நீராட சென்ற 2மாணவர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

நீராட சென்ற 2மாணவர்கள் மாயம்

நீராட சென்ற 2மாணவர்கள் மாயம்

நீராட சென்ற 2மாணவர்கள் மாயம் பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு

இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன 2 மாணவர்களும் கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, அந்த கடற்பகுதிக்கு நீராட சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி

ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி

ரணில் கைது எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின்

முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தமது எக்ஸ் கணக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை

ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் அவர் கவலை வௌியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.

அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது.

ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு

ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன்,

ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் பொலிஸார் முன்னதாக கைது செய்திருந்தனர்.

தாம் பிரதி பொலிஸ் மா அதிபர்

இதனை அடுத்து தாம் பிரதி பொலிஸ் மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும்

அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

அபிவிருத்தி பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரியளவான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அதன் முதற்கட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் புதிய தெங்கு முக்கோண வலையத்தின் அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டுக்கான குறிப்பாக மக்களுக்காக பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் தொடங்கும்.

யாழ்ப்பாணத்தின் மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை ஆரம்பிப்பது

யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்தில்

மற்றும் யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டை பெறுவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். அதைத் தீர்த்து,

இணையவழியில் அந்த வசதியை வழங்க நாங்கள் எதி்ர்பார்க்கின்றோம். மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு இருவர் கைது

துப்பாக்கிச் சூடு இருவர் கைது

துப்பாக்கிச் சூடு இருவர் கைது பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொரளை பொலிஸார்

சந்தேக நபர்களை பொரளை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியஅதிகாரிகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியஅதிகாரிகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியஅதிகாரிகள் நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த

தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கை

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில்

ஈடுபட முன்னதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு

விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்

ரணில்கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர்

ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் ,ரணில் கைது மஹிந்தா குடும்பம் ஆட்டம் யட்டி அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி

ஆளுகின்ற அணுரகுமர திசை நாயக்கா ஆட்சி இலங்கை மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வருவதாகவும், அதனால்

ஊழல்வாதிகளை அவர் கைது செய்து வருவதாக யட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் யட்டி அமைச்சர் வடக்கு தமிழருக்கு இதுவரை என்ன செய்தார் என்பது தொடர்பாக பதில் வழங்கவில்லை .

முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன

ஆளுகிற ஜனாதிபதி அவர்கள் தங்களுடைய தீர்வு தொடர்பாக முள்ளிவாய்க்கால் நிலவரம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இதுவரை கருத்து உரைக்கவில்லை .

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தடைகளை விதித்து தமிழ்களை அடக்கி வருகிற பொழுது அது பற்றி பேச மறுக்கும் யட்டி அமைச்சர் தற்பொழுது மஹிந்த குடும்பம் ஆட்டம் கண்டுள்ளதாக அடித்து விட்டிருக்கிறார்.

ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்

ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்

ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் ஊடகச் சந்திப்பை மேற்கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மக்கள் ஓட்டுக்கள் இன்றி இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கா கைது

செய்யப்பட்டதை கண்டித்து, ஊடகவியல்களை சந்தித்து எதிர்க்கட்சியினர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்று கூடிய தமிழ் சிங்கள கட்சிகள் இணைந்து தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த கண்டனத்தில் மனோ கணேசன் மற்றும் றவு கக்கீம் இணைந்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .

மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி

தமிழருக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி அடித்து ரணில் ரொம்ப நல்லவர் அவர் கைது செய்தது தவறு என நாடகமாடி இருக்கிறார்.

இவர்களெல்லாம் கூலி குலுக்கல் தான் என்பதை இந்த சம்பவங்கள் எடுத்து காண்பித்துள்ளது.

லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.

அழகிய பெண் படுகொலை

குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.

இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .

குறித்த கொலையாளி கைது

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது

பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை

அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்

முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.

தங்க ஆபரண விற்பனை நிலையம்

இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை

ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,

ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா

யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா

யூடியூபர்களை சாடிய சஜித் பிரேமதாசா ,யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) காலை தேசிய வைத்தியசாலைக்கு சென்றார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட்டு அங்கிருந்து வெளியேறும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தால் பெற்றுத்தரப்படும் தீர்ப்புக்கள் மற்றும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் பல நாட்களுக்கு முன்பே, அரசியல் கட்சி சார்

யூடியூப் ஆர்வலர்கள் முன்கூட்டியே எவ்வாறு கருத்து வெளியிடுவர் என்பது குறித்து பிரச்சினை காணப்படுகின்றது.

இவ்வாறான விடயமொன்று நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதியை நிலைநாட்டும் செயற்பாடு

இது நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

முறைமையில் மாற்றத்தைக் (சிஸ்டம் சேன்ஞ்ச்) கொண்டு வருவோம் எனக் கூறி இதனையா செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகிறோம்.

அரசியலமைப்பின் சட்டங்கள் அல்லது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.

நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரு அரசியல் யூடியூபர் முன்கூட்டியே அறிவிப்புச் செய்ய முடியாது.

சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் மட்டுமே இதுபோன்ற ஒரு விடயம் நடக்கும்.

ஆனால் நம்மைப் போல ஜனநாயக ஆட்சி செய்யும் நாட்டில் இதுபோன்ற ஒரு விடயம் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு யூடியூப் சேனல், கைது செய்யப்படவிருக்கும் நபரின் பெயர், கைது செய்யப்படும் திகதி மற்றும் அவர் சிறையில் கழிக்கப்போகும் நாட்களின்

எண்ணிக்கையைக் கூட முன்கூட்டியே வெளியிடுவதானது, நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

யூடியூப் சேனல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை. சட்டத்தை அமுல்படுத்துவதில் சகலரையும் சமமாக நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமல்ல.

என்றாலும், அரசியல் யூடியூபர்கள் நீதியை நிலைநாட்டும் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவது சட்ட ஒழுங்கு முறையில் அமைந்த விடயமொன்றல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தற்சமயம் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை நடத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவல்ல.

50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலை

நாட்டில் சுமார் 50 சதவீதமானோர் தற்போது ஏழ்மை நிலையில் இருந்தாலும், சுமார் 75 சதவீதமானோர் அஸ்வெசும நிவாரணத்தைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை, நாட்டில் இதற்கான விடயம் நடப்பதாக இல்லை.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் பிரயோக ரீதியான எந்தத் தீர்வுகளும் இல்லை.

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

2028 முதல், வருடாந்தம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டி காணப்படுகின்றது.

இதற்கான பலம் இயலுமை நமது நாட்டிடம் உள்ளதா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் தற்போது போகும் போக்கைப் பார்த்தால், 2028 ஆம் ஆண்டுக்குள் மீண்டுமொரு புதிய வங்குரோத்து நிலை உருவாகக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.

தற்போது போகும் இந்த முறை பொருத்தமான முறையல்ல. இந்த போக்கால் நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக இல்லை.

எதிர்க்கட்சி கூட நாட்டைக் கட்டியெழுப்பும் கருத்துக்களின் அடிப்படையிலயே முன்வருகின்றன. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைத் தொகுப்பின்

அடிப்படையில் ஒன்று சேருவோமே தவிர, அதிகாரத்தைப் பெறுவதற்கோ அல்லது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கோ நாம் ஒன்று சேர மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

போலீஸ் கண்காணிப்பாளராக பதவி பெற்று வந்துள்ள உதவி போலீஸ் அதியஸ்தர்களாக இவர்கள் அனைவரும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்வு

போட்டி பரீட்சை அடிப்படையில் இந்த ஆண்டு 25ஆம் தேதி முதல் அமலாகும் வகையில் உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்காக போலீஸ் கண்காணிப்பாளர் போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் பிரதான போலீஸ் கண்காணிப்பு ஆகிய தரங்களில் சேவை ஆற்றியவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று பெண் போலீஸ் அதிகாரி

இவர்களில் மூன்று பெண் போலீஸ் அதிகாரிகளும் ,02 போலீஸ் விசேட அதிரப்படை அதிகாரிகளும் ,உதவ போலிஸ் அத்தியஸ்தகர் பதவிக்கு தர உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .

காவல்துறை பதவிகள் தரப்பு உயர்த்தப்படுகிற பொழுதும் இவர்களால் இலங்கையில் இடம்பெறுகின்ற அதிகமான குற்றங்களை தடுக்க இயலாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன

ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன

ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

இன்றைய இலங்கை அரசியல்

இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில்

இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்

ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .

தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்

சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.

இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.

ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண் ,யாழ் பொது வைத்தியசாலையால் கொல்லப்பட்ட பெண் விடயம் தொடர்பாக பல்வேறுபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் பலி

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் ஒருவரை தற்பொழுது பலியாகி உள்ளார்.

24 வயதான இளம் தாயே இவ்வாறு நோய்க்கு குணப்படுத்த சென்ற வேளையில் , அதற்கு சிகிச்சை

பலனின்றி அவர் மரணமாகியுள்ளதாக ,யாழ்ப்பாண போதனை வைத்தியசாலை மீது குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது .

எனினும் இவரது மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது .

யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை

யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை காரணமாகவே இந்த இளம் தாய் மரணம் ஆகி உள்ளதாக தற்பொழுது புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பயனாளிகள் நோயாளிகள் வைத்து வருகின்ற நிலையில் தற்போது இந்த பெண் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .

மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்

எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .

தலைவரை பார்க்க ஓடிய சஜித்
Posted in இலங்கை செய்திகள்

தலைவரை பார்க்க ஓடிய சஜித்

தலைவரை பார்க்க ஓடிய சஜித்

தலைவரை பார்க்க ஓடிய சஜித் பிரேமதாசா நிலவரம் பரபரப்பாகிறது,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதியாக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவை சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டு சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின்

கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்தின் உள்ளதாக இவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற

நிலையில் அவரைப் பார்க்க எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதிகள் ஓட்டம் பிடித்துள்ளார்கள் .

சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல்

இந்த வருகை என்பது பிரிந்து கிடந்த கட்சிகளை ஒன்றிணைக்க சிறையில் இருந்த வாரே அடுத்த அரசியல் நாடகத்தை சதுரங்கத்தை ரணில் ஆரம்பித்திருப்பது காண முடிகிறது.

ஆகவே இந்த ஒன்று சேர்தல் என்பது ஆளுகிற அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாகவே பார்க்க முடிகிறது.

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா
Posted in இலங்கை செய்திகள்

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலில் எதிரும் புதிருமாக காணப்பட்ட ரணில் .அவ்வாறான நிலையில் மஹிந்தா அணி தற்பொழுது சம்மந்தியாகிவிட்டதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் ரணில் கைது

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை

,ஐந்தாவது ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஓடோடி சென்று பார்வையிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி இடம்பெறுவதாக காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்கள், அவர்களுக்குள் ஒரு விடயம் வருகிற

பொழுது ஓடி சென்று கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுகிற விளையாட்டாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆகவே அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து இன்னொரு கட்சியை சாடுவதும் ,உள்ளக ரீதியாக ஓடிப் பிடித்த விளையாடுவோம் என்பது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளதை கவனிக்கப்படுகிறது.

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக

தற்பொழுது சிறை வைத்தியசாலையில் ரணில்

தற்பொழுது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் புரிந்த மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இரத்த அழுத்தத்தின் காரணமாக

அதனை அடுத்து அங்கு மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது அவர் வைத்தியசாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு இதுவாக காணப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கையில் சலசலப்பை பரபரப்பை ஏற்படுத்தி இருக்க நிலையில் இது ஒரு கபட அரசியல் என்பதாக பேச படுகிறது .

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த 07புதிய தூதரகத்தலைவர்கள் 07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று (22) சந்தித்தனர்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்த

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகப் பிரதானிகளை வாழ்த்திய ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில்

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உடனடியாகத் தலையிடுமாறும் அறிவுறுத்தினார்.

நாட்டின் தற்போதைய தேவை

மேலும், இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், எனவே நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும்

சவால்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறிப்பாக வெளிநாட்டு வருமானம் ஈட்டுவதில் முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 04 துறைகளில், தூதரகங்களுக்கு விசேட

பொறுப்பு இருப்பதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தின் வெளிப்புற ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கிய காரணியாக இருக்கும் அனைத்து அந்நிய செலாவணி வழிகளும்

தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகளைச் செய்வது காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட புதிய இராஜதந்திரிகள் பின்வருமாறு.

  1. இந்தோனேசியத் தூதுவர் – எஸ்.எஸ். பிரேமவர்தன 02. பிரேசில் தூதுவர் – சி.ஏ.சி.ஐ. கொலொன்ன 03. மாலைதீவு உயர்ஸ்தானிகர் – எம்.ஆர். ஹசன் 04. துருக்கியின் தூதுவர் – எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ 05. நேபாளத் தூதுவர் – ருவந்தி தெல்பிடிய 06. தென் கொரியாவின் தூதுவர் – எம்.கே. பத்மநாதன் 07. ஓமான் தூதுவர் – டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்

செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.