வௌ்ள அபாய எச்சரிக்கை
வௌ்ள அபாய எச்சரிக்கை ,அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கால நிலை காரணமாக பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ளப் பெருக்கு
அதிக வெள்ளப் பெருக்கு பல பகுதிகளில் இடம்பெற்று வருவதால் ,அந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பல உதவிகளை வழங்கி வருகிறது .
ஆண்டுதோறும் இலங்கையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் அதிகம் பாதிக்க பட்டு வருவதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .












