முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in இலங்கை செய்திகள்

சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்

சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்

இலங்கையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை அடுத்து

அரசியல் கட்சிகள் பலத்த போட்டியில் ,அகோர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

இவ்வேளை முதுகால் மண்கிண்டி ஆட்சியை அமைக்க முயன்ற சுமந்திரன் முதுகெலும்பு முறிந்து குப்புற கிடந்தது விசிலடிக்கிறார்

இவரது சர்ச்சை பேச்சுக்கள் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

அவ்விதம் நெருக்கடி தொடரும் நிலையில், கூட்டமைப்பை பலத்த தோல்வியை இம்முறை சந்திக்கும் என்பது உளவு தகவல்

சுமந்திரன் புல்லுருவி எனவும் ,சீனா வெடி கொளுத்தி போட்டாலே காட் அட்டாக் வந்து இறந்து விடுவார் என


முன்னாள் புலிகளின் பிரதி தலைவர் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்

இவரது இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற

வாள்வெட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு 7.30 மணி அளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை

வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில்

நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை

முன்னெடுத்து வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      சஹ்ரான் ஹசீம் குழுவுடன் எமக்கு தொடர்பு இல்லை – கக்கீம்

      சஹ்ரான் ஹசீம் குழுவுடன் எமக்கு தொடர்பு இல்லை – கக்கீம்

      உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும்

      இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

      எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

      தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு

          இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு

          கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

          மேலும் 172 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முப்படைகளின்

          கட்டுப்பாட்டில் உள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4387 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

          இதுவரையில் 13,875 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

          தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 222 பேர் இன்று (15) பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட

          பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              தபால் சேவை மூலமான மருந்து விநியோகம் இடை நிறுத்தம்

              தபால் சேவை மூலமான மருந்து விநியோகம் இடை நிறுத்தம்

              அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும்

              மருந்துவகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

              இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

              கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம்

              பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால்

              பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன்இ இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும்

              நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

              இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால்

              திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக

              முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச

              ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படுமு; மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம்

              என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம்.


              மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை

              முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இ இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை

              வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்.

              மேற் குறிப்பிட்ட ஊடக அறிக்கையை அனைத்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை

              மேற்கொள்ளுளமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா

                  சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா

                  சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவிவருவதாக ரோம் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

                  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                  ஊடக வெளியீடு

                  சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவி

                  இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் ‘சனடோரியா 2020’ சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை முறைப்படுத்துவதற்காக தூதரக

                  உதவிகளை எதிர்பார்க்கும் 10,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதனை விரைவுபடுத்துவதற்குத் தேவையான கொன்சியூலர் சேவைகளை

                  இலங்கைச் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலமாக ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மிலானிலுள்ள உதவித் தூதரகம் ஆகியன வசதிகளை ஏற்பாடு செய்துள்ளன.

                  கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், பல ஆண்டுகளாக தொடரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில், ஒழுங்கற்ற

                  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இத்தாலியில் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக விண்ணப்பிப்பதற்கும், தொழில் நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக தங்குவதற்கு

                  அனுமதிகளைப் பெறுவதற்குமான வழிவகைகளை வழங்கும் ‘இத்தாலியை மீளத் தொடங்குதல்’ அபிவிருத்தித் திட்டத்தின்

                  முக்கியமான கொள்கைக் கூறுகளில் ஒன்றாக இத்தாலி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள

                  சனடோரியாவினூடாக இத்தாலியிலுள்ள இலங்கைச் சமூக உறுப்பினர்கள் தங்கியிருப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

                  சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ் இலங்கையர்களுக்கு வசதிகளை மேற்கொள்வதற்கும் சேவைகளை வழங்குவதற்கும், தூதரகத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட 10 வேலை நாட்களுக்குள்

                  விண்ணப்பதாரர்கள் தமது உண்மையான கடவுச்சீட்டுக்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான கொன்சியூலர் சேவைகளை ரோம் மற்றும் மிலானிலுள்ள இலங்கைத் தூதரகங்கள்

                  தொடங்கியுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தூதரகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதனை உறுதி

                  செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து, கொன்சியூலர் சேவைகளுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் இணையவழி அடிப்படையிலான சந்திப்பு முறையின் மூலமாக அழைக்கப்படுகின்றார்கள்.

                  மேலும், சனடோரியாவின் கீழ் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சிசிலி தீவிலுள்ள இலங்கையர்களுக்கான

                  சிறப்பானதொரு இணையவழி மூலமான நடமாடும் சேவையை ரோம் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு இணையவழி மூலமான நடமாடும் சேவையின் செயற்பாட்டில் ஆவணங்களை

                  ஆராய்தல் மற்றும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தல் போன்ற செயற்பாடுகள் வீடியோ மாநாடு மற்றும் மின்னணு அஞ்சல் முறைமை மூலமாக முன்னெடுக்கப்படும். சிறப்பு இணையவழி

                  நடமாடும் சேவையானது 2020 ஜூன் 14ஆந் திகதி காலை 9.00 மணி முதல் சிசிலி தீவின் கட்டனியாவில் ஆரம்பமாகும்.

                  பொது மன்னிப்புக் காலத்தில் தமது ஒழுங்குபடுத்தல் செயன்முறைகளை முறையாக மேற்கொள்வதற்காக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உண்மையான கடவுச்சீட்டுக்கள்

                  வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சிறப்பு கொன்சியூலர் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களுக்கான

                  விண்ணப்பங்களை 2020 ஜூன் 30ஆந் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்வதற்கு தூதரகம் திட்டமிட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      கிழித்தெறிய பட்ட சட்ட விரோத பதாதைகள் ,சுவரோட்டிகள்

                      கிழித்தெறிய பட்ட சட்ட விரோத பதாதைகள் ,சுவரோட்டிகள்

                      2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

                      இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய

                      வகையில் இந்த சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள்

                      அகற்றப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

                      நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்காக பதில் பொலிஸ் மா அதிபரின்

                      ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                      மேலும் குறித்த நடவடிக்கையை கண்காணிப்பதற்கு, அனைத்து பிரதி பொலிஸ்மா

                      அதிபர்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்

                      பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

                      கிழித்தெறிய பட்ட சட்ட
                      கிழித்தெறிய பட்ட சட்ட

                      .

                          Posted in உலக செய்திகள்

                          பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் மூவர் மீது கத்தி குத்து -ஒருவர் கொலை – பெண் கற்பழிப்பு

                          பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் மூவர் மீது கத்தி குத்து -ஒருவர் கொலை – பெண் கற்பழிப்பு

                          பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் இளம் பெண் கற்பழிக்க பட்டுளளார் ,

                          ஒருவர் படுகொலை செய்ய பட்டுளளார் ,மேலும் மூவருக்கு கத்தி குத்து இடம் பெற்றுள்ளது

                          தனிமை படுத்தல் தொடர்பாக இடம்பெற்ற போராட்டத்தின் பொழுதே

                          இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                          பிரிட்டன் மன்ஸிஸ்டர்
                          பிரிட்டன் மன்ஸிஸ்டர்
                              Posted in உலக செய்திகள்

                              பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி

                              பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி

                              பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயியனால் சிக்கி இதுவரை சுமார்


                              41,698 பேர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதர அமைச்சும் அறிவித்துள்ளது

                              தற்போதை நிகழ்கால நிலவரப்படி நூற்றுக்கும் குறைவான

                              உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது ,எனினும் நோயானது

                              பூரண கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் படவில்லை

                              இந்த நோயானது ஜூன் மாத இறுதி பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்க பட்ட பொழுதும் அவை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை ,

                              இந்தியா , ரசியா,பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருகிறது


                              நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து உணவு பஞ்சம் ஏற்படலாம் என்ற ஐயம் நிலவுகிறது

                                  Posted in உலக செய்திகள்

                                  மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை

                                  மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை

                                  பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

                                  மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
                                  சுப்ரீம் கோர்ட்

                                  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது, பா.ஜ.க.வை சார்ந்த அஜய்

                                  ஷ்யாம், சிம்லா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி

                                  அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

                                  இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு

                                  மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

                                  இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்குமாறு வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு

                                  தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தொடர்ந்து நடத்த சிம்லா போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளன

                                      Posted in உலக செய்திகள்

                                      2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்

                                      2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்

                                      கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா

                                      வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும்

                                      பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

                                      இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர்.

                                      அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில்

                                      நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா

                                      அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.

                                      இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர்

                                      மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை

                                      பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்

                                          பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்

                                          பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை

                                          நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

                                          அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது.

                                          இதுவரை பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்த 302 பேர் அங்கிருந்து வெளியேறிவுள்ளனர்.

                                          பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
                                          பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்

                                              ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்

                                              நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட

                                              நடைமுறைகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

                                              அதற்கமைய இன்று (14) முதல் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்

                                              சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

                                              இதற்கு முன்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வந்தது.

                                              அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையில்லாமல்

                                              நடத்தில் செல்லல் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும்

                                              வகையில் இவ்வாறு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  யாழில் தமிழருக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

                                                  யாழில் தமிழருக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

                                                  யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ‘வீடு நிர்மாணிக்கும் திட்டத்தின்’ ஒரு கட்டமாக யாழ். பாதுகாப்பு படைத் தளபதி

                                                  அண்மையில் யாழ். கரனாவையில் உள்ள வறிய குடும்பத்திற்கான வீட்டினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

                                                  யாழ். பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளிற்கு அமைய, தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த வீட்டின் நிர்மாணப் பணிக்கான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.

                                                  இவ் வீட்டின் நிர்மாணப் பணிக்கான ஆளனி, தொழல்நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணர்களை 551 ஆவது பிரிகேட் படைத்

                                                  தளபதியின் மேற்பார்வையின் கீழ் 4 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் வழங்கியுள்ளனர்.

                                                  55 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி 551 மற்றும் 553 ஆவது பிரிகேட் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்

                                                  படையினர் இந்நிர்மாணப் பணியின் ஆரம்ப நிகழ்வில் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு

                                                      அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத

                                                      சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு

                                                      அமெரிக்காவில் வெள்ளை இன காவல் துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் கழுத்தில் நெரித்து படுகொலை

                                                      செய்யப்பட்டதன் சோக செய்தியை அறிந்து ஒரு வாரத்தில் இரண்டாவது நபர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்

                                                      இருபத்தி நான்கு வயதுடைய நபரே இவ்விதம் பெரும் மன உளைச்சலில் காணப்பட்டு இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்

                                                          Posted in உலக செய்திகள்

                                                          அமெரிக்காவில்; பாருக்கு சென்ற மக்கள் மீது துப்பக்கி சூடு – 8 பேர் காயம்

                                                          அமெரிக்காவில்; பாருக்கு சென்ற மக்கள் மீது துப்பக்கி சூடு – 8 பேர் காயம்


                                                          கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா San Antonio bar பகுதியில் துப்பக்கி சூடு நடத்த பட்டது ,இதில் எட்டு பேர் படுகாயமடைந்தனர் .

                                                          நவீனராக துக்காக்கியுடன் நுழைந்த நபர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்
                                                          இதுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை

                                                          அமெரிக்காவில்; பாருக்கு
                                                          அமெரிக்காவில்; பாருக்கு
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி வருட பரீட்சைகள் ஜூன் 22

                                                              அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி வருட பரீட்சைகள் ஜூன் 22 ஆம் திகதிஅனைத்து

                                                              பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

                                                              அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியகளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

                                                              பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில் அனைத்து பல்கலைக்கழக பீடங்களின் இறுதியாண்டு

                                                              மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸட்; மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி

                                                              செய்வதற்கு உப வேந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருப்தாக கூறினார்.

                                                              பல்கலைக்கழக மானிய ஆணைக குழு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகளுடன் நடத்திய

                                                              பேச்சுவார்த்தையின் போது பல கட்டங்களின் கீழ் பரீட்சைகளை நடத்துவதற்கும் பரீட்சைக்கான நேர அட்டவணையைத்

                                                              தயாரிப்பதற்கும், மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி

                                                              செய்வதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் உடன்பாடுகாணப்பட்டதாக கூறினார்.

                                                              ஊடகக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

                                                              • முதல் நடவடிக்கையாக அனைத்து பீடங்களின் மாணவர்களுக்கான இறுதி வருட மருத்துவ பட்டப் பரீட்சை (குiயெட ஆடீடீளு) 2020.06.15 முதல்; ஆரம்பமாகின்றது.

                                                              • 2020 ஜுன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பீடங்களின் இறுதி வருட

                                                              பரீட்சை நடவடிக்கை மாத்திரம் ஆரம்பமாவதுடன் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்த பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                              • அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களினால் அந்தந்த பீடங்களுக்கு அமைவாக இறுதி வருட பரீட்சைக்கு மாணவர்கள் அழைக்கப்படும் தினம் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

                                                               ஆசன ஒதுக்கீடு, எழுத்து மூல பரீட்சை நடத்துப்படும் பொழுதும்; செயல்முறை சார்ந்த பரீட்சைகள் நடைபெறும் சந்தர்ப்பத்திலும்

                                                              பங்குகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவது சுகாதார விதிகளுக்கு அமைவாகவேயாகும்.

                                                               இந்த காலப்பகுதியில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வரும் பொழுது முடிந்தவரையில் தமது வீடுகளில் இருந்து

                                                              வரக்கூடிய ஆற்றல் குறித்த மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அலோசனை வழங்கப்பட்டுள்ளது.

                                                               மீள அறிவிக்கும் வரையில் விடுதி வசதிகளை மேற்கொள்ளும் பொழுது ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் ஒதுக்கப்பட வேண்டும்.

                                                               மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாணவர்களும் இரவு 7 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து (நூல் நிலையம் உள்ளிட்டவை) வெளியேற வேண்டும்.

                                                               மீள அறிவிக்கும் வரையில் பல்கலைக்கழகத்திற்குள் அல்லது வெளியில் யாரையாவது அல்லது எந்தவகையிலும் மாணவர்கள் ஒன்றுகூடுவது தடையாகும்.

                                                               மீள அறிவிக்கும் வரையில் எந்தவகையிலும் பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

                                                              கல்வி நேர அட்டவணைகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு அனைத்து உபவேந்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

                                                              • பல்கலைக்கழகங்களில் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.

                                                              • முதுகலை ஆய்வு மாணவர்களின் கல்வி நடவடிக்கை சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்படும்.

                                                              • இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக

                                                              வெளியிடப்பட்டுள்ள சுகாதர வழிகாட்டிகளுக்கு அமைவாக அனைத்து தரப்பினராலும் முழுமையான ரீதியில் கடைபிடிப்பதற்கு உட்பட்டதாகும்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

                                                                  ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

                                                                  பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும்

                                                                  தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.

                                                                  இதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இணைத்துக்

                                                                  கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்களிக்க முன், உங்கள் சுய சுந்தனைக்கு

                                                                      எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்களிக்க முன், உங்கள் சுய சுந்தனைக்கு

                                                                      மறந்து விடக்கூடாது கூடாது!
                                                                      இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே சுமந்திரன் அவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

                                                                      இலங்கையை ஆண்ட தமிழனை அடிமைப் படுத்தி, அடக்கி, ஆளத் துடித்த சிங்கள இன வெறியர்களிடமிருந்து தமிழர்களைப்

                                                                      பாதுகாத்து, மீண்டும் ஆளவைக்கப் போராடி, ஈழ விருட்சத்தின் மலர்வுக்காக, மண்ணில் விதைகளாகப் புதைந்து கிடக்கும்

                                                                      மாவீர்களினதும், மக்களினதும், தியாகங்களின் மேல் நின்று, அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில்

                                                                      கருத்துரைத்துக் கொண்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, சிங்கள அரசிற்கு ஆதரவாக, அரசியல்

                                                                      ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் தமிழர்களின் அரசியல் களத்திற்கு தேவையா.

                                                                      சிங்கள அரசபடைகளாலும், தமிழ் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டுக் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், இராணுவ விதி முறைகளுக்கு அமைவாக, பெற்றோர்களால், அரச

                                                                      படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட பொது மக்களையும், போராளிகளையும் தேடி அலைந்து

                                                                      கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கேவலப்படுத்தும் வகையில் கருத்துக் கூறிய ஒருவரால், தமிழர்களின் உரிமைகளுக்காக

                                                                      செயற்பட முடியுமா? என்று சிந்திக்கத் தெரியாதவர்களால் மட்டுமே சுமந்திரன் போன்றவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

                                                                      “தமிழர் தாயகத்தில் நடந்தது இனப் படுகொலை அல்ல, அது சாதாரண போர்க்குற்றமே” என்று கூறிய ஒருவரால், எந்த வகையில் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட முடியும்?

                                                                      “போர்க் குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச் சுத்திகரிப்பு, மற்றும் படுகொலைகள் தொடர்பாகவும். விசாரிக்கப்பட வேண்டும்”

                                                                      என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசிற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரால், எப்படி தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட முடியும்?

                                                                      “விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு, ஆயுதப் போராட்டம் ஒரு வன்முறை, அதனை செய்தவர்களை நான்

                                                                      ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய ஒருவர் தமிழர்களின் பிரதிநிதியாக எப்படி செயற்பட முடியும்?

                                                                      இன அழிப்பு செய்த “சிங்களவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது பெரும் பாக்கியம்” என்று கூறி, தமிழர்களை

                                                                      இழிவுபடுத்தும் வகையில் கருத்துரைத்து, கீழ்த்தரமான சிந்தனையுடன் செயற்படும் ஒருவர் தமிழர்களுக்கு தேவைதானா??

                                                                      சிங்கள பொலிஸ், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்புடன், தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில்

                                                                      கலந்துகொண்டு தமிழர்களை, தன் எதிரிகளாகவும், தமிழர்களால் தனக்கு உயிர் ஆபத்து எனவும் வெளிக்காட்டிய, சுமந்திரனால் எப்படி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்?

                                                                      தமிழர்களுக்காக எதையுமே செய்திராத அம்பிகா அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொடுக்க முனையும்

                                                                      சுமந்திரனின் சுயநல குறுக்குப் புத்தியால் தமிழர்களுக்கு எந்த தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??

                                                                      விதண்டாவாதக் கருத்துக்களைக் கூறி, தமிழர்களின் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் சுமந்திரன் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும், இனப்பற்றற்ற,

                                                                      தன்மானத்தை இழந்தவர்களால் மட்டுமே, சுமந்திரன் போன்றவர்களை ஏற்று, வாக்களிக்க முடியும்.

                                                                      யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களின் உரிமை, இருப்பினும் யாருக்கு? ஏன்? வாக்களிக்க வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டியதும், அதே மக்களின் கடமை!

                                                                      தி.தமிழரசன்

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்

                                                                          இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்

                                                                          இலங்கை பண்டாரவல பகுதியில் திடீரென காடு ஒன்று தீப்பிடித்து இருந்துள்ளது ,இதன் போது சுமார் ஐம்பது ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                          இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மகிந்தா ,

                                                                          கோட்டபாய அரசுகளின் ஆட்சி காலத்தில் இந்த காடுகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது ,இது நிலங்களை

                                                                          ஆக்கிரமிக்கும் நோக்குடன் அரசியல் பின்புலத்தில் அடிப்படையின் இந்த காடுகளுக்கு தீ வைக்க படுவதாக உள்ளக கசிவுகள் விசிறி செல்கின்றன

                                                                          இலங்கையில் பற்றி எரிந்த
                                                                          இலங்கையில் பற்றி எரிந்த