Tag: தேசிய அடையாள அட்டை
தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை
விநியோகிக்கப்படவுள்ளது. காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கிணங்க தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால்
அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
10 அலுவலக நாட்களுக்குள், வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள
வேண்டும். இதன்பின்னர் அந்த தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை
பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திணைக்களத்தில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள அதிகம் பேர் கூடுவதை தடுக்க
வரையறுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக பத்தரமுல்ல காரியாலயத்தில் 250 பேருக்கு மத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் காலியில் உள்ள தென்மாகாண காரியாலயத்தில் 50 பேருக்கு மாத்திரமே அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
அவ்வாறு அடையாள அட்டையை பெற விரும்புவோர் தமது கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சி கடிதத்தை தமது பிரதேச செயலாளர்
காரியாலயத்தில் உள்ள அடையாள அடடை கிளை காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.






