் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன .

மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படுவதை இட்டு , பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

மீள கப்பல் சேவை நிறுத்த படுமா ..?

பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்க பட்ட இந்திய இலங்கை கப்பல் சேவை,பயணிகள் வரவு குறைந்து காணப்பட்டதால் ,அந்த சேவை நிறுத்த .பட்டது

அவ்வாறன நிலையில் மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் மக்கள் சென்று வருவதற்கு ,வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள ,இந்த கப்பல் சேவை நிறுத்த படக்கூடும் என்கின்ற அச்சமும் வெளியிட பட்டுள்ளது .

மக்கள் பயணிக்க அதிக கட்டணத்தை ,கப்பல் சேவை நிறுவனம் அறவிடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இதனை இந்தியா இலங்கை போக்குவரத்து அமைச்சர்கள் கவனத்தில் எடுத்து ,மக்களுக்கு சிறந்த விலையில் கட்டணத்தை வசூல் செய்தால் மக்கள் ,கப்பல் ஊடாக பயணம் செய்திட ஏதுவாக இருக்கும் என்கின்ற கருத்து வெளியிட பட்டுள்ளது .

தடைபடாது இந்தியா இலங்கை கப்பல் சேவை தொடர்ந்து பயணிக்க ,இலங்கை அரசு ,இந்தியா அரசு கவனத்தில் எடுத்து செயலாற்றுமா என்பதே கேள்வியாக உள்ளது .

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் ,குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்

2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறுகின்றது.

இந்த அரிசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற போதிலும், தங்காலை, நெடோல்பிட்டிய, வெலிபென்ன, லலிதபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணம் கொடுத்து அரிசியை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.

பல்வேறு தொகைகளில் பணம்

அதன்படி, 20 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பல்வேறு தொகைகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, ​​மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி தொகையை பாதுகாப்பதற்காக இருந்த காவலாளிக்கு பணம் கொடுப்பதற்காக மக்களிடம் பணம் வசூலித்து வழங்கப்பட்டமை குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம்

இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உத்தியோகபூர்வ நிழற்குடை கட்டிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த அரசி தொகையில் 20 மூட்டை அரிசியை திருடி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று (27) காலை குறித்த கட்டிடத்தின் ஜன்னல் திறந்து கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசி ஒருவர் கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அறையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து யாரும் அரிசியை திருடிச் சென்றிருக்கவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு நேற்று வழங்கப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரிசி அம்பாறை பிரதேசத்தில்

இந்த அரிசி அம்பாறை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றினால் வழங்கப்பட்டதாகவும், காலாவதியாகும் திகதிக்கு மேல் மேலும் ஒரு திகதி குறிப்பிட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

எனினும் ஹப்புத்தளை பிரதேச செயலகத்தின் தலையீட்டின் மூலம் காலாவதியான அரிசிக்கு பதிலாக பொருத்தமான அரிசியை வழங்குவதற்கு அரிசி விநியோகஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு.அமெரிக்கா விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமெரிக்க உதவியுடன் உற்பத்தி

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் விவசாயம் அதி நவீன முறையில் செய்கை முறைக்கு உள்ளாக்க படுகிறது .

அவ்வாறு இலங்கையில் நடைமுறை ப்படுத்தினால் ,தன்னிறைவு பொருளாதரத்தில் இலங்கை அதியுச்ச பயனை அடையும் என எதிர் பார்க்க படுகிறது .

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்

வீதி விபத்தில் மூவர் மரணம்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் .இலங்கையில் நாடளாவிய நிலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் மரணம் ஆகியுள்ளனர் .

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெரு,அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பண்டுலகம தொம்பே, புதுபாகல – வானலுவாவ வீதிகளில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இந்த மூவரும் மரணமாகியுள்ளனர் .

பாதை சாரி உள்ளிட்டவர்களே இந்த வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .

விபத்து மரணம் பொலிஸ் விசாரணை

வீதி விபத்து மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது .

வாகன சாரதிகள் வீதியல் , வாகனங்களை செலுத்தி செல்லும் பொழுது ,வீதி விதிமுறைகளை பின்பற்ற தவறுவதால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டு படுத்துவதற்கு பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,தொடர்ந்து இடம்பெறும் இவ்விதமான வீதி விபத்துக்களை தடுக்க முடியவில்லை என்ற கவலை வெளியிட பட்டுள்ளது .

சாலை விதிகளை மக்கள் சமுகம் பின் பற்றாத வரை ,இவ்வாறான வீதி விபத்துக்களை ,தடுக்க முடியாது என்கிறது பொலிஸ் .

சாரதிகள் ,பாதை சாரிகள் குறுக்கும் மறுக்கும் செல்லும் ,பொழுதும் வீதி விதிகளை மதித்து ,செயலாற்றினால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் இடம்பெறாது அவர்கள் தெரிவிக்கின்றனர் .

மிரட்டும் வீதி விபத்துக்கள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் அடைந்த செயல் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது .,பேரூந்து மோட்டர் சைக்கிள்,ஆட்டோ ,என்பன இலங்கையில் அதிக வீதி விபத்துக்களில் சிக்கி வருகின்றன .

மாதம் ஒன்றுக்கு மூன்றுக்கு மேற்பட்ட பேரூந்து வீதி விபத்துக்கள் ,ஆட்டோ விபத்துக்கள் என்பன இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .

பயணிகள் பேரூந்துகள் போட்டி போட்டு ஓடுவதால் ,அதில் பயணிக்கும் மக்களும் காயமடைந்து ,பலியாகியும் வருகின்றனர் .

உலக நாடுகளில் அதிக வீதி விபத்துக்களில் பலியாகும் மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடாக இலங்கை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .

மக்கள் சமூகம் விழித்து கொள்ளாத வரை இந்த வீதி வாகன விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிட தக்கது .

    காணி மோசடி செய்து விற்பனை
    Posted in இலங்கை செய்திகள்

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.

    அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.

    மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.

    காணி உரிமையாளர்

    இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
    Posted in இலங்கை செய்திகள்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம் .காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

    குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

    காணாமல் போன வாலிபன்

    குளியாபிட்டிய – கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

    அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    காணாமல் போவதற்கு முன்னர்

    காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    இது தொடர்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதவின் நண்பர் கூறும் போது,

    “செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு போன் செய்தார்.

    என் மகளுக்கு நியாயம் செய்தேன்

    அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” என்றார்.

    சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    காதலனை வீட்டுக்கு அழைத்து திட்டம் போட்டு காதலனை வீட்டில் வைத்து கொலை செய்த காதலியின் இந்த கேடுகட்ட செயல்பாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    காதலில் தகராறு

    காதலில் தகராறு ஏற்பட்டாலோ அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டாலோ விலகி செல்வது முறையாகும் .

    இவ்வாறு நம்பி வந்த ஒருவரை நயவஞ்சமாக படுகொலை புரிந்த செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

    இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு இடம்பெறுகின்ற வன்ம கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

    மனங்களில் ஏற்பட்ட சஞ்சல ,எதிர்பார்ப்பு ஆசைகள் என்பன அதிகரிப்பதன் விளைவே இந்த ,இவ்விதமான படுகொலைகள் அதிகரிக்க காரணம் என தெரிவிக்க படுகிறது .

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
    Posted in இலங்கை செய்திகள்

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா


    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா .தேர் திருவிழாவுக்கு விசேடமாக லண்டனில் தயாரிக்க பட்ட தேர் இதுவாகும் .

    தேர் தயாரிப்பது எப்படி

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் ,லெஸ்டர் , தேர் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் தேர் உருவாக்கத்தின் ஒரு பகுதி .

    -லண்டனை சேர்ந்த நந்தன் அவர்கள் செதுக்கி அசத்கியுள்ளார் .
    விசேடமாக சிறப்பான வடிவமைப்பில் தயாரிக்க பட்ட அம்மன் ஆலயத்தின் தேர் இதுவாகும் .

    தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,அந்த தேர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது ,.

    நம்ம தமிழர்கள் கடல் கடந்து வந்த பொழுதும் ,தமிழர்கள் தமது சமயத்தை காட்டி காத்து வருவதை இந்த தேர்த்திருவிழா எடுத்து காட்டுகிறது .

    அழகான சிற்ப வடிவமைப்பை அவர்கள் ,தேரின் முகப்பு பகுதிகளை செதுக்கி வடிவமைத்துள்ளார் .


    குறுகிய கால இடைவெளிக்குள் மிக , ,அழகுற செதுக்கி இருப்பதானது , வியக்க வைக்கிறது .

    தேரை நீங்களும் உங்கள் ஆலயங்களுக்கு தாயரிக்க ,லண்டன் சிற்பி நந்தன் அவர்களை நாடுங்கள் .

    தேரை வடிவமத்தை சிற்பி நந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .

    முழுமையான மேலதிக தகவலுடன் காணொளி கீழே இணைக்க பட்டுள்ளது .

    full video

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
    Posted in இலங்கை செய்திகள்

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மைதானத்தில்

    கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

    ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு

    “ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

    இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
    Posted in இலங்கை செய்திகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும்,

    குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

    யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

    வட மாகாணத்தில்

    குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

    இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

    அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர்.

    அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடு

    தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.

    எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.

    இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்..

    தேர்தலில் வெல்ல அரசியல் நுழைவு

    தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர்.

    இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

    இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன.

    இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

    மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது.

    ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றோம்.

    மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல்,

    இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்கிறோம்.

    ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை

    எனவே மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை.

    ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கல்வியில் கூட திருத்தங்கள் என்ற பெயரில் புதிய கொள்கைகளை கொண்டு வர முயன்றிருக்கின்றார்கள்.

    இவ்வாறான திருத்தங்கள் அல்லது புதிய கொள்கைகளை கொண்டு வந்து இந்த நாட்டில் உள்ள இலவச கல்வி முறை இல்லாமல் ஆக்குகின்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள்.

    இது இலவச கல்வியை காசுக்கு கொடுக்கிற செயற்பாட்டைதான் அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஆபத்து உள்ளது.

    இதேபோன்று இப்போது பாடசாலைகளை மூடுகின்ற செயற்பாட்டுகளை ரணில் ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

    இது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் உரிமையை பறிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைகின்றன.

    அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் காசு கொடுத்து படிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டையும் இவர்கள் செய்ய பார்க்கின்றார்கள்.

    அடக்குமுறை சட்டங்கள்

    இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற அடக்குமுறை சட்டங்கள் கல்வியை விற்கின்ற சட்டங்கள் ஆசிரியர், அதிபர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பளம் முரண்பாடுகளை பிரச்சனையை தீர்க்கிறது.

    இப்படியான பல பிரச்சினைகளை முன் வைத்து தான் இலங்கை ஆசிரியர் சங்கம் வருகின்ற மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது.

    இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமாக நாம் கூறுகிறோம்.

    அப்படி அரசாங்கம் செய்யாத விடத்து ஏனைய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாம் போராட்டங்களை முன்னெடுப்போம்.

    உண்மையிலே மக்கள் விரோத, மாணவர் விரோத, ஆசிரியர் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த உரிமையும் இல்லை.

    ஏனென்றால் அவர் மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி அல்ல.

    ஆனாலும் பெரமுனவின் 134 வாக்குகளை வைத்து தான் அவர் எல்லாத்தையும் செய்கின்றார்.. அவ்வாறு அவர் செய்கின்ற அனைத்தும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாகத்தான் இருக்கிறது.

    தேர்தலும் இல்லை

    குறிப்பாக தேர்தல் வைக்கிறேன் வைக்கிறேன் என்று சொல்லி ஓரு தேர்தலும் இல்லை. அவ்வாறு தேர்தல் என்பது வெறுமனே பேசு பொருளாக மட்டுமே இருக்கிறது.

    மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அல்லது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமையை வாய்ப்பை அளிக்காத ரணில் ராஜபக்ச அரசாங்கம், மறுபக்கத்தில் கல்வி உட்பட நாட்டின் எல்லா உரிமையும் அழிக்கின்ற செயற்பாடுகளை தான் செய்கின்றது என்றார்.

    Error: View 9293b2au4w may not exist
    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
    Posted in இலங்கை செய்திகள்

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை

    காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை முசுலீம் மக்கள் அந்த நிதியை இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்தனர் .

    பாலஸ்தீனம் காசா பகுதியில் பாதிக்க பட்டுள்ள ,பாலஸ்தீன காசா சிறுவர்கள் நலன் கருதி இந்த நிதி திரட்ட பட்டுள்ளது .

    காஸாவுக்கு வழங்கிட நிதி

    அவ்வாறு காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கைதிரட்ட பட்ட நிதியே தற்போது பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கும் முகமாக மட்டக்களப்பு முசுலீம்கள் இணைந்து ,இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் .

    இவ்வாறு திரட்ட பட்ட பெரும் தொகை பணமே ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கையளிக்க பட்டுள்ளது .

    இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

    இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கடந்து செல்கின்ற பொழுதும் ,இதுவரை இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன சிறுவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை ஐநா கண்டுகொள்ளவில்லை .

    இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நடத்தும் ஆக்கிரமிப்பு ,இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மறுத்து ,மேற்கு நாடுகள் ,அமெரிக்கா என்பன இஸ்ரேலுக்கு ஆதரவாக இனப்படுகொலைகளை நடத்துவதை ஊக்குவித்து வருகின்றன .

    மக்கள் போருக்கு எதிராக குரல்

    மக்கள் போருக்கு எதிராக திசை திரும்பியுள்ள பொழுதும் ,அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் ,தமது பொருளாதரத்தை கைப்பற்றி கொள்ள ,இஸ்ரேலுக்கு ஆதாரவாக செயலாற்றி வருகின்றனர் .

    ஒவ்வொரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் ,இஸ்ரேலுடன் நெருங்கிய பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதனால் தமது பொருளாதாரத்தை காப்பாற்றிட ,தமது நலன் சார்ந்து செயல் ஆற்றி வருகின்றனர்

    இவ்வாறான கால பகுதியில் பாலஸ்தீன சிறுவர்களை காப்பாற்றிட இலங்கை முஸ்லீம்கள் ,சேகரித்த இந்த பணம் பாராட்டை பெற்றுள்ளது .

    இலங்கை முஸ்லீம்கள்

    ஸ்ரீலங்கா வாழ் முசுலீம்கள் தமது மத அடிப்படையிலும் ,மனிதபாபிமான செயல் பாட்டின் அடிப்படையில் ,பாலஸ்தீன குழந்தைகள் நலன் கருதி ,திரட்டிய பணம் உரிய முறையில் அந்த மக்களுக்கு சென்று சேரும் வகையில் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

    காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல்

    பாலஸ்தீனிய காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுத்து இருந்ததுடன் ,பல அமைச்சர்களும் தமது ஆதரவை பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கி இருந்தனர்.

    இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த நன்கொடை நிதி கையளிக்க பட்டுள்ளது .

    வர்த்தகர்கள் விளையாட்டு குழுக்கள் ,பள்ளிவாசல்கள் என்பனவற்றின் ஊடக சேகரித்த பணமே இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்க பட்டுள்ளன .

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு

    கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்

    கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், தெரிவிக்க பட்டது .

    பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

    கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
    Posted in இலங்கை செய்திகள்

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியால் சிக்கினார்

    தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில்

    யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

    பெண்ணின் சகோதரி உயிரிழப்பு

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

    பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை

    ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.

    ஆதரவற்றோர் இல்லத்தில்

    பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.

    பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை

    அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு

    உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

    யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை

    சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

    விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.

    சகோதரன் கைது

    அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

    பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது

    அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு

    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு


    போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்.

    சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்தது. சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

    கொழும்பு ஐ.ரி.சி. ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.

    அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்றார்.

    எதிர் வரும் தேர்தலில் மக்கள் ஆதாராவை பெற்றுக்கொள்ள ரணில் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிட ஹக்கது .

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
    Posted in இலங்கை செய்திகள்

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

    திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

    அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.

    மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றி பையில் போடுமாறும் கூறியுள்ளார்.

    இதன்போது, மருத்துவர் வேடமணிந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவமனையில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .