Tag: தேர்தலுக்கு
மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்
மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்
மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல் ,மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை
நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்கள்
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா அல்லது
ஒன்றாக நடத்தப்படுமா என்பதை அது முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வாறு தனித்தனியாக நடத்தப்பட்ட வழக்குகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
“மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும். அடுத்த ஆண்டு (2026)
தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மாகாண சபைத் தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த ஆண்டும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு அவை நடத்தப்படாவிட்டால், அந்தப் பணம் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்படும்
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு ,பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூட உள்ளது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதெனவும் தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும்
வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு
தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து விசேட அறிவிப்பு ,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு
அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.
மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை.
எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை.
இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு.
அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.











