Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாணவன் அடித்து மாணவன் பலி
மாணவன் அடித்து மாணவன் பலி
மாணவன் அடித்து மாணவன் பலி ,இந்த படுகொலை ,கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொரு மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (வயது 13) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் திடல் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், திங்கட்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ,மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் ,இந்த மாத இறுதிக்குள் மக்களுக்காண காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.,
கொட்டகலை பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.
ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.
கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.
வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்
அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.
எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணிக்ளுக்கான உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு .பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக
அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான
வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் “அத தெரண” இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்திடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, தற்போதைக்கு குறித்த சம்பள உயர்வை வழங்க முடியாது என தெரிவித்தார்.
“ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையை மிக வேகமாக இழந்து வருகிறது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
செலுத்த முடியாத ஒன்றை விரும்பினால், சட்டரீதியான பிரச்சினை ஏற்படும். முன்மொழிவு முற்றிலும் நேர்மாறானது. வர்த்தமானி வந்திருப்பது தெரியும்.
எதிர்காலத்தில் என்ன செய்யாலம் என்று பார்ப்போம்” என்றார்.
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்
திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.
ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.
தேர்தல் நிகழ்த்த படவுள்ளதை அடுத்து தற்போது ,ஆளும் அரசு பொருட்களின் விலைகள் முதல் யாவும் குறைப்பு செய்து வருகிறது குறிப்பிட தக்கது .
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன் ,அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க
நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு ஆதரவளிப்பதே தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.
தாம் ரணிலின் தேவைக்காக கடைக்குப் போகவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் கடைக்குப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி அரசியல்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“71 இடதுசாரி அரசியல் கட்சியான திருமதி சிறிமாவோ அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, மக்கள் விடுதலை முன்னணி கலவரங்கள் செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது.
அன்று அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டுவர உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய
இராணுவம் கொண்டுவரப்பட்டபோது ஜே.ஆரை எதிர்த்து அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற திருமதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு உழைத்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்த வெற்றிக்காக உழைத்தார்கள்.
அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, நாட்டில் 71 கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.
அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி போடப் போகும் போது என்ன சொன்னார்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வெறும் வதந்தியைக் கதைத்தார்கள் .
மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்.
உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்டபோது, சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறின.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய ஒருவர் வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றோம். அப்போது, வெறும் வாய்ப் பேச்சு பேசும் அனைவரும் இதை ஏற்க அஞ்சினார்கள்.
அதற்குள், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து மக்களைக் கொன்று இந்த நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சித்தது.
மொட்டுக் கட்சியின் ஆதரவு
அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும் தான் இந்த நாட்டை நான் பொறுப்பேற்பேன், மொட்டுக் கட்சியின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார். நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவும் முடிவுகளை மட்டுமே எடுப்பேன் என்றார்.
அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது.
இதைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் நாங்கள் அல்ல. அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம்.
2022 மே மாதத்தின் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க
நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார்.
எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் கடைக்கு போகமாட்டேன்.
இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் போகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.
நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம்.
மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம். மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை கிழவன், கிழட்டு மைனா என்று அழைக்கிறார்கள்.
பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது
அடுத்ததாக, இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று திருமதி சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள்.
கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும் என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
கிழவர்கள் என்று சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம்
இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை
அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், அந்தந்த முகாம்களில் கிட்டத்தட்ட 1,600 வீரர்களை தயார் நிலையில் வைக்க முப்படைகளின் தலைவர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
நடைபெறலாம் என்பதாலே இந்த பாதுகாப்பு பலமாக இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வானில் ஒருவர் கடத்தல்
வானில் ஒருவர் கடத்தல்
வானில் ஒருவர் கடத்தல் ,நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய ஷொருகம பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை
அப்பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வேன் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக 2 தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) – 0718 591 260
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி – 0773 528 325
மக்கள் காணியை அபகரித்த பிக்கு
காணியை அபகரித்த பிக்கு
மக்கள் காணியை அபகரித்த பிக்கு ,திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்
விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு
சிறுபோக நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் காணியை அபகரித்த பிக்கு
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும்
விவசாயக் காணிகள்
திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்பு த் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வர்த்தமானி அறிவித்தல்
2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா
கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்,சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா,Saregamapa சாரங்கா,zeetamil saranga
சுவிஸ் ஈழபெண் சரிகமபா பாடல் போட்டியில் கலந்து கலக்கல் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா வரதராஜன் பாடி அசத்தினார் .
சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா நிகழ்வு ,இனிமையான குரலில் அவர் பாடிய அந்த பாடல் மக்களை அசரவைத்தது .
Saregamapa சாரங்கா பாட்டை தொடர்ந்து பார்த்து மகிழ மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர் .
சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா
சாரங்கா பாடால் தெரிவில் அவருக்கு பச்சை விளக்கு ஒளிர நடுவர் ஒருவர் அனுமதி வழங்கவில்லை .
அதனை அடுத்து அவர் காத்திருப்பில் வைக்க பட்டுள்ளார் .ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் சாரங்கா கலந்துள்ளதால் ,ஈழ தமிழர்கள் மத்தியில் மிக பெரும் பரபரப்பை இந்த சரிகமபா நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது .
zee tamil சரிகமாபாவில் இம்முறை ஈழ தமிழர்கள் வெற்றி கொடி காட்டுவார்களா ,அல்லது ஏமாற்ற படுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே .
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை ,யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர்.
இதன்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு பணியாளர்களுடனும் கலந்துரையாடலில் இக்குழு ஈடுபட்டது.
இதன் போது ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் நோர்வே பாராளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன் கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓ’ரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.
ஆப்பு வைக்க வந்தார் எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் புலிகளை அழித்த அதே எரிக் சொல்கெம் மீளவும் ,இலங்கை வந்துள்ள செயல் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது .
ரணில் விரித்த வலையின் ஊடாக மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட எரிக்சோல்கெம் புலிகளை திட்டம் போட்டு அழித்தார் .
இப்பொழுது இலங்கை வந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்புப் பிரிவு
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க திட்டம்
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம் ,நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சிலோன் டீ’ என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம், தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில்
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் செஃப் தோமஸ் குக்லர் ஆகியோர் டில்மா கறுவா தயாரிப்புகளை அடையாள ரீதியில் வெளியிட்டனர். இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
கறுவாப் பயிர் விவசாயம் அக்காலத்தில் நம் நாட்டின் முக்கிய பயிராக இருந்தது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தென்மேற்கு
ஈரவலயப் பிரதேசத்திற்கு எமது இராச்சியங்கள் இடம்பெயர்ந்த போது, கறுவாத் தொழில்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றது.
எங்களிடம் கறுவா இல்லை என்றால் தம்பதெனிய, யாப்பஹுவ, கம்பளை, ரைகம, கோட்டே ஆகிய இராச்சியங்கள் தோன்றியிருக்காது. இப்படித்தான் கறுவா நம் நாட்டின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி ,இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மழையுடன் மின்னல்
நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மின்னல் தாக்குதல் காரணமாக அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கோடைகாலத்தில் ஏற்பட்ட கலாநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கையின் தாக்குதலில் சிக்கி அண்ணன் .தங்கை .பலியான சம்பவம் நாடளாவிய ரீதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த தினம் முல்லைத்தீவு பகுதியிலும் இடி தாக்குத்தலில் சிக்கி முன்னாள் போராளி ஒருவர் பலியாகி இருந்தார் .
அதனை அடுத்து தற்போது மின்னல் தாக்கி அண்ணன் தங்கை பலியாகியுள்ளனர் .
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
கொரியா சென்ற 2000 இலங்கையர்கள் ,இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய வேலை
கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களினால் ,வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பல இலங்கையர்கள் செல்கின்றனர் .
அவ்விதம் தற்போது கொரியாவுக்கு பெரும் தொகையில் இலங்கையர்கள் சென்றுள்ளது குறிப்பிட தக்கது
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம் ,நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அதிக வெப்பம்
இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி (வர்த்தக பழம்) மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அதே நேரம் நுங்கு சர்பத் போன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை
மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை இடம் பெற்று வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக மக்கள் அதிகம் இவ்வகையான நொங்கு தர்ப்பூசணி என்பனவற்றை அதிகம் வாங்கி உட்க்கொண்டு வருகின்றனர் .
.வெய்யில் காலநிலை தொடர்பாகி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் ,இந்த பழ விற்பனை சூடு பிடித்துள்ளது .
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம் ,ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் டெய்லி மிரர் மற்றும் லங்காதீப நடத்தும் அரசியல் விவாதத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று ஏற்றுக்கொண்டது.
டெய்லி மிரர் அழைப்பிதழை NPPயின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏற்றுக்கொண்டார், NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவாதத்திற்குத் தயாராக இருப்பதாகவும் அதில் கலந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் டெய்லி மிரர் உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்ததுடன் பங்கேற்பதற்கான மறுமொழஜயைப் பெற குழு எதிர்பார்த்துள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு அழைப்புக் கடிதம் கிடைத்துள்ளதை எனினும் நேற்று மாலை உறுதிசெய்த பிரேமதாசவின் அலுவலகம், விவாதங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வெற்றி பெற்றால் தாம் நாட்டுக்கு ஆற்றவுள்ள பணி , பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகள் மேலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான
திட்டங்கள் குறித்த நேரலை விவாதம்
திட்டங்கள் குறித்த நேரலை விவாதம் ஒன்றை மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் கொண்டு நடாத்த டெய்லி மிரர் மற்றும் லங்காதீப கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி அவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பி வைத்தது.
இந்த நேர்காணல் டெய்லி மிரர், லங்காதீப ,தமிழ் மிரர் மற்றும் சண்டே டைம்ஸ் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மூன்று வேட்பாளர்களும் அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டவுடன் விவாதத்தை நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும்.
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
இலங்கை வவுனியா, ஏ9 வீதியில் பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் விசேட சோதனை நடவடிக்கை
வவுனியா தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .
அதன் போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை அடுத்தே சாரதி கைது செய்யப்பட்டார் ,இவ்விரு மதுபோதையில் பேரூந்தை செலுத்தி செல்வதனால் பல விபத்து சம்பவங்கள் ஏற்படுகின்றன .
எனினும் தெய்வாதீனமாக போலீசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனை காரணமாக அந்த விபத்ஹு தவிர்க்க பட்டுள்ளது .
இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சாரதியின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .
அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .
அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .
விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்
மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .
அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்
தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .
எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .
குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .
வாலிபன் மேல் விழுந்த இடி
வாலிபன் மேல் விழுந்த இடி
முல்லைத்தீவு ஐயன்குளம் பகுதியில் வாலிபன் மேல் விழுந்த இடி யில் ,அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
மரத்தின் கீழ் நின்ற 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடி விழுந்துள்ளது .
கனமழை மின்னல் இடித்தாக்கம் ஏற்பட்ட பொழுதே ,மேற்படி வாலிபன் பலியாகியுள்ளார் .
மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்ற பொழுது அவ்வேளை ,அந்த இடியானது வாலிபனை தாக்கியதாக அங்கிருந்த்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
இடி விழுந்து முன்னாள் போராளி பலி
தமது குடும்ப தலைவரை இழந்து மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் கண்ணீரில் உறைந்துள்ளனர் .
சடலமானது மல்லாவி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,மரண பரிசோதனைகள் முடிவுற்றதும் ,உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

இடி விழுந்து பலியான வாலிபர் சடலம் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர் .
மேற்படி சம்பவம் அந்த ஐயன்குளத்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இயற்கையின் தாக்குதலில் முன்னாள் போராளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார் .தமிழீழத்தை நேசித்து அதன் மீட்புக்காகத் தன் வாழ்நாளை வரித்துக்கொண்ட திரு.ஈழவேந்தன் ஐயா
அவர்கள் காலாமானார்.(M.K eelaventhan passed away)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் காலாமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கனடா – டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான கனகேந்திரன் என்னும் ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
ஈழவேந்தன் மறைவையொட்டி மக்கள் இரங்கல்
அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். Toronto Western வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஞாயிறு இரவு (உள்ளூர் நேரம்) உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழ மண் மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக்கொண்டார்.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் நாடாளுமன்றம் சென்றார்.
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த அவர் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும் மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.
இதனையடுத்து இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறினார். 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஈழவேந்தன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயலாற்றிய ஈழவேந்தன்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவை கடுமையாக விமர்சித்திக் கொண்டிருந்த காரணத்தினாலும் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கொழும்பு – இரத்மலானையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஈழவேந்தன் 2004 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.
ஈழம் வெல்ல எழுந்தவன் – பல
இன்னல் தாங்கி நடந்தவன்
பாரில் ஏறி அழுதவன்
பகை நிலை சொன்னவன்






































