Author: நலன் விரும்பி
எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
இலங்கையில் நாவின்ன சாந்தி அருகில் மக்கள் எரிபொருளை தரும்படி கோரி
போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
இதனால அந்தவழி சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது ,
பிரதமர் மாறிய நிலையிலும் மக்களின் தற்கால நெருக்கடிகளை இவர்களினாலே தீர்க்க முடியாது போயுள்ளது குறிப்பிட தக்கது
ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம். அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம்.மனோ கணேசன்
ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம். அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம்.
- தமிழ் முற்போக்கு கூட்டணி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. ஆனால், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம். பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.
தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம். ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.
இது தொடர்பில் கூட்டணி சார்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ரணில் விக்கிரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.
நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது. இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20ஐ வாபஸ் வாங்கி,
மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச
பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை.
இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் பொழுது அமைச்சர்கள் எம்பிக்கள் வீடுகளும் தாக்குதளுக்கு உள்ளாக்க பட்டன
,இதனை அடுத்து தற்போது ஒவ்வொரு எம்பிக்கும் ஆறு போலீசார் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவு வழங்க பட்டுள்ளது
இது அணைத்து கட்சி எம்பிகளுக்கும் உள்ளடங்கும் என்பது குறிப்பிட தக்கது
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது
தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்
மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது
ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
சிரியா வடக்கு அலப்போ பகுதியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்தக அரச
இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் , அதில்
பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,பேரூந்து தீ பற்றி எரிந்துள்ளது
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை
ஸ்பெயின் நாட்டில் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு, பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும்
பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள்
மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான்.
பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் அசவுகரியமாகவும், உடல்நலமின்றியும் காணப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்ட ஸ்பெயின் நாட்டு
அரசு அந்நாட்டு பெண்களை மகிழ்விக்கவும், அவர்களது நலனில் அக்கறை கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த விடுமுறை அறிவிப்பினால் அந்நாட்டில் உள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் அமைப்பு, கல்வியாளர்களுக்கு மூன்று நாள்
‘மாதவிடாய் விடுமுறை (பீரியட் லீவ்)’ கோரி பிரச்சாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார்.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நிக்கி டம்போலி
நடிகை நிக்கி டம்போலி தமிழில் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கும் பெரிய
அளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார். தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் நிக்கி டம்போலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து பேசியிருக்கிறார்.
நிக்கி டம்போலி
அவர் கூறியிருப்பதாவது, தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம்
ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என்று ஒவ்வொரு பெயராக இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.
என்னை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல நடிகை பரபரப்பு புகார்
என்னை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல நடிகை பரபரப்பு புகார்
நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்றுதான் தனது மக்களை நடிகையாக மாற்றினார் என்று கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
“என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்
பூஜா மிஸ்ரா
சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனனிவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா, தமிழில் 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டில் பாலிவுட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மீதும் அவரது மனைவி மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்து உள்ளார்.
பூஜா மிஸ்ரா
பூஜா மிஸ்ரா கூறி இருப்பதாவது:-
என் தந்தையும் சத்ருகன் சின்காவும் நல்ல நண்பர்களாக இருந்தபோது, சத்ருகன் மனைவி என் தந்தையை மூளைச்சலவை செய்துள்ளார். பாலிவுட்டில், விபசாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்று கூறி, என்னை சினிமா துறையில் நுழைய
விடாமல் தடுத்து விட்டார். இதனால், என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன். பின் என் தந்தை 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அதன்பிறகு அவர் புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால், என்னை சத்ருகன் சின்காவும் அவர்
மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள். நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச்
செய்து என்னை வைத்து பாலியல் தொழில் செய்து இருந்தார். இதனால் எனது கன்னிதன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக இருந்த தன் மகளை நடிகையாகினார்.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் என்னை குறித்து சத்ருகன் சின்காவும் அவரது மனைவி பூனம் சின்காவும் பல்வேறு பாலியல் மோசடி செய்து உள்ளனர். இதற்காக என்னை மயக்கமடைய வைத்து, எனக்கு சூனியம்
வைத்துள்ளனர். சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடி உள்ளனர். மொத்தத்தில் சத்ருகன் சின்கா குடும்பம் ஒரு பேராசை
பிடித்தது. அதுமட்டும் இல்லாமால் சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர்.
ஒரு முறை சத்ருகன் சின்காவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து பில்லிசூனியம் வைத்தனர். நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால் போதும் அவர்கள் அந்தப் பொருட்களைத் திருடிவிடுவர்கள்.
சத்ருகன் சின்காவால் தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்காவைத் தவிர வேறு
யாரும் கிடையாது. இதனால் நான் என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
பூஜா மிஸ்ரா புகாரால் பாலிவுட் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கு சத்ருகன் மற்றும் சோனாக்ஷி சின்கா தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.
லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு
லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு
லண்டன் Ladywell, பகுதியில் உள்ள கார் பாக் ஒன்றில் இருந்து அடிகாயங்களுடன் நபர்
ஒருவர் மீட்க பட்டுள்ள ,சம்பவத்தை அறிந்து , விரைந்து வந்த போலீசார் , அவரை
அம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
குறித்த சம்பவம் தொட்ரபில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ரோந்து பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
அமைச்சும் வேண்டாம் – அரசும் வேண்டாம்- மைத்திரி
அமைச்சும் வேண்டாம் – அரசும் வேண்டாம்- மைத்திரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை
அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
கீழ் அமையப்போகும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேனில் புதைகுழிகள் கண்டு பிடிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் போரினை நடத்தி வருகிறது மூன்று மாதங்களில் எட்டி பிடிக்கும் இந்த தாக்குதல்களில் உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
ரசிய இராணுவத்தினரால் புதைக்க பட்ட மனித புதைகுழிகள் மீட்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
எமது வைபர் குழுவில் இணைந்தது கொள்ள அழுத்தங்கள்
https://invite.viber.com/?g2=AQBkqkUKd91hf08vW8ZJb0B44D8YD6HD4MQPuO1VYTA7mLlP0eJEaGNoYU2tX%2FGcஇனப் படுகொலை ஒன்றை ரசியா நடத்தி வருவதாக உக்கிரேன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
ஏறககில் உள்ள குருதீச கட்டு பாட்டு பகுதியான Sulaymaniyah பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில 12 பேர் பலிகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காஸ் கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டா,மகிந்த ,ரணில் ,சந்திரிக்கா,சர்வதேச மன்றில் நிறுத்துங்க – சிவாஜிலிங்கம் – வீடியோ
இலங்கையில் தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட
சந்திரிக்கா,ரணில் ,மகிந்தா,கோட்டா ஆகியோரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி
தண்டிக்க வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினரா சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் அணியில் இருந்து ரணில் கட்சியுடன் இணைந்து செயல்பட இருபத்தி ஐந்து பேர்
தயார் நிலையில் உள்ளனர்
இவ்வாறு செல்வோர் அனைவரும் ரணில் அணியினர் என சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்
சஜித்தின் வெற்றியை தடுத்து ,அந்த கட்சியை உடைக்கும் நிலையில் ரணில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட
தக்கது.
ரணில் வீட்டே போ என்ற கிராமம் உருவாக்கம் – கொதித்தெழுந்துள்ள மக்கள்
ரணில் வீட்டே போ என்ற கிராமம் உருவாக்கம் – கொதித்தெழுந்துள்ள மக்கள்
இலங்கையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்டுள்ள நிலையில் இவர் மகிந்தவின் மகுடி என தெரிவிக்கும் மக்கள் ரணில் கோ கமே என்ற கிராமத்தை ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊரடங்கு பிறப்பிக்க பட்டு இராணுவத்திற்கு துப்பாக்கி சூடும் அதிகாரம் வழங்க பட்டுள்ள நிலையிழும் மக்கள்
தமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வது குறிப்பிட தக்கது.
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம்
இலங்கையில் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின படுகொலையின் நினைவு நாள் அனுஷ்டிக்க படுகிறது
இம்முறை மக்கள் அதிகம் கலந்து கண்டு தமது மக்களுக்கு அகவணக்கம்
செலுத்துவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கைக்கு உணவு பொருள்களை அனுப்பும் தமிழகம்
இலங்கைக்கு உணவு பொருள்களை அனுப்பும் தமிழகம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள
தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கு 80 கோடிரூபா மதிப்பிலான 40.000 டன்
அரிசி மாற்று 28 கோடிரூபா மருந்து .15 கோடிரூபாவுக்கு பால்மா என்பன அனுப்பி வைக்க படவுள்ளன
இவை தமிழர்களுக்கு கிடைக்குமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
இலங்கையில் ஊரடங்கு அமூல்
இலங்கையில் ஊரடங்கு அமூல்
இலங்கையில் இன்று மதியம் இரண்டு மணிமுதல் நாளை காலை ஆறுமணிவரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது
மக்கள் மீளவும் போராட்டத்தில் குதித்துவிடுவார்கள்
என்ற நிலையில் இந்த ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் டாலரின் விலை வீழ்ச்சி – ரணில் காரணமா
இலங்கையில் டாலரின் விலை வீழ்ச்சி – ரணில் காரணமா
இலங்கையில் புதிய பிரதமராக ரணில் நியமிக்க பட்டுள்ள நிலையில் அதிகரித்து சென்ற டொலர்
இன்று 365 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது
கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்
கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்
ஈரான் கடல் வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்பதால ஈரான் கடல் படையின்
பறக்கும் சுற்று காவலில் ஈடுபட்டுள்ளனர்
திடீரென அதிகரிக்க பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது







