Posted in உலக செய்திகள்

சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்

சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்

வடகிழக்கு சிரியாவின் எல்லையில் உள்ள நீர் வழங்கும் குழாய்களை துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படையினர் நிறுத்தியுள்ளனர்

இதனால் வடகிழக்கு சிரியா பகுதியில் வசித்து வந்த சுமார் பத்து

லட்சம் மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்ற்னர்

போரில் நீரை ஆயுதமாக பாவித்து வரும் இந்த் கிளர்ச்சி படைகள் செயல்களுக்கு

கடும் கண்டம் தெரிவிக்க பட்டுள்ளது
எனினும்

அவற்றை எல்லாம் செவிமடுக்காது குறித்த கிளர்ச்சை படைகள்

மக்களை சொல்லென்ன துயருக்கு உட்படுத்தி வருகின்றனர்

இந்த பகுதியில் ஐந்தாவது முறையாக இவ்விதம் நீர் நிறுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்

முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்

அமெரிக்காவின் JetBlue Airways விமானத்தில் ஆறு குழந்தைகளுடன் விமானத்தில் புறப்பட்ட
குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

அதில் பயணித்த இரண்டு வயது சிசு ஒன்று முக கவசம் அணிய மறுத்துள்ளது

இதனால் New York from Orlando நோக்கி புறப்பட இருந்த குறித்த விமானத்தில் மொத்த குடும்பமும் தரை இறக்க பட்டு துரத்தியடிக்க பட்டனர்

தற்போது மேற்படி விடயம் சட்ட அமூலாக்க பட்டுள்ளது ,தாம் விமான

டிக்கட் விண்ணப்பிக்கும் பொழுது இது தொடர்பாக அறிய தரவில்லை

என கூறிய பயணிகள் கருத்துக்கு இவ்விதம் விமான நிறுவனம் பதில் அளித்துள்ளது

மக்கள் உயிர் காப்பு நடவடிக்கையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது


மேற்படி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் குற்ற செயல்களை தடுக்கும் முகமாக இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 103,651

பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,கடத்தல் மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களே குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்

மேலும் நீதிமன்றினால் தேட பட்டு வைத்த குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?

சுமந்திரன் மீது கிடுக்கு பிடி விசாரணை – சிறை செல்வாரா ..?

இலங்கையில் புதிதாக ஆளும் கொட்ட பாயா அடச்சியில் பழிவாங்கும் அரசியல் படலம் தொடர்ந்து வருகிறது

,இவ்வேளையில் நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மீட்டது ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இந்த விசாரணைகளின் பின்னர் சுமந்திரன் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

சட்டவளாராக விளங்கும் சுமந்திரன் முதல் முறையாக இவவ்வாறு கோட்டா ஆட்சியில் விசாரணைக்கு உட்படுத்த படுகின்றார்

இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்என்ற நிலையிலும் பார்க்க படுகிறது

கடந்த தேர்தலில் சர்ச்சை கருத்துகளினால் மக்கள் மனதில் இருந்து தூக்கி

வீச பட்ட சுமந்திரன் நல்ல பெயரை வாங்கி கொள்ள இவ்வி தமான நாடக

விளையாட்டுக்கள் இடம்பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,918 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த தினம் மட்டும் புதிதாக 19 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தேர்தல் முடிவுற்ற நிலையில் திடீரென பாதிப்பு எண்ணிக்கியை அதிகரித்து அறிவித்து வருகிறது சுகாதார அமைச்சு என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்

எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்

9வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு…

 அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்…

 19வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்…

 ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு…

 அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி…

 மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை…

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்

மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள்

வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக

நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும்

பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக ஆகியோர் வரவேற்றனர்.

பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார

முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2ஃ3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையுடன் ஸ்திரமான ஆட்சியொன்றை அமைக்கும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு

கிடைத்துள்ளது. இந்த மக்கள் ஆணையை வழங்கிய நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதிஇ மக்கள்

அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம்

பொறுப்பேற்றோம். இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நோய்த்

தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது. இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு

தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை கிடைத்துள்ள மிகப்

பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும்இ பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் தான்

உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட ஆலோசனை சபை

ஒன்றை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் விசேட செயலணி ஒன்று

அமைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம்இ இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச்

சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய

சூழல் ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள்இ போதைப்பொருள்

பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று

முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்காக

அதுவரையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை மாற்றி நிபுணர் குழுவொன்றின் ஊடாக தகைமைகளை கண்டறிந்து

நியமனங்களை மேற்கொள்ளும் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயத்துறையில் புத்தெழுச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுதேச வர்த்தகர்களையும் தொழிற்துறையாளர்களையும் பாதுகாப்பதற்கு இறக்குமதியை மட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படை பொறுப்பு மக்கள் சேவையாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ அனைத்து பதவிகளும்

பொறுப்புக்களே அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல என்றும் அதனை நினைவில் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


சுதந்திரம் பெற்று 72 வருடங்களின் பின்னரும் மக்களின் பெரும்பாலான சாதராணமான தேவைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தான் தேர்தல் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது நேரில் கண்டுகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ பல ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய உறுதிகள் கிடைக்கப்பெறாத மக்கள் உள்ளனர். குடிநீர் பிரச்சினைஇ யானைகள் – மனிதர்கள் மோதல் பிரச்சினையை தீர்த்தல்இ கிராமிய வைத்தியசாலைகளின் வளங்கள்இ வசதிகளை மேம்படுத்தல்இ அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்குதல் போன்றவற்றுக்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய காலஇ நீண்டகால தீர்வுகள் வழங்கப்படுவதுடன்இ தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்திஇ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் அடிப்படை இலக்காகும். விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

துரிதமானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான அரச சேவையை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்இ அனைத்து அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயத்தையும் ஊழலையும்

முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் வீண்விரயம்இ ஊழலுடன் சம்பந்தப்படுபவர்களுக்கு அவர்களது

தராதரங்களை பொருட்படுத்தாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் பின்னிற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஏதேனும் ஒரு அமைச்சு அந்த

இலக்குகளை அடைவதில் பின்னிற்குமாயின்இ அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான

மாற்றங்களை செய்வதற்கும் தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி மக்களிடம் சென்று அவர்களது

உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறுஇ

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய

அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் போது ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற

எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது. எமது நோக்கம் வினைத்திறன் மிக்க

பிரஜைஇ மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்இ ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை

கட்டியெழுப்புவதாகும்’ எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ மக்களுக்கு உறுதியளித்த சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக

தன்னுடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள்

யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள்

யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில்

முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்றைய (20) தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொராணா தாக்கத்துக்கு பின்னர்

இடம்பெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளுடைய பாதிப்புகள் தொடர்பில் விவசாய சம்மேளத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

உரப் பாவணை மற்றும் அதனுடைய தாக்கம், அதனுடைய பாவணை முறை தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் குறைவாக

இருப்பதாகவும் அசேதனப் பசளையின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில்

உருவாக்கப்பட்டுள்ளன அவற்றினுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

வேலணைபிரதேச செயலர் பிரிவில் உள்ள சேதனப் பசளை தயாரிக்கும் இடம் செயற்பாடு இல்லாத நிலையில்

காணப்படுவதாகவும். எதிர்வரும் காலங்களில் வேலணை பிரதேச பிரிவில் உள்ள சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை சரியான

முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை சில பிரதேச செயலர் பிரிவுகளில் சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் அதிகரித்து

காணப்படுகின்றது. குறிப்பாக புத்தூர் சாவகச்சேரி கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இந்த சேதனப் பசளை பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அசேதனப் பசளை அதிக விலையிலேய தனியார் கடைகளில்; பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்

குறிப்பிடப்பட்டது. இதனை விலை கட்டுப்பாட்டு பிரிவினர் மூலம் கட்டுப்படுத்தி மக்களுக்கு சரியான விலையை உறுதிப்படுத்தி

விற்பனை செய்யக்கூடிய நிலைமையினை ஏற்படுத்துவதாகவும்; தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் சேதனப்
யாழ் மாவட்டத்தில் சேதனப்
Posted in இலங்கை செய்திகள்

262 மில்லியன் ரூபாசெலவில் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிலையம்

262 மில்லியன் ரூபாசெலவில் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிலையம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுவின்

கூட்டம் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே.ஜேக்கபின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயல் ஊடக அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளது. அவ் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்ட அமுலாக்கலின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகராலயம், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்

மற்றும் திட்ட முகாமைத்துவ திணைக்களம், நிதி அமைச்சின் கண்காணிப்பு பிரிவு, மற்றும் ஒப்பந்ததாரரான மல்வத்தை

கொன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியக (CECB) திட்ட ஆலோசகரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த திட்டமானது 262 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடன் உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நவீனமயப்படுத்தல் மூலம் கிழக்கு மாகாணத்தை சூழவுள்ள மக்கள் நன்மையடைவர்.

மட்டக்களப்பில் சுகாதார பராமரிப்பு அலகுகளை நிர்மாணித்தமை, 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை போன்ற உதவித்திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமாக இலங்கையின்

சுகாதார உட்கட்டமைப்பினை மேலும் வலுவாக்குவதில் இந்தியா தொடர்ந்தும் தனது உறுதிப்பாட்டை கொண்டிருக்கிறது. கொவிட் நோய் நெருக்கடியான காலப்பகுதியில் இந்தியா 25 தொன்கள்

நிறையுடைய அவசர மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது. அத்துடன் கண்டியில் உள்ள தேசிய வைத்திய சாலையில் கொவிட் தனிமைப்படுத்தல் விடுதி

ஒன்றினை அமைப்பதற்காக சார்க் அபிவிருத்தி நிதியம் ஊடாக 01 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட உதவியாக வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மேற்கொண்டுவரும் மக்களை இலக்கு வைத்த அபிவிருத்தி ஒத்துழைப்பின்

தொடர்ச்சியாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான ஒட்டுமொத்த

திட்டங்களில் 92 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மில்லியன் ரூபாசெலவில்
மில்லியன் ரூபாசெலவில்
Posted in இலங்கை செய்திகள் வினோத வீடுப்பு

எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video

எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video

பாட்டு தலைவன் பால சுப்பிரமணியம் மீண்டும் மீண்டு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் 45 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளனர்

அனைவரும் கண்ணீர் மல்க பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் ,அவர் தம் நெஞ்ச குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர்

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இரவு முதல் பிரிட்டன் வேல்ஸ் ,ஐயர்லாந்த் மற்றும் பிரிட்டன் தெற்கு பகுதிகளை மையமாக வைத்து எழுபது மைல் வேகத்தில்

கடும் புயல் வீசும் ,இதன் பொழுது இடியுடன் மழையும் பொழியும் எனவும்


இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

வெள்ள பெருக்கு ,மின்சாரம் ,மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி

அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி

அமெரிக்கா கலிபோனியா Coalinga. பகுதியில் கட்டு தீ பரவலாக பற்றி எரிகிறது


மேற்படி தீயினை கட்டு படுத்த உலங்கு வானூர்தி மூலம்

பொடிகளை தூவிய வானூர்தியே திடீரென அதே தீக்குள் வீழ்ந்து நொறுங்கியது

இதன் பொழுது விமானி உயிரிழந்துள்ளார் என அரசு அறிவித்துளளது .


இந்த காட்டு தீயில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமமாகியுள்ளன

அந்த சுற்றாடலை அண்மித்து வசித்து வந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட

மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்,தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது

அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி

    இந்தியாவில் கடும் வெள்ளம் – 1,300 பேர் பலி

    இந்திய தலைநகர் டில்லி மற்றும் நாடளாவிய நிலையில் இடம்பெற்று வரும் கடும் வெள்ளத்தில் சிக்கி பலநூறு பேர் பலியாகியுள்ளனர்

    தென் ஆசியாவில் இடம்பெற்று வரும் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தில்

    சிக்கி இதுவரை ஆயிரத்து முன்னூறு பேர் பலியாகியுள்ளனர்
    மேலும் பலடசின் பேர் காணாமல் போயுள்ளனர்

    மக்கள் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்

    வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளதால் அகதிகளாக தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர்


    பாதிக்க பட்ட பகுதியில் மொட்டை மாடிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்


    இவர்களுக்கு படகு மூலம் உணவாயு வழங்க பட்டு வருகிறது

    இந்தியாவில் கடும் வெள்ளம்
    இந்தியாவில் கடும் வெள்ளம்
    Posted in உலக செய்திகள்

    நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி

    நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி

    லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் கபால்வழியாக நுளையும் முகமாக ரப்பர் படகில் பயணித்து கொண்டிருந்த கைதிகள் படகு வெடித்து சிதறியது

    இதன் பொழுது ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட நாற்பத்தி ஐந்து பேர் பலியாகினர்

    மேலும் நூற்றுக்கு மேற்பட்டிட்டவர்கள் விசேட கடல் படை மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர்


    சிரியாவில் இடம்பெற்று வரும் கோரயுத்தம் காரணமாக அந்த நாட்டில்

    இருந்து மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    2014 ஆம் ஆண்டு மட்டும் இருபதாயிரம் அகதிகள் கடலில் பலியாகினர்

    இவ்வாறு படை எடுக்கும் அகதிகளை கட்டு படுத்த முடியாது அரசுகள் திணறி வருகின்றன

    பிரிட்டனுக்கும் இவ்வாறான கைதிகள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    நடுக் கடலில் படகு வெடித்து
    நடுக் கடலில் படகு வெடித்து
      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி

      கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி

      இன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஊந்துருளியில் பயணித்த இரு வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர்

      வேகமாக பயணித்த ஊந்துருளியை கட்டு படுத்த முடியாது சாரதி திணறியதால் மரத்தில் மோதி பலத்த காயமடைந்தனர்

      யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்

      வாலிபர்களின் அலட்சிய போக்கும் ,இவ்வாறான வேகமான வாகன செலுத்துதல் ஊடாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

      கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள்
      கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள்
      Posted in இலங்கை செய்திகள்

      16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்

      16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்

      கடந்த நலலாட்சி அரசில் சிறை படுத்த பட்ட பிள்ளையான் இன்று ஒன்பதாவது பாராளுமன்ற மார்வில் கலந்து கொண்டார்

      நீதிமன்றின் விசேட அனுமதியை பெற்று பாராளுமன்றம் வருகை தந்த இவர் ,நல்லாட்சி அரசு தொடர்பாக கிழித்து தொங்க விட்டார்

      இலங்கை தமிழர் வரலாற்றில் சிறையில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழர் இவராகத்தான் இருக்க முடியும்

      தன்னை வெல்ல வைத்த மக்களிற்கு தான் நல்லதை செய்ய வேண்டும் எனவும் முழங்கி தள்ளினார்

      Posted in இலங்கை செய்திகள்

      எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

      எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச- கொதிப்பில் ரணில்

      இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

      சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன இதனை இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

      ரணில் படுதோல்வி அடைந்த நிலையில் சஜித் இவ்வாறு பதவி ஏற்றுள்ளமை ரணிலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP

      பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP

      9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

      செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில்

      கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

      ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி

      செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார்.

      கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள்

      மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக

      நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

      பாராளுமன்ற அமர்வில்
      பாராளுமன்ற அமர்வில்
      Posted in இலங்கை செய்திகள்

      முதலாவதாக கூடும் பாராளுமன்றம் – -விக்கியரும் வந்தார்

      முதலாவதாக கூடும் பாராளுமன்றம் – -விக்கியரும் வந்தார்

      இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

      இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில்

      கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்

      முதலாவதாக கூடும்
      முதலாவதாக கூடும்
      Posted in இலங்கை செய்திகள்

      12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது

      12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது

      இலங்கையில் தனியார் வகுப்புகளில் ஆசிரிராக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய ஆசிரியர் ஒருவர் 12 வயது மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்

      மேற்படி சம்பவம் போலீசாருக்கு தெரியவரவே தற்போது அவர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

      இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

      Posted in உலக செய்திகள்

      கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்

      கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்

      இந்திய விஞ்ஞானிகள் ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.

      கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
      கொரோனா வைரஸ் பரிசோதனை

      கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான ஆய்வுகள் உலக அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

      இங்கு ஐதராபாத்தை சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம்

      ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவுநீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.

      பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு மற்றும் வாய்வழியாக மட்டுமல்ல, மலம் வழியாகவும் தொற்றை வெளியிடுகிறார்கள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில்

      தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்கு கழிவு நீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை

      அடையாளம் காண்பதிலும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும், பரவலை மதிப்பிடுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

      ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பெற்று விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். இதில் அங்குள்ள 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு

      நிலையங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் சுமார் 2 லட்சம் பேர் வைரஸ் பொருட்களை வெளியேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

      ஐதராபாத்தில் 40 சதவீத கழிவுநீரே கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைவதால், இந்த தரவு ஒட்டுமொத்தமாக

      பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த பயன்படுகிறது. அந்த வகையில் ஏறத்தழ இந்த எண்ணிக்கை 6.6 லட்சமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.