Tag: நள்ளிரவு
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை ,கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள்
மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழுக்களுக்கு இடையேயான முரண்பாடு இச்சம்பவத்திற்கு வழியமைத்துள்ளதாக
ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
by நிருபர் காவலன் - உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
by நிருபர் காவலன் - நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
by நிருபர் காவலன் - 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
by நிருபர் காவலன் - மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
by நிருபர் காவலன்








