Author: நலன் விரும்பி
யாழில் சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் திடீர் இடமாற்றம் – சத்தீய மூர்த்தி அடாவடி
யாழில் சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் திடீர் இடமாற்றம் – சத்தீய மூர்த்தி அடாவடி
தமிழர் தாயகத்தின் முதன்மை வைத்திய சாலையாக விளங்கி வரும் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்
நாயகமாக விளங்கும் திருவாளர் சத்திய மூர்த்தி ,பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக வழங்க பட்ட அறிக்கை மற்றும்
பாதிப்பு இழப்புக்களை ஆளும் கோட்டபாய அரசுக்கு சார்பாக மாற்றியமைத்து ,உண்மை எண்ணிக்கையை மூடி மறைத்து வெளியிட்டார்
தமிழ் கட்சிகளை சேர்ந்தத நான்கு எம்பிக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்ட பொழுதும் அவையும் மூடி மறைக்க பட்டது
இந்த மருத்துவ மனையில் நிகழும் பல்வேறு பட்ட சம்பவங்களை நாம் உள்ளிருந்து தர பட்ட தகவல் அடிப்படியில் வெளியிட்டோம்
,அதன் விளைவு அப்பாவி மருத்துவர் முகுந்தன் ஒருவர் திடீரென சத்திய மூர்த்தியினால் இடமாற்றம் செய்ய பட்டுள்ளார்
தனி கட்டு ராஜாவாக வலம் வரும் சத்தியமூர்த்தியின் தொடர் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
,வரணி மருத்துவமனை ,மற்றும் சாவ கச்சேரி மருத்துவ மனைகளில் நோயாளர்கள் பராமரிப்பு நேர அட்டவணையில் உள்ளது போல செயல் படுவதில்லை
அங்கு நோயாளர்கள் திட்டி அனுப்ப படும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதற்கு வடமாகாண சுகாதார பணிப்பாளர் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை
தற்போது ஊழல் லஞ்சத்தில் பெருத்து ஊதிய சத்தியமூர்த்தி ,மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் அருவருக்க தக்க ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
தமக்கு எதிராக செயல் படுவதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி சிறந்த மருத்துவர் முகுந்தனை , சத்திய மூர்த்தியின் நேரடி
சிபாரிசின் அடிப்படையில் திடிரென வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்டுள்ளார்
அவ்வாறே சிறந்த மருத்துவராக விளங்கிய மருத்துவர் முகுந்தன் இடம் மற்றம் செய்ய பட்டுளளார் ,
இது ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக யாழ்ப்பாண போதான வைத்தியசாலை வெளியிடாது மறைத்து வருகிறது
மேலும் விரைவில் சத்தியமூர்த்தி மற்றும் ,வடமாகாண சுகாதார பணிப்பாளர்கள் மோசடிகள் அம்பல படுத்த படும் ,இவர்கள்
பின்புலத்தில் இயங்கும் மாபியா கும்பல்கள் ,மரண சான்றிதழ்கள் மாற்றி வழங்குவது தொடர்பிலான அணைத்து விடயங்களும் தொடரான வெளி கொண்டுவரப்படும்
மக்களே உசார் ,யாழ் மருத்துவ மனை வழிமாறி செல்கிறது ,இதற்கு உடந்தையாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளது அம் பலமாகியுள்ளது
நவீன் திசாநாயக்கவை, தொழிற்சங்க தலைவராக நியமித்து ரணில் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்
நவீன் திசாநாயக்கவை, தொழிற்சங்க தலைவராக நியமித்து ரணில் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
நாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபா
சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர், நவீன் திசாநாயக்கா. இது நாடறிந்த விஷயம்.
இன்று இவருக்கு தனது கட்சியின் தோட்டத்துறை தொழிற்சங்கத்தில் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில்
நவீனுக்கு உடந்தையாக தானும் இருந்துள்ளதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தனது முன்னாள் பிரதமர் பதவிக்கு உத்தரவாதம் வழங்கி, ஆட்சியமைக்க பெருவாரியாக
வாக்களித்த மலையக மக்களை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்மூலம் இன்று அவமானப்படுத்தியும் உள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய
ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
யூஎன்பியின் கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது. ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சி அமைக்க அதிகம்
வாக்களித்தது, தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்க கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளை தந்த மாவட்டம், நுவரெலியா
மாவட்டம் என்பதையும் அவர் மறக்க கூடாது. அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்கா மறக்க கூடாது.
பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு, தமிழ் தோட்டத்தொழிலாளர் சம்பள
விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விஷயம்.
இது மட்டுமல்ல. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைக்க, காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும் தடைகளை
ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்த காணிகளை நாம் பெற்று வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம்.
இந்நிலையில், இந்த நவீன் திசாநாயக்கா எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க
தலைவராக அதே நவீன் திசாநாயக்காவையே வெட்கமில்லாமல், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. நடப்பது
என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக இழக்கிறார்.
கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு
கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு
உலகநாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இந்தியாவில் 308,ஆயிரத்து 993.பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 8,ஆயிரத்து 884 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,அரசு
திட்டமிட்டு இந்த நோயின் தாக்குதல் இழப்புக்களை மறைத்து வருவதாக குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது
சீனாவில் மீள பரவும் கொரனோ
சீனாவில் மீள பரவும் கொரனோ
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தற்போது மீள பரவி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது
சீனாவின் தலைநகர் பீஜிங் இதனை அறிவித்துள்ளது , 46 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பியுள்ள நிலையில் மீள வேகமாக இந்த் நோயானது பரவ ஆரம்பித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகில் கொரனோ பலி இரண்டாவது இடத்தை பிடித்த பிரேசில்
உலகில் கொரனோ பலி இரண்டாவது இடத்தை பிடித்த பிரேசில்
உலகில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் அதிக மக்கள் பலியாகி இரண்டாவது இடத்தை இதுவரை பிரிட்டன் தக்க வைத்து கொண்டிருந்தது
தற்போது அது கடந்த பெரும் இழப்பாக பிரேசில் நிலவுகிறது ,
இதுவே உலகில் இரண்டாது அதிக மக்கள் பலியான நாடாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது
பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்
பிலிப்பைன்ஸ் 5 shook Davao Oriental பகுதியில் பாரிய நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நில நடுக்க அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,
எனினும் இன்னும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
பாதிக்க பட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன
ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்
ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்
இலங்கை வெலிமட பகுதியில் நபர் ஒருவர் சமையலறை கத்தியால் படு கோரமாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை
செய்ய பட்டுளளார்
இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது
மேற்படி கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
இலங்கை எலமலவல பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது நடத்த பட்ட திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் சிக்கி ஒருவர் பலியானர் .
இந்த சூட்டு படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த மரணம் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திணைக்களத்தில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள அதிகம் பேர் கூடுவதை தடுக்க
வரையறுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக பத்தரமுல்ல காரியாலயத்தில் 250 பேருக்கு மத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் காலியில் உள்ள தென்மாகாண காரியாலயத்தில் 50 பேருக்கு மாத்திரமே அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
அவ்வாறு அடையாள அட்டையை பெற விரும்புவோர் தமது கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சி கடிதத்தை தமது பிரதேச செயலாளர்
காரியாலயத்தில் உள்ள அடையாள அடடை கிளை காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்
பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள்
பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணி அளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்களால் வழங்கப்பட்ட
தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிசு புதைக்கப்பட்ட சிசுவை மீட்க, ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டதோடு, நீதவான்
தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 26 வயதுடைய பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், திருமணமாகாதவர் எனவும், இரண்டாவது முறையாக குழந்தையை
பிரவசித்து கொன்றமைக்கான தடயங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்
முப்படைகளின் கண்காணிப்பின் கீழுள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்போது நான்காயிரத்து 874 பேர் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வரையில் 12 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை
இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும், 271 பேர் பி.சி.ஆர்
பரிசோதனையை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக
அடையாளம் காணப்பட்டவர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்தவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம், நாட்டில் எட்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 28 பேர்
குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது
அடையாளம் காணப்பட்டுள்ள 1,877 பேரில், 716 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை ஆயிரத்து 150 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு
ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல்
சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை
கலைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொலிசாரினால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணி சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்களை கைது
செய்தமைதொடர்பாக கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அரசாங்கம், பொது மக்களின் உயிரை மீண்டும் ஆபத்துக்கு உட்படுத்த ஒருபோதும் இடமளிக்காது என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் அளப்பரிய அர்ப்பணிப்புடன் தமது பணிகளை முன்னெடுத்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக முடக்க நிலையில் காணப்பட்ட மக்களின் நடமாட்டம் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் திறக்கப்பட்டது.
எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த முறையை சீர்குலைக்க யாரையும் நாம் அனுமதிக்க முடியாது, ”என அவர் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தினால் கிருமி தொற்று நீக்கல் திரவத்தை பாதுகாப்பு அமைச்சிற்கு நன்கொடையளிக்கும் நிகழ்வில்
உரையாற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன, தொற்றுநோயாக அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள
சட்டங்களை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது நியாயமற்ற ஒரு செயல் என அவர் தெரிவித்தார்.
“முழு நாடும் பாரிய சவாலுக்கு முக்ம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது, இதன்போது சமூகத்தில் உள்ள அனைவருமே தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளில்
அவரவருக்கு சாத்தியமான வழிகளில் பங்களிப்பு செய்தனர், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய சில நாட்களிலேயே, அவர்கள்
இவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ்
மொஹமட்டினால் 50,000 லீட்டர் கிருமி தொற்று நீக்கும் திரவத்தை பாதுகாப்பு செயலாளரிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கும்
நிகழ்வு அந்நிறுவனத்தின் கொலனாவ தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கிருமி தொற்று நீக்கும் திரவம் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கக்கப்பட்டது.
தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அன்பளிப்பு வழங்கிய முதற்தா நிறுவனமான வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்பு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய முன்னுரிமை மற்றும் இது ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டது. தேசிய பாதுகாப்பு இல்லாமல்
பொருளாதார மறுமலர்ச்சி, கல்வியில் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய எந்த எண்ணமும்
பயனற்றதாகவே அமையும் ”என் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அடைந்த சாதனைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சிறப்பான தலைமை
மற்றும் தூரநோக்கு என்பனவே காரணமாகும் என அவர் வலியுறுத்தினார்.
“இந்த ஆட்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன்னர் பயன்படுத்தப்பட்ட வழக்கமான கட்டாய நடவடிக்கைகளுக்கு மாறாக பல்வேறு குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்பட்ட
போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் சாதகமாகப் பெறப்பட்டன. இன்றுவரை, அத்தகைய குழு எதுவும் தாக்கப்படவில்லை, இழுத்துச் செல்லப்படவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக தடியடி, நீர்
பீரங்கிகள் அல்லது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படவில்லை. இதன் மூலம் சிவில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி
செய்வதில் அரசு சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ”என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, பிரதி நிர்வாக பணிப்பாளர்கள், சிரேஷ்ட
அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ
4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ
முப்படைகளின் கண்காணிப்பில் உள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4874 பேர் தொடர்ந்தும்
,தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று (12) காலை வரையில் 12,856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை
இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 271 பேர் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வீதியில் மனித சடலம்
கொழும்பு வீதியில் மனித சடலம்
கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு
யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு
யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில்
தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதடனடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு
பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாமம் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து, இரு பெண்களும்
பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி
வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி
வந்துள்ளதாகவும், தனது நண்பியையும், நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
பகுதியாக இருந்தமையால், பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்றைய தினம் (8 ஆம்
திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும், பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.
அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண்
நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.
குறித்த வாக்கு மூலத்தில், தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் தானும் தனது
நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.
நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர் ஒருவருமான மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும்
தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் கடல் கரையில் தொலை தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார் கடல் கரையில் தொலை தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு
சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) மாலை மீட்டுள்ளனர்.
பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப
பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலைப் பொலிஸார், படைத்தரப்பினர் மற்றும் விசேட அதிரடிப் படைப்பிரிவு நேற்று
மாலை மேற்கொண்ட அகழ்வுப் பணியில் மீட்கப்பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பொதியில்
காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் 2007 ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள்
அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள்
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்தலங்களிலும் கொரோனா தடுப்பு
வழிமுறைகளுக்கமைய இன்று முதல் சமய வழிபாடுகளில் ஈடுபட இம்மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்குழு அனுமதித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 10 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி
பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது இத்தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
இச்செயலணிக் கூட்டத்தில் தேசிய கொரோனா தடுப்பு செயலணி வழிகாட்டல்களுக்கமைய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியில், பொலிசார், மற்றும் உள்ளுராட்சி சபைகளின்
உத்தியோகத்தர்களது மேற்பார்வையில் பிரத்தியேக வகுப்புகளை அதிகபட்சம் 100 மாணவர்களைக் கொண்டு நடாத்த அனுமதி வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பொதுப் போக்குவரத்தின்போது மாவட்டத்தில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பதில்லை எனவும், அவற்றைப் பொலிசார் பரிசோதனை
செய்வதெனவும், உள்ளுராட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கமைய கொரோனா தடுப்பு சுகாதாரச் சட்டங்களை மீறாதவாறு பொதுச் சந்தைகளை வழமையான
சந்தைக் கட்டிடங்களுக்குக் கொண்டு செல்லலாம் எனவும் இந்த விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், கொரோனா தொற்று காரணமாக பிற்பகல்
4 மணிவரை இயங்கி வந்த இப்பிரிவு தற்பொழுது மாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வரும் காத்தான்குடி தளவைத்தியசாலையில் 130 கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அங்கு 68 ஆண்களும், 27 பெண்களுமாக 95 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவ்வைத்தியசாலையில் காணப்பட்ட கழிவுநீர்
அமைப்பு, மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் போன்றவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். எம். அச்சுதன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தவிர மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர கருத்து தெரிவிக்கையில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கப்படுமாயின் வகுப்பறைகள் தொற்று நீக்கி
விசிறப்படல்வேண்டும், நிலையான நிருவாக சபையொன்று செயல்பட்டு கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளைப்
பின்பற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், இதனை மீறுவோறுக்கெதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வர் எனவும் தெரிவித்தார்.
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
- சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக
- ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்
2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை
பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ்
குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க
வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம்
ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.
- 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள
- முறைப்படுத்துதல்) சட்டம்;;:
- 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும்
- சட்டம்
- (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை
- மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act
- 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்
- 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று
- அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை
கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
கொரோனா பாதிப்பில் பிரிட்டனை முந்தியது இந்தியா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக சராசரியாக 10 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இதனால் 2,89,360 எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு
முன்னேறியது. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,754 ஆக உயர்ந்ததால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரேசில் 7,75,581 உடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
ரஷியா 5,02,436 எண்ணிக்கையுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 20,71,495 உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பாதிப்பு 500-க்கு சற்று மேலாக இருந்தது. 10 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜூலை 9-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு
நிரவ் மோடி
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல்
வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, நிரவ் மோடியின் சிறைக்காவலை மேலும் 28 நாட்கள் (ஜூலை 9-ம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது. நாடு கடத்துவது
தொடர்பான வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








