Tag: வர்த்தமானி
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு ,பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைத்து ஜனாதிபதி அனுர குமார
அதிவிசேட வர்த்தமானி
திசாநாயக்க ஒரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர் 27, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் மூலம்
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டது.
பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படை
இருப்பினும், ஜனாதிபதி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படைகளையும் அழைக்கும்
நடைமுறை, அடுத்தடுத்த அரசாங்கங்களால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் நடைமுறையாக மாறியுள்ளது
அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்
அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானி திருத்தம்
அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம் ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்.
ரயில் நிலைய அதிபர்கள் பதவி
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு .
திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மூன்று நீதியர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட
போது, சிரேஸ்ட அரச சட்டத்தரணி இதனை அறியப்படுத்தியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயநதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மனுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார்.
அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே
பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதன் ஊடாக தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் உள்ள வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் குறித்த
வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதியான ரயில்வே திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் ,காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025
திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக
வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் வழக்கு
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின்
பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு ,2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும்.
புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்
செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும்.
அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
NDF தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
கொழும்பு, டிசம்பர் 11 (டெய்லி மிரர்)- புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல் ஆணையம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
விசேட வர்த்தமானி வெளியீடு
விசேட வர்த்தமானி வெளியீடு
விசேட வர்த்தமானி வெளியீடு எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உப தலைவராக, வகொட பத்திரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.
மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15இல் வெற்றி பெற்றுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
























