Author: நலன் விரும்பி
இலகுவாக மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சட்ட மாற்றம்
இலகுவாக மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சட்ட மாற்றம்
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பொது மக்களுக்கு வசதியானது சட்டமே அன்றி அது சிரமங்களை
அளிக்கக்கூடியதாக இருக்க கூடாது என்று பஸ் போக்குவரத்து சேவை மற்றும் ரயில் பெட்டி மற்றும் மோட்டார் வாகன
தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்தார்.
தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் பொது மக்களுக்கு தேவையற்ற
சிரமங்களை ஏற்படுத்தும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் வீதிகளில் பயணிக்க முடியாத
அளவிற்கு புகை வாகனங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் ஏதோவொரு
இடத்தில் தவறு இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் சட்;டங்களை நீக்குவதே ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு-அறிவித்த கோட்டா
10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு-அறிவித்த கோட்டா
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அறிமுகம் செய்த
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு இன்று (19) அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல்
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் பட்டதாரிகள் 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இன்றைய
தீர்மானத்தின்படி மேலும் பத்தாயிரம் பேர் அதனுடன் இணைக்கப்படவுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்று சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் அருகில் தனது வாகனத்தை
நிறுத்தி, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக குறிப்பிட்டார்.
“இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில்
வழங்குவதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது” என்று ஜனாதிபதி அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.
பால் உற்பத்தியை அதிகரிப்போம் முழங்கிய – பசில்
பால் உற்பத்தியை அதிகரிப்போம் முழங்கிய – பசில்
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அறிவிப்பு – இல 05
• தனியார் துறையின் பங்களிப்புடன் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 10 பாரியளவிலான பால் பண்ணைகள்…..
• சிறிய அளவிலான பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை….
• தோட்ட நிறுவனங்களின் பயனற்ற நிலங்களை பால் பண்ணை துறைக்கு பயன்படுத்த உதவுதல்…..
• விலங்கு தீவனத்திற்காக மக்காச்சோள செய்கைக்கென அரச நிலங்களை வருடாந்த குத்தகை அடிப்படையில் பால் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்குதல்….
- பசில் ராஜபக்ஷ – தலைவர், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் பால் உற்பத்தியை நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு
மேம்படுத்துவதாகவும், அதை நுகர்வுக்கு அப்பால் ஏற்றுமதி மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் கூடுதல் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பால் உற்பத்தித்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் உள்ளிட்ட அத்துறை சார்ந்த அரச நிறுவன தலைவர்களுடன் அலரி
மாளிகையில் நேற்று முன்தினம் (2020.08.17) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி செயலணி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன்படி உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக
பாரியளவிலான பால் பண்ணைகள் மற்றும் சிறிய அளவிலான பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பால் தேவை 1200 மில்லியன் லீட்டராகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 420 மில்லியன் லீட்டராகும். எஞ்சிய தேவையான பாலின் அளவு 780 மில்லியன் லீட்டர் என்ற
போதிலும், திரவப் பால் பயன்பாட்டிற்கு மக்களை பழக்கப்படுத்தினால், மேலும் 400 மில்லியன் லீட்டர் பாலை கொண்டு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். 1
கிலோகிராம் பால் மாவை உற்பத்தி செய்வதற்கு சுமார் 8 லீட்டர் திரவ பால் தேவைப்படுகிறது. அதன்படி, 1 கிலோகிராம் பால்
மாவிலிருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவை விட 8 லீட்டர் திரவ பாலில் இருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவு மிக அதிகம்.
பால் விலை, பால் பசுக்களை இறக்குமதி செய்தல், புல்வெளிகளைப் பாதுகாத்தல், மக்காச்சோளம் சாகுபடி செய்தல் மற்றும் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்தல், மக்காச்சோளம் சாகுபடியின் வெற்றிக்கு
பயனுள்ள விதைகளை இறக்குமதி செய்து உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்காச்சோளத்தின்
உற்பத்தித்திறனை ஒரு ஹெக்டேயருக்கு 3.8 மெட்ரிக் டொன்னிலிருந்து 7 மெட்ரிக் டொன் வரை உயர்த்த வேண்டும்.
அதன்படி, எதிர்வரும் பருவத்தில் பால் பண்ணையாளர்களுக்கு அவசியமான மக்காச்சோளம் பயிரிடத் தேவையான நிலங்களை
விடுவிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு, கம்பஹா போன்ற நகர்ப்புறங்களில் தூய்மையான பால் நுகர்வை அதிகரிக்கவும், அதற்கேற்ப பால் சார்ந்த உற்பத்தி துறைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறித்த நிகழ்வில் கமத்தொழில் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஜானக
வக்கும்புர மற்றும் கனக ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
கடந்த தினம் வடக்கு லண்டனில் இருபத்தி ஒன்பது வயதுடைய
இளம் தீவிரவாதி ஒருவர்
உளவுத்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட இவர்கள் தீவிரமாக செயல் பட்டு வந்துள்ளமை அமபலமாகியுள்ளது
இவர் மீது சுமார் ஆறு குற்றவியல் பிரிவின் கீழ் ,குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது
இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை கைது செய்யும் நகர்வில்
போலீசார் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இதேவேளை லூசியம் பகுதியில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட
பெரும் குழு ஒன்றும் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இவர்களிடம் இருந்து பல லட்சம் பணமும் மீட்க பட்டுள்ளது
யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை
யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் வீடொன்றை துப்பரவு செய்து
கொண்டிருந்த பொழுது அங்கு பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டு பிடிக்க பட்டன
மேற்படி விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்க பட்டதை டுத்து விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டன
குறித்த பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் அமைக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
யாழில் மயங்கி வீழ்ந்து ஒருவர் பலி
யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்
மூன்று பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம்
ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும்
நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர்
மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார்
என உறுதிப்படுத்தியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது
இலங்கையில் அகல பரவியுள்ள போதைவஸ்து பாவனை மற்றும் அதன் வியாபாரம் எங்கும் கொடி கட்டி பறக்கிறது
அரசியல் ஆளும் வர்க்கத்தின் அனுசரணையுடன் இந்த பாவனை இடம் பெறுகிறது
இவ்விதமான வியாபாரத்தில் ஈடுபட போலீஸ் உயர் அதிகாரி ஒருவ
தற்போது கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
அரசியல் பழி வாங்கல் – ரணில் சம்பந்தன் மீது விசாரணை
அரசியல் பழி வாங்கல் – ரணில் சம்பந்தன் மீது விசாரணை
அரசியல் பழி வாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வரும் செப்டம்பர் மாதம்
7 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா,
அனுரகுமார திசாநாயக்க, இரா சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 7 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை
செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (18) முன்னிலையானார்.
அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்ற இரணைமடு குளம் உள்ளிட்ட பாரிய நடுத்தர மற்றும்
சிறுகுளங்களில் மேற்கொள்ளப்பட்ட 2019, 2020 இற்கான காலபோக அறுவடையை தொடர்ந்து இவ்வாண்டுக்கான சிறுபோக
நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
அதாவது இரணைமடு குளம் கல்மடு குளம் அக்கராயன் குளம் புதுமுறிப்பு குளம் வன்னேரிக்குளம் கரியாலை நாகபடுவான் குளம்
குடமுருட்டிக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனக்குளங்கள் என்பனவற்றின் கீழ் சுமார் 8688
ஹெக்டெயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன்மூலம் ஏறத்தாழ 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மற்றும் நடுத்தரக்குளங்களின் கீழ் 8592 ஹெக்டெயரிலும் சிறிய
நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 96 ஹெக்டெயரிலுமாக மொத்தமாக 8688 ஹெக்டெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு அறுவடைகள் மூலம் சுமார் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறுவயற் பயிர் செய்கைகளானவை பல்வேறு செயற்திட்டங்களினூடாக
ஊக்குவிக்கப்பட்டு சுமார் 1300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த காலபோகத்தின் போது 23ஆயிரத்து 466 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காலபோக
நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது
போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த கொழும்பு முல்லேரியா, கல்வான பிரதேசத்தை சேர்ந்த மூவர் பொலிஸ் விசேட
அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்(17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாணயத்தாள் போன்று ஒருபக்கத்தில் மாத்திரம் அச்சிடப்பட்ட போலி 5,000 ரூபாய் நோட்டுக்கள் இருபக்கமும் வைக்கப்பட்ட 128
கட்டுக்கள் பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜாஎல, அங்கொட மற்றும் முல்லேரியா பகுதிகளில் வசிக்கும் 34, 36 மற்றும் 42 வயதுகள் உடைய குறித்த சந்தேக நபர்கள் மேலதிக
விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை
எடுத்துச் செலவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி
நாணயத்தாள்கள் அச்சிட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
சுமத்திரா தீவில் நில நடுக்கம் – சுனாமி பீதி
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவிற்கு அருகாமையில் 6.9 றிக்டர் அளவில் பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த பூமியதிர்ச்சி பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த
பூமியதிர்ச்சியினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பனவை என்றும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

பற்றி எரிந்த ஆறுமுகன் தொண்டமானின் வீடு – நடந்தது என்ன ..?
பற்றி எரிந்த ஆறுமுகன் தொண்டமானின் வீடு – நடந்தது என்ன ..?
கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று
(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு
சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்
மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டன் இல்லத்திற்கு பாரிய
சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும், தீ பரவலுக்கான காரணம்
தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா photo
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா photo
வரலாற்றுப் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த
தீர்த்தோற்சவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி
கண்டருளினர். தீர்த்தக்கேணியின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.
மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச் செய்யப்பெற்றது. தற்போது
நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள அடியவர்களோடு சுகாதார நடைமுறை
மற்றும் சமூக இடைவெளி பேணி இன்றைய தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
நல்லூர் தேவஸ்தானத்தால் இந்நிகழ்வுகள் பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.

நல்லூர் கந்தன் ஆலய


லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்னம் உள்ளனர்
மீளவும் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,இவ்வாறான
எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கடந்த சில தினங்களில் மட்டும்
சுமார் 10 பேர் லூசியம் பகுதியில் மட்டும் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,மக்களை
மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ள பொழுதும் ,அலட்சிய
போக்கில் மக்கள் செல்வதை வீதிகளில் அவதானிக்க முடிகிறது
,அதுபோலவே பேருந்துகளில் முகக்கவசம் அணியதும் செல்கின்றனர்
இவ்வாறு சென்றால் அவர்களுக்கு காவல்துறையினரால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
பொது போக்குவரத்துக்கள் பயன்பாடு பாதிக்க பட்டுள்ளது ,அதிக
மக்களை காவிய படி பேரூந்துகள் உள்ளிட்டவை செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது
அதனை தடுக்கும் முகமாக அவசர அவசரமாக லண்டன் மேயரின் உத்தரவின் அடிப்படையில்
லூசியம் முதல் கட் போர்ட் Lewisham , Catford வரையான பகுதியில் விசேட பாதுகாப்பு நிறைந்த மிதிவண்டி சாலைகள் அமைக்க படுகின்றன
இவ்வாறு அமைக்க படும் சாலை ஊடாக மக்கள் போக்குவரத்து அதிகரிப்பதுடன் ,
டிலிவரி செய்பவர்களுக்கும் வாகன நெரிசல் இன்றி பயணிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது
பல லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த விசேட சாலை அமைக்க படுகிறது
.குறித்த விசேட திட்டமானது ,குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திரும்ப முடியாத படி ஒருவழி சாலைகள் அமைக்க படுகின்றன மக்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்


பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் காவல்துறை
கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர் வாரம் ஒன்றில் நூறு மணித்தியாலங்கள் பணி செய்து சாதனை படைத்துள்ளார்
நாள் ஒன்றுக்கு சரா சரியாக பதின் நான்கு அரை மணித்தியாலங்கள் செலவு செய்துள்ளார்
பேரிடர் கால பகுதியில் மக்களை காப்பாற்ற கடுமையாக பணி புரிந்த இவருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் உள்ளது

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்
பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்
கடந்த தினம் மதியம் ஒன்று நாப்பது மணியளவில் வேகமாக வந்த
அவுடிராக கார் ஒன்று Coventry , Foleshill Road வழியேவந்த
பெண்ணை மோதித் தள்ளியது
வேகாமாக வந்த கார் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த அகோர சம்பவம் இடம்பெற்றுள்ளது
நாற்பத்தி ஒன்பது வயது பெண்மணி உடல் முழுவதும் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான நிலையில் ,குறிப்பாக தலையில் பலமான காயங்களுடன்
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார்
தற்போது வரை இவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்
குறித்த காரினை செலுத்தி வந்த இருபது வயதுடைய ஆண் சாரதி மற்றும்
அந்த காருக்குள் ஒன்றாக கூடி வந்த பதினாறு வயது இளம் பெண் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர்
சாரதியின் அலட்சிய போக்கும் ,அதிவேகமுமே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்,சிறு காயங்களுக்கு உளள பெண் மருத்துவமனையில் இருந்து வீடு சென்று ள்ளார்
ஏனையவர்கள் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உலக அளவில் 2.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு
மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.47 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.76 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை
பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை கவர்னருக்கு
அனுப்பி 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய இசைவு இன்னும் கிடைக்கப்பெறாததால் 29 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் வாடுகிறேன்.
தற்போது எங்கள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுடன் சற்றும் தொடர்பில்லாத பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகுதான் அரசின் பரிந்துரை
குறித்த முடிவு எடுக்கப்படும் என கவர்னர் செயலகம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி
சட்டசபையிலும், கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை ஐகோர்ட்டிலும் தெரிவித்துள்ளது. கவர்னரின் இந்நிலைப்பாடு, தங்கள் தலைமையிலான தமிழக அரசின் கொள்கை முடிவினை
நடைமுறைப்படுத்த விடாமல் காலவரையின்றி தள்ளிப்போடும் நோக்கிலானது.
அரசியல் சட்டப்பிரிவு 161 மற்றும் 163-ஐ தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் அதிகார வரம்புக்குள் அடங்குவதை மறுதலித்து கவர்னர் என்ற ஒற்றைப்பதவியின் வரம்புக்குள்
தன்னிச்சையாக மாற்றிக்கொண்டதாகும். சுருங்கக்கூறின் கவர்னர், அரசியல் சாசன பிரிவு 163-ன்கீழ் தமிழக அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி
செயல்படாமல், தன்னிச்சையாக இவ்விஷயத்தில் நடந்து கொண்டு இருப்பது தங்கள் தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை செல்லாக்காசாக்கி விட்டதற்கு ஒப்பானதாகும்.
எனவே தமிழக அரசு 9.9.2018 அன்று எடுத்த கொள்கை முடிவினை உறுதியாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கொள்கை முடிவினையும், கவர்னர் குறிப்பிடும் பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணையையும்
தொடர்புபடுத்த இயலாது. ஏனெனில் விடுதலை அறிவிக்கப்பட்ட 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதித்தீர்ப்பின்படி தண்டனை அனுபவித்துவிட்டனர். விடுதலைக்கான தகுதியை உரிய
சட்டவிதிகளின்கீழ் எப்போதோ அடைந்துவிட்டனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சிறைவாசிகளின் விடுதலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு இவ்வாறே செய்தது. அதன்படி
குறைந்தபட்சம் தங்கள் அரசின் நிர்வாக அரசாணை மூலம் நான் உள்ளிட்ட 7 பேருக்கு தற்காலிக ஏற்பாடாக, இடைக்கால
நிவாரணமாக, தண்டனை நிறுத்தி வைப்பு பரோல் அல்லது விடுமுறை வழங்குவதற்கு ஏதுவாக சிறை விதிகளில் உரிய திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல தமிழக கவர்னருக்கும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும்
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை
கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.








