Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம் ,பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த
எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன்
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நகர சபை ஊழியர் கொலை
நகர சபை ஊழியர் கொலை
நகர சபை ஊழியர் கொலை தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் 46 வயதுடைய அநுர கொஸ்தா என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், சந்தேகநபர்கள் சுட வந்த மோட்டார் சைக்கிள் என்பன பல பாகங்களாக பிரித்து வேறாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (18) ஹோமாகம பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது, அவரது சூட்கேஸில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதன்படி, சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், கொலைக்காக மோட்டார் சைக்கிளில் சந்தேக நபருடன் வந்த மற்றைய நபர் அத்துகிரிய மொரட்டுவாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, மோட்டார் சைக்கிள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பாதுக்க பிரதேசத்தில் உள்ள விமானப்படை வீரர் தங்கியிருந்த வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட அசங்க மற்றும் அசந்த குமார் என்ற லெடா ஆகியோர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட விமானப்படை வீரர் ஹந்தபாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் படுகொலை
ஒருவர் படுகொலை
ஒருவர் படுகொலை விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பிரதேசத்தில் நேற்று (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய மேல் நவதகல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் விற்பனை நிலையத்திற்கு குடிபோதையில் வந்த நபரே இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் நவதகல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவராவார்.
சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு ,பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூட உள்ளது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதெனவும் தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும்
வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது
வேன டொல்பின் கொள்ளை
வேன டொல்பின் கொள்ளை
வேன டொல்பின் கொள்ளை ,மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கோடியே 2 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான வேனின் கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) அன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வேன் உரிமையாளர் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பேரில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிபுரையில், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, குறித்த வேன் கடத்தலுக்குச் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை இரத்தினபுரி காவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஒபேவத்தை பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயது உடைய காவத்தை- ஒபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமையக் குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ முகாமில் சுகயீனம்
இராணுவ முகாமில் சுகயீனம்
இராணுவ முகாமில் சுகயீனம் ,மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் தொற்றையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் உள்ள மேலும் முகாமில் இருக்கும் மேலும் 500 இராணுவ வீரர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் குறித்த இராணுவ முகாமில் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை ,கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள்
மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி ,இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.
“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை
புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம் ,வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில்,
வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை ,ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்கrpளித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது
ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது அவர்களை மக்கள்
நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய
தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.
தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை.
மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.
நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.
நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.
தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம் ,தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி
அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம் ,இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.
IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட
சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி ,எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடந்தது.
இதன்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீன அதிபர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீன-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் கோவிட் ஒரு சீன வைரஸ் என்று டிரம்ப்
கூறிய பிறகு, அந்த உறவுகள் வீழ்ச்சியடையும் நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை ,இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை
நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மையத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மட்டுமே அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை காலத்தில் தேர்வு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒரு கண்காணிப்பாளர் 15 நாட்களில் 20 பரீட்சை மையங்களை கண்காணிக்க வேண்டும்
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர் ,பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து
தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
அருகிலுள்ள ஜனநாயக நாடாக தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன் இருநாட்டு மக்களின் நலனுக்காக
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு
10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு
10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார்.
மேலும், 10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார்.
இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறினார்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில் ,எதிர்வரும் திங்கட்கிழமை ஆளும் அனுரா அரசில் 25 அமைச்சர்கள் நியமிக்க படவுள்ளதாக அந்த அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
22 மில்லியன் மக்களுக்கு 25 மைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து நாதரை கட்டி காப்பாற்ற போகின்றனர் .
இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெறும் எனவும் ,மக்களுக்கு உரிய எதிர் பரப்புக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல் ,நடந்து முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலின் அடைப்படையில் கிடைக்க பெட்ரா வாக்கு முடிவுகளின் அடைப்படையில் மகிந்த மகன் நாமல் இராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கின்றார் .
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் இவருக்கு மக்கள் மிக பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது .
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு ,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு
அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.
மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


























